வெள்ளி, 17 ஜூலை, 2009

கண்ணிவெடிகளை அகற்ற இந்திய ராணுவம்: இலங்கை தகவல்



கொழும்பு, ஜூலை.16: சண்டை முடிந்துள்ளநிலையில் கண்ணிவெடிகளை அகற்றும் பாதுகாப்புப் படையினருக்கு உதவியாக இந்தியா ராணுவத்திலிருந்து 500 பேர் இலங்கை வர உள்ளதாக அந்நாட்டின் முப்படைகளின் தலைமை அதிகாரி சரத்.பொன்சேகா தெரிவித்தார்.முப்படைகளின் தலைமை அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சரத்.பொன்சேகா நேற்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியப் படையினர் எப்போது வருவார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்காவிடினும், கண்ணிவெடிகளை அகற்ற இந்தியப் படையினரின் உதவி அவசியம் என சரத். பொன்சேகா தெரிவித்துள்ளதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

ஏனெனில் இந்தப் பணியில் ஏற்படும் இறப்பும் ஊனமும் இந்திய வீரர்களுக்கே இருக்கட்டும். மறைவாகப் போரிட வேண்டும் என்பது அவர்களின் தலையெழுத்து. வெற்றி மாலையைப் பெறுவது என்பது எங்களின் பரிசு. இது தவிர கண்ணி வெடி அகற்ற மட்டுமா இந்திய வீரர்கள்? அந்தப் போர்வையில் மேற் கொண்டு இனப் படுகொலைக்கான வழிகாட்டலுக்கும் தானே இந்திய வீரர்கள்! இந்தியாவில் இருந்து மருத்துவர் குழு எதற்காக வந்தது? சிங்களர்களுக்கு உதவத்தானே வந்தது. இந்திய நிதி யுதவி எதற்காக வந்தது? சிங்களர்களுக்காகத்தானே வந்தது. இந்தியாவில் இருந்து கொத்துக் குண்டுகளும் எரிகுண்டுகளும் வான்படைகளும் படைக்கருவிகளும் ஏவுகணைகளும் உணரி(இராடார்)களும் எதற்காக வந்தன? சிங்களர்கள் நடத்திய இனப்படுகொலைகளுக்கு உதவத்தானே வந்தன. எனவே, சிங்கள எதிர்க்கட்சிகள் இதனை எதிர்க்காமல் இருக்க வேண்டும் -- இது வெளிவராத செய்தியோ!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 4:22:00 AM

தமிழனை கொன்ற சிங்களவன் உயிரை காக்க இந்தியனா? இவ்வளவு மக்களைக்கொன்று குவிக்க இடப்பட்ட குண்டுகளை வீச தெரிந்த சிங்கள ஓநாய்களுக்கு கண்ணிவெடிகளை அகற்றதெரியாதா? ஏன்? கண்ணிவெடிகளை வைத்தவனே சிங்களவன்தானே. சிங்களவன் சீனாவிடம் கேட்கவேண்டியதுதானே? சீனா, இலங்கைக்கு இன்று மிகப்பெரிய விருந்தாளி, சீனா அங்கு வியாபாரம் செய்ய மட்டுமே. இந்தியாவுக்கும் தெரியும் இந்த சுழ்ச்சுமம். இது எப்படி இருக்கிறது என்றால், உடன் பிறந்த சகோதரியை கற்பழித்தவனுக்கு உதவி செய்வது போலுள்ளது....கேவலம்...கேவலம்..கேவலம்.. நீங்க எல்லாம் மனிதர்தானா ??? இதைவிட கேவலம் தமிழனுக்கு உண்டா? கண்ணிவெடி அகற்றியபிறகு தமிழனை குடியமர்த்த இந்தியா பாடுபடுமா அல்லது சிங்களன்களை குடியமர்த்த போகிறதோ தெரியவில்லை . தமிழன் மொத்தத்தில் இளிச்சவாயனா???சரத்.பொன்சேகா... .

By THANKA
7/16/2009 9:20:00 PM

INDIAN GOVT AND SRILANKA GOVT SHOULD BE PUNISH

By PRABHAKARAN
7/16/2009 8:38:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக