வியாழன், 24 செப்டம்பர், 2009

இறுதிப் போரை நேரில் கண்ட சிவரூபன்
கொடூரத்தை விவரிக்கிறார்

23 September, 2009 by admin

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக்கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன். இவ்வாறு முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட போரில் நந்திக்கடல் அருகில் இடம்பெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழ் இன அழிப்பை நேரில் கண்ட சாட்சியாக இங்கு விபரிக்கின்றார்.

இதோ சிவரூபன் பேசுகிறார்:

“”ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே!

நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர வேறெங்கும்போய் பெரிய படிப்பு படித்தவனுமல்ல. கண்ணெதிரே கண்ட கொடூரமான தமிழ் இன அழித்தலின் சில காட்சிகளை எழுத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். எம் இன மக்களின் கொடூர அழிவைக் கண்டும் மௌனமாயிருந்த சர்வதேச சமூகத்தின் மீதான அவநம்பிக்கையும் நான் எழுதுவதற்கு முக்கிய காரணம்.

பசியின் வலியும், பிழிந்த தாகமும், பிரிவின் தவிப்பும், வெடிகுண்டுகளின் வெக்கையும், படு கொலைகளின் கொடூரமும், சகலமும் முடிந்துபோகிற தருணத்தின் திகிலுமாய் நாங்கள் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த அக்கடைசி நாட்களில் இரண்டு நம்பிக்கைகளை கடைசிவரை கொண்டிருந்தோம். “தாய் தமிழ்நாட்டு உறவுகள் எம்மை கைவிடமாட்டார்கள், அமெரிக்கா எப்படி யாவது எமது உதவிக்கு வரும்’ அந்த நாட்களின் வலியை எம்மால் வார்த்தைகளில் வருணிக்க முடியாது. அங்கு நின்று அனுபவிக்காதவர்களால் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.

இதனைக்கூட நான் ஒரே ஒரு மன்றாட்டத்துடன் தான் எழுதுகிறேன். சர்வதேசமே! உயிரான தமிழ்நாட்டு உறவுகளே! இறக்கைகள் வெட்டப்பட்டு, கம்பிவேலிகளுக் குள் அடைக்கப்பட்டு, பாலைவனத்தில் வெந்து துடிக்கும் மண்புழுக்கள்போல், தமிழர்களாய் பிறந்ததைத் தவிர வேறெந்த குற்றமோ பாவமோ செய்யாத, உடல் சோர்ந்து, உளம் நலிந்து, உணர்வு செத்து, நா வறண்டு, இதய நாடிகள் ஒடுங்கி, வார்த்தைகள் முடிந்துபோய் வாடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளை எப்படியாவது காப்பாற் றுங்கள். சுதந்திர வேட்கைக்கெல்லாம் அப்பால் இம்மக்களுக்காய் இன்று நாங்கள் வேண்டுவது பெரிதாக எதுவுமில்லை. உணவு, குடிநீர், அச்சமின்றிக் கண்ணுறங்க தமது குடிசை, மணியோசை கேட்க எமது சிறு கோயில்கள். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

இன அழித்தல் நடந்த இறுதி நாட்களின் கொடூ ரத்தை நான் இங்கு எழுதுவதுகூட உங்களின் கழிவிரக் கம் கேட்டல்ல. என்றேனும் ஒருநாள் எமது மக்களுக்கான உரிமைகளை நீங்கள் பெற்றுத் தருவீர்களென்ற நம்பிக்கையில்தான் நான் எழுதுகிறேன்.

அன்று வைகாசி 16. நள்ளிரவு கடந்திருந்தது. வழமையை விட இருள் கனத்திருந்தது போன்ற உணர்வு. ஏதோ நடக்கப்போகிற தென்ற திகில் எங்கும் சூழ்ந்திருந் தது. அதிகாலை 3 மணி இருக்க லாம். தொடங்கிற்று ஊழித்தாண்டவம். முள்ளிவாய்க் காலில் இருந்து முல்லைவட்டுவாகல் நோக்கி முன்னூறு மீட்டர் நீளத்திலும் வட ஆழ்கடலில் இருந்து நந்திக்கடல் திசையாக ஐநூறு மீட்டர் அகலத்திலுள்ளுமாய் ராணுவ வேலிக்குள் அடைக்கப்பட்டிருந்த மூன்று லட்சத்திற்கும் மேலான மக்களைச் சுற்றி ராஜபக்சேவின் பிணம்தின்னிப் பேய்கள் பேரவலத்தின் இறுதிப் போரை தொடங்கின.

வைகாசி௧7 அதிகாலை. கோடி சிங்கங்கள் சேர்ந்து கர்ஜித்தால் எழும் ஓங்கார ஓசையுடன் ராட்சஸ கொடுங்கோலன் ராஜபக்சேவின் ஏவலில், தமிழ்ப் பிணம் தின்னும் கழுகு பொன்சேகா வழிநடத்த, “தமிழரை அழித்து தீர்த்த பின்னரே அடுத்த வேலை’ என நின்ற கோத்தபய்யா பின்நிற்க, மூன்றாம் உலக யுத்தம்போல் மூன்று லட்சம் மக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது. புயலடித்தால் தாவ முடியாமல் தவிக்கும் காட்டு மந்திகள் போல் எம்மக்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். சிங்களக் கொலைவெறிப் படைகளுக்கு பிரபாகரனின் படைகள் தக்க பதில் தந்திருக்க முடியும். ஆனால் முடியாது போயிற்று. ஏன் தெரியுமா…?

“”இனப்படுகொலையை அரங்கேற்ற இந்தியா ராணுவ உதவிகள், இந்திரா ரடார், செயற்கைக்கோள் செய்மதி உதவியெல்லாம் செய்து கொடுத்தது. சீனா ராக்கெட்டுகளும், ரசாயன ஆயுதங்களும் அள்ளிக் கொடுத்தது. ரஷ்யா டாங்குகள் மட்டுமல்ல பீரங்கிகளுடன் கவச வாகனங்களும் கொடுத்து, தானே நேரில் வந்து கள ஆலோசனைகள் தரவும் தயாராய் இருந்ததாம். பக்கதுணையாய் ஏவுகணைகளும் பலகோடி பெறுமதியுடைய ஆயுதங்களும் தந்தது பாகிஸ்தான். உலகின் அத்தனை பெரிய நாடுகளின் ராணுவ வளங்களும் சுற்றி நிற்க தமிழருக்கென தலைவன் உருவாக்கிய படைகள் தனித்து நின்று எந்தளவுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும்?

இப்படித்தான் மே௧7 இறுதி யுத்தம் நடந்தது. நடப்பது கனவா, கற்பனையா என்று புரியாமல் நின்றோம். நாற்திசையிலிருந்தும் எறிகணைகள். எங்கெங்கிருந்தோ ரசாயன எறிகுண்டுகள். இடைவெளியில்லா துப்பாக்கி வேட்டுகள். சற்றே நிமிடம் ஷெல் மழை ஓய்ந்ததும் பதுங்கிப் பதுங்கி பங்கரில் இருந்து வெளியே வந்து பார்த்தேன். அவலத்தின் பெருங்கொடுமை கண்ணெதிரில் முள்ளிவாய்க்கால் பரப்பெங்கும் விரிந்து கிடந்தது.

பதுங்கு குழிக்குள் ஓடி ஒளியுமுன் நான் பார்த் திருந்த தமிழ் உறவுகள் சதைத் துண்டுகளாகிக் கிடந்தன. ஆண், பெண், பெரியோர், குழந்தைகள் வேறுபாடு எதுவும் தெரிய வில்லை. தலை வேறு, கால் வேறு, உடல் வேறாக பிணக் காடாய் கிடந்தது. சற்று தூரத்தில் தலைவிரிகோல மாய் தாய் ஒருவர் தலையற்ற உடல் ஒன்றை மடியில் கிடத்தி அழுது கதறிக்கொண்டிருந்தார். “”கடவுளே… ஏன் எங்களுக்கு இந்த அவலம்? என்ட ராசாவின்டெ முகத்தைக் கூட பார்க்க முடியலியே. பாவி ராஜபக்சவே… வா… என்னையும் கொன்றுபோடு” என்று அழுது புலம்பிக்கொண்டிருந்தாள். திடீரென எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவையொன்று அவளின் தலையை சிதைத்துச் சென்றது. குரலின்றி தரை சாய்ந்தாள் அந்தத் தாய். முகம் கவிழ்ந்து ஈழ மண்ணை முத்தமிட்டபடியே பிணமானாள்.

பக்கத்து பங்கருக்குள்ளிருந்து தம்பி… என்று சன்னமாய் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். மார்பில், வயிற்றில், காலில் குண்டு காயங்களோடு ரத்தம் வழிந்த நிலையில் முதியவர் ஒருவர் “ஆரேனும் என்னெ காப்பாற் றுங்களேன்…’ என்று இயலாமை யின் வலியோடு குரல் கொடுத் தார். அருகில் நான் செல்லுமுன் அவரும் விழிகள் மூட தரையில் விழுந்தார். கண்களுக்கு எட்டிய தூரம்வரை எங்கு நோக்கிலும் பிணங்கள்… மனிதச் சதையின் சிதறல்கள்.

வேதனையின் கனம் என்னை அழுத்தியது. என்னையும் அறியாமல் ஏதேதோ புலம்பினேன். ஐயா ஒபாமா அவர்களே… உங்களைத்தானே ஐயா நாங்கள் கடைசியாக நம்பியிருந்தோம். ஒடுக்கப்பட்ட இனத்தில் இருந்து எழுந்து வந்தவர் நீங்கள். எனவே எம் இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் இறுதியில் கை கொடுப்பீர்கள் என்று நம்பி வான்பரப்பில் வந்து போன அத்தனை விமானங்களையும் அண்ணாந்து உயிர் தவிப்புடன் பார்த்திருந்தோமே… கைவிட்டு விட்டீர்களே ஐயா… என்றெல்லாம் புலம்பினேன்.

எழுந்து நடக்க எத்தனித்தேன். மீண்டும் ரவைகள் கூவிப் பாய்ந்து வந்தன. வேகமாக நடக்க முடியவில்லை. சிதறிய உடல் களின் மீது என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற பக்தி யுடன் நகர்ந்தேன். அந்தளவுக்கு எங்கும் பிணக்குவியலாய் கிடந்தன. ஒவ்வொரு பிணமாகக் கடந்து எனது மனைவி, பிள்ளை கள் இருந்த பதுங்கு குழிநோக்கி நகர்ந்தேன். இன்னொருதாயின் துயரம் என்னை முன்செல்ல விடாது தடுத்தது.

அவருக்கு 30 வயதிருக்கும். சுமார் ஆறு மாத கைக்குழந்தை. ஷெல் அடிபட்டு இறந்திருந்தது. பிஞ்சுக் குழந்தையை மார்போடு இறுக அணைத்துக்கொண்டு “”பாவி ராஜபக்சே… புருஷனையும் தின்டான், என்ட பச்ச புள்ளையெயும் தின்டான்… பசி தீர்ந்ததாடா பாவி…” என்று புலம்பியபடி இறந்த குழந்தையை முத்தமிட்டு முத்தமிட்டுக் கண்ணீரால் நனைத்தாள். அவளுக்கு ஆறுதல் சொல்ல அங்கு எவரும் இருக்கவில்லை. அவளது கூக்குரலையும் எவரும் கேட்கவில்லை. குழந்தையை முத்தமிட்டுக் கொண்டே முன் போனவள் திடீரென பின்னோக்கிப் பார்த்தாள். அவளது முகம் சந்திரமுகிபோல் மாறியது. வெடித்து சிரித்தவண்ணம் தன் பிள்ளையோடு ஏதேதோ பேசத்தொடங்கினாள். நிமிடங்களுக்கு முன் தாயாக இருந்தவள் மனநோயாளியாகி நின்றாள்.

“”என் மனைவி, பிள்ளை, தாய்-தகப்பன் நினைவுகள் நெஞ்சைப் பிழிந்தது. அவர்கள் மறைந்திருந்த பதுங்குக்குழி பார்த்து ஓடினேன். அவ்விட மெல்லாம் நச்சுவாயுக் குண்டுகள் விழுந்து நூற்றுக் கணக்கான தமிழர் உடல்கள் சிதறுண்டும் எரிசாம்பலாகவும் கிடந்தன. முட்டுக்கால் தரையில் குற்றி விழுந்தேன். “கடவுளே’ என்று கதறினேன். ஷெல் மழை கொட்டிக்கொண்டேயிருந்தது. அதனூடேயும் ஒவ்வொரு தலையாக, உடலாகப் புரட்டினேன். எவரையும் அடையாளம் தெரியவில்லை. என் உறவுகளும் எரியுண்டு முடிந்துவிட்டதாய் மனதில் முடிவு செய்தவனாய் இனி என் மார்பிலும் எறிகணை விழட்டுமென நிமிர்ந்து திரும்பி நடந்தேன். அப்போது பிணங்களுக்கு நடுவிலிருந்து ஒரு தாய் முனகலுடன் மெதுவாக எழுந்தார்.

“”தம்பி… உங்கட சொந்தங்கள் காலையில வட்டுவாகல் பக்கம் போயிட்டினும். நீங்க கெதியா போய் அவையள காப்பாற்றுங்கோ” என்றார் அந்தத்தாய். வட்டுவாகல் நோக்கி ஓடத்தொடங்கினேன். வட்டுவாகல்- முள்ளிவாய்க்கால் பிரதான வீதியில் வன்னி மக்கள் வைத்திருந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் பாதி எறிகணை வீச்சில் எரிந்தும், ஏனையவை அனாதைகள்போலும் நின்றிருந்தன. பதுங்குகுழி வெட்ட இடமில்லாத மக்கள் இந்த வாகனங்களுக்குக் கீழ் படுத்துக்கிடந்தார்கள்.

தேசியத் தலைவர் தன் செல்வங்களாய் வளர்த்த செஞ்சோலைப் பிஞ்சுகளும் அப்படிச் சில வாகனங்களுக்குக் கீழ்தான் கடைசி கட்டத்தில் அடைக்கலம் தேடியிருந்தன. நான் சுமார் 100 மீட்டர் தூரத்தில் நின்றபோது கூவிவந்த எறிகணையொன்று செஞ்சோலைப் பிஞ்சுகள் பிணம்தின்னிப் பருந்துகளுக்கு அஞ்சிய கோழிக்குஞ்சுகள்போல் பதுங்கிக் கிடந்த பகுதியில் விழுந்து வெடித்தது. என் கண்ணெதிரே ஐம்பதுக்கும் மேலான அப்பிஞ்சுகள் தலை, கால், கை, உடல் சிதறி கோரமாய் செத்தார்கள்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா… சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா… என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளிவாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு.

குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளுக்கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது.

நடந்தவற்றின், நடந்து கொண்டிருப்பவற்றின் கொடூரங்களும், விபரீதங்களும் அந்தக் குழந்தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், “”தாய், தகப்பன்…” என்று ஆரம்பிக்கவே, “”எல்லாம் இப்போது நான்தான்” என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங்களைக் காட்டினார். “”இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்” என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால்களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பயணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டிருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் “அம்மா பசிக்குது… அம்மா பசிக்குது…’ என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். “”அப்பா… எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா… தண்ணீர் விடாக்குது… கெதியா எழும்புங்கோ அப்பா…” என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வாரே… “”அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு” என்று… அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களவனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே… என்றெல்லாம் மனது எண்ணியது.

முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே… “”தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்…” என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன்.

உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு… : “”ஐயா, ஒபாமாவே… கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே… வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே… ஏமாற்றி விட்டீர்களே….” என்று மனம் புலம்பியது.

எங்கும் பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால்கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத்தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத்தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத்தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங்கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடையின்றிக் கிடந்தன. அநேகம் பேர் எம் குலப் பெண்கள். கொடுமையை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவுகள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்கவில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். “”புலி தனியா பிரிஞ்சு வாங்கோ… பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ…” என்று கொச்சைத் தமிழில் சிங்களவன் அறிவித்துக் கொண்டிருந்தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகிலிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள்.

“”இனி அவன் ஆட்சிதானே… இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்… பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌரவமா செத்திருக்கலாம்…” என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத்தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் இராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவனிடம் மெல்லச் சென்று கேட்டேன். “என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?’ என்று. “”கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போறவங்களை சுடச் சொல்லி உத்தரவு” என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், “”இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்… ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத்தோம்” என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன்னேன், “”ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்” என்றேன்.

“பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?’ என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள்.

தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.
உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன்.

என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே௧8 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது.

எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஈம்மிக்ரடிஒன்) மற்றும் சுங்கம் (Cஉச்டொம்ச்)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின.

1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (ஓபெரடிஒன் Cகெcக்மடெ) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன்.

போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)


|இச் செய்தியை வாசித்தோர்: 14085

Add a Comment:

(optional)
(optional)


Posted By : Ilakkuvanar Thiruvalluvan on 23 September, 2009
Comments : தமிழக மக்கள் ஆரிய தாசர்களான காங்.கின் அடிமையாக இருக்கும் வரை தமிழ்த்தேசிய உணர்வு எழாது. தமிழ்த் தேச உணர்வு வராத வரை தமிழகத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்காது. தமிழகத்திலேயே வாழ்வுரிமை அற்றத் தமிழர்கள் வாழும் பொழுது உலகத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைக்காது. இதற்கு ஒரே தீர்வு தமிழ்ப் பகைவர்களான கட்சித்தலைமையைத் தூக்கி எறியத் தமிழ் மக்கள் முன்வரவேண்டும். அப்பொழுதுதான் ஈழம் மலரும்! அந்நன்னாள் -பொன்னாள் - விரைவில் வருவதாக! வாழ்க தமிழ்த் தேச ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

ந்புடான் இலக்குவனார் திருவள்ளுவன்

Posted By : ananth on 23 September, 2009
Comments : THIS IS HAPPENING IN 200*.
Where are g*d sinhalese people ?
Are they not ashamed of their sinhala army?

Posted By : Guest on 23 September, 2009
Comments : tamil elam nichayam varum

Posted By : MLANKA on 23 September, 2009
Comments : Dear Sivar*pan,
Above story may be true. All happened because of Praba who decided to scarifies all Tamils for his own benefits.
The sentiment may work in India since their po*lation is not even comparable with Lankans.
Remember there are many stories worst than this from the people effected from LTTE for last 30 years.
Mr. Sivar*pan do you think you can do any think for others and live peacefully in Praba's territory. It's a *nishment from god for Praba and his people and it'll follow.

Posted By : Thangavel . S on 23 September, 2009
Comments : I lost Hope praying God.But Rajapaksa Family get the price for this actrocity

Posted By : CHE on 23 September, 2009
Comments : LET US NOT WAIT WE WILL MAKE A DAY TO GIVE THEM WHAT THEY GAVE US

Posted By : Bkeerthika [website] on 23 September, 2009
Comments : nan thalayan sakavili

Posted By : Guest on 23 September, 2009
Comments : sri lankan government is *ll all the tamils from the world to give there voice for freedom of tamils

Posted By : siva(swiss) on 23 September, 2009
Comments : சிங்களனே.இதுவா போரை முடிவுக்கு கொண்டுவந்தவிதம்­.இல்லை.ராஜபக்சே....­ தவறான விதத்தில் கையாண்டு, வரலாற்றில் வருங்கால சந்ததிகளுக்கு முரண்பாடான சங்கதி சொல்லி,தமிழர�­��களுக்கும்-ச�­�ங்களருக்கும�­��­ இனி,சுமுகமான அணுகு முறைக்கு அணுகுண்டு வைத்துவிட்­டாய்.தலைவர�­�­ விடு. பொட்டுஅம�­�மான்,சூசை­ என்றே இரண்டு துருப்பு சீட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறாய்..../

Posted By : ila.akil on 23 September, 2009
Comments : uyirtheluvaam

Posted By : siva(swiss) on 23 September, 2009
Comments : நாங்கள் பயங்கரவாத�­��யாவதைதவி�­�­ வேறுவழியில்லை நம்இனத்தைக் காப்பாற்ற கட்டாயம் ஏதாவது செய்ய வேண்டும்.இல்லை எனில் நாம் மனிதர்கள் இல்லை . கேவலப்பிறவி. உண்மைக்கான உரிமையை அபகரிக்கும் அதிகாரம் உலகில் எவருக்கும் இல்லை. துன்பம் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடு ."தமிழீழம் மலரும்''

Posted By : KANTHAP* on 23 September, 2009
Comments : சும்மா வெளிநாடுகளில் இருந்து கொண்டு காப்பாற்று காப்பாற்று எண்டால் ஒண்டும் நடக்காது...முதலில் செயலில் இறங்க வேணும்... *00% YES

Posted By : k.k.jasee on 23 September, 2009
Comments : English theriyathu aanal nanum vanniyil kadasivarai ninravan nanum niraiya therivikkavendum santharppam tharavum

Posted By : Ealavan on 23 September, 2009
Comments : I can't believe God. Can't be imagine, Day will come s*n to kill Sinhalese, I would like to see Sinhalese lying down before I die.

Posted By : Thilakan on 23 September, 2009
Comments : just testing

Posted By : Vazhvoli on 23 September, 2009
Comments : Is there a god up there? I can't control my tears rolling down. I love to see * sonia and her family lie down like the way my bl*d is lying down here.

Posted By : Prabhaharan on 23 September, 2009
Comments : En Makkal

Posted By : visu on 23 September, 2009
Comments : HI i am your uraveu but don,t emotion because our leader give a big change for all our people use the technical method of political action this is the our time pls and war never end until tamil community are get by eelam

Posted By : p*varan on 23 September, 2009
Comments : pls see the message at the end of life

Posted By : Pothumahan on 23 September, 2009
Comments : vellinadukalil ippoluthu makkal poradam valuvaka ilai, intha tharunam than atharku sariyana neram, athai unanthu makkale p*radankalil irankunkal. neram ilai enru solathergal, indian cinema parka time iruku, serial parka time iruku, ituku maddum ilainu sonnal, attu sutha poi. unkal cinema kararum, indian tv kararum enna seitharkal enru sinthiyungal( ithil silarai thavira) . armyin campkul irunthum sinhalavan kuda kaikalap* seikira alavuku anke makkal thuninthu vidargal, iniyavathu pongi elungal manam ulla tamil mahale, iladil "manada mailada" parthidu nakai *dunkidu sakunga

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'- 116:
எழுதப்படாத ஒப்பந்தத்தின் விளைவுகள்



நாளை: அமைதிப்படையின் ஷெல் தாக்குதல்!
இந்திய-இலங்கை ஒப்பந்தம் உருவாவதற்கு முந்தின நாள் (28.7.1987) நடைபெற்ற ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உருவானதாக பின்னாளில் பேசப்பட்டது; எழுதப்பட்டது. அதுகுறித்து இங்கு அறிவது அவசியமாகிறது. வடக்கு, கிழக்கு இடைக்கால அரசொன்றை அமைப்பதுடன், அந்த அரசில் விடுதலைப் புலிகளே பெரும்பான்மை வகிப்பார்கள் என்று ராஜீவ் உறுதியளித்ததுடன், அதில் பிற அமைப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறியபோது பிரபாகரன் மறுத்ததாகவும், பின்னர் ஈரோஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க சம்மதித்தார் என்றும் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். இடைக்கால ஆட்சி, அதன் நிர்வாக அமைப்பு, அதன் அதிகாரம், செயல்பாடு, நிதி ஆதாரம் ஆகியவை தொடர்பாக ஜெயவர்த்தனாவுடன் பேசித் தீர்ப்பது என்றும் அப்போது உறுதியளிக்கப்பட்டதாகவும் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். அதுவரை தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றமோ புதிதாகக் காவல் நிலையமோ அமையக் கூடாது என்றும் பிரபாகரன் வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் அதுநாள் வரை வரிவசூலிப்பில் ஈடுபட்டதாகவும், ஒப்பந்தத்திற்குப் பிறகு அந்தச் செயல் தடை செய்யப்படும் என்று கூறியதுடன், ஆயுதம் கையளிப்பு உள்ளிட்ட இறுதிக்கட்ட பிரச்னைக்கு ராஜீவ் வந்தார். அதன் விவரம் பாலசிங்கம் எழுதிய "விடுதலை' நூலில் வெளிவந்தபடி இங்கே தரப்படுகிறது: ""யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடமிருந்து கட்டாய வரி வசூலிப்பு செய்வதாக ஜெயவர்த்தனா அரசு புலிகள் மீது குற்றம் சுமத்துகிறது. வரி வசூலிப்பை நிறுத்த முடியாதா எனக் கேட்டார் ராஜீவ் காந்தி. அந்த வரிப்பணம் எமது இயக்கத்தின் நிர்வாகச் செலவுக்கே பயன்படுத்தப்படுகின்றது. அந்தத் தொகையை இந்திய அரசு எமக்குத் தருவதானால் வரி அறவிடுவதை நிறுத்தலாம் என்றார் பிரபாகரன். ""மாதம் எவ்வளவு பணத்தை வரியாகப் பெறுகின்றீர்கள்'' என ராஜீவ் கேட்க, ""இலங்கை நாணயப்படி ஒரு கோடி ரூபாய் வரை திரட்டுகிறோம்'' என்றார் பிரபாகரன். ""அப்படியென்றால் இந்திய நாணயப்படி ஐம்பது லட்சம் ரூபாய் வரை வரும். அந்தப் பணத்தை நான் கொடுக்கிறேன்'' என்றார் ராஜீவ். இறுதியாக ஆயுதக் கையளிப்பு விவகாரம் எழுந்தது. ""ஆயுதங்கள் முழுவதையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. நல்லெண்ண சமிக்ஞையாக சிறு தொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பாக இந்திய அமைதிப் படை வடகிழக்கில் செயல்படும். சிங்கள ஆயுதப் படைகளுடன் போர் நிறுத்தம் தொடர்ந்து இருக்கும். இந்தச் சூழ்நிலையில் உங்களுக்குப் போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா?'' என்றார் இந்தியப் பிரதமர். பிரபாகரன் பதிலளிக்கவில்லை. ஆழமாக சிந்தித்தபடி இருந்தார். திடீரெனக் குறுக்கிட்டார் பண்ருட்டியார். ""எதற்காக யோசிக்க வேண்டும்? இந்தியா கொடுத்த ஆயுதங்களில் பழைய, பாவிக்க முடியாத, துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கொடுத்தால் போச்சு'' என்றார். ""இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எல்லாமே அப்படித்தான்'' என்று கிண்டலாக பதிலளித்தார் பிரபாகரன். ""பரவாயில்லையே, அதில் சிலவற்றைக் கொடுங்கள். தேவை ஏற்படும்பொழுது இந்திய அரசு புதிய ஆயுதங்களை தரும் அல்லவா?'' என்றார் அமைச்சர் பண்ருட்டியார். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ராஜீவிடம் சொன்னார். அதை ஆமோதிப்பது போலப் பிரதமரும் தலையசைத்தார். அப்பொழுது அதிகாலை (28.7.1987) இரண்டு மணி இருக்கும். அன்று (29.7.1987) காலை ஒன்பது மணியளவில் புது தில்லியிலிருந்து கொழும்பு புறப்பட இருந்தார் ராஜீவ் காந்தி. பிற்பகல் மூன்று மணிக்கு இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாக இருந்தது. புலிகளின் தலைவர் பிரபாகருடன் ஏதோ ஒரு சுமுகமான இணக்கப்பாட்டிற்கு வந்ததுபோல மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராஜீவ். பிரபாகரனுக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. அவரது முகத்தில் அது தெளிவாகத் தெரிந்தது. தூக்கமின்மையால் எல்லோருமே சோர்ந்து போய் இருந்தோம். கூட்டம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அப்பொழுது நான் அமைச்சர் பண்ருட்டியிடம் கேட்டேன். ""ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் எனப் பல விஷயங்களை கதைத்தோம். பிரதம மந்திரியும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். இதை எல்லாம் சுருக்கமாக எழுத்தில் இட்டு, அவரிடமிருந்து கைச்சாத்துப் பெற்றால் என்ன?'' என்றேன். பண்ருட்டியார் சிறிது நேரம் யோசித்தார். ""இந்த ரகசிய உடன்பாட்டில் சர்ச்சைக்குரிய பல விஷயங்கள் இருக்கின்றன அல்லவா? பண விவகாரங்கள் இருக்கின்றன. ஆயுதக் கையளிப்புப் பிரச்னை இருக்கிறது. இதெல்லாம் அம்பலத்திற்கு வந்தால் இந்தியாவிலும் இலங்கையிலும் பெரும் அரசியல் சூறாவளியே ஏற்படும். உங்களுக்கு பிரதமரிடம் நம்பிக்கையில்லையா? இது ஒரு எங்ய்ற்ப்ங்ம்ங்ய் அஞ்ழ்ங்ங்ம்ங்ய்ற் இரு பெரும் மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே?'' என்றார் அமைச்சர். ராஜீவ் காந்திக்கும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னார். ""நீங்கள் எதற்கும் கவலை கொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றுவேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும்'' என்றார் ராஜீவ் காந்தி. இறுதிக் கட்டத்தில் நான் (பாலசிங்கம்) அவருடன் முரண்பட விரும்பவில்லை. முடிவாக எமது தடுப்புக் காவல் பற்றி முறையிட்டோம். பிரபாகரன் மீதான தடுப்புக் காவலை அகற்றி, அவரைத் தமிழீழம் அனுப்புவதற்கு உடனே ஒழுங்கு செய்வதாக உறுதி அளித்தார் ராஜீவ். ராஜீவ் காந்தியின் இல்லத்திலிருந்து அசோகா விடுதிக்கு நாம் போய்ச் சேர அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. ""அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த ரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு ஏமாற்று வித்தை'' என்று விரக்தியோடு கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார் பிரபாகரன். எனது அறைக்குள் சென்றபோது, விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. ராஜீவ்-பிரபா சந்திப்பு பற்றியும், இருவருக்கும் மத்தியில் செய்து கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தம் பற்றியும் விவரமாக திலீபனுக்குச் சொன்னேன். மிகவும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். ""அண்ணன் என்ன சொல்கிறார்'' என்று கேட்டான். ""பிரபாவுக்கு திருப்தி இல்லை. நம்பிக்கையுமில்லை. இந்த வாக்குறுதிகள் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்'' என்றேன். ஆழமாக சிந்தித்தபடியிருந்த திலீபன், ""அண்ணன் சொல்வதுதான் நடக்கும்'' என்றான். உண்மையில் அப்படியேதான் நடந்தது. ராஜீவ்-பிரபா ரகசிய ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால நிர்வாக அரசும் உருவாக்கப்படவில்லை'' இவ்வாறு அன்டன் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 2000-ஆம் ஆண்டில் நூலாகும் வரை விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்படாத ரகசியமாகவே இது இருந்தது. இதற்கு முன்பாக லண்டனில் இருந்து வெளிவரும் லண்டன் அப்சர்வர் ஏப்ரல். 30, 1989ல் எழுதப்படாத ஒப்பந்தம் குறித்து வெளியிட்டுள்ளதாக, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தைச் சேர்ந்த புஷ்பராஜா- தனது, ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலில் தெரிவித்திருக்கிறார். பின்நாளில் லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் ஈழ மண்ணில் அமைதிப் படைப் பணிக்காக சென்று திரும்பியது குறித்த தனது அனுபவங்களை ‘பட்ங் ஐடஓஊ ஐச நதஐ கஅசஓஅ’ எனும் தலைப்பில் திரிசூல் பப்ளிகேஷன்ஸ் மூலமாக வெளியிட்டார். அந்த நூலின் பக். 66-67-இல் இப்படியொரு எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக புலிகள் தெரிவித்து அதனை எழுத்துமூலமாக கேட்கிறார்கள் என்றும் மேலிடத்துக்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். "முறிந்த பனை' என்னும் நூலில் ராஜீவ் காந்தியும், பண்ருட்டி ராமச்சந்திரனும் தங்களது எல்லைகளை மீறி இவ்வாறான வாக்குறுதியை அளித்திருக்கமுடியாது என்று வாதிட்ட நிலையில் அடுத்த பத்தியிலேயே அந்நூலின் வாசகம் முரண்பாட்டைக் கொண்டிருக்கிறது. எழுதப்படாத ஒப்பந்தம் குறித்த செய்திகள் அடங்கிய அறிக்கை முதன்முதலாக சண்டே லண்டன் அப்சர்வரில் (1988, ஏப்ரல் 3-ஆம் தேதி) வெளிவந்தது. கொழும்பிலிருந்து அதன் சிறப்புச் செய்தியாளரால் எழுதப்பட்ட அக்கட்டுரை, தீட்சித்தையே மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்ததாகவும் கூறுகிறது. இந்தச் செய்திக் கட்டுரையில், பாலசிங்கம் சொன்னதைவிடவும் கூடுதலான தகவல்கள் உண்டு. இடைக்கால நிர்வாக சபையின் நிதியாதாரத்துக்கு இந்தியா பெருமதிப்பிலான தொகையை வழங்க இருந்ததாகவும் கூட அது கூறியது. இந்தத் தொகை வடக்கு கிழக்குப் பகுதிகளின் மறு சீரமைப்புக்காகப் பயன்படுத்தப்பட இருந்தது என்றும் கூறப்பட்டிருந்தது. விடுதலைப் புலிகளின் போராளிகளைப் பயன்படுத்தி, ஒரு தமிழ் போலீஸ் படை உருவாக்கப்படும் என்றும் உறுதியளித்ததாகவும் அதில் தகவகள் உண்டு. இவைகளையெல்லாம் கூறிவிட்டு, "முறிந்த பனை' மேலும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அந்தக் கேள்விகளுக்கான விடைகளை விடுதலைப் புலிகள் தரப்பில் அளிக்கத் தேவையில்லாத அளவுக்கு, இந்திய அமைதிப் படையின் தளபதிகளாக இருந்த தீபிந்தர் சிங் மற்றும் ஹர்கிரத் சிங் எழுதிய நூல்களில் ஏராளமாக உள்ளன. இந்த எழுதப்படாத ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு விடுதலைப் புலிகள் விஷயத்தில் எதுவும் நடக்காத காரணத்தால்தான் திலீபன் உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து அவரது மரணமும் நடைபெற்றது. திலீபனின் 5 அம்சக் கோரிக்கைகளில் கூட இந்த விஷயம் வெளிப்படையாகக் கூறப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்
களங்கம் களையப்படட்டும்!



பழிக்குப் பழி என்பது எப்படி பழிக்கப்படும் செயலோ அதேபோல கொலைக்குக் கொலை என்பதும் ஏற்புடையதாக இருக்க முடியாது. கற்கால மனிதன் கடைப்பிடித்த இதயமற்ற சட்டம் மரண தண்டனையாகத்தான் இருக்கும். கல்வி அறிவு, நாகரிகம் என்றெல்லாம் மனித சமுதாயம் பல முன்னேற்றங்களை அடைந்த பிறகும் மரண தண்டனை என்பதை ஒரு சட்டமாக, அதுவும் அரசே நடைமுறைப்படுத்தும் தண்டனையாக ஏற்றுக்கொள்வது என்பது என்ன நியாயம்? அமெரிக்கா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட 58 நாடுகளைத் தவிர ஏனைய உலக நாடுகள் பலவும் மரண தண்டனை என்பதை ஒழித்துவிட்டன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிரண்டைத் தவிர ஏனைய நாடுகளில் இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் நடைமுறையில் கிடையாது. அப்படியே மரண தண்டனை என்பதை சட்டத்தில் வைத்துக் கொண்டிருக்கும் பல நாடுகளிலும் மரண தண்டனை வழங்குவது என்பது அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே. இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனை என்பது மிகவும் அவசியம் என்று கருதப்பட்டால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று பல வழக்குகளில் அறிவுரை வழங்கி இருக்கிறது என்றாலும், இன்னும் நாம் இந்த மனிதாபிமானமே இல்லாத சட்டப் பிரிவை இந்தியக் குற்றவியல் சட்டத்திலிருந்து அகற்ற மனமில்லாமல் தொடர்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 18-ம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் இத்தாலிய வழக்கறிஞர் சிகாரே பெக்காரியா, பிரெஞ்சு தத்துவ மேதை வால்டேர், ஆங்கிலேய சீர்திருத்தவாதி ஜெரிமி பென்தாம் போன்றவர்கள் மரண தண்டனை என்பது மனித சமுதாயத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் களங்கம் ஏற்படுத்தும் சட்டப் பிரிவு என்று கூறி இதற்கு எதிராகக் குரலெழுப்பினர். இவர்கள் குரலெழுப்பி ஒரு நூற்றாண்டு காலம் கடந்த பிறகு 1853-ல் வெனிசுலாவும், 1867-ல் போர்ச்சுக்கலும் மரண தண்டனையைத் தங்களது நாட்டுச் சட்டத்திலிருந்தே அகற்றுவதாக அறிவித்தன. இப்போது அநேகமாக மேற்கு ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 1965-ல் இங்கிலாந்தும் மரண தண்டனையை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியபோது, உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. 2007-ம் ஆண்டில் சீனா, ஈரான், பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமாக 1252 பேர் மரண தண்டனைக்கு உள்படுத்தப்பட்டனர். ஏனைய 51 நாடுகளில் 3,350 பேர் தூக்கில் இடப்பட்டனர். உலகளாவிய நிலையில், சுமார் 20,000 பேர் மரணத்தையும் எதிர்நோக்கி சிறைச்சாலைகளில் கழிக்கின்றனர். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெறும் நபர், உண்மையிலேயே குற்றவாளியாக இல்லாமல்கூட இருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. சட்டத்தின் பார்வையில் பல சந்தர்ப்ப சாட்சியங்கள் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக மாறி இருக்காது என்பது என்ன நிச்சயம்? மேலும், கொலை செய்த ஒருவர் தண்டனைக்குரியவர் என்றால் அவரை மரண தண்டனை என்கிற பெயரில் அரசே கொலை செய்வது மட்டும் எந்தவிதத்தில் தர்ம நியாயத்துக்கு உள்பட்டது? மரண தண்டனையை சர்வசாதாரணமாகவும், மிகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்தும் கடுமையான சட்டங்களைக் கொண்ட சிங்கப்பூரில் இரண்டு 18 வயதுப் பருவப் பெண்களுக்கு போதை மருந்து வைத்திருந்ததற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திருடிடும் கையை வெட்டுவது, சவுக்கால் அடிப்பது, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் இருப்பதால் தவறுகள் குறைவாக நடக்கிறது என்பது சிங்கப்பூர் அரசின் வாதம். இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் மூலமாக சமூகத்தை ஆடு, மாடுகளை மேய்ப்பதுபோல நடத்திய ஆட்சி முறைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டதுதானே மக்களாட்சி முறை என்பது? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மீறலுக்கு எதிரான முயற்சிகளின் முதல் கோஷமே மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பது என்பதாகத்தானே இருக்க முடியும்? கடுமையான தண்டனைகளாலும், மரண தண்டனையைக் காட்டி பயமுறுத்துவதாலும் மட்டும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிவிட முடியாது என்பதை சரித்திரம் நாளும்பொழுதும் தெளிவுபடுத்திக் கொண்டு வருகிறது. உலகளாவிய பயங்கரவாதம் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும், தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூறுபவர்கள், தனிமனிதனின் வாழும் உரிமையைப் பறிக்கும் மரண தண்டனையை ஒழிக்க மட்டும் தயங்குவது ஏன் என்று புரியவில்லை. மனித மனம் ஆன்மிக நெறிகளாலும், தனி மனித ஒழுக்கங்களாலும், சமரச சன்மார்க்க சிந்தனைகளாலும், மனிதாபிமான உணர்வாலும் பண்படுத்தப்பட வேண்டுமே தவிர, மரண தண்டனை போன்ற கடுமையான சட்டங்களால் வழிநடத்தப்படவும், பயமுறுத்தப்படவும் கூடாது. கடுமையான சட்டங்களால் மட்டுமே குற்றங்கள் குறைந்துவிடாது. தூக்குக் கயிறோ, மின்சார நாற்காலியோ, வலியில்லாத உயிர்கொல்லி ஊசியோ எதுவாக இருந்தாலும் "மரண தண்டனை' மனித இனத்துக்கே களங்கம். அமெரிக்காவுக்காகக் காத்திருக்காமல் இந்தியா உடனடியாக இந்தக் களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டும்!

கருத்துக்கள்

பழந்தமிழகத்தில் மரணத்தண்டனைக்குரியவர்களை முத்தெடுத்தல் முதலான உயிர் இழப்புவாய்ப்பு உள்ள தொழில்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதுபோல், கணக்கிலடங்காக் கொலை புரிந்தவர்களை அறிவியல் ஆய்விற்குப் பயன்படுத்தக் கருதிப் பார்க்கலாமே?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2009 2:39:00 AM

குற்றவாளி தண்டிக்கப்படா விட்டாலும் குற்றமற்றவர் தண்டனை பெறக்கூடாது என்னும் மனித நேயத்தில் வடிக்கப்பெற்ற அருமையான கட்டுரை. பொது இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்லுபவர்களுக்கு உயிர்பிச்சை வழங்குவதா என்று கேள்வி எழுப்பப்படும். போர் என்ற பெயரிலும் பயங்கரவாதிகளை ஒழிக்கிறோம் என்ற போர்வையிலும் ஆளும் பொறுப்பினர் புரியும் படுகொலைகளைப் பார்த்துக் கொண்டு சும்மாதானே இருக்கின்றோம். காலந்தோறும் உலகெங்கும் இவ்வாறு நடைபெற்று வரும் படுகொலைகளுக்கும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப்படுகொலைகளுக்கும் யாரை நாம் தண்டித்தோம். பெரும்பாலும் தண்டனைக்குரியவர்கள்தாமே தமக்கு வேண்டாதவர்களைக் குற்றவாளிகளாக ஆக்கி மரணத்தண்டனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்க அப்பாவிகளை மரணத் தண்டனை என்ற பெயரில் உயிர்க் கொலை புரிவது ஏன்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2009 2:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு:
மலேசியாவில் நாளை தொடங்குகிறது



சென்னை, செப். 23: பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் சார்பில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலகத் தமிழ் ஒற்றுமை மாநாடு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) தொடங்குகிறது. மலேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 500 தமிழ் அறிஞர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து 60 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ம. ராசேந்திரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனர் வா.மு. சேதுராமன், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, மலேசிய அமைச்சர் கோ. சூகூன், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் க. ராமசாமி, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, பேராயர் எஸ்றா சற்குணம், சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் வா.மு.சே. ஆண்டவர் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்கின்றனர். 2 நாள்கள் நடைபெறும் மாநாட்டுக்கு முதல்வர் கருணாநிதி, நிதி அமைச்சர் க. அன்பழகன், தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர் என்று பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் இயக்குநர் வா.மு.சே. திருவள்ளுவர், செய்தியாளர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார்.

கருத்துக்கள்

'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கனவை நனவாக்கவும் ஈழத் தமிழகம் மலரவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழ்வுரிமை பெறவும் மாநாடு வழிகாட்டட்டும்! சீராயும் சிறப்பாயும் நடைபெற வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/24/2009 2:24:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

புதன், 23 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழ் அகதிகள் நிலை:
அமெரிக்கா கவலை



வாஷிங்டன், செப். 22: இலங்கை அகதிகள் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக நியூயார்க்கில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான வெளியுறவு துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அகதிகள் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் அடைக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கும் விஷயமாகும். இன்னமும் முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டியது மிகவும் அவசர அவசியமானதாகும். முகாம்களில் மூன்று மாதத்திற்கும் மேலாக அவர்கள் அவதிப்படுகின்றனர். இம்மாத இறுதியில் பருவமழை தொடங்க உள்ளது. அப்போது அங்குள்ளவர்களின் நிலைமை மிகவும் மோசமாகும். இதைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விஷயத்தில் இலங்கையை சர்வதேச சமுதாயம் நிர்பந்தப்படுத்துவதில் பல்வேறு இடர்ப்பாடுகள் உள்ளன. மேலும் இப்பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படுவதோடு, முகாம்களில் உள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை அளித்து புதிய இடங்களில் குடியமர்த்துவதில் உள்ள பிரச்னைகளும் உள்ளன. இருப்பினும் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை இத்தகைய முகாம்களில் தங்க வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே வெகு விரைவாக அவர்களைக் குடியமர்த்த வேண்டும். அனைவரையும் ஒரே சமயத்தில் குடியமர்த்துவது என்பது உடனடியாக இயலாத காரியம். ஏனெனில் இலங்கையின் வடக்குப் பகுதியில் இன்னும் பல விஷயங்களை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த பணிகள் தொடங்கப்பட்டாலும், முகாம்களில் உள்ளவர்களை இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்கிக்கொள்ள அனுமதிக்கலாம். அல்லது முகாம்களில் தங்க விரும்புவர்களை தங்க அனுமதிக்கலாம். முகாம்களில் இருப்பவர்கள் அனைவரும் சோதனை செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, முகாம்களில் சேர்க்கப்பட்ட தினத்திலிருந்தே இத்தகைய சோதனைகள் நடத்தப்படுகின்றன. முகாம்களில் தங்கியுள்ளவர்களில் விடுதலைப் புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எவரேனும் இருக்கிறார்களா என்று பார்ப்பதில் தவறில்லை. இத்தகைய சோதனை மிகவும் அவசியமானது. ஆனால் முகாம்களில் உள்ள மக்கள் நீண்ட காலம் இதே சூழலில் வசிக்கக்கூடாது என்பதுதான் என்றார் பிளேக்.

கருத்துக்கள்

தமிழர்கள் பகுதிகளில் சிங்களக் குடியேற்றமும் சிங்களப் பெயர் சூட்டலும் சிங்கள விளம்பரமும் தமிழர்களைக் காணாமல் போன பட்டியலில் சேர்க்கும் மறைமுக உயிர்ப்பறிப்பும் 'விசாரணை' பெயரிலான கொடும் வதைகளும் தொடரும் பொழுது இவற்றிற்கெல்லாம் ஒரு வகையில் காரணமான அமெரிக்கா கவலைப்படுவதாக அறிக்கை விடுவதாலேயே ஒன்றும் நடக்காது. உண்மையிலேயே இத் துயரங்கள் நிற்க வேண்டுமெனில் 'தமிழ் ஈழத்தை ஏற்கிறோம்' என ஏற்பிசைவை உடனே வழங்க வேண்டும். இதன் தொடர்ச்சியாகப் பிற நாடுகளும் ஏற்பிசைவு வழங்கும். தமிழ் மக்களின் துயர் நீங்கத் தமிழ் ஈழம் ஒன்றுதான் தீர்வு என்பதை உணர வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2009 5:41:00 AM

ஈழத்தமிழனின் விடுதலைப் போராட்டத்தினை அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இனவெறி அரசான சிங்கள அரசுக்கு, மனித அழிப்புக்கு எல்லாவித உதவிகளையும் செய்துகொண்டு, தற்பொழுது நீலிக்கண்ணீர் விடவும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தயாராக உள்ளன. மனித உரிமைக்கும் உலகமயாமாக்கல் கொள்கையினால் ஆபத்து தொடருகின்றன.- கதிர் நிலவு

By kathirnilavumanian
9/23/2009 5:41:00 AM

Sri Lanka already aquaired Tamils' land and settled thousands of Sinhala Army Officials' families. No matter, who shouts Sri Lanka is agressively implementing its agends according to its plan. When Sri Lanka got independene(1948) Tamils were 30%, 140,000 Tamils are missing since 2008? They have been killed by Sri Lankan army. The whole world has abandoned Eelam Tamils including Tamil Nadu!

By Vani
9/23/2009 12:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கனடாவில் உள்ள சிறார்கள் மடல் எழுதும் போராட்டம் நடாத்தவுள்ளனர்

22 September, 2009 by admin

தடுப்புமுகாம்களில் தவிக்கும் மக்களுக்காக சிறார்களின் மடல் வரையும் போராட்டம்

ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 புரட்டாதி 2009) சிறுவர்களால் உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty International) கனேடியப் பிரிவின் அனுசரணையுடன் இந்நிகழ்ச்சி ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கிறது. இந்நிகழ்வில் பங்குபற்றும் சிறுவர்களால் தாயக மக்களிற்கு சுபீட்ச வாழ்வினை விரைவினில் ஏற்படுத்தித் தரும்படி வேண்டி உலகத்தலைவர்களுக்கு வரையப்படும் மடல்கள் சர்வதேச மன்னிப்புச் சபையினூடாக அத்தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்நிகழ்வானது கனடா கந்தசாமி கோவிலில் (733 Birchmount Road, Scarborough, ON, Canada.) காலை 12:00 மணிக்கு ஆரம்பமாகிறது. தடுப்பு முகாம்களில் வாடும் தாயக மக்களின் இன்னல் தீர்ப்பதற்காக, கனடாவில் வசிக்கும் அனைத்துத் தமிழ்ச் சிறுவர்களையும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

சிறார்களின் இப்போராட்டம் வெற்றியடைய அதிர்வு இணையமும் வாழ்த்துகிறது.

மேலதிக தொடர்புகட்கு 647-863-2803 அல்லது letterwritingevent@gmail.com







Posted By : Ilakkuvanar Thiruvalluvan on 22 September, 2009
Comments : நல்ல முயற்சி. சிறாருக்கும் ஏற்பாட்டா­ளருக்கும்­ பாராட்டுகள். வாய் பொத்தி செவி மூடி உறங்கும உலகம் விழிக்கும வரை இதுபோன்ற போராட்ட
ங்கள் தொடரட்டும்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நல்லுறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

Posted By : Guest on 22 September, 2009
Comments : Well done kids , Canada Tamils are great

"ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'-115: எம்.ஜி.ஆர்.மறைவு - புலிகள் அஞ்சலி



தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்க மருத்துவமனையில் இருந்து 31-10-1987 அன்று சென்னை திரும்பியதும், அரசுப் பணிகளுக்காகச் சில நாட்களை ஒதுக்கியதுபோக, 4-11-1987 அன்று விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கினார். அதன்படி கிட்டு, பேபி சுப்ரமணியம், ரகீம் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்து தமிழீழத்தில் நடப்பது குறித்து விளக்கினார்கள் (விடுதலை 5-11-1987). 9-11-1987 அன்று தமிழக சட்டமன்றம் கூட இருந்த நேரத்தில், தமிழக சட்டமன்றத்தில் இந்திய அமைதிப்படை போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பழ.நெடுமாறனும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணியும் அறிக்கை வெளியிட்டார்கள். கட்சித் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினார்கள். இதே கோரிக்கையை பல்வேறு கட்சித் தலைவர்களும் அறிக்கை மூலம் அரசை வலியுறுத்தினார்கள். இப்படியொரு தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் வந்துவிடக்கூடும் என்ற ஐயத்திலும் அப்படியொரு தீர்மானம் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்துடனும் மத்திய அரசு, வெளிநாட்டு இணையமைச்சர் நட்வர்சிங்கை சென்னைக்கு அனுப்பி வைத்தது. அவரின் இந்த வருகை, சமீபத்தில் நடந்த ராஜீவ்-ஜெயவர்த்தனா சந்திப்பையொட்டிய தகவல்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கவே என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் பழ.நெடுமாறன் தனது நூலில், "சட்டமன்றத்தில் இந்திய அரசுக்குத் தர்மசங்கடம் ஏற்படுத்தும் தீர்மானம் எதுவும் நிறைவேற்றிடவேண்டாம் என முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வேண்டிக்கொள்வதற்காகவே நட்வர்சிங் வந்தார். பிரதமரின் விருப்பத்தைத் தெரிவித்தார். தமிழக மக்களின் கொதிப்புணர்வை அவரிடம் எம்.ஜி.ஆர். சுட்டிக்காட்டினார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று சட்டமன்றத்தில் தீர்மானம் எதையும் எம்.ஜி.ஆர். நிறைவேற்றாவிட்டாலும் தமிழ் மக்களின் மனநிலையைத் தில்லி உணரும்படி செய்தார். பிரபாகரனுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர். மேற்கொண்டுள்ள நிலையில் இருந்து அவரை மாற்ற நட்வர்சிங் மூலம் ராஜீவ் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்தது' என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பழ.நெடுமாறன் குறிப்பிடுவதாவது- "இதன் பின் அதிக காலம் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கவில்லை. பிரபாகரனின் பிரதிநிதிகள் அவ்வப்போது அவரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கி வந்தனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் அவர் செய்து வந்தார். அவர் காலமாவதற்கு முதல்நாள் கூட ஒரு பெருந்தொகையைப் புலிகளுக்கு அளிக்க விரும்பி அவர்களுக்குச் சொல்லியனுப்பினார். வழக்கமாகப் பிரபாகரன் சார்பில் அவரைச் சந்திப்பவர் சென்னையில் இல்லாத காரணத்தினால் வேறொருவர் சென்றார். குறிப்பிட்டவரையே அனுப்பும்படி எம்.ஜி.ஆர். கூறிவிட்டார். வெளியூரில் இருந்த அந்த குறிப்பிட்ட தோழர் சென்னைக்கு விரைந்து வந்து எம்.ஜி.ஆரைச் சந்திப்பதற்குள் காலதேவன் அவரைக் கவர்ந்து சென்றுவிட்டான்' என்றும் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கிய எம்.ஜி.ஆரின் மறைவு விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் உலுக்கியது. பிரபாகரன் தனது ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டார்: ""ஈழத்தில் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணைநின்ற புரட்சித் தலைவரே, தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த செயல்வீரரே, தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும் ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்'' (விடுதலை 25/26-12-1987/ எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும்-வே.தங்கநேயன்). எம்.ஜி.ஆர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் செய்த உதவிகள் குறித்து சிங்கள எழுத்தாளர் ரோகண குணரத்னவும் தான் எழுதிய "இந்தியன் இன்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா' (பக்கம்-182-இல்) என்னும் நூலில், ""தமிழ்நாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பு வகித்த "ரா' அதிகாரி சந்திரசேகரன், ராஜீவ் காந்தி சார்பில் எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். எம்.ஜி.ஆர். உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ராஜீவ் சொல்லியனுப்பியவற்றை அவர் வெளியிட்டார். அப்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எம்.ஜி.ஆர்., "விடுதலைப் புலிகளை யாழ்ப்பாணத்தில் வீழ்ந்துவிட விட்டுவிடாதீர்கள். விடுதலைப் புலிகள் கண்டிப்பாகக் காப்பாற்றப்படவேண்டும்' என்று கதறினாரென குறிப்பிடுள்ளார். "பிள்ளையில்லாத எம்.ஜி.ஆர். பிரபாகரனைத் தன்னுடைய மகனாகவே கருதி வாஞ்சை செலுத்தினார் எனக் கூறுவதில் தவறில்லை' என பழ.நெடுமாறன் குறிப்பிடுகிறார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பது இனி அமைதிக்கான நடைமுறை சாத்தியமற்றதான நிலையை ஜெயவர்த்தனாவின் பேட்டி தோற்றுவித்தது. அதற்கு முன்பாக இந்த ஒப்பந்தத்தை அவரது அமைச்சரவையில் வெளிப்படையாக ஆதரித்தவர் இருவர் மட்டுமே. ஒருவர், காமினி திஸ்ஸநாயக்கா; மற்றொருவர் ரோனி டி மெல் ஆவர். பிரதமர் பிரேமதாசா உள்ளிட்ட அமைச்சர்கள் கலகக்கொடியைத் தொடர்ந்து தூக்கியபடியே இருந்தனர். சிங்களப் பேரினவாதத்தைத் தூக்கிப்பிடித்த புத்தபிக்குகள் மற்றும் மதவெறியர்கள் மட்டுமன்றி, மக்கள் விடுதலை முன்னணி என்ற ஜே.வி.பி.யும் "இந்தியப்படையே வெளியேறு' என்று! வீதிக்கு வந்து போராடியது. போராளிகளில் விடுதலைப் புலிகள் தவிர்த்து பெரும்பாலான இயக்கங்கள் திம்புவில் குறிப்பிட்ட தங்களது உயிர்க்கொள்கையான 5 அம்சத்தை மறந்து ஒப்பந்தத்தை ஆதரித்தனர். விடுதலைப் புலிகளோ நிர்பந்தம் காரணமாகவும், இந்தியாவுடன் ஒரு யுத்தம் தவிர்க்கும் எண்ணத்திலும் ஒப்பந்தத்தை ஏற்றனர் என்பதையும் முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்த ஒப்பந்தம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருந்ததற்கு அடிப்படைக் காரணமே, இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுக்கு, ஈழத் தமிழர்களின் அடிநாதமான தமிழ்த் தேசியம் என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாததுதான். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் ராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் தங்கள் தங்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழ்த் தேசியம் என்ற அடிநாதத்தை பூமிக்கடியில் புதைக்க முற்பட்டதுதான்! இந்தத் தமிழ்த் தேசியம் என்பது என்னவென்று கலாநிதி அ.க.மனோகரன் "இலங்கை தேசிய இனமுரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்' என்னும் தனது ஆய்வு நூலில், ""தமிழ்த் தேசிய வாதம் ஒருபோதும் வெறும் புத்திஜீவிகளின் ஓர் எண்ணக் கருவாக இருந்ததில்லை. அவ்வாறிருக்குமாயின் அதற்கு உயிரோட்டம் இருந்திருக்காது. அது வெறும் உணர்ச்சியின் வெளிப்பாடுமல்ல. அவ்வாறிருக்குமாயின் அது நீண்டகாலம் தளராது தொடர்ந்திருக்க முடியாது. மேலும், அது வெறுமனே உணவையும் உடையையும் உறைவிடத்தையும் அவர்கள் உயிர்வாழ்வதற்கான பொருள்சார்ந்த நிலைமைகளையும் ஒரு மக்களுக்கு உறுதிப்படுத்துகின்ற ஒரு விடயமுமில்லை. அவ்வாறு கூறுதல் தமிழ் தேசியவாதத்துக்கு அதன் வளமான கலாசார மரபுரிமையை மறுப்பதற்கு ஒப்பானதாகும். தமிழ் தேசியவாதம் இவை அனைத்தையும் அதிலும் விடக் கூடியனவற்றையும் உள்ளடக்கியது. அது இவை எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து ஒருங்கிணைக்கப்பட்ட முழுமையான விகிதாசாரங்களின் கூட்டுத் தொகையைவிட அதிகமான ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை. எதிர்ப்பு - வேறுபடுத்தல் - கூட்டுழைப்பு என்ற நீடித்த சிக்கலான செயல்முறையின் ஊடாக உருப்பெற்ற ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட முழுமை'' என்று குறிப்பிடுகிறார். இலங்கைத் தமிழ் தேசியவாதம் என்பதை ஏற்று, அதில் உறுதிப்பாடுடன் நம்பிக்கை கொண்டு, அதனை 13-வது சட்டத் திருத்தத்திலும் சேர்த்து, அதனை நிறைவேற்றுவதில் ராஜீவ் காந்தி முன்னின்று செயல்பட்டிருந்தால், நிலைமை முற்றிலும் வேறுபட்டிருக்கும். ஆனால், ராஜீவ் காந்திக்கே, தமிழ் தேசியம் என்பதில் நம்பிக்கையே இல்லை. அப்படியொரு நம்பிக்கை இருந்திருந்தால் மட்டுமே மேற்கண்ட யாவும் நிகழ்ந்திருக்கக் கூடும். இதற்கு முட்டுக்கட்டை போட்டவர்களில் "ரா' அமைப்பினர் முன்னணியில் இருந்தனர். அடுத்த நிலையில் ஒருவகை தந்திர மனிதராக ஜெயவர்த்தனா. இவர்கள் போட்ட தூபம்தான் ராஜீவ் காந்தியைத் தமிழ் தேசியத்துக்கு எதிராகத் திருப்பியது. இலங்கையில் தமிழ் தேசியம் பலம் பெற்றால், அது இந்தியாவில் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்று பயமுறுத்தினார்கள். அது காரணமாகவே, தேசியத்தை ஆதரிக்கும் ராஜீவ், மொழிவாரி தேசியத்துக்கு எதிரானவராக இருந்தார். "நாங்கள் சொல்வதற்கு மட்டுமே கட்டுப்படுங்கள்' என்ற மேலாதிக்கமே இந்தியாவிடம் இருந்தது என்பது புஷ்பராஜாவின் கருத்து. விடுதலைப் புலிகள் உள்பட அனைத்து இயக்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தான் விரும்பியதைச் செய்யும் குழுக்களாக, அவ்வியக்கங்களை வைத்திருக்க விரும்பியதே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. இவை எல்லாவற்றையும்விட, விடுதலைப் புலிகளைச் சம்மதிக்க வைக்க, ஜூலை 28, 29 அதிகாலை அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி, அதாவது எழுதப்படாத ஒப்பந்தம் நிறைவேற்றப்படாததும் ஒரு காரணமாயிற்று. அந்த எழுதப்படாத ஒப்பந்த விவரம் என்ன?நாளை: எழுதப்படாத ஒப்பந்தம்...

கருத்துக்கள்

MGR the great.Why did Jayalalitha not follow him.

By Mani
9/23/2009 1:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
85 சதவீத மாணவர்கள் தமிழில்தான் படிக்கின்றனர்: தங்கம் தென்னரசு



சென்னை, செப். 22: "தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி பள்ளி மாணவர்களில் 85 சதவீதம் பேர் தமிழில்தான் கற்று வருகின்றனர்' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற "அலைய்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்தின் "ஆங்கிலம்-தமிழ் மாணவர் அகராதியை' வெளியிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: எளிமையான வகையில் பள்ளி மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழைப் படிக்காமல் மாணவர்கள் வெளியே செல்ல முடியாத என்ற நிலை தமிழகத்தில் உள்ளது. தாய்மொழிக் கல்வி பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டியது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். மாநிலத்தில் மொத்தம் உள்ள ஒன்றரை கோடி மாணவர்களில் 85 சதவீதம் பேர் தமிழ் மொழியில்தான் கற்று வருகின்றனர். தமிழ் தலை நிமிர்ந்து நிற்கிறது. தள்ளாடவில்லை என்றார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை இயக்குநர் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் பேசுகையில், ""வெளிமாநில அதிகாரிகள் பலர் தமிழகத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மொழி தேர்வு வைக்கப்படுகிறது. அத்தேர்வுக்கு தயாராக இந்த அகராதி உதவும்'' என்றார். "அலைய்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்தின் பதிப்பாசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன், ஆங்கிலப் பேராசிரியை காதம்பரி, "அலைய்ட் பப்ளிஷர்ஸ்' நிறுவனத்தின் தலைவர் ரவி சச்சுதேவ், இயக்குநர் அர்ஜூன் சச்சுதேவ், பொது நூலகத்துறை இயக்குநர் அறிவொளி உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துக்கள்

85% மாணாக்கர்கள் தமிழில் படிக்கும் பொழுது உயர் கல்வி வாய்ப்பில் 15% ஆங்கில வழி பயிலும் மாணாக்கர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் போக்கையும் மாற்ற வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2009 3:14:00 AM
இலங்கைத் தமிழர் பிரச்னை:
ஒத்த கட்சிகளுடன் இணைந்து போராட்டம்-
ஜெயலலிதா எச்சரிக்கை



சென்னை, செப். 22 ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""இலங்கைத் தமிழர்களின் ஆடைகளை அகற்றி, நிர்வாணமாக்கி, ஈவு இரக்கமின்றி, சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. செல்போன் மூலம் ராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோரமான விடியோ படக் காட்சி, இலங்கையில் மக்களுக்கு விடுதலை உரிமை இல்லை என்பது, அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரின் காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்துக்கு வலுசேர்ப்பதாக உள்ளது. வியப்பு அளிக்கிறது... இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக அந்த நாட்டு அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இதுபோன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை. கடுமையான விமர்சனம்... தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி, தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தீவிரவாத இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் மாறியது. அன்றிலிருந்து அந்த இயக்கத்தைத் தொடர்ந்து விமர்சித்து வருகின்றேன். இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப் புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணை இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது காட்டுமிராண்டித்தனமானது. போரின்போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. இலங்கையில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து சிறிய அளவிலாவது திமுக குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இல்லை. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும். அவர்களது வாழ்க்கையை, மதிப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். சர்வதேச அரங்கில்: தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசு அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அனைத்து நாடுகளும் நிர்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.

கருத்துக்கள்

சொல்வது சரிதான். ஆனால், 'ஆடிக்கு ஒரு தடவை;காருவா (அமாவாசை)க்கு ஒருதடவை' என வாய் திறந்தால் என்னாவது? தமிழ் மக்கள் மீது உண்மையிலேயே பரிவு இருந்தாலும் ஆளும் கட்சிகளை அகற்றுவதே முதல் வேலை என எண்ணினாலும் செயலில் இறங்கட்டும்! ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது! வீண் பேச்சு கவைக்கு உதவாது!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/23/2009 3:06:00 AM

selvi jeya If congress ready to accept to make alliance with your party, it is sure , that you will not make this statement for srilankan peaple. Dont do politics in the life lost srilankan tamils. Change your comments against Tigers. what you know about Mr.prabakaran. Fighting for freedom is not like your ugly politics. Tamilachi prema

By prema
9/23/2009 12:16:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *