சனி, 11 டிசம்பர், 2010

mella thamizh vaazha

கிரந்த எழுத்துகளைப் பாடநூல்களில் இருந்து எடுத்து விட்டால்  அந்த எழுத்துகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் பிற மொழிச் சொற்கள் தமிழில் கலக்காது.  எனவே, அதற்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும். எனினும் இன்றைய சூழல் நீடிக்கும் வரை அரசு அலுவலகங்களில் தமிழ்ப் பயன்பாடு என்பது முழுமையடைய வாய்ப்பே இல்லை.  வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மெல்லத் தமிழ் வாழ...!


பல கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, செம்மொழி பூங்கா, தமிழில் பெயர் வைத்தால் திரைப்படத்துக்கு வரிவிலக்கு, தமிழ் வழி படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை எனத் தமிழை வளர்க்க மெனக்கெடும் தமிழக அரசு, அரசு ஆணைகளிலும் அரசுத் திட்டங்களிலும் ஆங்கிலத்தைக் கலந்து வருவது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், நீரிழிவுநோய் மற்றும் ரத்தக்கொதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அபாய காரணிகள் உள்ள நபர்களைக் கண்டறியவும், நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்குப் பயனுள்ள மற்றும் முறையான சிகிச்சை அளிக்கவும் நலமான தமிழகம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை விளம்பரப்படுத்துவதற்காகத் திரைப்பட நடிகர் விவேக் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், நடிகர் விவேக் என் ஸ்கோர் என்ன உங்கள் ஸ்கோர் என்ன என கேட்பதுபோல வாசகங்கள் உள்ளன. ஸ்கோர் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதிலாக மதிப்பெண் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் எழவில்லை.இவ்வாறு அரசுத்துறையினரே தமிழை அலட்சியப்படுத்தி வந்தால், எத்தனை செம்மொழி மாநாடு நடத்தியும் என்ன பயன்? இது மட்டுமல்ல, தமிழக அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அரசாணைகள்கூட  இன்று வரை ஆங்கிலத்திலே அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணைகூட ஆங்கிலத்திலேயே வந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் இருந்து, வளர்ச்சிப்பணிகள் குறித்து நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கும்போது, அதில் அதிகாரிகள் பெயருக்கு முன்னால் போடப்படும் இன்ஷியல் ஆங்கிலத்தில் இருந்தால், தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து விளக்கம் கேட்கப் படுகிறது. ஆனால், அரசு செய்யும் விளம்பரங்களில் உள்ள ஆங்கிலக் கலப்பை ஏனோ தமிழ் வளர்ச்சித்துறை கண்டுகொள்வதில்லை. உள்ளாட்சி அலுவலகங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகத்தை ஒளிவிளக்காக வைக்க உத்தரவிட்டு, அதை உடனடியாகச் செயல்படுத்தாத அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட தமிழகஅரசு, அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அரசு ஆணைகளை ஆங்கிலத்தில் அனுப்புவது வேடிக்கையாக உள்ளது. உண்மையிலேயே தமிழ் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், முதலில் அரசுத்துறை முழுவதிலும் தமிழையே பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மேலும் அறிவியல், மருத்துவம் சார்ந்த புதிய கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழைப் பேசவும், எழுதவும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள்வரை அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளிக்க அரசு முன்வர வேண்டும்.எத்தனையே இலவசங்களை வழங்கும் அரசு,பாமரனும் புரிந்து கொள்ளும்வகையில், தமிழ்மொழியின் பெருமைகளை, தமிழ் இலக்கியங்களை விளக்கவுரையுடன் புத்தகமாக அச்சடித்து அனைவரும் படிக்கும் வகையில் செய்ய வேண்டும். தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை, கண்துடைப்புக்காக பெயர் அளவுக்கு ஏதோ ஒரு சிலருக்கு வழங்கிவிட்டு அப்படியே விட்டுவிடாமல், உண்மையில் தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு அரசின் அனைத்துத்துறை வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கிவிட்டால், தமிழை வளர்க்க அடுத்த முயற்சியை அரசு எடுக்க வேண்டியதில்லை. இப்போது பெருகியுள்ள ஆங்கிலவழிக் கல்வியை அளிக்கும் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளைப்போல, தமிழ்வழிப் பள்ளிகளும், கல்லூரிகளும் பெருகிவிடும். முத்தமிழ் அறிஞரை முதல்வராகக் கொண்ட தமிழக அரசு இதைச் செய்ய முன்வர வேண்டும்.
கருத்துகள்


கருவூலகத்திற்கு அனுப்பப்படும் மாதாந்திர ஊதியப் பட்டியல்கள் இன்றளவும் ஆங்கிலதிலேயே அனுப்பப்டுகின்றன. ஊதியப் பட்டியல் தயாரிக்க அரசு உருவாக்கியுள்ள மென்பொருள், ஊதியப் பட்டியலை ஆங்கிலத்தில் தான் தயாரித்து வழங்குகிறது. தமிழ் வாழ்க என்ற வாசகத்தை ஒளிவிளக்காக வைப்பதாலும், "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் வளர்ந்து விடாது.
By சிவ. ரவிகுமார்
12/11/2010 4:15:00 AM

காங்கிரசைக் கண்டு கருணாநிதி அஞ்சுகிற காலம்

அடக் கடவுளே! கலைஞரைச் செ. மிரட்டுகிற காலம் வந்து விட்டதே! அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன்


சென்னை, டிச.11- காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தி.மு.க.விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகமூட்டும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.  இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கருணாநிதி தெரிவித்த கருத்தைத் தான் நான் குறிப்பிட்டு இருந்தேன்.  இளைஞன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய கருணாநிதி, “ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும் போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று பேசி இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி பேச்சு 6.12.2010 முரசொலியில் வெளியாகி இருக்கிறது. இதே போன்று, ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகரமாக ஆக்குகின்றன? என்று தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு, அதற்கு, “ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும் தான் பூதாகரமாக இந்தப் பிரச்சினையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்குத் துhக்கிக் கொண்டு போய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒரு சிலர் பங்கிட்டுக் கொண்டதைப் போலவும், அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள்” என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. கருணாநிதியின் மேற்படி கேள்வி-பதில் 7.12.2010 அன்று முரசொலியில் வெளியாகியிருக்கிறது. இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசாவுக்கு மட்டும் பங்கில்லை, மற்றவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை இரண்டு முறை கூறி இருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகிறது. இதைத் தான் நான் குறிப்பிட்டேன்.  ஆனால், நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில், “ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா?” என்று தான் பேசியதாகவும், இதை வைத்து தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையே நான் சிண்டு முடியப் பார்ப்பதாகவும்  கருணாநிதி குறிப்பிட்டு இருக்கிறார். நேற்றைய அறிக்கையில் ஓர் உண்மையை கருணாநிதி மறைத்துவிட்டார். அதாவது, நேற்றைய அறிக்கையில், “இளைஞன்” திரைப்பட விழாவில் தான் சொன்ன “ஒருவர்” என்ற வார்த்தையை தனக்கு வசதியாக எடுத்துவிட்டார் கருணாநிதி. பொய்யும், புளுகும், புனைசுருட்டும் கருணாநிதிக்கு கை வந்த கலை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. மொத்தத்தில், காங்கிரசை கருணாநிதி மிரட்டிய காலம் போய், காங்கிரசை கண்டு கருணாநிதி அஞ்சுகின்ற காலம் வந்துவிட்டது என்பது கருணாநிதியின் அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. என்ன தான் புலம்பினாலும், திமுக ஆட்சி வீழ்வது உறுதி.  இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

thamizh is a sweet language

இனிமையான தமிழ் மொழியைத் தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தர தில்லி முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் இனிய மொழி: தில்லி முதல்வர்

First Published : 11 Dec 2010 04:32:09 PM IST

Last Updated : 11 Dec 2010 05:16:47 PM IST

புதுதில்லி, டிச.11- தமிழ் மிகவும் இனிய மொழி என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.தில்லித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் "தமிழ் 2010" கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்."நான் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வருவது இது 5-வது முறை. இதற்கு முன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு வந்தேன். அப்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் வந்திருந்தார்.எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனது மருமகள் சென்னையைச் சேர்ந்தவர். மேலும், எனக்கும் எனது கணவருக்கும் ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர்.இந்தியாவிலேயே சமூகப் புரட்சியை ஆரம்பத்திலேயே கொண்டு வந்தவர் பெரியார் என்பதை நான் நன்கு அறிவேன். அத்தகைய சமூக சீர்திருத்தவாதிகள் எண்ணற்றோரைத் தந்தது தமிழகம்.தமிழ் மிகவும் இனிய மொழி. ஆனால், கற்பதற்கு சற்று கடினமான மொழியாக உள்ளது.தில்லி தமிழ்ச் சங்கத்தின் கருத்தரங்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.இவ்வாறு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பேசினார்.

Bharathi and V.O.C

பாரதியாரின் பிறந்தநாளில் நாட்டு மக்களால் மறக்கடிக்கப்படுகின்ற செக்கிழுத்த செம்மல் அறிஞர் வ.உ.சிதம்பரானர் அவர்களுடன் இணைத்துக் கட்டுரை படைத்துள்ளமை பாராட்டிற்குரியது. பாரதி வழி நின்று பைந்தமிழ் வளர்ப்போம்! வ.உ.சி.வழி நின்று வண்டமிழ் வளர்ப்போம்! நாட்டு விடுதலைக்கான தீவிர வாதம் தவறல்ல என வாழ்ந்த அப்பெருமக்கள்  வழி நின்று ஈழத் தமிழர்களை  ஆதரிப்போம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வ.உ.சி. கண்ட பாரதி


பாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை. வ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர். அவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார். பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார். அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று  திருமலாச்சாரியாரைப் பார்த்துத்  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி. வ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி ""பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்'' என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார். முதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. இருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால்,  ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர். பழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு  பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர். தனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., ""அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது'' என்றும், ""என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது'' என்றும் பதிவு செய்துள்ளார். சென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார். 1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம்.  1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அரசியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் சந்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், ""சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி  எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி'' என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி. அடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி.  செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது. அந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம்  குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது. திருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர். தீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர். சூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும். வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி. வ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. ""தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே... இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே... இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்''. ""கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ?'' எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி. வெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை. தொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.இந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே  இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். வ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது. குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார். பாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர். இதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை. 1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார். "என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்' என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.

dinamani editorial: வளர்ச்சி முக்கியமாயிற்றே!

அமைச்சர் பேச்சை முழு மையாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட முதன்மைஉரை.  வளிமண்டலத்தை மாசு படுத்தும் நாடுகளின்  பங்களிப்பைக் குறைக்கும் வகையில் பேசி எதிர்ப்பு எழுந்திருக்கும் பொழுது தினமணி பாராட்டுவது வேறு எதன் அடிப்படையில் என்று புரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: வளர்ச்சி முக்கியமாயிற்றே!


புவிவெப்பமாதல் தடுப்பு நடவடிக்கையில், முதல்முறையாக இந்தியா தனது உறுதியான முடிவை அறிவித்துள்ளது. மெக்ஸிகோ, கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. புவிவெப்ப தடுப்பு நடவடிக்கை மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டப்படியான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றோ, புவிவெப்பம் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் இத்தகைய முடிவுக்கு, இந்தியாவில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதே காரணம்.இவ்வளவு வெளிப்படையாக உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சீனா. அண்டை நாடான சீனா, வளிமண்டல மாசுக்கான வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் யாரும் தன்னை நிர்பந்திக்க முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு இணையான தொழில்போட்டியில் உள்ள சீனா இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்ட பிறகு, அதேபோன்ற நிலைப்பாட்டை ஏற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியில் பெருந்தடைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே, சீனாவுக்கு இணையான  காய் நகர்த்தல் என்றே இந்த முடிவை நாம் ஏற்கவேண்டியுள்ளது.புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், புவிவெப்பம் அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸýக்கு மேலாக உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்  என்றும் அதற்கான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்றும் கியோட்டோ தீர்மானத்திலும், அதன்பின்னர் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டிலும் பேசப்பட்டன.இந்த இலக்கை அடைவதற்கு மிக அடிப்படையான தேவை தொழில் மாசுக் கட்டுப்பாடுதான். தொழிற்சாலைகள் கரியமில வாயு உள்ளிட்ட வளிமாசு வாயுக்களை வெளியேற்றும் பழைய தொழில்நுட்ப நடைமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது அமெரிக்காவுக்குச் சாத்தியமானது என்றாலும், வளரும் நாடுகளுக்கு மிகப் பெரும் பொருள்செலவைத் தரக்கூடியது. இத்தகைய மாறுதல்களைப் புகுத்தும்போது சில தொழில்களில் ஆள்கள் குறைக்கப்பட நேரும். வேலையிழப்பு ஏற்படும். சில தொழில்கூடங்களை முற்றிலுமாக இழுத்து மூடவேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இத்தகைய முடிவுகளைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தடாலடியாகப் புகுத்தினால் குழப்பமும், தொழிலாளர் வாழ்க்கைச்சீரழிவும்தான் எதிர்வினையாக முடியும்.இத்தனை ஆண்டுகளாக வளிமண்டல மாசுக்கு அடிப்படைக் காரணமாகிய அமெரிக்கா இன்று நல்லபிள்ளை நானே என்று கூறிக்கொண்டாலும், தன் நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட முன்வருவதில்லை. வளரும் நாடுகளால்தான் அதிக மாசு என்று கூறி, அவர்களுக்குப் புத்தி சொல்கிறது. நிதி தருகிறேன் தொழில்நுட்பத்தை மாற்றுங்கள் என்று சொல்கிறது. இந்தியாவுக்கு இவர்கள் தருவதாகச் சொல்லும் நிதியுதவி வெறும் வழிச்செலவு மட்டுமே.குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, இந்த நிதியைப் பெறும் நாடுகளில் வளிமண்டல வாயு வெளியேற்றம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சட்டப்படியாக  கண்காணிப்போம் என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இது ஒரு மறைமுகமான நெருக்கடி ஆகும். சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இணையாக தொழில் போட்டியை நடத்த முடியாமல் பின்தங்கிப் போகும் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்கூடங்களையும் நவீனப்படுத்த போதுமான நிதி நம்மிடம் இல்லை. மேலும், இதற்காக தொழில் மேம்பாட்டுநிதி ஏற்படுத்தினாலும், அதைத் தின்பவர்கள் வழக்கமான போலிகளும், ஊழல் பேர்வழிகளாகவுமே இருப்பார்கள். இன்றைய சூழல் அப்படியாக இருக்கிறது. இந்தியாவில் இயல்பான தொழில்நுட்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு சக்தி தந்து, அவர்கள் மாறும்படிச் செய்யும்நடைமுறைக்குச் சில ஆண்டுகள் அவகாசம் தேவை. புவி வெப்பமாதல் மிகமுக்கியமான பிரச்னை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் தொழில்வாய்ப்பை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.உலகச்சுற்றுச்சூழல்மீது இந்தியாவுக்கும் கவலையும் கரிசனமும் இருக்கவே செய்கிறது. ஆனால், இதனை எங்கள்மீது மட்டும் திணிக்காதீர்கள் என்பதுதான் இந்த வெளிப்படையான அறிவிப்பின் பொருள்.

world without atombombs

வேடிக்கையாக உள்ளது. அண்டை நாட்டு உரிமைப்போரில்தலையிட்டு வேதியல் குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் போட்டு இன அழிப்பில் ஈடுபடுவார்களாம்! அணு ஆயுதங்களை வழங்கி இயக்குவதற்குப் படை வீரர்களையும் அனுப்பிப் பெருமை கொள்வார்களாம்! அணு ஆயுதம் இல்லாத உலகத்திற்குச் செயல் திட்டம்   போடுவார்களாம்! சரி! சரி! ஆள்வோர் கேழ்வரகில்  நெய் வடிகிறது என்று சொன்னால் நாம் கேட்டுத்தானே ஆக வேண்டும்!  ஆட்சி மாறும் வரையாவது கேட்டுத் தொலைவோம்! இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்


அணுஆயுதம் இல்லாத உலகம்: மணி சங்கர் தலைமையில் குழு


புது தில்லி, டிச.10: அணு ஆயுதக் கருவிகள் இல்லாத உலகம் செயல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் ஐயர் தலைமையில் குழுவை பிரதமர் மன்மோகன் சிங் அமைத்துள்ளார்.1988-ல் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது இந்த செயல் திட்டத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.இந்த செயல் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பரிந்துரைகள் அளிக்குமாறு புதிய குழுவை பிரதமர் அமைத்துள்ளார். மணி சங்கர் ஐயர், பேராசிரியர்கள் அமிதாப் மட்டூ, ஏ. குப்தா உள்ளிட்ட 9 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்கவேண்டும் என்பேத இந்த செயல் திட்டத்தின் நோக்கமாகும்.இதுகுறித்து மணி சங்கர் ஐயர் கூறியதாவது: பரிந்துரையை சமர்ப்பிக்க காலக்கெடு விதிக்கப்படவில்லை. இருந்தபோது விரைவில் அறிக்கையை சமர்ப்பிக்க முயற்சி செய்வோம் என்றார் அவர்.

online M.B.A .

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் ஆன்-லைன் எம்.பி.ஏ. படிப்பு

First Published : 11 Dec 2010 12:00:00 AM IST


சென்னை, டிச. 10: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக ஆன்-லைன் எம்.பி.ஏ. படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஓராண்டு கால அவகாசம் கொண்ட இந்த படிப்பில் சேர்வதற்கு, இளங்கலை பட்டப் படிப்பும், மூன்று ஆண்டு பணி அனுபவமும் உடையவர்கள் மட்டுமே சேர முடியும்.இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.டி. சபாபதி மோகன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், மைபிஸ்கூல்.காம் நிறுவனமும் இணைந்து இந்த ஆன்-லைன் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. தொழில்முனைவோர், சில்லரை வணிகம், கல்வி மேலாண்மை, போலீஸ் நிர்வாகம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் இந்தப் படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது.வேலைக்குச் செல்வோர், பணி பாதிப்பின்றி இந்த படிப்பை மேற்கொள்ள முடியும். நேரடி வகுப்புகளுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை.  பாடங்கள் அனைத்தும் ஆசிரியர் கற்பிக்கும் வடிவில், இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும். தேவையானபோது மாணவர்கள் இதைப் பார்த்துக் கொள்ளலாம். விடுமுறை நாள்களில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் ஆன்-லைனில் கலந்துரையாடுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

seeman interview against congress

இதே கொள்கையில் சீமான் என்றென்றும் உறுதியாக இருந்தால் போதும். உறுதியாக இருப்பார் என்னும் நம்பிக்கை உள்ளது. காங்கிரசு காணாமல் போவது தமிழ்நாட்டிற்கும் மட்டுமல்லாமல் இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்குமே  நல்லது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியமையால் இவருக்கு   அரசு  இழப்பீடு தர வேண்டும். தவறாக வழக்கு தொடுத்தவர், வழக்கை வேண்டும் என்றே இழுத்தடித்தவர் ஆகியோர் மீதும்  முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் தொண்டு தொடர வாழ்த்தும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்



First Published : 11 Dec 2010 02:43:06 AM IST

வேலூர், டிச. 10:  காங்கிரஸ் கட்சியை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். அதுதான் எங்கள் கொள்கை என்று வேலூர் மத்திய சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை  விடுதலையான திரைப்பட இயக்குநர் சீமான் கூறினார்.   வேலூர் மத்திய சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த சீமான் வெள்ளிக்கிழமை பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவர் சிறைக்கு வெளியில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சி தொண்டர்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.   அதைத் தொடர்ந்து அவர் பேசியது:   5 மாதங்கள் நான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் எனது தொழில் மற்றும் அரசியல் கட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடக்குமுறை ஒழியும் வரை ஓயமாட்டேன், தொடர்ந்து பேசுவேன். தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இரண்டு முறை தவறாக என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். தவறு என்று தெரிந்தும் என்னை சிறையில் அடைத்த தமிழக அரசு மீது வழக்கு  தொடருவேன். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் அரசு நடந்து கொள்கிறது.   காமராஜர் ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானசேகரன், ஹசன் அலி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பார்கள்.   காங்கிரஸை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் எங்கு சென்றாலும் எதிர்ப்பேன். அதுதான் எங்களது கொள்கை.  கருணாநிதி, அவரது மகன்கள் ஸ்டாலின், அழகிரி, மகள் கனிமொழி ஆகியோர் நாட்டு மக்களுக்கு உழைத்தது போதும். அவர்கள் ஓய்வு பெறட்டும். ஊழலற்ற உண்மையான ஜனநாயகம் விரைவில் மலரும் என்றார் அவர். கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குநர் பாலா, மதிமுக மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணியன், வேலூர் நகரச் செயலாளர் பழனி, நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வெள்ளி, 10 டிசம்பர், 2010

human rights day : tamil eezham on exile

மனித உரிமைகள் தினம்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிக்கை

First Published : 10 Dec 2010 05:42:07 PM IST


ஜெனீவா, டிச.10- சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கொண்டாடப்படுகின்ற நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச அமைப்பு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று நாடு கடந்த தமிழ் ஈழ அரசு கேட்டுக் கொண்டுள்ளது..அதன் இனஒழிப்பு, மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்ற விசாரணைக்கான அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இன்று அனைத்துலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருகின்ற, உலகெங்குமுள்ள பல்லாயிரம் மக்களுடன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கமும் இணைந்து கொள்கிறது. யூதர்களைப் போன்று ஈழத்தமிழர்களும் இனக்குழுமம் என்னும் அடிப்படையிலே பெரும் தொகையாகக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒரு மாத காலத்தில் மட்டும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகள் போடப்பட்டன. போர் பகுதியில் அகப்பட்டுக்கொண்ட தமிழர்களுக்கு உணவு போகாமல் தடுக்கப்பட்டது. அத்துடன் உணவும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. பலர் பட்டினியால் இறந்தனர். பல பெண்கள் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்கள். இலங்கை அரசாங்கமானது இன அழிப்பு, போர்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்த குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் கடந்த சில மாதங்களில் பெருமளவில் வெளிவந்துள்ளன. சுதந்திர அரசு ஒன்றினை நிறுவுவதன் மூலமே ஈழத்தமிழர்கள் தங்களை அழிவிலிருந்து காப்பற்றிக் கொள்ளமுடியும் என்ற உண்மை நிலையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு அனைத்துலக சமுதாயத்தினால் புறம்தள்ள முடியும்?மனித உரிமைகளுக்கான சர்வதேச தினத்தில் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கமானது, இனப் படுகொலை, போர்குற்றம், மனித சமுதாயத்திற்கு எதிரான படுகொலை புரிந்தவர்களை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக சுதந்திரமான சர்வதேச விசாரணை சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

மிகச் சரியான அறிக்கை. உலகம் உண்மையைப் புரிந்து கொண்டு வருகின்றது. விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும். தமிழ் ஈழம் தனியரசாய் மலரும். தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஈழக் குடியரசு அமையும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/10/2010 8:21:00 PM
A SEPRATE MOTHERLAND WILL ONLY SAVE TAMIL PEOPLE FROM FURTHER DEATH. ALL DIRECT AND INDIRECT ACTORS INVOLVED IN THE TAMIL GENOOCIDE SHOULD BE PUNISHED
By Paris EJILAN
12/10/2010 7:09:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

complaint against corruption

முன்பு விளம்பரமாக வந்தது. சிலரே பார்த்திருப்பர். தினமணி செய்தியாக வெளியிடுவதன் மூலம் பலரறியச் செய்துள்ளது. பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
ஊழல் பற்றி புகார் செய்ய தனி இணையதளம்

First Published : 10 Dec 2010 12:00:00 AM IST


புதுதில்லி, டிச. 9: ஊழல் குறித்து புகார் செய்ய தனி இணையதளத்தை (Vig-eye) மத்திய கண்காணிப்பு ஆணையகம் தொடங்கி உள்ளது.இதில் ஊழல், லஞ்சம் தொடர்பான விடியோ, ஆடியோ பதிவுகளுடன் புகார் செய்யும் வசதி உள்ளது.மேலும் மத்திய கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய இந்த இணையதளம் வகை செய்கிறது.ஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து கண்காணிப்பு ஆணையரிடம் நேரடியாக புகார் செய்ய முடியும். இந்த இணையத்தில் பதிவு செய்யப்படும் புகார் தனியாக அடையாளமிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.கண்காணிப்பு ஆணையம் தொடர்பான விவரங்களையும் இந்த இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.இந்த இணையதளத்தை மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பேசினார்.கண்காணிப்பு அமைப்பை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊழல் தடுப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கண்காணிப்பு ஆணையம் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளது. இந்த விழிப்புணர்வு பிரசாரம் மூலம் ஊழலை மக்கள் சகித்துக் கொள்ளாமல் அது குறித்து புகார் செய்ய முன்வருவது அதிகரிக்கும் என்றார் அவர்.ஊழலற்ற நடைமுறை, பொது வாழ்வில் ஒழுக்கம் போன்ற தார்மிக நெறிகள் குறித்த கல்வி பள்ளிகளில் பாடமாகச் சேர்க்குமாறு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சர்வதேச ஊழல் தடுப்பு தினத்தையொட்டி தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசினார். மற்றொரு மத்திய கண்காணிப்பு ஆணையர் ஸ்ரீகுமாரும் இந்த கருத்தரங்கில் பேசினார்.மத்திய கண்காணிப்பு ஆணைய இணையதளமான www.cvc.nic.in ல்  "விக்-ஐ' குறித்த தகவல்களைப் பெற முடியும்.
 
 

nidhyanandhan and lenin karuppiah

வெட்கக் கேடான மக்கள் வாழும் நாடு! மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் கற்பழிப்பு, கொளளை, கொலை புரிவார்களாம்.
பாதிக்கப்பட்டவர்கள் உண்மையைச் சொன்னால் அது தவறாம். அநீதி இழைப்பவர்களின் உரிமைகளைப்  பாதிப்பதாம். என்ன கொடுமையடா இது!!!
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கொலை மிரட்டல் விடுவதாக நித்யானந்தா மீது லெனின் கருப்பன் புகார்

First Published : 10 Dec 2010 12:50:38 AM IST


பெங்களூர், டிச.9: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நித்யானந்தா, கொலை மிரட்டல் விடுப்பதாக அவரின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் தெரிவித்துள்ளார்.பெங்களூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் கூறியது:2009-ம் ஆண்டில் நித்யானந்தா தொடர்பான சிடியை அவரது உதவியாளர்கள் மூலம் பார்த்தேன். ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறிய பிறகு, போலீஸாரிடம் இது பற்றி புகார் கொடுத்தேன். இதையறிந்த நித்யானந்தா, என்னுடன் பேரம் பேசினார். | 20 கோடி தருவாக ஆசை வார்த்தை கூறினார். யாரிடமும் தெரிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக்கொண்டார்.நித்யானந்தாவின் செயல்களை மக்களிடம் வெளிச்சம்போட்டு காண்பிக்கவே சிடியை வெளியிட்டேன். என்னிடம் இருக்கும் எல்லா ஆதாரங்களையும் சிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளேன். என்னைப் பற்றி நித்யானந்தா மற்றும் அவரது ஆஸ்ரமத்தினர் பொய்யான புகார்களை தொடர்ந்து கூறி வருகிறார்கள். நித்யானந்தாவின் எல்லா உண்மைகளையும் வெளியில் சொன்னதால், கடந்த ஏப்ரல் முதல் இன்று வரை தொடர்ந்து என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதை போலீஸாரிடம் புகாராகக் கொடுத்துள்ளேன். இப்போது போலீஸ் பாதுகாப்பில் இருந்து வருகிறேன் என்றார்.
கருத்துகள்

இடத்துக்கு இடம் , நாட்டுக்கு நாடு . மதத்துக்கு மதம் சமூக சட்ட திட்டங்கள் மாறுபடும் ! இதில் உள்ள வேற்றுமைகளை அல்லது சிறிய குறைகளை பெரிய விடயங்களாக யாரும் கருதுவதில்லை ! தனி மனித சுதந்திரம் என்பது ஒரு அடிப் படை உரிமை ! இதனை ஒருவர் வரம்பு மீறி சென்று லெனின் கறுப்பனைப் போன்ற "பிளாக் மெயில்" பேர்வழிகள் பொது நலன் என்று சொல்லிக் கொண்டு பொருளாதார பலனை அடைவதற்காக அரசியல் மாபியாக்கள் சிலரின் தூண்டுதல் பேரில் விஷமப் பிரச்சாரம் செய்வது கண்டிக்கப் பட வேண்டிய செயலாகும் ! நான் கூட நன்கு தெளிந்த ஞானம் கொண்ட மாற்று மத நண்பர்களுடனும் ; நாத்திக கருத்துக்களை கொண்ட பெரியோர்களுடனும் லெனின் கருப்பனின் நடவடிக்கைகளை விவாதித்துப் பார்த்தேன் ! அனைவரும் இவனின் கேவலமான வியாபார யுக்தியை புரிந்து கொண்டு யதார்த்தத்தை உணர்ந்து கொண்டார்கள் ! காவல் துறை ஒரு சில அபிலாஷைகளுடன் அடியெடுத்து வைக்கக் கூடும் ! லெனின் கருப்பன் போன்ற ஈனப் பிறவிகளை ஒழுங்கு படுத்தாது ! ஆனால் நீதி மன்றம் இந்த அநீதியை உணர்ந்து கொள்ளும் ! நிச்சயம் உண்மை வெல்லும் ! வாழ்க நீவிர் ஸ்ரீ பரமகம்ச நித்தியானந்தா சுவாமி !!! @ rajasji
By rajasji
12/10/2010 2:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

human rights commission

  பயனுள்ள செய்திக் கட்டுரை. ப.இராசவேலுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன?

First Published : 10 Dec 2010 02:07:20 AM IST


சென்னை, டிச. 9: "உலக மனித உரிமைகள் தினம்' ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த நாளில் மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் இறந்த போதுதான் மனித உயிர்கள் மதிப்பிட முடியாதது என்று உலக நாடுகள் உணர்ந்தன.உலக மனித உரிமைகள் தினம்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் 1945-ம் ஆண்டு மனித உரிமைகள் மீறல் பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் 3 ஆண்டுகள் கழித்து 1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்ட நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தியாவில்... மனித உரிமைகள் என்பது அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அல்லது இந்திய நீதிமன்றங்களின் மூலம் அமலாக்கக் கூடிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகிய உரிமைகளை குறிக்கும்.இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் அமலுக்கு வந்தது. அப்போது தேசிய அளவில் மனித உரிமைகள் ஆணையம் என்றும் அந்தந்த மாநிலங்கள் அளவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி 12.10.1993-ல் மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை செயல்படுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 17.04.1997 முதல் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் எங்கு உள்ளது?: சென்னையில் "திருவரங்கம்' எண் 143, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை) சென்னை 600 028 என்ற சாலையில் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நீதியரசர் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி செயல்பட்டு வருகிறார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஏ.ஆர். செல்வக்குமார், கே. மாரியப்பன், எஸ். பரமசிவன் ஆகியோர் செயல்படுகின்றனர்.யார் மீதான புகார் விசாரிக்கப்படும்? அரசுப் பணிகளின் போது அரசு அலுவலரால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறுதல் மேலும் அத்தகைய நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவை பற்றிய புகார்கள் மட்டுமே ஆணையத்தால் விசாரணை செய்ய முடியும். தனி நபர்களால், தனி நபர் மீது மீறப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகார்கள் குறித்து ஆணையம் விசாரணைக்கு எடுக்காது.மனித உரிமைகள் மீறல் குறித்த புகார்களை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ எழுத்து மூலம் அளிக்க வேண்டும். புகார்கள் ஏதும் வராத நிலையில் மனித உரிமை மீறல் குறித்து வெளிவரும் பத்திரிகை செய்திகளை ஆணையமே புகாராக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.புகார்களுக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் புகார்தாரர்களுக்கு அறிவிப்புகள், அழைப்பாணைகள், விசாரணை உத்தரவுகளுக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.மறுக்கப்படும் புகார்கள் எவை? ஆணையத்தின் சட்டம், நடைமுறை விதிப்படி, பிற ஆணையங்களின் முன் ஏற்கனவே விசாரணையில் உள்ள புகார்கள். தெளிவற்ற குறிப்புகளைக் கொண்ட புகார்கள், மனித உரிமை மீறல் நிகழ்வு நடைபெற்ற ஓராண்டுக்குப்பின் பெறப்படும் புகார்கள், பெயர், கையொப்பம், முகவரி இல்லாமல் அனுப்பப்படும் புகார்கள். உரிமையியல் மற்றும் சொத்து உரிமைகள், ஒப்பந்தங்கள், தொழிலாளர்கள்-பணியாளர்கள் அலுவல் தொடர்பான புகார்கள், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் முன் பரிசீலனையில் உள்ள புகார்கள் ஆகியவை ஆணையத்தால் மறுக்கப்படும்.விசாரணையில் காவலர்கள்: ஆணையம் சார்பில் பெறப்படும் புகார்களை புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்து ஆணையம் அறிக்கை பெறுகிறது. இந்தப் புலனாய்வு பிரிவில் ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.), 2 டி.எஸ்.பி.க்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை அதிகாரிகளாக செயல்படுகின்றனர்.தேவைப்படும் சில புகார்களை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பார்கள். இவ்வாறு விசாரிக்கப்படும் புகார்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையத்துக்கு தெரியவரும் போது, மேல் நடவடிக்கை தேவை இல்லை என ஆணையம் கருதினால் புகார் முடித்து வைக்கப்படும்.விசாரணையின் முடிவில் புகார்கள் நிரூபணமானால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கிட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர, நடவடிக்கை எடுக்க அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.இது வரை... தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டுக்கு பிறகு 2010 மார்ச் வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 97 ஆயிரத்து 615 மனுக்கள் ஆணையத்தால் முடிக்கப்பெற்றுள்ளன.

World Human Rights Day

உலகெங்கும் உள்ள ஆட்சியாளரின் அடிமைப்படுத்தலுக்கு எதிராகவும் சிங்களத்தின் மனித உரிமைக்கு எதிராகவும் உள்ளத்தில் குரல் எழுந்தாலும் கை அதனை வெளிவராமல் பார்த்துக் கொண்டது என எண்ணுகிறேன். சிங்கள இறையாண்மைக்கு எதிரான  குரல்களை ஒடுக்குவதும் எதற்கெடுத்தாலும் காவல்துறை தடை விதித்து உரிமைக்குக்  குரல் கொடுப்போரைச்   சிறையில் தள்ளுவதும் இந்த மனித   உரிமை நாளில் இருந்தாவது  நிற்கட்டும்.  அடிமை ஆட்சியில் இயற்றப்பட்ட ஒடுக்கு முறைச் சட்டங்களை அடியோடு அகற்றி அனைத்துக் குடி மக்களுக்கும்  முழு உரிமை அளிக்கும் நாடாக  நம் நாடு மாறட்டும்!  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



உலக மனித உரிமை நாள்: கருணாநிதி வாழ்த்து

சென்னை, டிச. 9: "மண்ணில் மனிதம் காப்போம்-மனிதநேயம் வளர்ப்போம்' என்று உலக மனித உரிமை நாளில் முதல்வர் கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்."உலக மனித உரிமை நாள், டிசம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக சாதி, மத, இன பேதங்கள் கூறி நசுக்கப்பட்டுவரும் நலிந்த பிரிவினர், மலைவாழ் பழங்குடியினர், குழந்தைத் தொழிலாளர்களாக-கொத்தடிமைகளாகச் சுரண்டப்படுவோர், மகளிர், மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைவருக்கும் ஆதரவுக்கரம் கொடுத்து அவர்களுக்குத் துணைபுரியும் அமைப்பாக மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.ஒவ்வொரு மனிதனுக்கும் அளிக்கும் வாழும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, சுதந்திரம் போன்றவைகளை நிலைநாட்ட அது தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டு முதல் இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அதில், 97 ஆயிரத்து 615 விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பித்து நலிந்தவர்களின் நலன்காக்கும் பணிகளை ஆற்றி வருகிறது. மனிதக் கழிவை மனிதனே தலையில் சுமந்த கொடுமையை ஒழித்து, அப்பணியில் ஈடுபட்டு இருந்த அருந்ததியர் சமுதாயம் மற்ற சமுதாயங்களைப்போல முன்னேற வேண்டும் என்பதற்காக 2008-ல் 3 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி அவர்கள் உயர வழிவகுத்து தமிழகத்தில் மனித உரிமைகள் சிறந்திட தொடர்ந்து பாடுபட்டு வருகிறது தமிழக அரசு.இத்தகைய சூழலில், மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற உணர்வோடு ஒவ்வொருவரும் செயல்படுவோம்' என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


body checking of meera sankar

கண்டிக்கத்தக்கதுதான் மறுப்பதற்கில்லை. ஆனால், சோதனைகளுக்காக உடல் மீது கைபட்டதற்கே பொங்குபவர்கள், ஈழப் பெண்களை வன்முறையில் கற்பழித்தும்  கொன்றும் ஆடைகளை அவிழ்த்து  மேலும் இழிவு செய்தும் பிறப்பு உறுப்புகளில் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தும் சிங்களத்தின் இழி செயல்களுக்கு வாய்மூடி இருப்பது ஏன்? தானும் கூட்டாளி என்பதாலா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மீரா சங்கரிடம் சோதனையிட்டதை ஏற்கமுடியாது: எஸ்.எம்.கிருஷ்ணா


புதுதில்லி, டிச.9: அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரிடம் சோதனை நடத்தப்பட்டது ஏற்க முடியாதது என்றும் இதை அமெரிக்க அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்த கிருஷ்ணா, இந்திய அரசால் இதை ஏற்க முடியாது. இந்த விவகாரம் தீர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் மீண்டும் இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.மீரா சங்கர் கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று மிஸ்ஸிஸிப்பியில் விமான நிலைய பாதுகாப்பு வரிசையில் இருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் உடல் முழுவதும் சோதனையிடப்பட்டார். தான் தூதர் எனக் கூறியும் அவரிடம் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.மிஸ்ஸிஸிப்பி பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் பால்டிமோர் செல்வதற்காக மீரா சங்கர் ஜாக்ஸன்-ஈவர்ஸ் சர்வதேச விமானநிலையம் வந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானநிலைய அதிகாரிகளிடம் தூதரக ஆவணங்களை மீரா சங்கர் காட்டியுள்ளார். எனினும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மீரா சங்கரை கைகளால் உடல் முழுவதும் சோதனையிட்டதாக நேரி்ல் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.கடந்த காலங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட இந்திய நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் அமெரிக்க விமானநிலையங்களில்  இதுபோன்ற சில அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.செப்டம்பரில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலின் பிறந்த தேதியும், அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் உள்ள மற்றொரு பிரபுல் படேலின் பிறந்த தேதியும் ஒன்றாக இருந்ததால் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகளால் அமைச்சர் பிரபுல் படேல் விசாரிக்கப்பட்டார். தற்போது மீரா சங்கரை உடல் முழுவதும் சோதனையிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்

(contd)..make necessary measures in order to avoid being snubbed by any illiterates
By Tamil Muslim
12/9/2010 11:53:00 PM
This is an act of misdemeanor and an insult to our country . An ambassador is a single dignitary who represents for the whole nation. There are certain protocols on how to treat the dignitaries exceptionally from common people during their travel and in the office of a foreign country. It’s an absurd and baseless remark that the former US President was screened by raising hands while entering the while house. If the ambassador’s integrity is questioned, there is no need of having diplomatic relationship. No stupid will expect an ambassador or a foreign minister to be a terrorist suspect. This incident is a cultureless audacity which needs to be taken very seriously. When he had expressed his identity as the ambassador the security official should at least have verified his name against government records and treated him with dignity and respect. In the future the dignitaries’ travel itinerary should be provided to the authorities of the airport concerned in advance and make necessary
By Tamil Muslim
12/9/2010 11:31:00 PM
இந்தியத் தூதரை நம்பாதது இந்தியாவையே நம்பாததற்கு சமம்! மற்ற பயணிகளை நடத்துவதைப்போல 'DIPLOMATIC(ராஜீய) பாஸ்போர்ட உள்ள பயணிகளை சோதிக்க புரோட்டோகாலில் இடமே இல்லை! தூதர்களை சோதனை செய்வது, சர்வதேச சட்டத்தின்படி மிகப் பெரிய குற்றம்! கொலை செய்தால்கூட ஒரு தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்ற முடியுமே தவிர தண்டிக்கமுடியாது! இந்த விதி உலகறிந்தது!இந்த நிகழ்வு யு எஸ் அதிகாரிகளின் அடாவடிததனமே!இது ஒரு திட்டமிட்ட அவமானகரமான சதியே!எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியா காந்தியை இதுபோல சோதனையிட அமெரிக்க அதிகாரிகளுக்கு தைரியம் உண்டா? இப்படியெல்லாம் நடப்பது தொடர்ந்தால் யார் IAS , IFS பதவிகளில் சேர முன்வருவர்?உடனே யு எஸ் அரசு மன்னிப்பு கேட்காவிட்டால்,அமெரிக்க அதிகாரிகளையும் இதுபோல நடத்தத் துவங்க வேண்டும்! அளவுக்கு மீறி அமெரிக்க அடிவருடியாக செயல்பட்ட இந்தியாவுக்கு ஒரு நல்ல பாடம்!
By மணி
12/9/2010 11:05:00 PM
Good work...american police.... kaasu kuduthaa etha venaalum seybavargal namma Indian officials....so check each and every one of them.... intha vikku mandayan next time america pona jatti-oda nikka vetchhu check pannunga..kaasu kudutha antha italian mafia family-kaga jatti-kulla kooda bomb vetchu smuggle pannuvaanuga intha congress naayigal....
By ssk@gmail.com
12/9/2010 10:54:00 PM
இந்திய பண்பாடும் இந்தியர்களும் வெள்ளைத்தோல் மனிதர்களுக்கு எப்போதுமே கிள்ளுக்கீரைத்தான் ராமர் படத்தை லெட்டின் பேஷனில் போடுவாங்க சரஸ்வதி படத்தை மானபங்கம் செய்வாங்க ஆஸ்ரேலியாவில் நம்ம பசங்களை அடிச்சும் உதைப்பாங்க! போதாக்குறைக்கு இந்தியர்கள் சாப்பிடுவதினால்தான் உலகத்தில் உணவு பஞ்சமே வருதுன்னு கதையளப்பாங்க !இந்தியா என்றாலே காட்டுமிராண்டிங்க நாடு பிச்சைக்காரங்க பூமின்னு பிரச்சாரம் செய்தவங்கத்தானே ஐரோப்பிய முதலாளிங்க. இப்போ நம்ம ஊரு புடவையிலும் கை வச்சிருக்காங்க இந்த மாதிரி அநியாயத்தை எல்லாம் பார்த்து நம்ம வீர மறவர்களுக்கு ரோசமா வரப்போகுது?இங்கிலீஷ்காரன் காலைப் பிடிச்சி தூங்குவதில் சுகம் காண்பர்தானே இங்கிருக்கும் துரைமார்கள். இன்னும் எத்தனை அவமானம் வந்தாலும் சிரிப்பாய் சிரித்து காரித்துப்பினாலும் வெற்றிலை மடித்துக் கொடுத்து துப்பும் எச்சிலை கோப்பையில் பிடிக்கும் எட்டையபுரத்து வாரிசுகள் தானே நம்ம கொம்பர்கள் பாவம் மீரா சங்கர்!
By யோகி ஸ்ரீ ராமானந்த குருஜி
12/9/2010 10:49:00 PM
அமெரிக்காவில் தூதராக இருக்கும் மீரா குமார் அவர்களே, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு, அமெரிக்க வழிமுறைகளை தெரிந்துள்ள நீங்கள், இப்படி பள்ளிக்கூட மாணவர்கள் போல இந்த விஷயத்தை உங்கள் Boss - இடம் முறையிட்டுள்ளீர்களே. அப்துல் கலாம் அவர்களே சோதனை செய்யப்பட்டாரே. அவரென்ன இப்படியா குதித்தார்? கொஞ்சம் யோசித்து செயல்பட கூடாதா? (உங்கள் boss) தான் அரசியல் வாதி, நீங்களாவது அவருக்கு அறிவுரை சொல்லக்கூடாதா?
By மரமண்டை
12/9/2010 10:44:00 PM
இதற்காக துள்ளி குதிக்கும் பாதுகாப்பு அமைச்சரே, வெளிநாட்டில் இருந்து வரும் இந்திய குடிமக்களை இந்திய அதிகாரிகள் நடத்தும் விதத்தைப் பற்றி எப்போதவது கவலைப்பட்டதுண்டா? அது பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பே இல்லையே. நீங்கள் தான் அரசியல்வாதிகள், தலைவர்கள், அமைச்சர்கள் என்கிற போர்வையில் சிறப்பு மரியாதையோடு உள்ளே போய் விடுவீர்களே. முதலில் உங்கள் நாட்டு அதிகாரிகள் சொந்த குடிமக்களை தாழ்வாக நடத்தும் விதத்துக்கு ஒரு வழி உண்டாக்கிவிட்டு பிறகு இதைப் பற்றி பேசுங்கள். உங்கள் துதரிடம் அமெரிக்காவில் கடமை செய்தால் அது அவமானம், ஆனால் மக்களை உங்கள் அதிகாரிகள் அவமானப் படுத்தினாலும் அது அவர்கள் கடமை. ஏன்யா இப்படி இருக்கிறீர்கள்?
By மரமண்டை
12/9/2010 10:39:00 PM
அய்யகோ விமானநிலைய சோதனையையே தாங்கிக் கொள்ள முடியாமல் பொங்கி எழும் உணர்ச்சி உங்களுக்கு எங்கள் மீனவனை அன்னியன் சுட்டுக் கொல்லும் போது வருவதில்லையே ஏன்?
By தமிழன்
12/9/2010 10:39:00 PM
ஏன்டா விக்கு மண்டையா, தமிழக மீனவர்களை, இலங்கை இனவெறி ராணுவம் சுட்டு தள்ளுவதும், நிர்வானபடுத்தி அடிப்பதையும் நீ பொறுத்துப்ப, ஆனா அந்த வட நாட்டு அம்மாவை சோதன போட்டா உனக்கு வலிக்குதா? என்னே உங்களோட வெளியுறவு கொள்கை, ராஜா தந்திரம்...
By தமிழன் அமுதன்
12/9/2010 9:47:00 PM
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று பேச்சளவில் சொல்வதும் ஆளைக்கேற்றார் போல் சட்டத்தை வளைப்பதும் இந்தியாவில் சாதாரணமாக இருக்கலாம். தூதராக இருந்தால் அவரிடம் சோதனை செய்யக்கூடாது என்று அமெரிக்க சட்டத்தில் சொல்கிறதா. பொது மக்கள் பாதுகாப்பு கருதி அனைவரையும் சோதனை செய்வது பாதுகாப்பு அதிகாரிகளின் கடமை. இதற்காக கிருஷ்ணா இப்படி துள்ளி குதிப்பது தேவை இல்லாத ஒன்று. தன் சொந்த நாட்டு மீனவர்களையே எதிரிகளிடமிருந்து பாதுகாக்க முடியாது என்று சொல்லி ஒழுங்காக உங்கள் கடமையை செய்யாத "பாதுகாப்பு அமைச்சரே", அமெரிக்கர்களையாவது அவர்களை கடமையை செய்ய விடுங்கள். சோதனை செய்தது முற்றிலும் சரியே! கிருஷ்ணாதான் அடக்கி பேச வேண்டும்.
By மரமண்டை
12/9/2010 9:39:00 PM
mr krishna what will you do? you are already a slave of the italian who is acts under the directions of the western powers pope and the usa.you are a shameless person and would keep quiet even if you are searched by the haughty americans
By karunganni
12/9/2010 9:31:00 PM
இந்தியாவில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.பி.களில் பாதிக்குமேல் கிரிமினல்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஊழல் அமைச்சர்களின் எண்ணிக்கையும் ஊழல் அதிகாரிகளின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காது.ஏதோ சி பி ஐ யின் புண்ணியத்தில் இவர்கள் குற்ற மற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். நம் நாட்டு சட்டப்படி இவர்கள் நேர்மையானவர்களாக அர்விக்கப்படலாம் ஆனால் அமெரிக்கர்கள் நம்மவர்களை எப்படி நம்புவார்கள்.குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவன் என்றால் அவன் மேல் நடவடிக்கை கூடாது என்கிறார் கலைஞர் வருபவன் என்னஜாதிக்கரன் என்று அமரிக்கா காரன் எப்படி தெரிந்துகொள்வான்
By குரங்கன்
12/9/2010 9:20:00 PM
கையாலாகத காங்கரஸ் அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று சரிஇருக்கட்டும். ஒரு இந்திய அதிகாரிக்கு அவமானம் ஏர்பட்டால் அறிக்கைவிடும் அமைச்சர் இந்தியா அதிகாரிகளால் அவமானபடுத்தபடும் சாதாரண இந்தியாகுடிமகன் யாரிடம் முறையிடுவது
By ரிஜி.கரியப்பட்டினம்
12/9/2010 8:59:00 PM
இனிமேலாவது வெலீநட்டவர் நம்ம ஊருக்கு வந்த மலை & போட்டு வைத்து நம்ம கலாச்சாரத்தை கேவலபடுத்தவேண்டாம்...
By பஹுருதீன்
12/9/2010 8:06:00 PM
பாதுகாப்பு சோதனைகளை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். இங்கு இந்தியாவில் சோதனைடவில்லை என்பதற்காக மற்றவர்களை குறை சொல்ல கூடாது. இப்போதுதான் தெரிகிறது, இங்கு (இந்தியாவில்) ஏன் குண்டு வெடிக்கிறது, அங்கு (அமெரிக்காவில்) வெடிக்கவில்லை என்று... இனிமேலாவது இந்தியா வரும் ஒபாமா முதல் சாதாரண குடிமகன் வரை ஒழுங்காக எல்லோரையும் சோதனையிட்டு மக்களை காப்பத்துங்கப்பா...
By வெற்றிவேலன்
12/9/2010 8:06:00 PM
இது போல் எல்லா அமெரிகர்களையும் சோதனை செய்ய வேண்டும் ( ஒபாமா உட்பட).
By ஸ்ரீ மணிகண்டன்
12/9/2010 7:21:00 PM
போடா வெண்ணை (கிருஷ்ணா) வெளிநாட்டில் இந்திய தூதரக அதிகாரிகள் இந்தியருக்கு பண்ணும் மரியாதையை சொல்லி மாளாது. சென்னை சாஸ்திரி பவன் பாஸ்போர்ட் அலுவலகமே மேல் இதை யரரிடம் சொல்வது.
By murugavel
12/9/2010 7:16:00 PM
சென்ற மாதம் முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகைக்குப் போனபோது அவரையும் கையைத் தூக்கச் சொல்லி சோதனை செய்தனர். பாதுகாப்பு விதிகளுக்காக அமெரிக்கா செய்வது வழக்கம்தான். ஆனால், இந்தியக்கலாச்சாரம் (???) சிலருக்கு உறுத்துகிறது. இது மேல்நிலையில் பேசித்தீர்க்க வேண்டிய விஷயம். ’வருமுன் காப்போம்’ என்ற அறிவு இந்தியருக்கு எப்போதுமே இருந்ததில்லை. இப்படி நிகழ்வு வருவதற்கு முன்பே நினைத்துப்பார்த்து மேல்மட்ட நிலையில் பேசி ஏற்பாடு செய்திருந்தால் திருமதி மீரா சங்கருக்கு ஏற்பட்ட நிகழ்வைத் தவிர்த்திருக்கலாம். எல்லாம் பட்டால்தான் தெரிகிறது. அமெரிக்காவை ஒருவிரல் நீட்டிக் குறைகூறும்போது, மற்ற நான்கு விரல்கள் யாரைச் சுட்டுகிறது என்று யோசித்தால் நல்லது.
By குனியா மனிதன்
12/9/2010 6:55:00 PM
ஏற்க முடியாது என்றால் என்ன செய்ய போகிறீர்கள்........பேசாம உருப்படுற வேலைய பாருங்கப்பா....
By சுனில்
12/9/2010 6:09:00 PM
Why should our External Affairs minister beat around the bush and behave like one asking favour from his Master? Just ask all high level officials of Indian High Commission to leave US at once as a mark of our protest to show it in strong way. US high handedness is growing out of bounds, with Indians' top officials and dignitaries( ex: making Dr. Abdul Kalam to undergo severe checks). To teach those US beggars- next-time, thoroughly check Hillary Clinton, US ambassador & others for hrs. together.
By ASHWIN
12/9/2010 5:01:00 PM
This is strongly condemnable. It shows that Americans have found India very vulnerable for snubbibng. Recurrence of these kinds of episodes in the US must be severyly dealt with by India.
By Indian
12/9/2010 4:55:00 PM
அமெரிக்காவில் எல்லாம் ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்,,அது தூதராக இருந்தாலும் சரி, குளத்தில் தூர் வாருபவாருக இருந்தாலும் சரி,,,எல்லோருக்கும் கொடுக்கும் அதே மாதிரியான மரியாதையை இவரும் ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்,,, ஒரு உதாரணத்திற்கு நான் கேட்கிறேன்,,,உ பியில் ஒரு தலைமை செயலாளர் 5000 கோடியளவில் ஊழல் செய்யும் போழ்து, இந்தியாவைச் சேர்ந்த தூதர் ஏன் தீவிரவாதியாக இருக்க முடியாது?
By கணேசன் கிருஷ்ணமூர்த்தி
12/9/2010 4:42:00 PM
கொஞ்சமாவது உப்பு போட்டு தின்னுங்கடா! அமெரிக்காவிலிருந்து வரும் நாய்க்கு கூட ராஜ உபசரிப்பு, பாதுகாப்பு- இங்கிருந்து அங்கு போனால் தூதருக்கு கூட அவமதிப்பு - வெட்கமாயில்லே
By Umaiyan
12/9/2010 4:39:00 PM
மீரா சங்கரை சோதனை செய்வது அமெரிக்கரின் பிறப்பு உரிமை. உன்னால் முடிந்தால் அமெரிக்கரை சோதனை செய்து பார். ஒபாமா
By apobama
12/9/2010 4:04:00 PM
அமெரிக்க எஜமானர்கள் வழக்கமாக செய்யும் சீண்டல்கள் தானே இது? இது போன்ற அவமரியாதை செயல்களை அமெரிக்க அடிமைகளான நாம் தாங்கித்தானே ஆக வேண்டும் கிருஷ்ணாஜி? தினமணியும் தன்னுடைய பங்கிற்கு அயலுறவுத்துறை அமைச்சரை துறைச்செயலாளர் என சொல்லி நக்கலடிக்கிறதோ? -தனசேகரன்
By Dhanasekaran
12/9/2010 3:55:00 PM
கிருஷ்ணா அவர்களே இந்தியர்கள்தான்(இந்திய அரசு உட்பட) அமெரிக்காவை சுவர்க்கபுரி என்று நினைத்துக்கொண்டு அவமானத்தையும், சுயகெளவுரவத்தையும், தன்மானத்தையும் விட்டு வெகு நாட்களாகிறது. அமெரிக்கர்களை இந்திய விமான நிலையங்களில் இதே சோதனைக்களுக்குட்படித்தினால் மட்டுமே அமெரிக்கர்களிக்கு அந்த வலி புரியும்.
By தஞ்சை ராஜு
12/9/2010 3:53:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய தூதர் மீரா சங்கருக்கு அவமரியாதை

First Published : 10 Dec 2010 12:47:52 AM IST


வாஷிங்டன், டிச.9: அமெரிக்கா விமான நிலையத்தில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் மீரா சங்கரை அவமதிக்கும் வகையில் அந்நாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.தான் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்று கூறிய பின்னும் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4-ம் தேதி நடத்துள்ளது.இது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய தூதகரம் கூறியுள்ளது:அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில உள்ள மிசிசிபி பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதற்காக மீரா சங்கர் சென்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் பால்டிமோர் செல்வதற்காக மிசிசிபியில் உள்ள ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்துக்கு அவர் வந்தார். அப்போது அவர் சேலை அணிந்து சென்றிருந்தார்.அங்கு விமானத்துக்காக காத்திருந்தபோது, அவரிடம் சோதனை நடத்த வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது அவர் இந்திய தூதர் என்று கூறியதையும் விமான நிலைய அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. கண்டிப்பாக சோதனையிட வேண்டும் என்று  வலியுறுத்தினர்.இதனையடுத்து மீரா சங்கரை விஐபிக்கள் ஓய்வு அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு  சந்தேகத்துக்கு இடமான பொருள் எதையும் வைத்துள்ளாரா என்று பெண் அதிகாரிகள், கைகளால் தடவி சோதனையிட்டனர். இதன் பின்னரே அவரை விமானத்தில் செல்ல அனுமதித்துள்ளனர்.அமெரிக்காவுக்கான இந்திய தூதர் என்று கூறிய பின்னரும் அவரை அவமதிக்கும் வகையில் விமான நிலைய அதிகாரிகள் நடந்துகொண்டுள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் இந்திய தூதரம் சார்பில் புகார் கூறப்பட்டுள்ளது என்று தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மிசிசிபியில் உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஜாக்சன்-எவர்ஸ் விமான நிலையத்தில் பயணிகளை ஸ்கேன் செய்யும் நவீன இயந்திரம் இல்லை. இது தவிர மீரா சங்கர், சேலை அணிந்திருந்ததால், இதுபோன்ற சோதனைக்கு கட்டயமாக உள்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.இந்தியா கண்டனம்: மீரா சங்கருக்கு நிகழ்ந்த அவமதிப்புக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியது: மீரா சங்கரை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தொடர்பாக அமெரிக்க அரசிடம் புகார் தெரிவிக்கப்படும். கடந்த 3 மாதத்தில் இரண்டாவது முறையாக இந்திய அதிகாரிகளை அவமதிக்கும் சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார் அவர்.இந்திய அதிகாரிகள் மட்டுமின்றி இந்திய அரசியல் தலைவர்களும் அமெரிக்க அதிகாரிகளால் இதுபோன்ற அவமரியாதையைச் சந்தித்துள்ளனர்.