செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.

அகரமுதல

(வைகாசி 21, 1955 / சூன் 03, 1924 –  ஆடி 22,  2049 / ஆகத்து 07, 2018)

தி.மு.க.வரலாற்றின்  பெரும்பகுதியாகவும் தமிழக வரலாற்றின் சிறப்புப் பகுதியாகவும் இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்கும்
 ஓயா உழைப்பாளி, முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி
எண்ணம், சொல், எழுத்திற்கு ஓய்வுகொடுத்ததுடன் இயக்கத்திற்கும் ஓய்வு கொடுத்துள்ளார்.
 அவரது குடும்பத்தினருக்கும் கோடிக்கணக்கான கட்சித் தொண்டர்களுக்கும் அன்பர்களுக்கும்
  ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம். 
துயரத்தில் பங்கேற்கும்
அகரமுதல மின்னிதழ்
தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்புகள்
தமிழ்க்காப்புக்கழகம்
 இலக்குவனார் இலக்கிய இணையம்
 இலக்குவனார் இலக்கியப்பேரவை