புதன், 15 ஜூலை, 2009

பயிற்சி மருத்துவர்கள் - அரசு பேச்சு மீண்டும் தோல்வி



சென்னை, ஜூலை 14: பயிற்சி டாக்டர்களுடன் தமிழக சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மீண்டும் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. முதல்வர் கருணாநிதி அறிவித்த உதவித் தொகை உயர்வு போதாது எனக் கூறி பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கடந்த 14 தினங்களாகப் போராடி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உள்பட 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூலை 13) முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தலைமைச் செயலகத்தில் சுகாதாரத் துறைச் செயலர் வி. கு. சுப்புராஜ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ். விநாயகம் ஆகியோர் முன்னிலையில் பயிற்சி டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வருடன் பேச விருப்பம்: மற்ற மாநிலங்களின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி டாக்டர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் அதிக உதவித் தொகை குறித்து முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்க வாய்ப்பு பெற்றுத் தருமாறு உயர் அதிகாரிகளிடம் பயிற்சி டாக்டர்கள் கோரினர். இந்தக் கோரிக்கையை அரசு உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால், உண்ணாவிரதத்தை உடனடியாக விலக்கிக் கொள்வதாக பேச்சின்போது அவர்கள் தெரிவித்தனர். ஆனால், பயிற்சி டாக்டர்களின் இந்தக் கோரிக்கையை உயர் அதிகாரிகள் நிராகரித்து, பணிக்குத் திரும்பினால் மீண்டும் பேச்சு நடத்தி உதவித் தொகை உயர்வைப் பரிசீலிப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதைச் சுட்டிக் காண்பித்தனர். பயிற்சி டாக்டர்கள் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.மீண்டும் பணியில் 14 டாக்டர்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு பயிற்சி டாக்டர்களும் ஏழு முதுநிலை மருத்துவ மாணவர்களும் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பியதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனையில் 2 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட 22 டாக்டர்களில், 2 பேர் மயக்க நிலையை அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

போராட்டத்தைக் கைவிட்டால்தான் பேச்சு என்னும் முதல்வரின் நிலைப்பாடு சரியல்ல. கேட்கும் பயிற்சித் தொகையை அளித்துவிட்டு, அவ்வாறு கூடுதல் பயிற்சித் தொகை பெறுபவர்கள், 3 ஆண்டுக் காலம் தமிழக அரசுப் பணியில் - சிற்றூர்களில் - பணியாற்ற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கலாம். இவ்வாறு கலைஞரே பிடிவாதம் பிடித்தால் முந்தைய அரசின் அடக்கு முறையை ஒப்பிட்டுக் கலைஞர் கூறுவது பொருளற்றதாகி விடும். மேலும் கோரிக்கைளை ஒடுக்கியும் அடக்கியும் ஆட்சி புரிந்ததால் முந்தைய அரசிற்கு ஏற்பட்ட கதி இந்த அரசிற்கும் வேண்டுமா? தாய்மை உள்ளத்துடன் அணுகி உதவித் தொகைகளைப் பிற மாநிலங்களுக்கு இணையாக உயர்த்தி இப் போராட்டத்தை நிறுத்த வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 3:46:00 AM

பயிற்சி மருத்துவர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும்: ஜெயலலிதா வலியுறுத்தல்



சென்னை, ஜூலை 14: போராடி வரும் பயிற்சி மருத்துவர்களை முதல்வர் கருணாநிதி அழைத்துப் பேச வேண்டும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உதவித் தொகை உயர்வு வேண்டி போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் பேசாமல், பயிற்சி மருத்துவர்களின் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக தி.மு.க. அரசு தன்னிச்சையாக உயர்த்தியது. எனினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தன்னிச்சையான இந்த உதவித் தொகை அறிவிப்பு மிகவும் குறைவு என்றும், எனவே தங்களின் போராட்டம் தொடரும் என்றும் பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். போராட்டம் தொடர்ந்தால், மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் மேற்படிப்புக்கு பாதகமான நிலை ஏற்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் ஏழை எளிய, நடுத்தர மக்கள்தான். அரசு மருத்துவமனைகளில் அனைத்துப் பணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்து 4 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எதுவும் இல்லை. பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய மக்களின் நலன்களை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும். பயிற்சி மருத்துவர்களுக்கு மற்ற மாநிலங்களுக்கு இணையாக உதவித் தொகை வழங்கப்பட வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்

முன்னாள் முதல்வரின் தொனியில் இப்பொழுதெல்லாம் மாற்றம் உள்ளது. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற முறையில இல்லாமல் அரசிற்கு வேண்டுகோள் விடுக்கும் முறையைப் பின்பற்றுகிறார். பயிற்சி மருத்துவர் போராட்டம் குறிததுச் சரியான கருத்தையே தெரிவித்துள்ளார். பொது மக்கள் நலன் கருதியும் இளைய தலைமுறையினர் நலன் கருதியும் அரசு வீம்பு பண்ணாமல் பயிற்சி உதவித் தொகையை உரியவாறு உயர்த்தி இப் போராட்டத்தை முடிவிற்குக் கொண்டு வரவேண்டும். இதனால் அரசிற்கு அல்லது கலைஞருக்குத் தோல்வி எனத் தவறாகக் கருதாமல், பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 3:56:00 AM
i too accepted illakkuvanar,s view. All are in govt's hand
By mangai
7/15/2009 5:18:00 PM


போராட்டத்தைக் கைவிடுங்கள்; ஏமாற்ற மாட்டோம்: பயிற்சி டாக்டர்களுக்கு கருணாநிதி வேண்டுகோள்



சென்னை, ஜூலை 14: பயிற்சி டாக்டர்கள் தங்களது போராட்டதைத் கைவிட்டு வந்து பேசினால், அவர்களை ஏமாற்ற மாட்டோம் என்று பேரவையில் முதல்வர் கருணாநிதி கூறினார். டாக்டர்களின் போராட்டம் குறித்து பேரவையில் முதல்வர் கருணாநிதி அளித்த பதிலுக்குப் பின் எதிர்க்கட்சிகளுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, அதிமுக, பாமக, இடதுசாரிகள், மதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
. . . . . . . . .
கருத்துகள்
' தான் எதிர்க்கட்சியாக என்ன நிலைப்பாடு எடுத்திருப்போம்' எனக்கலைஞர் எண்ணி இப் போராட்டத்தைக் கோரிக்கைகளைத் தீர்ப்பதன் மூலம் முடிவிற்குக் கொணர வேண்டும்.
. . . . .
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/15/2009 4:23:00 AM

WHO IS JEYA. SHE WHO IS SUPPORTING STRIKING DRS - STILL SHE IS ACTING. SHE IS ENCOURAGING AND CREATING PROBLEM WITH GOVT, INDEED SHE HAVE NO LIKE TO PROVIDE MORE STIPEND TO DRS, BUT SHE IS ONLY AIM TO NUISSANCE TO GOVT, PEOPLE WILL KNOWS ABOUT HERS ACTIVITY & PEOPLE WILL NOT FORGET,SHE USED TESMA'LAW & PULLED OUT THOUSANDS OF WORKERS JEYA IS WORST POLITICIANS IN THE WORLD, WE WILL BE READY TO TAKE AWARENESS TO STOP SHE REENTRY IN ASSEMBLLY AGAIN.THIS ALL TAMIL PEOPLE'S DUTY
By H
7/15/2009 12:53:00 PM

STILL WE HOPE DR.KAZHAIZHAR DECISION IS CORRECT, AND YESTERDAY HE CLEARLY INDICATED THAT THE COMPARISON OF OTHER STATE GETTING STIPEND REGARDING THIS SUBJECT, AND NO MORE INCRESING SOMETHING NOT GOOD, THEY WILL CONDINUEING STIKE NO PROBLEM - GOVT WILL ARRANGE TEMPERORY DRS FOR THE HOSPITALS TO AVOID DELAYED TREATMENT DOCTORS ARE MONEY MINDED - NOT SERVICE MINDED

By HANEEFA
7/15/2009 12:35:00 PM

innum etthanai bayrai ematthapporai theriyalai

By swethan
7/15/2009 11:09:00 AM

Dr.Yogalakshmi,doctor mean only MBBS or all medical students(BSMS,BHMS)? Do you know some poor students studying veterinary science,their stipend is Rs.1650, we too knocked the doors of government but seems to be deaf and dumb.My question is what is the scale for measuring the stipend money ?

By Dr.Udhaya
7/15/2009 10:08:00 AM

mikka nanri mr.thiruvalluvan fr supporting us..fr the kind information of others,..naangal kadantha 2yrsku melaga palamurai health ministerai santhithulom.health secretaryaum santhithi manu kuduthulom..DMEiyum meet panni ivargal eloridamum pira statesi fees,stipend pathina comparitive data kuduthulom.avargal health budget-il ungaluku hike-ku fund othukiachu,ungaluku matra statesku nigarana stipend alipom-nu vaakuruthi kuduthargal.athai nambinom.bt they behaved as typical politicians.ipothu engal korikaiye ithanai naal avargaluku theriathu endru poi solgirargal.black badge aninthu,pinbu oru naal token strike nadathi..ithanaikum piragu than intha poratam.purinthu kollungal elorum pls..ethetho functionsku pora CMku drsa meet panna matum time kedaikathathu thurathrishtham

By Dr.P.Yogalakshmi
7/15/2009 8:06:00 AM

KALAIGAN SEIVATHU ADAKKU MURAIL ALLA. ACHIYARIDAM ENTHA KORIKKAIN VAIKAAMAL UNNA NONPU IRUPPATHU ENBATHU THEVAI ILLAI.

By STHAMIZHMANII
7/15/2009 7:30:00 AM


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக