சனி, 18 ஜூலை, 2009




சென்னை, ஜூலை 17: தமிழக காவல்துறை ஜாதி சங்கமாக மாறிவிட்டது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் குற்றம்சாட்டினார். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது: தமிழக காவல் துறையில் ஜாதி உணர்வு அதிகமாகிவிட்டது. காவல் துறையா? ஜாதி சங்கமா? என்று கேட்கிற அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் போலீஸôருக்கு முழு சுதந்திரம் இருந்தது. ஆனால் இப்போது போலீஸôருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளுமே காரணம். தியாகராய நகர், பாண்டி பஜார், பூக்கடை, கோடம்பாக்கம் போன்ற காவல் நிலையங்களில் பணியாற்ற போலீஸôரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதற்கு "கலெக்ஷனே' காரணம். முன்பெல்லாம் குடும்ப பின்னணியை ஆராய்ந்த பிறகுதான் போலீஸ் வேலையில் சேர்ப்பார்கள். அந்த வழக்கம் இன்று இல்லாததால் குற்றவாளிகள் போலீஸ் அதிகாரியாக வந்துவிடுகிறார்கள். குற்றங்கள் பெருகி வருவதற்கு இது முக்கியமான காரணமாகும். 1967-க்குப் பிறகு திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்கின்றன. இரு திராவிட கட்சிகளும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் போளூர் வரதன். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்:நாங்கள் என்ன செய்தோம் என்பதை திங்கள்கிழமை (ஜூலை 20) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் சொல்வோம். ஓ. பன்னீர்செல்வம் (அதிமுக): மக்களுக்காக நாங்கள் (அதிமுக) என்ன செய்தோம் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். திங்கள்கிழமை நான்பேசும் போது அதிக விவரங்களை தர இருக்கிறேன் என்றார்.
கருத்துக்கள்


காங்.ஆட்சியில் காவல் துறையினருக்கு முழு உரிமை - சுதந்திரம் - இருந்தது. ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல! இளைஞர்களையும் மாணாக்கர்களையும் அரிவாளால் வெட்டி சாய்க்கும் காங்.ஐக் கண்டு கொள்ளாமல் இருக்க 'சுதந்திரம்' இருந்தது. காவல் தடுப்பில் இருந்த மாணாக்கர்களைச் சிறு நீர் குடிக்கச் செய்வதற்கு முழுச்'சுதந்திரம்' இருந்தது. திரைப்படப் பாடல்களில் 'அண்ணா' என்னும் பெயர் வருவதைத் தடுக்கக் கூட 'சுதந்திரம' இருந்தது. (பேச்சில் சிறந்தவர் யாரு? அண்ணா! என்பதைத் திரு.வி.க. என மாற்றச் செய்ததை 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என்னும் பாடலில் இன்று கூடக் கேட்கலாம்.) அடக்கு முறைக்கும் துப்பாக்கிச் சூட்டிற்கும் 'சுதந்திரம்' இருந்தது. ஆட்சி விரும்பாத் தலைவர்களைக் கைது செய்ய எடுப்பார் கைப்பிள்ளையாகச் செயல்பட'சுதந்திரம்' இருந்தது. இவ்வாறு ஒன்றா இரண்டா ? அடுக்கிக் கொண்டே போகலாம்.

நினைவலைகளில் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 5:00:00a.m.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக