சனி, 1 பிப்ரவரி, 2020

பன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020

அகரமுதல

பேராதனைப்பல்கலைக்கழகம், இலங்கை
பன்னாட்டுக் கருத்தரங்கு, இலங்கை மே 2020
பொருள்: தமிழ் நவீன இலக்கியம் (2000 முதல் 2019 வரை)

உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2020

அகரமுதல

பங்குனி 13-17, 2051

26.03.2020 – 30.03.2020

உலகத் தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை
 உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2020

பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி, 2020

அகரமுதல


பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டி

பனிப்பூக்கள் இதழ்,  சில வாரங்களில் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2012 ஆம் ஆண்டு, உலகத் தாய்மொழி நாளன்று. அமெரிக்க மாநிலமான மினசோட்டாவில் வாழும் தமிழர்களுக்குத், தனித்துவ முறையில் பண்பாட்டுப் பாலமாகச் செயல்படும் நோக்கத்துடன் தொடங்கிய இதழ் இன்று அகிலமெங்கும் பரவிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் பல தமிழ் எழுத்தாளர்களை அறிமுகம் செய்த பெருமையும் பனிப்பூக்களுக்கு உண்டு.
மகிழ்ச்சிகரமான இத்தருணத்தைப் படைப்பாளிகளுடன் சேர்ந்து கொண்டாட விழைந்து, 2020 ஆம் ஆண்டுக்கான பனிப்பூக்கள் சிறுகதைப் போட்டியை அறிவிக்கிறோம். உங்கள் கற்பனைச் சிறகை விரித்துச், சிறுகதை வடித்து போட்டியில் பங்கேற்க அழைக்கிறோம்.
போட்டிக்கான விதிமுறைகள்
  • சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும்.
  • கதைகள் சொற்கோப்பு(MS Word) அல்லது எளிதில் திருத்தம் செய்யக் கூடிய செயலியில், சீருரு(யூனிகோடு) எழுத்துருவில் வடிக்கப்பட்டதாய் இருத்தல் வேண்டும்.
  • கையெழுத்துப் படிகள், ஒளிப்படப்படிகள்,  பொதி(PDF) வடிவிலான ஆவணங்கள் கண்டிப்பாகப் போட்டியில் ஏற்கப்படமாட்டா.
  • சிறுகதைகளை கீழ்க் குறிப்பிடும் முகவரிக்கு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பவேண்டும்.
  • கதைகள் 1500 முதல் 2௦௦௦ சொற்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம்.
  • மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஏற்கப்படமாட்டா.
  • உங்களது படைப்புகள் இதுவரை வேறெந்த இதழ்களில் (இணையத்தளம், அச்சிதழ், சமூக வலைத்தளங்கள் முதலான ஊடகங்கள்) வெளியிடப்படவில்லை என்பதற்கு அடையாளமாகவும், படைப்பின் உண்மைத்தன்மையை உறுதி செய்தும் இணைப்பில் காணப்படும் ஆவணத்தை நிரப்பிப் படைப்புடன் அளிக்கவும்.
  • படைப்பாளரின் இயற்பெயர்(Real name),  அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரிகளைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.
  • கானம்பாடி பதிப்பகம் நியமிக்கும் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
  • தேர்ந்தெடுக்கப்படும் கதைகள் பனிப்பூக்கள் இதழ் அல்லது கானம்பாடி பதிப்பகத்தார் (Loon Media Group LLC) மூலம் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் காப்புரிமை கானம்பாடி பதிப்பகத்தைச் சேர்ந்தது.
  • கதைகள் தொடர்பாக நடுவர்களுடனோ போட்டியை நடத்துபவர்களுடனோ எந்த ஒரு கடிதப் போக்குவரத்தோ தொலைபேசி தொடர்புகளோ மேற்கொள்ளப்படமாட்டாது.
  • சிறுகதைப் போட்டிக்குத் தங்கள் படைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் மார்ச்சு 15, 2020.
  • வெற்றி பெற்ற சிறுகதைகள் பற்றிய அறிவிப்பு ஏப்பிரல் இரண்டாம் வாரம் அறிவிக்கப்படும்.
.கதை குறித்த நிபந்தனைகள்:
  1. கதைகள் தமிழர் வாழ்வியலைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
  2. உண்மை நிகழ்வுகளை அப்படியே சித்தரிப்பதைத் தவிர்க்கவும்.
  3. கதைகள் குடும்பம், மருமம், நகைச்சுவை, காதல் என்று எந்தப் பகுப்பைச் சார்ந்தும் இருக்கலாம்.
பரிசு விவரம்:
முதற்பரிசு: $150
இரண்டாம் பரிசு: $100
மேலும் பிற பரிசுகளும் உண்டு

செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் மறைவு – பிரித்தானிய அமைப்பின் இரங்கல் செய்தி


எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர்  செல்வி திட்சிகா சிறிபாலகிருட்டிணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம் அடைந்துள்ளோம்.
எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாகச் செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனத்தில் வேரூன்றி நின்றது.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து பறித்துச் சென்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.
தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக வேண்டுகின்றோம்.
திட்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திட்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உள்ளுயிர்ப்புடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்



வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இலங்கை அரசுத் தலைவர் பொறுப்புத் துறப்பு!

பிரித்தானிய மக்கள் ஒன்றுபட்ட கண்டன ஆர்ப்பாட்டம்!

 நிலைமையின் முதன்மைத்துவம் கருதிப் பிரித்தானியத் தலைமயமைச்சரின்அலுவலகத்தின் முன் அமைப்புகள் ஒன்றுபட்டு குறுகிய கால அவகாசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.
 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பொருண்மையைப் புறம் தள்ளி பொறுப்புக் கூறலை கைவிட முற்படும் இலங்கை அரசின் செயலைக் கண்டிப்பதுடன் இலங்கை அரசினை  ‘பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில்’ அல்லது அதற்கு நிகரான  ‘பன்னாட்டு நீதிப் பொறிமுறை’ ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது கோரிக்கையாக முன்வைத்து 29 சனவரி 2020அன்று 4 மணியிலிருந்து 7 மணி வரை பிரித்தானியத் தலைமயமைச்சரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), பல்வேறு புலம்பெயர் அமைப்புகள், பொதுமக்கள், இறுதி இனப்படுகொலைப் போரில் பல இன்னல்களைச் சந்தித்து சாட்சியாளர்களாக இருப்பவர்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.
 11 வருடங்களின் முன் இதே நாளில் (29 சனவரி 2009) தன்னைத் தற்கொடையாக்கிய தமிழ்நாட்டு உறவு ஈகி முத்துகுமாரனின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
 மாணவர் பேரவையின் தலைவரும் தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளருமான பொ. சத்தியசீலன உரையாற்றும் போது பிரித்தானியத் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்றுக் குழுமியிருந்த அனைத்து  அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழ் மக்களுக்கு ஒரு நாடு வேண்டும், அது தமிழீழமாக அமைய வேண்டும் என்ற போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தக் காலக்கட்டத்திலேயே வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக ஆயிரம் நாட்களைத் தாண்டியும் தாயகத்தில் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் புலம்பெயர் நாடுகளில் போராடிக் கொண்டிருக்கும் மக்களும் இலங்கை அரசாங்கத்திடம் நீதி வேண்டி போராடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இறுதி இனப்படுகொலைப்போரில் யாரும் கைது செய்யப்படவில்லை, எல்லாரும் இறந்து விட்டார்கள் என இலங்கை அரசுத்தலைவர் கூறும் கூற்று கண்டிக்கப்பட வேண்டியது. மேலும் பொதுநலவய நாடுகள் அமைப்பிலிருந்து இலங்கையைத் தடை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தார்.
 பிரித்தானிய த் தமிழர் பேரவையின் மனித உரிமைகள் செயலணியின் உதவிப் பொறுப்பாளரும் இளம் செயற்பாட்டாளருமான வேந்தனா கூறும்போது “நானும் இறுதி இனப்படுகொலைப்போரின் சான்றாளர். அதில் யுத்தத்தில் நாம் பல இன்னல்களைச் சந்தித்தித்தோம். இலங்கை இராணுவ முகாம் நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் வரும் வழியிலேயே கைதுசெய்யப்பட்டனர். நாம் முகாமுக்குள் வரும்போது அவர்களில் பாதிப் பேரைக் காணவில்லை. இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர் என்றால் அதற்கான ஆதாரம் எங்கே? இலங்கை அரசாங்கமே அவர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான முழுப் பொறுப்பும் உடையது. மேலும் இன்றைய போராட்டம் போன்று நாம் மேலும் அனைவரும் ஒன்றாக ஓங்கிக் குரல் கொடுத்து எமக்கான நீதியை வென்றெடுப்போம்” என்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்க அரசவை உறுப்பினர் சந்துரு குருலிங்கம் தனது உரையில் “காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்குத், தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு நடந்தவற்றின் முடிவு தெரியாதவிடத்து ‘உண்மையை அறிவதற்கான உரிமை’ இருக்கிறது என்பதைப் பன்னாட்டுச்  சட்டம் அங்கீகரிக்கிறது. மேலும் கட்டாயமாகக் காணாமற் போகச் செய்யப்படும் குற்றத்திலிருந்து அனைத்து மக்களையும் பாதுகாப்பதற்கான பன்னாட்டு  உடன்படிக்கையில் 2015 திசம்பர் 15 அன்று இலங்கை  கையொப்பமிட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் 21 ஆவது பிரிவின்படி, காணாமற் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்வதோடு அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்குக் ‘காணாமற் போனவர்களுக்கு நடந்தது என்ன என்ற உண்மையை அறிந்து கொள்வதற்கான உரிமையையும்’ அளிக்கிறது. “  
“இலங்கை அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் இப்போது உயிருடன் இல்லை என்பதை எந்த அடிப்படையில் இலங்கை ஆட்சியாளர்கள் வெளியிடுகின்றனர் என்ற உண்மையைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். அதனை த் தட்டிக் கழிக்குமானால், அது காணாமற் போனவர்களின் குடும்பங்களின் துன்பத்தை நீடிக்கச் செய்வதோடு, அவர்களது மனித உரிமைகள் மீறப்படும் குற்றத்தையும், பன்னாட்டுச் சட்டத்தின்கீழ்ப் பல்வேறு கடப்பாடுகளிலிருந்தும், மனித உரிமைகள் அவையின் தீர்மானம் ‘A/HRC/RES/31/1’ முன்வைத்த கடப்பாடுகளிலிருந்தும் தவறிவருவதை உள்ளடக்கியதாக இருக்கும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம், இதற்கு நிகரான ஓர் பன்னாட்டு நீதிப் பொறியமைவின் மூலம் மட்டுமே தமிழர்கள் நீதியைப் பெறமுடியும் என்பதோடு இலங்கையைப் பன்னாட்டு நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டுவோம்” என்றார்.
 வரலாற்று மையத்தைச் சேர்ந்த சங்கீதன் உரையாற்றும்போது ” இலங்கை அரசாங்கத்தின் இராணுவத்தினர் படுகொலையானது வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்ல, அவர்கள் பல மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். கடைசி இனப்படுகொலைப்போரில் கூட மத போதகர்களோடு போனால் எமக்கு பாதுகாப்பாக இருக்கும், ‘ICRC’ ஊடாகச் சரணடைந்தால் பாதுகாப்பு என்று இராணுவத்திடம் சரணடைந்ததவர்கள் எங்கே? குடும்பமாகச் சரணடைந்ததவர்கள் எங்கே? கொல்லப்பட்டனர் என்பதன் பொருள் என்ன? எமக்கான நீதி எங்கே? இந்த இக்கட்டான நிலையில் எமது போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார். மற்றும் இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளைத் தெளிவுபடுத்தினார்.
அஃகேனம் அறக் கட்டளையைச் சேர்ந்த சீவன் “எல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து நம் மக்களுக்கான நீதி வேண்டி ஒன்றாகக் குரல் கொடுப்பதைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பொழுது புலம்பெயர் தமிழ் மக்களிடம்தான் எமது விடுதலையென்பது தங்கியிருக்கிறது என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் மக்களை – குறிப்பாகப் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களைப் பார்த்து இப்பொழுது  அதிபர் இராசபச்ச பயப்படுகின்ற காலகட்டத்தில் இருக்கின்றார்.  இலங்கையைப் புறக்கணியுங்கள்(Boycott). என்பதை வலியுறுத்துகிறேன். இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களையோ விடுமுறைக்காக இலங்கை செல்வதையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பொருளாதார வழியில்  பாரிய விளைவுகளை ஏற்படுத்துவது மூலம் உலக நாடுகளின் பார்வைக்கு எடுத்துச் செல்ல முடியும். சிங்கள மக்களுக்கு எங்களின் வலிகளும், இழப்புக்களும் தெரியவில்லை. அதனால் எங்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காமல் இருக்கின்றது. நாம் என்றும் ஒற்றுமையுடன் பலமாகப் போராடினால்தான் எம் தேசம் எமக்கு கிடைக்கும்” என்றார்.
 இந்த நிகழ்வினில் ‘கெட்டி உருக்கள்’(Getty images) என்ற பிரித்தானிய ஊடகமும் உக்கிரைன் நாட்டின் ஊடகமும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் இளையோர் செயல்பாட்டாளர்களைச் செவ்வி எடுத்துள்ளன.

வெள்ளி, 31 ஜனவரி, 2020

பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020

அகரமுதல

மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா
கலைஞன் பதிப்பகம், தமிழ்நாடு
இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020

பொருள் : அனைத்துத் துறை உலக ஆளுமைகள்

தமிழ்க்கூடல், மதுரை, தமிழ்த்துளிப்பாக்கள்

அகரமுதல

தை 21, 2051 வெள்ளிக்கிழமை 04.02.2020  முற்பகல் 11.00
உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை
கூடலுரை: தமிழ்த்துளிப்பாக்கள் – முனைவர் மு.செந்தில்குமார்

வியாழன், 30 ஜனவரி, 2020

குவிகம் இல்லம் – அளவளாவல், 02.02.2020

அகரமுதல

தை 19, 2051 ஞாயிறு 02.02.2020
மாலை 5.00

குவிகம் இல்லம்,

6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல்

முனைவர் தங்க செய்சக்தி வேல்
இதழியல் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ்க்கூடல், மதுரை

அகரமுதல

தை 17, 2051 வெள்ளிக்கிழமை 31.01.2020
முற்பகல் 11.00
உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை

கூடலுரை:  சித்தர்கள் பாடல் – ஒரு பார்வை –

முனைவர் மோசசு மைக்கேல் பாரடே

செவ்வாய், 28 ஜனவரி, 2020

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை

அகரமுதல


மாசி 07, 2051 புதன் 19.02.2020

தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்
(FOSSILS)
திருவனந்தபுரம்
கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ்த்துறை

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு
பெண் வழக்காற்றியல் – புதிய பார்வைகள்
தொடர்பிற்கு: ஓ.முத்தையா 94421 15980

திங்கள், 27 ஜனவரி, 2020

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்

அகரமுதல

படம் + அலெக்சாண்டர் துபியான்சிகி

தை 20, 2051 / திங்கட்கிழமை / 03.02.2020
மாலை 4.00

ஆசியவியல் நிறுவன வளாகம்

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்:
சந்திப்பும் கலந்துரையாடலும்

தலைமை : கென்னடி ஏ.உரோகலேவு (Gennadii A.Rogalev)
உருசிய நாட்டு அறிவியல் பண்பாட்டு மைய இயக்குநர், சென்னை
கலந்துரையாடும் சிறப்பு அழைப்பாளர் : பேரா.அலெக்சாண்டர் துபியான்சிகி(Prof.Alexandar Dubyanskiy)
மிக்க அன்புடன்
சான் சாமுவேல்
இயக்குநர்
ஆசியவியல் நிறுவனம்
செம்மஞ்சேரி