சனி, 13 நவம்பர், 2010

ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்

நட்பூ இணைய இதழ்  - முகப்புப் பக்கம்

 

அன்புடையீர்! வணக்கம்!

எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
ஒருங்குறியில் தமிழ்க்காப்பு - திசம்பரில் கருத்தரங்கம்
ஒருங்குறியில் தமிழ்க்காப்பு என்னும் பொதுத் தலைப்பில் 4 பக்கங்களுக்கு மிகாமல்  நவம்பர் 25ஆம் நாளுக்குள் கட்டுரை அளிக்க வேண்டுகின்றோம். கட்டுரையாளர்களும் பார்வையாளர்களும் உடனே
thamizhkkaappu@gmail.com மின்வரிக்குத் தங்கள் பெயர்,  முகவரி, பேசி எண், கட்டுரைத் தலைப்பு  முதலிய விவரங்களை அளிக்க வேண்டுகிறோம். நேரில் பங்கேற்க இயலாதோர் கட்டுரையை அனுப்பி உதவலாம். 

முதல் 5 வாசகர் கருத்துகள் 13.11.2010

ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!


லஞ்சம் வாங்கியதாக அரசு அதிகாரிகள் கைதுசெய்யப்படும் செய்திகள் தினமும் வருகின்றன. ஆனால், ஊழல் புரிந்ததாகப் புகார் கூறப்படுபவர்கள் யாரும் கைதுசெய்யப்படுவதாகத் தெரியவில்லை. அவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கைகூட எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை. லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் வேறுபாடு ஏதேனும் உள்ளதா?' என்றான் பக்கத்து வீட்டுச் சிறுவன்.  பதில் தெரியாமல் விழித்ததைப் பார்த்து, "சிறிய அளவில் வாங்கினால் அது லஞ்சம், அதுவே பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் சுருட்டினால், ஊழல். அப்படித்தானே' என அவனே பதிலும் சொன்னான். அது சரியாகவேபட்டது.   பத்திரிகைகளில் "லஞ்சப் புகார்-இன்றைய கைது நிலவரம்' எனத் தலைப்பிட்டே செய்தி வெளியிடலாம் என்ற அளவுக்கு அந்தப் புகாரில் கைதாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.   பயணப்படி, மருத்துவப்படி, பஞ்சப்படி எனப் பலவகையாக அரசு படியளந்த போதிலும் தாங்கள் சொன்னபடி கையில் லஞ்சம் வைத்தால்தான் பொதுமக்களின் பணிகளை நிறைவேற்றுவது என இவர்கள் தீர்மானித்துக் கொண்டனரோ என நினைக்க வைக்கிறது. இத்தகைய அதிகாரிகளால், நேர்மையான முறையில் பணியாற்றும் பிற அதிகாரிகளுக்கும் தலைக்குனிவுதான்.  மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவருக்கு நண்பர் ஒருவர் கடிதம் எழுதினார்.அதில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் லஞ்சம் வாங்கும் செய்தியைக் குறிப்பிட்டு அவரை வேறு மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தாராம். ராஜாஜி எழுதிய பதில் கடிதத்திலோ, அந்த ஆட்சியரை தன்னால் மாற்ற இயலாது என எழுதியிருந்தாராம். படித்த நண்பருக்கு அதிர்ச்சி. ஆனால் கடிதத்தில் இருந்த வரிகளைத் தொடர்ந்து படித்தபோது நண்பருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் மேலிட்டன.   ""ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்துக்கு மாற்ற விரும்பில்லை. அந்த ஆட்சியர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரங்கள் அனுப்புங்கள். அவரை சிறைக்கே அனுப்புவோம்'' என எழுதப்பட்டிருந்ததாம்.  இன்றைக்கு ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் காட்டினால்கூட அவற்றைக் கண்டு சம்பந்தப்பட்டோர் அதிர்ச்சிக்குள்ளாவதில்லை. ஆதாரம் கிடக்கட்டும், ஊழலில் கிடைத்த தொகை சேதாரம் இல்லாமல் சேருமிடம் சேர்ந்ததா என்பதும், அதன் மூலம் தங்களின் பொருளாதாராமும், தங்கள் கட்சிகளின் பொருளாதாரமும் மேம்பட்டனவா என்பதும் மட்டுமே அவர்களின் கவலை.  லஞ்சமோ, ஊழலோ இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவைதான். அதில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால், ஐம்பது, நூறு, ஐநூறு, ஆயிரம் என லஞ்சம் வாங்குவோர் கையும் லஞ்சமுமாகக் கைது செய்யப்பட்டு விடுகின்றனர். பின்னர் அவர்கள் நிலையும், அவர்கள் மீதான வழக்குகளின் நிலைமையும் என்னாகிறது என்பது தனிக்கதை.  ஆனால், கோடிகளில் ஊழல் புரிந்ததாகக் கூறப்படுபவர்கள் மீதோ நடவடிக்கை என்பது சிறிதும் இல்லை என்றே தோன்றுகிறது. மாறாக அவர்களுக்கு எப்போதும் ராஜமரியாதைதான்.அத்தகைய ஊழல் பேர்வழிகள் பதவி வகிக்கும் அரசோ, அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைமையோ அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதும், ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோர் "ஊழலை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார்' என்பதுபோன்ற அறிக்கைகள் விடுவதும் வாடிக்கையான செய்திகளாகிவிட்டன.  அண்மைக்கால ஊழல் தொகைகள் சாமானிய மக்களை "ஆ' என வாய் பிளக்கவைக்கும் விதத்தில் உள்ளன. லட்சம், கோடிகளில் என்பதையெல்லாம் தாண்டி ஊழல் இன்று லட்சம் கோடிகளில் நடைபெறுகிறது. நடக்கும் ஊழல் கோடிகளில்; நடவடிக்கை மட்டும் பூஜ்யம்.  "எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்' என்ற பழமொழியை மாற்றி "இருக்கும் பதவியில் சுருட்டியது வரை லாபம்" எனச் சொல்லலாம் என்ற அளவுக்கு நாட்டில் பல துறைகளிலும் தற்போது ஊழல் தலைவிரித்தாடுகிறது.   விமானத்தைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் இயற்றப்படுகிறது. ஊழலும் ஒருவகையில் கடத்தல்தான். உண்ண ஒருபிடிச் சோறும், உடுக்க ஒரு முழத் துணியும் இல்லாத லட்சக்கணக்கானோர் வாழும் நாட்டில், ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதியை, பொதுமக்களின் சொத்துகளைக் "கடத்துவதே' ஊழல். அதில் கிடைத்தத் தொகையை தங்கள் வளைகளுக்குள் சேர்த்துவைத்துக் கொள்ளும் ஊழல் பெருச்சாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அவசியம்.  ராஜிநாமாக்கள் கண்துடைப்பாகவும், விசாரணைகள் காலம் கடத்த மட்டுமே உதவுவதாகவும் ஆகிவிடக் கூடாது. முறையான விசாரணை, பாரபட்சமற்ற அணுகுமுறை, அரசியல் தலையீடின்மை போன்றவற்றால் நீதி விரைவில் நிலைநாட்டப்படுவதே முக்கியம். கிராமப்புறத்தில் அதிகம் படிக்காதோர் ஜீரோவை முட்டை என்பர். இன்றைக்கு நாட்டில் நடக்கும் ஊழல்களில் உள்ள தொகைகளுக்கு எத்தனை முட்டை என்பதைவிடவும் தங்கள் மகனுக்கோ, மகளுக்கோ வாரத்துக்கு ஐந்து முட்டை கிடைத்ததா என்பதே சராசரி குடிமகனின் கவலையாக இருக்கிறது. வாய்ப்பிருந்தால் இரண்டு முட்டைகூட கிடைத்தாலும் அவனுக்கு அந்த அளவில் மகிழ்ச்சிதான்!  "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' என்றார் அய்யன் திருவள்ளுவர். இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் இருந்திருந்தால் இப்படிச் சொல்லியிருப்பார்: "ஊழலுக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!'
கருத்துகள்

எங்கும் ஊழல்! எதிலும் ஊழல்! என்பதே அரசியல்வாதிகளின், அரசுகளின், அதிகாரிகளின் கொள்கையாக மாறிவிட்டபிறகு ஊழலுக்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்பது மிகப் பொருத்தமாக உள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

அதியமான் பூமியில் தினமணி!

அதியமான் பூமியில் தினமணி!


எழு என்பது இந்தியப் பண்பாட்டில் சிறப்பிடம் பெற்ற எண். ஏழு நிறங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு ஜென்மங்கள் என்று ஏழு என்கிற எண்ணுக்கு எத்தனை எத்தனையோ சிறப்புகளை எழுதிக் கொண்டே போகலாம். "தினமணி' நாளிதழ் 77-வது ஆண்டில் தனது 7-வது பதிப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி இருக்கிறது.அகில இந்திய அளவில் மிக அதிகமான பதிப்புகளைக் கொண்ட நாளிதழ் ராம்நாத் கோயங்கா தொடங்கிய "இந்தியன் எக்ஸ்பிரஸ்'தான் என்றாலும், அதே குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழ் தினசரியான "தினமணி' அதிகமான பதிப்புகளை ஏற்படுத்தாமல் விட்டுவிட்டது துரதிர்ஷ்டம்தான். அந்தத் தவறு இப்போது திருத்தப்படுகிறது. தருமபுரியில் ஏழாவது பதிப்பு தொடங்கப்பட்டு விட்டது.இந்த ஏழாவது பதிப்பு தொடங்கப்படும்போது, 77 ஆண்டுகளுக்கு முன்பு "தினமணி' தொடங்கப்பட்ட சம்பவம் பற்றிய செய்திகள் நினைவில் நிழலாடுகின்றன. "தினமணி' பிறந்த கதை சுவாரஸ்யமானது.சுருக்கமாக, மனதில் நிற்கும் விதத்தில் புதிதாக வெளியாக இருக்கும் தேசிய நாளிதழுக்கு நல்லதொரு பெயரைத் தேர்தெடுக்க வாசகர்களுக்கு பத்து ரூபாய் பரிசு என்று 1934-ல் அறிவிக்கப்பட்டது. "தினமணி' என்கிற பெயரை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.எஸ். அட்சயலிங்கமும், தியாகராய நகரைச் சேர்ந்த எஸ். சுவாமிநாதனும் எழுதி அனுப்பி இருந்தனர். பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது."தினமணி' என்றால் அது கதிரவனைக் குறிக்கும். அந்தப் பெயர் புதுமையாகவும் கவர்ச்சிகரமானதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவதாகவும் இருந்தது. நேரடியாகப் பொருள் கொண்டால், அன்றாடம் ஆட்சியாளர்களைத் தட்டி எழுப்பும் மணி என்று சொல்லலாம்.தேசிய தினசரியான "தினமணி' பாரதியாரின் நினைவு நாளன்று வெளிவந்தது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். "தினமணி' பிறந்த அதே நாள்தான் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ நகரில் உரையாற்றிய நாள். "தினமணி' நாளிதழின் விளம்பரத்தில் "பாரதியார் நீடூழி வாழ்க! தினமணி நீடுழி வாழ்க!' என்று குறிப்பிட்டிருந்ததுடன், இந்த தேசிய நாளிதழ் எந்தக் கட்சியையும் சார்ந்ததல்ல என்றும் சுயநல நோக்கமில்லாமல் மக்களுக்குச் சொந்தமான ஒரே பத்திரிகை என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது.செப்டம்பர் 11, 1934-ஆம் ஆண்டு அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தனது முதல் பக்கத்திலேயே "ஏழை துயர் தீர்க்க, எல்லோரும் களித்திருக்க, எவருக்கும் அஞ்சாத தினமணி' என்கிற வாசகத்தைப் பொறித்தவண்ணம் "தினமணி' நாளிதழின் முதல் இதழ் வெளிவந்தது.""இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும், தன்னைத் "தமிழர்' என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை "இந்தியன்' என்று பெருமை பொங்க அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டு வாழும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ் பேசும் அனைவருக்கும்தான்'' என்று சந்தேகத்துக்கிடமின்றி முதல் நாள் தலையங்கம் விளக்கி இருந்தது.சுதந்திரப் போராட்ட காலத்தின் உச்ச கட்டத்தில் விடுதலைப் போராளிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும், மக்கள் சக்தியை ஏகாதிபத்திய ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக திரட்டும் ஆயுதமாக "தினமணி' விளங்கியது.77 ஆண்டுகள் உருண்டோடியும், இன்றும் இளமை குன்றாமலும், தனது கடமை தவறாமலும் துணிவில் தொய்வு ஏற்படாமலும் தொடர்ந்து செயலாற்றும் "தினமணி', தனது ஏழாவது பதிப்பாக தருமபுரி பதிப்புடன் தனக்கு மேலும் வலிமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.துணிந்து ஒரு பின்தங்கிய மாவட்டத்தில் "தினமணி' பதிப்பைத் தொடங்குவானேன் என்று கேட்டால், பின்தங்கிய நிலையில் இருக்கும் ஒன்றை முன்னேற்றமடையச் செய்வதுதானே ஒரு பத்திரிகையின் கடமை என்பதுதான் பதில்.தருமபுரி பதிப்பில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பதிப்புகளும் இணைகிறது. சொல்லப்போனால், நிர்வாக வசதிக்காக அரசால் பிரிக்கப்பட்ட அன்றைய ஒன்றுபட்ட சேலம் மாவட்டம் "தினமணி'யில் தருமபுரி பதிப்பு மூலம் மீண்டும் இணைக்கப்பட்டிருக்கிறது.முந்தைய சேலம் மாவட்டத்தில் வடசேலம் என்றழைக்கப்பட்ட பகுதிகள் ஒன்றாக்கப்பட்டு, 1965-ல் தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதுவரையிலும் தருமபுரி என்பது வெளியுலகில் பேசப்படாத நகரமாகவே இருந்தது.இந்த மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளியில் பிறந்தவர்தான் முதல் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி என்கிற சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். தருமபுரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் இருந்த சான்றோர்கள் பலர் விடுதலை வேள்வியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். வ.உ.சி., மகாகவி சுப்பிரமணிய பாரதி ஆகியோருடன் கைகோர்த்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சுப்ரமணிய சிவா இங்குதான் பாரதமாதாவுக்கு கோயில் கட்ட முனைந்தார்.விடுதலைப் போரில் தீவிரம் காட்டிய சுப்ரமணிய சிவா, அலிகார் சிறையில் இருந்த காலத்தில் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் தீர்த்தகிரியார்,  கந்தசாமி குப்தா ஆகியோருடன் ஏற்பட்ட நட்பினால், பாப்பாரப்பட்டிக்கே வந்து வாழ்நாள் இறுதிவரை இங்கேயே இருந்தார். அதியமான் வாழ்ந்ததும், அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்ததும் இந்த மண்ணில்தான். பழைய சேலம் மாவட்டத்திலிருந்து தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டாலும், அவை அனைத்தையும் மீண்டும் தனது தருமபுரி பதிப்பினால் ஒன்றிணைத்துள்ளது தினமணி. "தினமணி'யின் முதல் பதிப்பு சென்னையில் 1934-ம் ஆண்டு பாரதியின் 13வது நினைவாண்டில் உதயமானது. அதன் பிறகு 1951ல் மதுரை பதிப்பும், 1990-ல் கோவை பதிப்பும் உருவானது. அதன் பின்னர் 2003-ல் திருச்சியிலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் திருநெல்வேலி, வேலூர் ஆகிய ஊர்களிலும் பதிப்புகளைத் தொடங்கிய தினமணி தற்போது தருமபுரியிலும் தொடங்கியுள்ளது. "தினமணி' வரலாற்றில் தருமபுரி ஒரு திருப்புமுனை. மகாகவி பாரதியார் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது. "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தருமம் மறுபடி வெல்லும்'. எமது வெற்றிப் பயணம் தருமபுரி பதிப்பின் மூலம் "தினமணி' மீண்டும் வீறுகொண்டு எழும் என்கிற நம்பிக்கையுடனும், இந்த வெற்றிப் பயணத்துக்கு, வாசகர்கள்தான் காரணம் என்கிற நினைவுகளுடனும், தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எங்கள் காணிக்கையாக இந்தப் பதிப்பை சமர்ப்பிக்கிறோம்.
கருத்துகள்

திமணியின் முன் நினைவுகளை அசை போட்டு நாங்களும் அறியச் செய்தமைக்கு நன்றி. நாட்டில் ஏழைகள்துயர் தீர்ந்து விட்டதா? எல்லாரும் களிப்பில் உள்ளனரா? ஏன் அந்த முழக்கம் நிறுத்தப்பட்டது? முழக்கங்கள் 
எப்பொழுதெல்லாம் மாற்றப்பட்டன? ஏன் மாற்றப்பட்டன? என்னும் செய்திகளையும் வெளியிட்டால் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

தலையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்?

லையங்கம்: இவரா திருவாளர் பரிசுத்தம்?


ஏழு ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம் நான்கு முதல்வர்களைச் சந்தித்துவிட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் இந்த நான்கு முதல்வர்களுமே மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் அல்ல என்பதுடன், குறிப்பிடும்படியான நிர்வாகத் திறமையோ, அரசியல் பின்னணியோ இல்லாதவர்களும்கூட.ஒரு மிகப்பெரிய புயலுக்குப் பின்னே ஊழல் குற்றச்சாட்டுகளால் சரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் நன்மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், ராணுவத்தினரின் மத்தியிலும் அரசியல்வாதிகள் பெயரில் ஏற்பட்டிருக்கும் ஆத்திரத்தைத்  தணிக்கவும், காங்கிரஸ் தலைமை கையாண்டிருக்கும் உத்திதான், பிருத்விராஜ் சவாண் என்கிற மாற்று ஏற்பாடு. துணிந்து அசோக் சவாணை மாற்றியதற்குக் காங்கிரஸ் தலைமையைப் பாராட்டும் அதேநேரத்தில், சட்டப் பேரவைக் கட்சியின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பதவியில் அமர்த்தாமல் இருப்பதற்குக் கண்டிக்கவும் வேண்டியிருக்கிறது.288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 82 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 62 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். 82 காங்கிரஸ் உறுப்பினர்களில் ஒருவர்கூட நேர்மையான நல்லாட்சி தரமுடியாது என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாலோ அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்களின் செல்வாக்கைப் பெற்ற ஒருவரைவிடக் கட்சித் தலைமையின் நம்பிக்கைக்கு உரியவர்கள்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்கிற காங்கிரஸ் கட்சியின் எழுப்பப்படாத சட்டத்தின் காரணமாகவோ, பிருத்விராஜ் சவாண் மகாராஷ்டிர மாநிலத்தின் 22-வது முதல்வராகத் தலைமையால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பிருத்விராஜ் சவாணுக்குப் பெரிய அரசியல் பின்னணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கராட் நகரம் தட்சிண காசி என்று பெயர் பெற்றது. பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் அரசாண்ட பகுதி என்று கருதப்படும் கராட், இஸ்லாமியர்களுக்கும் ஒரு புனித நகரம். இந்த கராட் தொகுதி இப்போது மகாராஷ்டிர மாநிலத்துக்கு ஒரு முதல்வரையும் வழங்கிப் பெருமை பெறுகிறது.பிருத்விராஜ் சவாணின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1991-ல்தான். ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியிலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் படித்துத் தேர்ந்த பிருத்விராஜ் சவாண், விமானத்துக்கான உறுப்புகள் தயாரிப்பது மற்றும் ராணுவத்துக்கான நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒலிபரப்பு சாதனங்களைத் தயாரிப்பது போன்ற நிறுவனங்களில் அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ராஜீவ் காந்தியின் நண்பர் சாம் பித்ரோடாவால் இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு அரசியல் ஞானஸ்நானம் பெற்ற அறிவுஜீவிகளில் ஒருவர் பிருத்விராஜ் சவாண்.பிருத்விராஜ் சவாணும் ஒருவிதத்தில் பார்த்தால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் போல, நிர்வாகத்தில் அக்கறை காட்டுபவராகத் தொடர்பவரே தவிர, அரசியலில் தனது ஆளுமைத் திறனைக் காட்ட நினைப்பவரல்ல. இதனால்தானோ என்னவோ, ஆரம்பம் முதலே பிரதமரின் நன்மதிப்பைப் பெற்றவராகவே தொடர்கிறார். பிரதமரின் அலுவலகத்தில் இணை அமைச்சராக இருந்த பிருத்விராஜ் சவாணை, பிரதமரின் பரிந்துரையின் பேரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.அமெரிக்காவில் படித்தவர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தேர்ச்சியுற்றவர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்ததால், பல்வேறு கோஷ்டிகளை அரவணைத்துச் செல்லக்கூடியவர், ராகுல் காந்தியின் பார்வையில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டிலும் சிக்காது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்சியளிப்பவர் போன்றவை பிருத்விராஜ் சவாணின் தனிச் சிறப்புகளாகக் கருதப்பட்டு முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.அசோக் சவாணின் கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 23 அமைச்சர்களும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர்களும் இருந்தனர். புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிருத்விராஜ் சவாண், தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதில் யார் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வர் பிருத்விராஜ் சவாணுக்குக் கிடையாது. அதைத் துணை முதல்வர் அஜித் பவாரும் அவரது மாமா சரத் பவாரும் நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.தனது அமைச்சரவையில் பாதிக்குப் பாதி புதுமுகங்கள் என்றால், பெருவாரியான காங்கிரஸ் அமைச்சர்கள் பதவி இழக்க வேண்டியிருக்குமே, அது சாத்தியம்தானா? ஏற்கெனவே நாராயண் ராணேயில் தொடங்கி, முதல்வர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையால், அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களைப் பிருத்விராஜ் சவாணால் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், பதவியில் தாக்குப்பிடிக்க முடியுமா? இப்படி ஏராளமான கேள்விகள் புதிய முதல்வர் பிரித்விராஜ் சவாணை எதிர்நோக்கும் சவால்களாகக் காத்திருக்கின்றன.ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு முறைகேடுகளுக்காகப் பதவி விலக்கப்பட்டிருக்கிறார் அசோக் சவாண். புதிய முதல்வர் கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக ஊழலற்றவராக இருப்பார் என்று ராகுல் காந்தியால் உறுதியளிக்கப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். ஆமாம், மும்பையின் மத்தியப் பகுதியில் அமைந்த வடாலா பகுதியில், குறைந்த வருவாய் பிரிவினருக்கான குடியிருப்பு ஒதுக்கீடு வீடுகளை, வருமானத்தைக் குறைத்துக் காட்டி வாங்கிய ஊழலில் சிக்கியவராயிற்றே பிருத்விராஜ் சவாண் என்றெல்லாம் நாம் இப்போது கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கலாகாது. மக்களே மறந்து விட்டார்கள், கட்சித் தலைமைக்கு ஞாபகமா இருக்கும்!
கருத்துகள்

தன் வசதிக்கேற்ப அடிமையை மாற்றிய காங். ஐ ஆகா, ஒகோ என்று சிலர பாராட்டிக் கொண்டிருக்க தினமணி உண்மைகளை எடுத்துரைத்துள்ளது. பாராட்டுகள். ஊழலுக்கு எப்போதுமே தண்டனை கிடையாது. அதனைத் தெரியும் படிச் செயதால்தான் பதவிப் பறிப்பும் பின்னர்ப் புதிய பதவியும் கிடைக்கும். விலக்கப்பட்டவர் எந்த மாநிலத்தின் ஆளுநர் ஆவாரோ தெரியவில்லை. இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:19:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: இலங்கை அரசு

வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம்: இலங்கை அரசு


கொழும்பு, நவ. 10: இலங்கையில் செயல்படும் வெளிநாட்டு அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை முறைப்படுத்த புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசு கொண்டுவர உள்ளது.இதன்படி தொண்டு நிறுவனங்களுக்கு 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின்படியான ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு மறுக்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இலங்கையில் தீவிரவாதத்தை வளர்க்கும் செயல்களில் மறைமுகமாக ஈடுபட்டிருப்பதாகவும் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுக்கு வெளிநாடுகளில் சிவில் வழக்குகளில் இருந்து சட்டப் பாதுகாப்பு அளிக்கப்படுவது வழக்கம். ஏதேனும் சிவில் வழக்குகளில் அவர்கள் சிக்கினாலும் அவர்களை வெளியேற்றலாமே தவிர உள்நாட்டுச் சட்டங்களின்படி அவர்களை தண்டிக்க முடியாது.அந்த வகையில் இலங்கையில் செயல்பட்டுவரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தீவிரவாத நடவடிக்கைகள் தலைதூக்க மறைமுக ஆதரவு அளித்து வருவதாக இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதை அடுத்து இலங்கை அரசின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள தகவலில், "வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் ராஜதந்திர சட்டப் பாதுகாப்பு இனி வழங்கப்பட மாட்டாது. அந்த நிறுவனங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை ஒன்றும் வகுக்கப்படும். அதன்படி அந்த தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் முறைப்படி பதிவுசெய்யப்பட்ட வேண்டும். அதன் பின்னர் ராணுவ அமைச்சகத்திடம் அனுமதிச் சான்றிதழ் பெற்ற பின்னரே இலங்கையில் அந்த நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.இப்போது இலங்கையில் சுமார் 1250 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 250 நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களாகும். உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரண்டையுமே முறைப்படுத்த விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையில் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது. சண்டை நடந்தபோது சில தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.விசா கெடுபிடி: மேற்கத்திய நாடுகள், தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட உலகின் 85 நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் இலங்கைக்கு வருவதற்கான விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து அணி திரண்டு விடக் கூடும் என்ற அச்சத்தால் இலங்கை அரசு இந்த முடிவை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்

முறைப்படுத்தல் என்ற பெயரில் மனித நேயத்துடன் செயல்படும் நிறுவனங்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கும மக்களுக்கு அளித்து வரும் மறுவாழ்வு உதவிகளைத் தடுப்பதே சிங்கள அரசின் நோக்கம். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 4:04:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English
 

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு:

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: மசோதா நிறைவேற்றம்

சென்னை, நவ. 12: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவையில் கடந்த ஜூனில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதன் அடிப்படையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மாநில அரசின் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக செப்டம்பர் 5-ம் தேதி ஆளுநரால் அவசர சட்டம் (தமிழ்நாடு அவசர சட்டம் 30) பிறப்பிக்கப்பட்டு செப்டம்பர் 7-ல் தமிழ்நாடு அரசிதழின் சிறப்பிதழில் வெளியிடப்பட்டது.  இந்த சட்ட மசோதா புதன்கிழமை (நவம்பர் 10) அறிமுகம் செய்யப்பட்டது. அதன் மீது வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவாதம்:வி.பி. கலைராஜன் (அதிமுக): தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 80 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் தமிழில் பேச முடியாத நிலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அறிவித்தீர்கள். அதற்கும் வெற்றி கிடைத்ததாகத் தெரியவில்லை. முதல்வரின் குடும்பத்தினர் நடத்தும் திரைப்பட நிறுவனங்களுக்கு ரெட் ஜெயிண்ட், கிளவ்டு நைன் என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டுவதற்காக இதனைக் கூறவில்லை.தமிழகத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக இதனை கூறுகிறேன். இந்த தலைமைச் செயலக கட்டடத்தை கட்டுவதற்குக் கூட தமிழர்களைப் பயன்படுத்தவில்லை.சி. ஞானசேகரன் (காங்கிரஸ்): தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வருத்தத்தை தருகிறது. இந்தச் சட்டத்தை காங்கிரஸ் வரவேற்கிறது. 20 சதவீதம் என்பதை 50 சதவீதமாக அதிகரித்து திருத்தம் செய்ய வேண்டும் என்றார்.மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நன்மாறன், பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம், மதிமுக எம்.எல்.ஏ. சதன் திருமலைக்குமார் ஆகியோர் 20 சதவீத ஒதுக்கீட்டை 50 சதவீதமாக அதிகரிக்க வலியுறுத்தினர். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இந்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.விவாதத்துக்கு பதில் அளித்து சட்ட அமைச்சர் துரைமுருகன் பேசியது: இன்று ஒரு புனிதமான நாள். வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வேதனையான விஷயம். 20 சதவீதம் என்பதை அதிகரிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர். இது முதல்படிதான். எதிர்காலத்தில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 100 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் நிலையும் வரும்.  தமிழுக்காக இந்த அரசும், முதல்வர் கருணாநிதியும் அளப்பரிய பணிகளை ஆற்றியுள்ளனர். அதில் ஒன்றுதான் இந்தச் சட்டம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தச் சட்டத்தை மாற்ற முடியாது என்றார். அதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் எதிர்ப்பின்றி இந்தச் சட்டம் நிறைவேறியது.
கருத்துகள்

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கேட்டால் பின்னுரிமை ஒதுக்கப்படுகிறது. 80 விழுக்காடு ஆங்கில வழிக் கல்விக்கு என்றால் தமிழ் வழிக் கல்வியை எவ்வாறு ஊக்கப்படுத்தும்?இச்சட்டத்தில் தமிழில் (தமிழ் இலக்கியத்தில்) பட்டம் பெற்றவர்களுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படவில்லை. எனினும் சட்ட அமைச்சரின் நம்பிக்கை விரைவில் நிறைவேறும நாள் வரட்டும்! அதற்கேற்ப அரசு செயல்படட்டும்! அறிவியல் மேதைகளும் தொழில் முனைவர்களும் கல்வியாளர்களும் பெருக தமிழ்வழிக் கல்வி மட்டுமே தமிழகத்தில் இருக்கும் நிலை உடனே வர வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

சுதர்சன் பேச்சு: அண்ணா சாலையில் காங்கிரசார் மறியல்

சுதர்சன் பேச்சு: அண்ணா சாலையில் காங்கிரஸார் மறியல்

சென்னை, நவ, 12: அண்ணா சாலையில் இன்று மறியல் செய்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உள்ளிட்ட நூற்றுக் கணக்கான காங்கிரஸாரை போலீஸார் அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒரு சிஐஏ உளவாளி எனவும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அவரது தாய் இந்திரா காந்தி ஆகியோரது படுகொலைக்குத் திட்டமிட்டார் எனவும்  ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் பேசியதாகக் கூறப்பபடுகிறது. இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் தங்கபாலு தலைமையில் நூற்றுக்க கணக்கான காங்கிரஸார் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து, போலீஸார் அவர்களை வேனில் அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் விடுவித்தனர்.
கருத்துகள்

ஆபாசச் சொற்களில எழுதுபவர்களைப்பற்றி ஒன்றும் சொல்லாமல் இனத்தைப் பாதுகாக்க வடிவேலன் துணை என எழுதுபவர் பற்றிக் கூறுவது ஏன்? பெரோசு காந்தி கொலையில் நேருவிற்குப் பங்கு உண்டு என்று சொன்னவர்களுக்கு எதிராக ஒன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லையே! இலால்பகதூர் கொலைக்கும் சஞ்சய் காந்தி உயிரிழப்பிற்கம் இந்திரா காநதி காரணம் என்று சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே! சுதர்தனம் சொன்னால் சொல்லி விட்டுப் போகிறார். ஆர்ப்பாட்டம் செய்து அவர் சொன்னதைப் பரப்ப வேண்டுமா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:39:00 AM
SONNIYAA PATRI PESA SUTHARSANATHTHUKKU THAKUTHI ILLAI :THAAN ORU THARAKKURAIVANAVAR YENPATHAI KAATTIVITTAAR
By தேசநேசன்
11/13/2010 1:31:00 AM
Dinamani is a reputed newspaper read by decent people. I don't know How People like SUKHRAN VEETTU PILLAI @ RAJAJIKKU AAPPU MEL APPU VAIPPAVAN are writing. If any persons wants to comment it should be polite language. Dinamani must scan these dirty messages and stop from publishing as these comments are not even fit for dustbins.
By KVS IYER
11/13/2010 12:17:00 AM
Observer! You are wrong! It was not Delhities took on streets against Sikhs. It was rowdies and anti socials under leadership of Congressmen Jagdish Tytler massaccred more than 4000 Sikhs which may be termed as JALIANWALA BAUGH -2. By no way common man was concerned with this inhuman act. Today Congress is talking about Gujarat Riots shamelessly. Pl note none of the rascals involved in the Mass Murder of Sikhs was punished till today as THEY WELL PROTECTED BY CONGRESS.
By bharath, mumbai
11/13/2010 12:13:00 AM
Persons like (Sukran......) who do not have guts to mention their own name must refrain from making comments. When you have no spine and dare to mention your name what aappu will you keep to Rajaji? Are you mentally Sick? If you dare declare your name and address. Dinamani must trace such persons and help us to detect them.
By bharath, mumbai
11/13/2010 12:07:00 AM
உண்மையை சொன்னால் உற்றவர்ககளுக்கு உட்ம்பு எரிகிறது. நாகூர் பாபு சொல்வது எத்துனை உண்மை.
By Pa.Tha.Velan
11/12/2010 11:54:00 PM
RSS க்கு நல்ல விள்ம்பரம்! காங்கிரஸ்காரர்கள் நல்ல ஹிந்துக்கள். எனவே RSS வளர, புகழ்பெற இப்படி உதவுகிறார்கள். இப்படியாவது (வேட்டி உருவிய ) இவர்களது பாவங்கள் கரையட்டுமே!
By MANI
11/12/2010 10:12:00 PM
RSS தலைவர் சுதர்சன்(தமிழர்)பேசியது சரியே!ஜெய்ன் கமிஷன், ராஜீவ்கொலையில் சந்திராசாமிக்கு முக்கிய பங்குண்டு எனத் திட்டவட்டமாகக்கூறியும், அவரை சிபிஐ ஏன் கைதுசெய்யவில்லை? சோனியாவின் 'அன்பு 'க்குப் பாத்திரமானவர் என்பதாலா?அப்பாவி தமிழர்கள்மீது பழிபோட்டு, திசைதிருப்பி,தூக்கிலிட்டு, தான் மட்டும் குற்றத்திலிருந்து தப்பிக்கநினைக்கும் சோனியாவை சும்மாவிடக்கூடாது!சுடப்பட்ட இந்திராகாந்தியை மருத்துவமனையில் சேர்த்தது சோனியா! ஆனால் கொலைவழக்கில் சோனியா சாட்சியாக சேர்க்கப்படவேயில்லை ஏன்? ஆனால் அட்மிட் பண்ணிய பயிற்சிமருத்துவர் நிரந்தரமாகக் காணாமலடிக்கப்பட்டார்!இதன் மர்மம் என்ன?நடத்தப்பட்டதோ கண்துடைப்பு பிரேதப் பரிசோதனைதான்!உண்மைக் கொலையாளியை சோனியா காப்பாற்றினாரா, இல்லையா?(கேஹர் சிங்கை தண்டித்தது தவறு என தலைமை நீதிபதி சந்திரசூட் வருத்தப்பட்டதிலிருந்தே தவறானவர்கள் தண்டிக்கப்பட்டதும், தெரிகிறது!) ஒரு அப்பனுக்குப் பிறந்த தமிழன் எவனும் லட்சம் தமிழர்களை சாகடித்த சோனியாவை ஆதரிக்கமாட்டான்!ஒரு 'பட்டி' வெள்ளைக்கார..யிநா டம் தன்மானமுள்ள இந்துக்களுக்கான ஒரே (RSS )இயக்கம் மன்னிப்புக்கேட்கவேண்டிய தேவையே இல்லை!Good comm
By Nagore Babu
11/12/2010 10:10:00 PM
சோனியாவும்,சுப்ரமண்ய சுவாமி இன்னும் நிறைய பேர் C.I.A ஏஜண்ட்.கொள்ளையடித்த பணத்தில் பங்கு வாங்க வந்தவன் தான் ஓபாமா ஹுசைன்.சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 8:32:00 PM
முருகா ! ..கருணை வடிவே!... குழந்தை உள்ளமே!!!...வெற்றிவேல் முருகா!அரோகாரா!....தமிழ் வாழ்க! .....எனக்கும் மயில் கொடுத்த முருகா!.....மயிலே!எனக்கு துணையாய் எங்கும் வரும் மயிலே!....வேல் வேண்டும் எனக்கு!....என் இனம் காக்க!...உன் இனம் காக்க!...மயில் இனம் காக்க!...வேல் வேண்டும் எனக்கு!....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு!. ..அம்மையும்,அப்பனையும் பிரிந்த முருகா!.....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு!. ..சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 8:24:00 PM
During Indira Gandhi's regime, , during a Parliament proceedings, some Congressmen called Mr.Piloo Mody, a former Swatantra MP as "CIA Agent"Congressmen, of yesteryears now alive should remember this . The next day Mody entered the House with a board hanging around his neck with the words "I am a CIA Agent".The very same congressmen protested over the action of Mody.At that time no Congressmen's effigies were burnt . No congressmen apologised for the remark and they could not prove that Mody was a CIA agent. It is the congressmen who set a precedent to the sangh parivar to behave like this.Instead of blaming RSS, congressmen can organise "Mupperum Vizha" for celebrating the three scams viz., CWG,Adarsh and Spectrum" displaying the banner of Gandhi and other congress leaders.
By subramanian
11/12/2010 7:20:00 PM
உண்மையை கண்டதும் பொங்கி எழுகிறது இந்த் பரதேசி கூட்டம்.
By unmai
11/12/2010 6:28:00 PM
Hai!Observer! Are you born for White Pig eating Bastards,Every one knows Congress is a Terrorist organization of India and Congress followers are most corrupted goondas,Go and see North India.,without knowing any facts,you ass hole don't give your ass hole opinions,Even the Justice Party(DK,DMK,ADMK,)formed by Thiyagaraja Muthaliyar,Natesha Chettiyar and Nair before independence,because of INJUSTICE by CONGRESS IDIOTS,Nethaji formed I.N.A why?Indian National Army.,why?
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 6:09:00 PM
காங்கிரஸ் முதலில் தடை செய்ய பட வேண்டும் இவர்கள் பிந்தரன் வாலே உருவாக்கியது.ஜோதி பாசுக்கு எதிராக கூர்க்காலண்ட் உருவாக்கியது. உன்னதமாக இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வில் நச்சு விதை போல் போர் பயிற்சி கொடுத்து இந்த நூற்றுண்டின் ஈடு இணையற்ற கொலை பாதகர்கள் தான் காங்கிரஸ்காரர்கள்,சோனியா தன் உதவியாளர் ஜார்ஜ் வுடன் படுத்து தூங்கும் நீ தாய்.,போரிக்கோ புத்தாங்கணா(வெள்ளை பன்னி தேவடியாளுக்கு பிறந்தவளே)நான் வணங்கும் அன்னை மாதாவும்,பரம பிதாவும்,இனிமேல் யார் பாவத்தையும் சுமக்க விரும்பாத இயேசு கிறிஸ்துவும் உனக்கு தக்க தண்டனை கொடுக்கட்டும்.ஆமென்.,அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளாத்தினாலே இந்த மகா பாவிகளுக்கு தக்க தண்டனை கொடுப்பீராக.ஆமென்!!!ஆமென்!!!ஆமென்!!!சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By சுக்கிரன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/12/2010 5:46:00 PM
Indira Gandhi was regarded as a National Leader rather than just the Primie Minister or Congress Leader. So, the entire public of New Delhi beyond the party lines became frenzied on the assassination of Indira Gandhi and indulged in violence against Sikh community. So, it cannot be blamed on congress but all the other political parties too including the current BJP veterans who were in other parties. It's time to stop blaming congress for this undesirable act.
By Observer
11/12/2010 5:14:00 PM
இதுக்கெல்லாம் முன் அனுமதி இல்லைனு நடவடிக்கை எடுக்கலாம்-ஆனா அரசு பதுகாப்பு கொடுக்குது
By narayanan
11/12/2010 5:13:00 PM
Congress helped kill thousands of Tamils in lanka and still watches Tamil fishermen die. They also carried out sikh killing. By the same token Congress Party also should be declared as terrorist organization.
By Arul
11/12/2010 4:39:00 PM
RSS இயக்கமும் 3000 சீக்கியர்களை கொன்ற congress um தடை செய்ய பட வேண்டிய இயக்கங்களே
By புரவி
11/12/2010 4:04:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *