வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஜனவரி 10-க்குள் தமிழர் மறுகுடியமர்வு: தில்லியிடம் இலங்கை குழு உறுதி



புது ​தில்லி,​​ டிச.​ 10: ​ ​ ​ இலங்​கை​யில் தற்​போது நிவா​ரண முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள தமி​ழர்​கள் அனை​வ​ரும் அடுத்த மாதம் 10-ம் தேதிக்​குள் அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வர் என,​​ தில்​லிக்கு வந்​துள்ள அந்த நாட்​டின் தூதுக் குழு​வி​னர் தெரி​வித்​த​னர்.​மேலும்,​​ இலங்​கை​யில் அதி​பர் தேர்​தல் முடிந்​த​வு​டன்,​​ தமி​ழர்​கள் பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண்​ப​தற்​கான முயற்​சி​க​ளும் உட​ன​டி​யாக மேற்​கொள்​ளப்​ப​டும் என அந்​தக் குழு​வி​னர் தெரி​வித்​த​னர்.​இலங்கை அதி​ப​ரின் மூத்த ஆலோ​ச​கர் பாசில் ராஜ​பட்ச,​​ செய​லர் லலித் வீர​துங்க,​​ பாது​காப்​புத் துறை செய​லர் கோத்​த​பய ராஜ​பட்ச ஆகி​யோர் அடங்​கிய தூதுக் குழு​வி​னர் தில்​லி​யில் வியா​ழக்​கி​ழமை மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.​ கிருஷ்​ணாவை சந்​தித்​துப் பேசி​னர்.​இலங்​கை​யில் நிவா​ரண முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள தமி​ழர்​களை அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​து​வது குறித்து இந்​தக் குழு​வி​ன​ரு​டன் கிருஷ்ணா விரி​வா​கப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.​இந்​தச் சந்​திப்​புக்​குப் பிறகு,​​ பாசில் ராஜ​பட்ச செய்​தி​யா​ளர்​க​ளி​டம் கூறி​யது:​இந்​தப் பேச்​சு​வார்த்தை மிக​வும் சுமு​க​மா​க​வும்,​​ நன்​றா​க​வும் இருந்​தது.​இலங் ​கை​யின் வடக்​குப் பகு​தி​யில் முகாம்​க​ளில் தங்​கி​யுள்ள அனைத்து தமி​ழர்​க​ளுக்​கும் எல்​லா​வி​த​மான ஜன​நா​யக உரி​மை​க​ளும் உள்​ளன.​ வரு​கிற இலங்கை அதி​பர் தேர்த​லில் அவர்​கள் வாக்​க​ளிப்​ப​தற்கு உரிமை உண்டு.​தமி​ழர்​கள் பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண இலங்கை அரசு உறு​தி​பூண்​டுள்​ளது.​ அதி​பர் தேர்​தல் முடிந்​த​வு​டன்,​​ இந்த பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண்​ப​தற்​கான முயற்​சி​கள் உடனே மேற்​கொள்​ளப்​ப​டும்.​தமி​ழர்​கள் பிரச்​னைக்கு அர​சி​யல் தீர்வு காண்​ப​தற்​காக,​​ இலங்கை அர​சி​யல் சட்​டத்​தில் தேவை​யான அனைத்து திருத்​தங்​க​ளும் மேற்​கொள்​ளப்​ப​டும்.​இந்​தி​யா​வின் நலன்​க​ளை​யும்,​​ பாது​காப்​பை​யும் உறு​திப்​ப​டுத்​து​வ​தில் இந்​திய அர​சு​டன் இலங்கை ஒருங்​கி​ணைந்து செயல்​ப​டும்.​ அதே​நே​ரத்​தில்,​​ இந்​தப் பேச்​சு​வார்த்​தை​யின் போது,​​ இந்​தி​யா​வின் பாது​காப்பு தொடர்​பான பிரச்னை எது​வும் விவா​திக்​கப்​ப​ட​வில்லை.​இந்​திய மீன​வர்​கள் பிரச்​னையை பொருத்​த​வ​ரை​யில்,​​ இரு நாட்டு மீன​வர்​க​ளி​ட​மும் தத்​த​மது கடல் எல்​லை​யைத் தாண்டி மீன் பிடிக்​கும் போக்கு உள்​ளது.​ கடல் எல்லை எது என்​பது மீன​வர்​க​ளுக்கு தெரி​யா​த​து​தான் இந்த பிரச்​னைக்கு கார​ணம்.​இந்த பிரச்​னையை சட்​ட​ரீ​தி​யாக அணு​கு​வ​தை​விட,​​ மனி​த​நேய அடிப்​ப​டை​யில் அணு​கு​வ​து​தான் சரி​யாக இருக்​கும்.​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் கிருஷ்​ணா​வு​ட​னான பேச்​சு​வார்த்​தை​யின் போது கச்​சத்​தீவு பிரச்னை பற்றி எது​வும் விவா​திக்​கப்​ப​ட​வில்லை.​இலங்​கை​யில் இடம் பெயர்ந்த தமி​ழர்​களை அவர்​க​ளது சொந்த வாழ்​வி​டங்​க​ளில் மீண்​டும் குடி​ய​மர்த்​து​வ​தற்கு இந்​தியா அளித்து வரும் உத​வி​யைப் பாராட்​டு​கி​றேன் என்​றார் பாசில் ராஜ​பட்ச.
கருத்துக்கள்

முதலில் போர் முடிந்ததும் தீர்வு, அடுத்து தலைவர் தேர்தல் முடிந்ததும் தீர்வு, பின் பொதுத் தேர்தல் நடந்ததும் தீர்வு, பின்னர் சிங்களர்களிடையே நிகழும் உள்நாட்டுப் போர் முடிந்ததும் தீர்வு, இதற்கும் பின்னர் தமிழர் யாரும் வதைமுகாம் நடவடிக்கைகளில் பிழைத்திருந்தார்கள் எனில் அவர்களும் அழிந்தபின் தீர்வு என்பதை நடைமுறைப்படுத்தும் சிங்கள ஆரியத் தலைவர்கள் வாழ்க! அவர்களின் கைக்கூலிகள் வாழ்க!வாழ்க!! தூங்கும் தமிழினமே தூங்குக! தூங்குக!! மாளும் மக்களினத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கா மனித நேயமே உறங்குக!உறங்குக!!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
ந்​தி​ரத்​தில் புதிய சிக்​கல்: 105 எம்.எல்.ஏ.க்கள் ராஜி​நாமா



மத்​திய அர​சின் உறு​தி​மொ​ழியை அடுத்து தனி தெலங்​கானா கோரி 11 நாள்​க​ளாக மேற்​கொண்​டி​ருந்த உண்​ணா​வி​ர​தத்தை தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமிதி தலை​வர் சந்​
ஹைத ​ரா​பாத்,​​ டிச.​ 10: தனி தெலங்​கானா அமைக்க மத்​திய அரசு நட​வ​டிக்கை எடுப்​பதை எதிர்த்து ஆந்​தி​ரத்​தில் 105 எம்.எல்.ஏ.க்கள் மற்​றும் ஒரு எம்.பி.​ தங்​கள் பத​வியை ராஜி​நாமா செய்​துள்​ள​னர்.​இ​த​னால் ஆந்​திர மாநி​லத்​தில் புதிய சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.​ ராஜி​நாமா செய்​துள்ள எம்​எல்​ஏக்​கள் அனை​வ​ரும் கட​லோர ஆந்​தி​ரம் மற்​றும் ராய​ல​சீமா பகு​தி​யைச் சேர்ந்த காங்​கி​ரஸ்,​​ தெலுங்​கு​தே​சம் மற்​றும் பிரஜா ராஜ்​ஜி​யம் கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள்.​எம்​எல்​ஏக்​கள் தங்​கள் ராஜி​நாமா கடி​தத்தை ஆந்​திர சட்​டப் பேர​வைத் தலை​வர் கிரண் குமார் ரெட்​டிக்கு அனுப்பி வைத்​துள்​ள​னர்.​ அவர்​க​ளின் ராஜி​நாமா ஏற்​றுக் கொள்​ளப்​பட்டு விட்​டதா என்​பது குறித்த தக​வல் இது​வரை வெளி​யா​க​வில்லை.​வி​ஜ​ய​வாடா தொகுதி எம்.பி.​ லக​ட​பதி ராஜ​கோ​பாஜ்ல் தனது ராஜி​நாமா கடி​தத்தை மக்​க​ள​வைத் தலை​வர் மீரா குமா​ரி​டம் அளித்​துள்​ளார்.​ராஜி​நாமா செய்த எம்​எல்​ஏக்​க​ளில் 52 பேர் காங்​கி​ர​ûஸச் சேர்ந்​த​வர்​கள்,​​ 42 பேர் தெலுங்கு தேசம்,​​ 11 பேர் பிரஜா ராஜ்​யம் கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள்.​ ​இ​து​த​விர ஆந்​தி​ரத்​தைச் சேர்ந்த மேலும் பல எம்.பி.க்கள் தங்​கள் பத​வியை ராஜி​நாமா செய்ய முடி​வெ​டுத்​துள்​ள​தா​கத் தெரி​கி​றது.​ தெலங்​கானா அமைப்​பது தொடர்​பாக காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி தில்​லி​யில் ஆந்​திர எம்.பி.க்கள் கூட்​டத்தை நடத்த இருக்​கி​றார்.​ இதில் தங்​கள் எதிர்ப்​பைத் தெரி​விக்​க​வும் எம்.பி.க்கள் முடிவு செய்​துள்​ள​னர்.​ஆந் ​தி​ரத்தை பிரிக்​கும் முடி​வுக்கு காங்​கி​ரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ள​னர்.​ இது ஒரு​த​லைப் பட்​ச​மான முடிவு.​ எங்​க​ளுக்கு இது பெரும் மன வருத்​தத்தை அளிக்​கி​றது.​ மாநி​லத்​தில் பல்​வேறு பகுதி மக்​க​ளும் தலை​ந​கர் ஹைத​ரா​பா​தில் பிழைப்​புக்​காக வந்​துள்​ள​னர் மாநி​லத்தை இரு துண்​டு​க​ளாக்​கி​னால் அவர்​க​ளின் நிலை பரி​தா​ப​மா​கி​வி​டும் என்று கிருஷ்ணா மாவட்​டத்​தைச் சேர்ந்த காங்​கி​ரஸ் எம்​எல்ஏ பி.​ வெங்​கட்​ரா​மையா கூறி​யுள்​ளார்.​ தெலங்​கா​னா​வில் தலை​ந​கர் ஹைத​ரா​பாத்​தைச் சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது.​மருத்​து​வ​ம​னை​யில் தொடர்ந்து சிகிச்சைஉண் ​ணா​வி​ர​தத்தை கைவிட்ட நிலை​யி​லும் சந்​தி​ர​சே​கர ராவ் இன்​னும் 3 நாள்​கள் வரை மருத்​து​வ​ம​னை​யில் தங்கி சிகிச்சை பெற வேண்​டும் என்று டாக்​டர்​கள் கூறி​யுள்​ள​னர்.​பாக்​டீ​ரியா நோய்​தொற்​றால் அவர் பாதிக்​கப்​பட்​டுள்​ளார்.​ இதற்​காக தற்​போது சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​÷முன் ​ன​தாக தனி தெலங்​கானா மாநி​லம் கோரி சாகும்​வரை உண்​ணா​வி​ர​தம் மேற்​கொண்​டி​ருந்த தெலங்​கானா ராஷ்ட்​ரீய சமீதி தலை​வர் சந்​தி​ர​சே​கர ராவ் 11 நாள்​க​ளுக்​குப் பின் புதன்​கி​ழமை இரவு தனது உண்​ணா​வி​ர​தத்தை கைவிட்​டார்.​எ​னி​னும் அவர் தொடர்ந்து ஹைத​ரா​பாத் நிஜாம் மருத்​துவ அறி​வி​யல் கழக மருத்​து​வ​ம​னை​யி​லேயே தங்க வைக்​கப்​பட்​டுள்​ளார்.​ அவ​சர சிகிச்​சைப் பிரி​வில் அனு​ம​திக்​கப்​பட்​டி​ருந்த அவர் இப்​போது தனி அறைக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்.​தற்​போது சந்​தி​ர​சே​கர ராவ்,​​ இள​நீர்,​​ பால் போன்ற திரவ உண​வு​க​ளைச் சாப்​பிட்டு வரு​கி​றார்.​ அவ​ரது உடல் எடை 8 கிலோ குறைந்​துள்​ளது.​ இத​யத் துடிப்பு,​​ ரத்த அழுத்​தம் ஆகி​யவை சீராக உள்​ளது.​ 3 நாள்​க​ளில் அவர் வீடு திரும்​பு​வார் என்று டாக்​டர்​கள் கூறி​யுள்​ள​னர்.​சோனியா காந்திதனி தெலங்​கானா குறித்து இறுதி முடி​வுக்கு வரும் முன்பு தெலங்​கானா பகு​தி​யைச் சேராத எம்.பி.க்க​ளு​டன் ஆலோ​சனை நடத்தி அவர்​க​ளது கோரிக்​கை​க​ளும் பரிசீ​லிக்​கப்​ப​டும்.பிர​ணாப் முகர்ஜிதெ​லங்​கானா அமைப்​ப​தற்​கான அனைத்து நடைமுறைகளும் முழுமை யாக பின்பற்றப்படும்.ப. சிதம்பரம்தெலங்​கானா மாநி​லம் அமைப்​பது குறித்​துப் பேச தில்லி வரு​மாறு ராவுக்கு அழைப்புசந்​தி​ர​பாபு நாயுடு குற்​றச்​சாட்டுதெலங் ​கானா அமைக்​கும் முடிவை எடுத்த​தற்​காக மத்​திய அர​சை​யும்,​​ சோனியா காந்​தி​யை​யும் தெலுங்கு தேசம் தலை​வர் சந்​தி​ர​பாபு நாயுடு கடு​மை​யா​கக் குறை கூறி​யுள்​ளார்.​ எ​திர்க்​கட்​சி​கள் மற்​றும் மாநி​லத்​தின் பிற பிரி​வி​ன​ரின் ஆலோ​ச​னை​யைப் பெறா​மல் இத்​தகைய முடிவு எடுத்​தது மிக​வும் தவ​றா​னது.​ மாநி​லத்​தைப் பிரிப்​ப​தால் பாதிக்​கப்​ப​டும் மக்​களை ஆலோ​சிக்​கா​மால் காங்​கி​ரஸ் தன்​னிச்​சை​யாக முடிவு எடுத்​துள்​ளது கண்​டிக்​கத்​தக்​கது.​ மக்​க​ளின் உணர்​வு​க​ளைப் புரிந்து கொள்​ளா​மல் காங்​கி​ரஸ் செயல்​ப​டு​கி​றது என்று அவர் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.எம்.பி.​ ராஜி​நாமாகாங் ​கி​ர​ûஸச் சேர்ந்த மற்​றொரு எம்.பி.​ அனந்த வெங்​கட்​ராமி ரெட்​டி​யும் தெலங்​கானா பிரி​வி​னைக்கு எதிர்ப்​புத் தெரி​வித்து பத​வியை ராஜி​நாமா செய்​யப்​போ​வ​தாக அறி​வித்​துள்​ளார்.​த​னது ராஜி​நாமா கடி​தத்தை தெலுங்கு தேசம் தலை​வர் சந்​தி​ர​பாபு நாயு​டு​வுக்கு அனுப்பி வைத்​துள்​ள​தாக தெலுங்கு தேசம் மாநி​லங்​க​ளவை உறுப்​பி​னர் எம்.வி.​ எம். ரெட்டி கூறி​யுள்​ளார்.​
கருத்துக்கள்

காங்கிரசின் வஞ்ச நாடகமே இவற்றிற்கான காரணம். என்றாலும் தமிழகக் காங்கிரசார் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். சரியோ தவறோ மாநிலத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய காங்கிரசு எடுக்கும்பொழுது துணிந்து எதிர்க்கும் ஆந்திரக் காங்கிரசின் துணிவைப் பெற்று அடிமைப் புத்தியை அகற்ற வேண்டூம். தமிழகக் காங்கிரசின் அடிமைப் போக்கால்தான் தமிழகப் பகுதிகள் ஆந்திர, கருநாடக, கேரள மாநிலங்களில் சேர்க்கப்பட்டது என்பதையும் பல்வேறு வகைகளில் தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதையும் எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர் படுகொலைகள் நடந்து வருவதையும் உணர்ந்து தமிழ் இனத்திற்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் குரல் கொடுக்கும துணிவைப் பெற வேண்டும். எதிரிகளின் கால்களை நக்கி வாழ்வதும் ஒரு பிறப்பா என்பதை உணர வேண்டும். தமிழகக் காங்கிரசாரே விழித்து எழுவீர்! உணர்வு பெறுவீர்! தமிழ் மானம் காப்பீர்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 3:14:00 AM

Beware!!!! Kaduvetti Ramadoss is awaiting to separate Tamilnadu..

By Vannian
12/11/2009 2:37:00 AM

தூக்குங்க அய்யா கருணாநிதிய, உண்ணாவிரதம் இருக்க வச்சு தனி தமிழ்நாடு கேட்போம்.. கருணாநிதி செத்த மாதிரியும் ஆச்சு, தனி தமிழ்நாடு வாங்கின மாதிரியும் ஆச்சு..இந்த இந்தியா கூட இருந்து நம் சகோதர்களை இழந்ததும் போதும்...மானம் போனதும் போதும்...

By sree
12/11/2009 1:50:00 AM

THis sonia is Indian divider , this is first thing she started. Well done. This is what Sri Lankan Tamils advised several times . Now you can feel that pain. As we Sri Lankan happy about it. including P Sithamparam also

By zoyza
12/11/2009 1:45:00 AM

This is unwanted thing doing by Cogress government. These politicians are threatening India and government. Let them die. They didn't do anything for India. Tomorrow each politician will demand seperately for their religion, community. Will our Indian government will allow?. We lost more to our neighbour. Our Congress government did lot of mistake without thinking future of the India. Eg: Jammu & Kashmir, Himachal Pradesh, Katch Islands.will act. He is following the potti Sri Ramalu style. He divided the unity of South India. Now he is dividing the unity of Telugu people as well as Indian patriotism. Before dividing Indian government has to give some tasks like solving global warming issue, India and pakistan peace, solution for the border issue between china and India. Every Indian, will accept, if these politicians proved success in these assignments, they can raise like these demands. He is taking the today younger generation into wrong direction. He is removing the patriotism

By Indian
12/11/2009 1:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *



மதுரை, ​டிச.​ 9: மது​ரை​யில் பத்​தி​ரிகை அலு​வ​ல​கம் மீது பெட்​ரோல் குண்டு வீசி எரிக்​கப்​பட்​ட​தில் 3 ஊழி​யர்​கள் இறந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அட்​டாக் பாண்டி,​​ டி.எஸ்.பி.​ உள்​ளிட்ட 17 பேரை​யும் விடு​தலை செய்து மதுரை மாவட்ட நீதி​மன்​றம் புதன்​கி​ழமை தீர்ப்​ப​ளித்​தது.​
வழக்கு விவ​ரம்:​
தமி​ழக முதல்​வர் கரு​ணா​நி​தி​யின் அர​சி​யல் வாரிசு யார் என 2007,​ மே மாதம் கருத்​துக் கணிப்பு அந்​தப் பத்​தி​ரி​கை​யில் வெளி​யா​னது.​ இதில்,​​ மு.க.ஸ்டா​லி​னுக்கு 70 சத​வீ​த​மும்,​​ மு.க.அழ​கிரி,​​ கனி​மொ​ழிக்கு தலா 2 சத​வீ​த​மும்,​​ மது​ரை​யில் மட்​டும் மு.க.​ அழ​கி​ரிக்கு 6 சத​வீ​தம் ஆத​ரவு உள்​ள​தா​க​வும் கருத்​துக் கணிப்​பில் தெரி​விக்​கப்​பட்​டி​ருந்​தது.​
இதை​ய​டுத்து மு.க.​ அழ​கிரி ஆத​ர​வா​ளர்​கள் ​ என்று கூறப்​ப​டும் பலர் மதுரை உள்​ளிட்ட தென் மாவட்ட பகு​தி​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​னர்.​
​ கடந்த 9}5}2007 அன்று மதுரை}​மேலூர் சாலை​யில் உள்ள அந்​தப் பத்​தி​ரிகை அலு​வ​ல​கத்தை ஒரு கும்​பல் பெட்​ரோல் குண்​டு​கள் வீசி தாக்கி,​​ அலு​வ​ல​கத்​தைச் சூறை​யா​டி​னர்.​ இச்​சம்​ப​வத்​தில் பொறி​யா​ளர்​கள் வினோத்,​​ கோபி,​​ காவ​லர் முத்​துப்​பாண்டி ஆகிய 3 பேர் எரித்​துக் கொல்​லப்​பட்​ட​னர்.​
இது தொடர்​பாக மதுரை கீரைத்​து​றை​யைச் சேர்ந்த அட்​டாக் பாண்டி,​​ திருச்​செல்​வம்,​​ பிரபு,​​ சர​வ​ண​முத்து,​​ முரு​கன்,​​ விஜ​ய​பாண்டி,​​ கந்​த​சாமி,​​ ரமேஷ்​பாண்டி,​​ ராமை​யா​பாண்டி,​​ வழி​விட்​டான்,​​ தாழ​முத்து,​​ சுதா​கர்,​​ ரமேஷ்​கு​மார்,​​ திரு​மு​ரு​கன்,​​ ரூபன்,​​ மாலிக்​பாஷா ஆகிய 16 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.​
பின்​னர்,​​ இந்த வழக்கை 19.5.2007 முதல் சிபிஐ விசா​ரித்​தது.​ அப்​போது ஊமச்​சி​கு​ளம் டி.எஸ்.பி.யாக இருந்த ராஜா​ராம் 17}வது குற்​ற​வா​ளி​யாக வழக்​கில் சேர்க்​கப்​பட்​டார்.​ அவர் பணி​யில் கவ​னக்​கு​றை​வாக இருந்​த​தா​க​வும் சம்​ப​வத்​தைத் தடுக்​கத் தவ​றி​விட்​ட​தா​க​வும் குற்​றஞ்​சாட்​டப்​பட்​டது.​
இந்த வழக்​கில் 32 பக்க குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டது.​ 85 சாட்​சி​க​ளி​டம் விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டது.​
வழக்கு விசா​ரணை முடிந்து,​​ புதன்​கி​ழமை நீதி​பதி ரத்​தி​ன​ராஜ் தீர்ப்​ப​ளித்​தார்.​
பிறழ் ​சாட்​சி​க​ளாக மாறிய அரசு தரப்பு சாட்​சி​கள்:​ இந்த வழக்கு விசா​ர​ணை​யின்​போது முதல் சாட்​சி​யான ஒத்​தக்​கடை சப்}​இன்ஸ்​பெக்​டர் ஆல​டி​யான்,​​ 2}வது சாட்​சி​யான நாளி​தழ் அலு​வ​லக செய்தி ஆசி​ரி​யர் உள்​பட அனை​வ​ரும் பிறழ்​சாட்​சி​யம் அளித்​த​னர் என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.​

கருத்துக்கள்

தீயெரிப்புப் படுகொலை, தினகரன் அலுவலகத்தில் இழைக்கப்பட்ட நடைபெற்ற வன்முறைக் கொலை வெறியாட்டம் தொடர்பான படங்களும் ஒளிப்படங்களும் ஊடகங்களில் வந்துள்ளன. எனவே, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்கித் தராத காவல்துறையினருக்கும் அதன் துறைத் தலைவருக்கும் பொய்ச்சான்றர்களுக்கும்(பொய்ச்சாட்சிகள்) தண்டனை வழங்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அத்துறை அமைச்சரான முதல்வரின் மனம் அல்லல்பட்டு வருநதி யழும். எனவே, தன்நெஞ்சறிவது பொய்யற்கப் பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் என்பதை மறந்தவர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் அவர்களுக்கு உடந்தையாய் இருந்தவர்களுக்கும் முறையாக வழக்கினை நடத்தாத காவல்துறையினர், வழக்குரைஞர்களுக்கும் முறை வழங்கா நீதிபதிக்கும் தண்டனை வழங்கும் வகையில் அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும்.முதலமைச்சர் குடும்பத்தைச் சேர்நத - மத்திய அமைச்சராக உள்ள - ஒருவரின் குடும்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கே நீதி கிடைக்கவில்லையெனில ஏழை எளிய மக்களுக்கு எங்கே நீதி கிடைக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடாது.

வேதனையுடன் அறத்தை வலியுறுத்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/11/2009 2:53:00 AM

Now ADMK and DMK have reached an understanding. Now DMK will not raise Dindigual incident where three students were burnt alive by ADMK volunteers and ADMK will not raise the Madurai issue. Vaazhga Democracy. MK nee idhuku kevalamaana thozhil panni panathai sambaadhikalam.

By Raju
12/10/2009 8:06:00 PM

Karunadhi unakku maaanam soodu sorani endru irundhaal un maganukku central minister padhavi vaangi koduthirupaaya? Andha ezhai thaayin kanneer ungal kudum bathayey suttu erikkum. Now SunTV Dinakaran all these will become silent. This is the family pact that has been reached between maran and azhagiri. maran naaangala ungalukkaaga uir kodutha andha kudumbathukku sila pala lathchangalai veesi erindhu vidungal. avalavethaan. Tamil naadu makkalukku niraia ilavasangal koduhu vidungal...ungal veettu kazhivu porutkalai koduthu vidungal..undu maghizvaargal. Vairamuthu and vaali idharku kavidhai iyatri thara sollungal. Long live MK and his family let the people of TN eat shit and die

By GR
12/10/2009 7:58:00 PM

THIS IS ONE MORE EXAMPLE OF HOW MONEY AND POWER CAN BE USED TO DO ANYTHING IN INDIA. SINCE OUR JUDICIAL, LEGISLATURE, BEAUCRACY, POLICE, ELECTION COMMISSION, CBI ETC., APPEAR TO BE MEANT FOR THE BENEFIT OF THE RICH AND POWERFUL. JUST LIKE BRITISH, PRESENT RULERS ALSO KEEP PEOPLE DIVIDED SO THAT THERE WILL NOT BE ANY UNITY FOR OPPOSING THESE THINGS.

By RAJA
12/10/2009 5:41:00 PM

This is another worst example of the FAMILY government. The people are not at all valued by our politicians who manage judiciary & adminstration for their own welfare.

By Arulappa
12/10/2009 5:04:00 PM

அடுத்தவன் உயிரை காவு வாங்கி அரசியல் பண்னும் அரசியல் நாய்களா நீங்கள் எப்போ சாவீர்கள்........

By anna
12/10/2009 4:16:00 PM

I appriciate Dinakaran for not publishing a single line about the judgement of the Dinakaran office Murder case. very good, give news to the Tamil people like the same way. Dinakaran is great.

By Rusel.R
12/10/2009 3:29:00 PM

During the regime of this Manuneethi cholan, Ex Minister Thaa.Krishnan killed himself and Dinakaran staff killed themself. What a surprise! Justice wins again & again.

By Ruvikash
12/10/2009 3:21:00 PM

"ARASAN anru KOLVAV....THEIVAM ninruy KOLLUM. Indian Penal Code Should be IMMEDIATELY CORRRRRECTED to PUNIIIIIISH those who PRONOUNCE FALSE EVIDENCE in COURTS and who encourages this."In spite of photo and video evidences the CRIMINALS are not found GUILTY." If the arrested CULPROTS are not the CRIMINALS the WHO ARE THOSE BLACK SHEEPS behind this HUMAN and Humanity Massacre? Will the JUDGES REPPLY or the RYLERS REPLY but definitely G....O.....D..?!?!?!?! will prove HIS EXISTENCE to these BOSTARDS ! Please Dont afraid to be truthful to your consciounce."VAZHVADHU ORY MURAI VAZHTHATTUM THAZHAI MURAI ! "VINAI VIDAITHAVAN VINAI ARUPPAAN !.. face.... pwg_paradeshi@rediffmail.com

By "PARADESHI"
12/10/2009 3:20:00 PM

​​ 2}வது சாட்​சி​யான நாளி​தழ் அலு​வ​லக செய்தி ஆசி​ரி​யர் உள்​பட அனை​வ​ரும் பிறழ்​சாட்​சி​யம் அளித்​த​னர் Don't these person has heart? His co workers were killed in front of him but now!!

By bala-Madurai
12/10/2009 2:51:00 PM

For another 30 yaears nobody can not do anything against us.Be careful

By ak
12/10/2009 2:34:00 PM

intha theerpu Karunanidhin nenjugu needhi illai , avan kunjil porathavanukku ELATAH PATTA needhi , dai pottai tamilangala tamil nattai vittu manathudan veliyerungal . NEENGAL ONNUM PANNA MUDIATHU IN THE KUNJUKKU NEEDHI KILAVANIDAM. Mudicha anja kunjanidamum (Algiridamirudum) attack padiyanidamum thapithu kollungal

By naa
12/10/2009 1:53:00 PM

its very shame for judicial and law and order.

By indian
12/10/2009 1:46:00 PM

Where is democracy? What benefits for Judicial Courts? .....nothing

By K.Sardhar
12/10/2009 1:34:00 PM

அந்த் 17 பேரும் குற்றவாளி இல்லையென்றால் யார் குற்றவாளி அலுவலகம் தானாக தீப்பிடித்ததா? இல்லை அவர்கள் தான் தானாக தங்களை எரித்துக்கொண்டார்களா? என்னடா நாடு இது பணம், பதவி வைத்திருப்பவன் கொலை செய்தாலும் அது சரியா

By சத்ரியன்
12/10/2009 1:02:00 PM

MONEY AND POWER CAN CHANGE EVERY THING..? RIGHT NOW UR HAVING THAT BOTH MR.KALANGAR AND FAMILIES.. SOON U WILL LOOSE IT DAYS ARE NOT FAR. U HAVE TO PAY BACK FOR ALL WHAT YOU DID.

By RAJESH
12/10/2009 12:34:00 PM

மனு நீதி சோழன் ஆட்சி தான் நடக்கிறது. மகனுக்கும் கன்றுக்கும் ஒரே நீதி. அதே தான் இப்பவும். அழகிரிக்கும் விடுதலை, அட்டாக் பாண்டி, மற்றும் பலருக்கும் விடுதலை. பாரபட்சமே கிடையாது.

By sivan
12/10/2009 11:45:00 AM

மனு நீதி சோழன் ஆட்சி தான் நடக்கிறது. மகனுக்கும் கன்றுக்கும் ஒரே நீதி. அதே தான் இப்பவும். அழகிரிக்கும் விடுதலை, அட்டாக் பாண்டி, மற்றும் பலருக்கும் விடுதலை. பாரபட்சமே கிடையாது.

By sivan
12/10/2009 11:45:00 AM

Dont blame Karunaaai!!! ellam panathukku vote podum muttal arivu ketta jenmangal makkal than karanam.oru murai MLA or MP aga therthedukkapattavar than paniyai sariyaga seiyavillai entral next time podumakkal avargalai thoguthikkul vote ketka vidakkoodathu. KALLAL ADTHU THURATHA VENDUM eppodu ithu nadakiratho antru than SATHIYAM VELLUM

By UNMAI
12/10/2009 11:36:00 AM

MOONU UYIR THANAIYA POCHHU, KUDUMBAM ONNU SERNTHATHEY ADUVALLAVA MUKKIYAM. ELLARAYUM PIDITHU JAIL-A THALLITTA NADAZHA THALAVARGAL VENDAMA.

By Bindumathavan
12/10/2009 11:15:00 AM

NAATAMAI.... NEETHI SETHUPOCHHU....... NAATAMAI.... NEETHI SETHUPOCHHU....... NAATAMAI.... NEETHI SETHUPOCHHU.......

By sundar
12/10/2009 10:05:00 AM

The Maran (Moron) family did a deal with Karuna, and would have got what they wanted. The morons will go around in Benz and BMWs, How do they care about the deaths of 3 faceless people? But wait., Diovine justice will prevail on the morons.

By BD
12/10/2009 9:49:00 AM

மதுரையில் 'தினகரன்' அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது உண்மையா? அதில் மூன்று உயிர்கள் பலியானது உண்மையா? இது உள் குடும்பப் பிரச்சினையின் காரணமாக நடந்ததா? இதில் உயிர் இழந்த மூவரும் கூலிக்காக உழைப்பை நல்கியவர்களா? இந்த அராஜக நிகழ்ச்சி எல்லா ஊடகங்களிலும் புகைப்படத்துடனும், படக்காட்சியுடனும் வெளியிடப்பட்டதா? அப்படியொரு சம்பவம் அங்கு நடந்தது உண்மையா? அதில் குற்றவாளிகள் யார்? சட்டம் ஒழுங்கு இவற்றின் அடிப்படையில் நடக்கும் ஒரு அரசாங்கத்தால் குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கித் தரும்படி வழக்கை நடத்த முடியாதா? பொய் சாட்சி சொன்னால் தண்டனை இல்லையா? குஜராத்தில் பொய் சாட்சி சொன்ன ஒரு பெண்மணிக்கு தண்டனை கொடுத்தது உண்டா இல்லையா? இந்த நாட்டில் அதே குடும்பத்தினருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாதாரண பாமரனுக்கு என்ன பாதுகாப்பு? உயிரிழந்தோருக்காக பழிவாங்க பாடுபடுவேன் என்று சூளுரைத்த அந்தப் பத்திரிக்கை முதலாளி என்ன சொல்கிறார்? இவற்றுக்கு பதில் மக்களுக்குத் தெரிய வேண்டும்.

By Adithyan
12/10/2009 9:03:00 AM

ITHU INIMEL ELLA IDATHILUM NADAKKUM, Hostile turned witness will happen every where . Killer family is acquited. Shame on you indian penal court , shame on you Tamil Nadu , Shame on you India. It is proved again there is no justice for common man. Only money , power and mafias will win. Court should declare 3 persons committed suicide and close the case. We dont need court , police station , press or government. We are living in concrete Jungle. Long live nejukku needhi Karunanodhi, God will smile on you and your generation . You curse of tamil will be cursed for this generation and for your generations yet to come

By naa
12/10/2009 9:03:00 AM

பணம் பத்தும் செய்யும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் எண்பத்து இரண்டு பிறழ் சாட்சியங்கள். இந்த வழக்கிலும் முக்கிய சாட்சிகள் பிறழ். நீதி தேவன் மயக்கம் எழுதிய அண்ணாவின் ஆவி உறக்கமில்லாமல் அலையும்.

By sankaran
12/10/2009 7:47:00 AM

WHO IS THE KILLER OF THOSE THREE INNOCENTS. DID THEY KILL THEMSELVES. WHAT A SHAME TO JUSTICE. Karunanithi very clever.

By KRS
12/10/2009 7:42:00 AM

பட்ட பகலில் மூன்று பேரை வெளி கதவை மூடிவிட்டு நெருப்பு வைத்து கொன்று விட்டு, இன்று உங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்தவுடன் வழக்கை ஒன்றுமே இல்லாமல் செய்துவிடீர்களே. அந்த மூன்று பேர் ஆத்மா உங்களை மனிக்கவே மணிக்காது.

By syed iqbal, kuwait
12/10/2009 6:45:00 AM

We should immagine how the family members of these deceased persons will curse our police, courts, administration and specifically Karuna Nithi and his family members. It is similar to Pandiayan murder case at Madurai. God will definitely punish the culprits .

By S.Balan
12/10/2009 5:33:00 AM

MK familiyie Intha pavam summa vidathu

By SN
12/10/2009 4:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *