சனி, 19 அக்டோபர், 2013

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்க்கு ஆறுமுகநாவலர் விருது




பேராசிரியர் மறைமலை இலக்குவனார்க்கு ஆறுமுகநாவலர் விருது



https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q92/s720x720/1013545_10202170019670137_550918334_n.jpg





https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/q92/s720x720/1013545_10202170019670137_550918334_n.jpg


குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம்

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

Comment (4)   ·   print   ·   T+  
1
தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்
தான் உருவாக்கிய நவீன காற்றாலை மின் உற்பத்தி எந்திரத்தின் முன்னால் சுப்பிரமணியம்


“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!
சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.
மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!
இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா - உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், 'சிலந்திவலை சிக்கலில் எனது நாடு' என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.
"படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை" என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.
இந்த, 'வில்லேஜ் விஞ்ஞானி'யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை
மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.
ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.
இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.
தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.
கோவை, 'கொடிசியா'வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், "இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.
ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்
வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.
இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.
ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு
தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

தமிழவேள் சாரங்கபாணி நூல் வெளியீடும் அறிமுகமும் - இரு விழாக்கள்



மூளைச்சாவு அடைந்த புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82989920131019003229.jpg

விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த 
புதுச்சேரி மாணவரின் உடல் உறுப்பு தானம்

சென்னை:விபத்தில் காயமடைந்த புதுச்சேரி பொறியியல் மாணவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.புதுச்சேரி, தேங்காய்திட்டைச் சேர்ந்த புகழேந்தியின் மகன் கபில்தேவ், 19. புதுச்சேரி கல்லூரியில், இரண்டாம் இண்டு இன்ஜினியரிங் படித்து வந்தார். 12ம் தேதி, தேர்வு எழுதி விட்டு, வில்லியனூர் பைபாஸ் சாலை வழியாக, டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போது, லாரி மோதியதில் பலத்த காயமடைந்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் முன்னேற்றமின்றி, நேற்று மூளைச்சாவு நிலையை அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, கபில்தேவின் உடல் உறுப்புக்களை உறவினர்கள் தானம் செய்துள்ளனர். இதன்படி, கபில்தேவின், இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, கணையம் உள்ளிட்ட, ஏழு உடல் உறுப்புகள் தானம் செயப்பட்டுள்ளன. இதுகுறித்து, கபில்தேவின் அண்ணன் வினோத் கூறுகையில், ""இன்ஜினியராகி, வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவன் ஆசை நிறைவேறவில்லை. அவனது உடல் உறுப்புக்களாவது, ஏழைகளுக்கு பயன்படட்டும் என, தானம் செய்துள்ளோம். மற்றவர்கள் மூலம் என் தம்பி உயிர் வாழ்வான்,'' என்றார்.

மண் மணம் வீசும் ஓவியங்கள்!

மண்கவுச்சி வீசும் ஓவியங்கள்!

தமிழ் இந்து, இரத்தின புகழேந்தி
Comment   ·   print   ·   T+  
  • தூரிகையுடன் ஓவியர் கோவிந்தன்
    தூரிகையுடன் ஓவியர் கோவிந்தன்
  • ஓவியர் கோவிந்தனின் படைப்பு
    ஓவியர் கோவிந்தனின் படைப்பு
  • ஓவியர் கோவிந்தனின் படைப்பு
    ஓவியர் கோவிந்தனின் படைப்பு
  • ஓவியர் கோவிந்தன்
    ஓவியர் கோவிந்தன்
ஓவியக் கலை எல்லோருக்கும் கைவராத ஒரு கலை. இயற்கையின் மீது ஈடுபாடும் கற்பனை வளமும் வாய்க்கப்பெற்ற மனமுடையோருக்கு கைவந்த கலை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஓவியர் கோவிந்தன்.
குறிப்பிடத்தக்க சமகால ஓவியர்களில் ஒருவர் கோவிந்தன். பண்ணுருட்டி வட்டம் நடுக்குப்பம் கிராமத்தில் பிறந்த இவர் சிறு வயதில் கையில் கிடைத்த மண்கட்டிகளைக் கொண்டு சுவரில் கிறுக்கி பெற்றோரிடம் உதை வாங்கியபோது, எதிர்காலத்தில் ஓர் ஓவியராய் வருவார் என்பது அவரின் பெற்றோருக்கே தெரிந்திருக்காது.
பள்ளிப் பருவத்தில் ஓவிய ஆர்வம் வளர வளர, ஓவியத்தை ஒரு பாடமாக படிக்கலாம் என்பது இந்த கிராமத்து மாணவருக்கு தெரிந்திருக்கவில்லை. எண்பதுகளின் தொடக்கத்தில் சென்னை ஓவியக் கலைக் கல்லூரியில் நுண்கலைப் பட்டையப் படிப்பில் சேர்ந்த பிறகுதான் ஓவியம், சிற்பம் பற்றிய முழுமையான புரிதல் ஏற்பட்டதாகக் கூறுகிறார் இவர்.
ஓவியம் தீட்டுவதோடு சுடுமண் சிற்பம், சிமெண்ட் சிற்பம், மரச்சிற்பம், செப்புத் தகடுகளில் செய்யும் புடைப்புச் சிற்பம் எனப் பல வகைச் சிற்பங்கள் செய்வதில் நுட்பமான பயிற்சியைக் கல்லூரி நாட்களில் பெற்றார். கோட்டோவியங்கள், நீர் வண்ண ஓவியங்கள், தைல வண்ண ஓவியங்கள், கணினி ஓவியங்கள் என அத்தனை வகை ஓவியங்களிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.
கோவிந்தன் பாணி ஓவியங்களில் கோடுகளும் வண்ணங்களும் தனித்த அடையாளமுடையவை. குறைந்த கோடுகளைக் கொண்டே ஆற்றல் மிக்க ஓவியங்களை வரைவது இவருக்கு கைவந்த கலை.
சிற்றூர் கடவுள்களின் முகங்கள் மனித முகங்களோடு ஒத்திருப்பதையும் இவரின் கோட்டோவியங்களில் காணலாம். கோடுகளற்ற வண்ணங்களின் அதிர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும் இவரின் தைல வண்ண ஓவியங்களில் நம் நாட்டுப்புற கோயில் வடிவங்கள் புலப்படுகின்றன.
நீர் வண்ணமாக இருப்பினும் அதில் இவரது முழுத்திறமையை வெளிப்படுத்துவார். சூரிய ஒளியை வண்ணத்தில் கொண்டுவரும் திறமையை இவரின் நீர் வண்ண ஓவியங்கள் பலவற்றில் காணலாம். இவரது கணினி ஓவியங்களிலும் மரபின் தொடர்ச்சி விடுபடாமல் உள்ளது சிறப்புக்குறியது. இவர் உருவாக்கிய சிற்பங்கள் பேராசிரியர்களால் பாராட்டப்பெற்றவை.
சிவலிங்கத்தை மலர் மொட்டு போன்ற வடிவத்தில் செம்பால் சிற்பமாக இவர் செய்துள்ளார். அச்சிற்பம் இன்றும் சென்னை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஓவியராகப் பணியாற்றி வரும் கோவிந்தன் ஓவிய, சிற்பக் கலைகளைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது, கவிதை எழுதுவது, இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது என கலை இலக்கிய ஈடுபாட்டு உணர்வோடு இயங்கி வருகிறார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், சிங்கப்பூர் போன்ற அயல் நாடுகளிலும் ஓவியக் கண்காட்சிகள் நிகழ்த்தியுள்ளார். சண்டிகரில் நடைபெற்ற உலகளாவிய வரைகலைக்கான கண்காட்சியில் முதன்முதலாகப் பங்கேற்ற தென்னிந்திய ஓவியர் கோவிந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை நாட்களில் தன் பிறந்த நடுக்குப்பத்திற்கு இன்றும் செல்வது வழக்கம். அதனால்தான் கோவிந்தன் ஓவியங்களில் இன்னமும் மண்கவுச்சி வீசிக் கொண்டிருக்கிறது!
இரத்தின புகழேந்தி - தொடர்புக்கு pugazhvdm@gmail.com

பழங்குடியின மக்களின் போராளி!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82983420131019003519.jpg

பழங்குடியின
மக்களின் போராளி!
கூடலுார் பழங்குடியின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, 30 ஆண்டுகளாக ப் போராடிய, இந்திராணி: நான், திருநெல்வேலியை சேர்ந்தவள். கணவருக்கு, நீலகிரியின் கூடலுார் மலைபகுதிக்கு, ஆசிரியர் பணி மாறுதல் கிடைத்தது. புதுமண தம்பதியாக இங்கு குடியேறி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மலைவாழ் மக்களோடு தான் வாழ்ந்து வருகிறோம். இங்குள்ள பழங்குடி இன மக்கள், வெளியுலகம் தெரியாமல், மூட நம்பிக்கைகளுக்கும், மது பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்தனர். படிப்பறிவு இல்லாததால், பெண்கள், தேயிலை தோட்ட வேலை செய்தும், ஆண்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதுடன், அதையே தொடர்ந்து குடித்தும் வந்தனர். இதனால், கள்ளச்சாராய சாவுகள் அதிகமாயின. பெண்களை ஒன்றிணைத்து, கள்ளச்சாராய கடைகளை மூடச் சொல்லி எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். பயனில்லாததால், போலீஸ் துணையுடன் சாராய கடைகளை இழுத்து மூடியதுடன், கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுத்தேன். கூடலுார், கேரள மாநிலம் அருகில் இருந்ததால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த சிலர், இவர்களின் படிப்பறிவின்மையை தவறாக பயன்படுத்தி, குறைந்த பணத்திற்கு அதிக நிலங்களை குத்தகை எடுத்தனர். மேலும், குறைந்த ஊதியத்தில் இவர்களையே தேயிலை தோட்ட வேலை பார்க்க வைத்தனர்.
பல கட்ட போராட்டங்களுக்கு பின், அரசு உதவியுடன் நிலங்களை மீட்டோம். சின்ன சின்ன பிரச்னைக்கும், தற்கொலை செய்யும் பழக்கம், இப்பழங்குடி இனத்தவரிடம் இருந்தது. நான் கற்ற கல்வியை வைத்து, ஏன் இந்த மக்களுக்காக, பல வகைகளில் உதவக் கூடாது என, எண்ணினேன். எனவே, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கையெழுத்திடவும், தமிழில் வாசிக்கவும் கற்றுத் தந்தேன். படிப்பின் முக்கியத்துவம் பெரியவர்களுக்கு புரிந்ததால், பெண் குழந்தைகள் உட்பட அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி, படிக்க வைத்தனர்.
பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற, 2000ம் ஆண்டு, பெண்கள் சுயஉதவிக்குழு ஆரம்பித்தேன். இதனால், பெண்கள் வங்கி கடன் பெற்று, சுய தொழில் செய்து
வருகின்றனர்.


வாக்காளர் பட்டியலில் திருத்தம்: எண் 1913- இல் தொடர்பு கொள்ளலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: எண் 1913- இல் தொடர்பு கொள்ளலாம்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விளக்கங்களை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் சரி பார்க்கவும், பெயர் சேர்த்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம்கள் வரும் 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.மேலும் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்றவை தொடர்பான விளக்கங்களை பெற  சென்னை மாவட்ட தேர்தல் அலுவலத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அறையில் 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

NZ Green MP urges Foreign Minister to change CHOGM chair

NZ Green MP urges Foreign Minister to change CHOGM chair

[TamilNet, Friday, 18 October 2013, 06:24 GMT]
New Zealand’s Green Party parliamentarian Ms Jan Logie on Friday wrote to New Zealand’s Minister of Foreign Affairs, Mr Murray McCully, urging him to support Canada’s political lead and publicly condemn Sri Lanka’s persistent failure to ensure justice for alleged war crimes and crimes against humanity. She also urged the Foreign Minister to take a strong stand on CHOGM and to call for another Chair to replace Rajapaksa when it comes time to appoint the Commonwealth Chairperson-in-office for the next two years.

Jan Logie MP
Jan Logie MP
“Allowing Sri Lanka’s President to become the chair of the commonwealth would undermine our efforts to strengthen human rights in the Asia Pacific. It would undermine the UN efforts to get a proper investigation of the war crimes and it would also seriously undermine the charter just developed by the Commonwealth committing Commonwealth leaders to democracy, human rights, tolerance, freedom of expression, good governance and the rule of law – none of which are respected by the Rajapaksa government,” the parliamentarian said.

“To stay silent and then go to Sri Lanka and accept their President, even symbolically, as leader of the Commonwealth for two years would be inappropriate, inconsistent and counter to our regional interests,” she further wrote in her letter.

New Delhi following British imperialism does no justice to Eezham Tamils

New Delhi following British imperialism does no justice to Eezham Tamils

[TamilNet, Friday, 18 October 2013, 05:59 GMT]
200 years of imperialist outlook, knowing very well that there are two historically evolved nations in the island but engineering unification for imperialistic purposes, has always gone against the nation of Eezham Tamils and contributed only to its genocide in every respect, including in its territory and demography, writes an academic in Jaffna. The academic was commenting on New Delhi’s External Affairs Minister visiting Jaffna harping on making Sri Lanka ‘tri-lingual and united’. The academic compared it to early English Governor Sir Robert Brownrigg’s policy outlook in 1813, recognizing parity between Sinhala and Tamil languages, but that policy foundation not leading to parity in territory and power.

On 10 July 1813, the third English Governor in Colombo, Sir Robert Brownrigg, who was vested with the task of the conquest of Kandy (1815) and colonial unification of the island, wrote to the then Colonial Secretary in London on the importance of recognising Sinhala and Tamil with parity, since a territory from Puththa’lam to Batticaloa northwards was Tamil-speaking.

Brownrigg, referring to certain Ceylon Civil Service regulations drawn by his predecessor Maitland, “as to the qualification required in the knowledge of the native languages,” wrote the following:

“The Portuguese and Sinhalese only being mentioned excludes one which is fully as necessary in the Northern Districts as the Sinhalese in the South. I mean the Tamil language commonly called the Malabar language, which with the mixture of Portuguese in use through all the provinces, is the proper native tongue of the inhabitants from Puttalam to Batticaloa northward inclusive of both these districts. Your Lordship will, therefore, I hope, have no objection to my putting the Tamil on an equal footing of encouragement with the Sinhalese.”

A Special Investigator of the Tribune, who was delving into the Ceylon Government Archives in Nuwara Eliya in 1956, traced the copy of the despatch from Brownrigg to the British Colonial Secretary Right Hon. Earl of Bathurst.

A feature on the despatch appeared in the then prestigious Colombo journal, Tribune, on 12 January 1956, to cite at the policy foundation under which the British imperialist administrative unification of the territories of the distinct linguistic nations in the island was made, and to denounce the ‘Sinhala Only’ law that was in the making at that time.

But the world knows what happened thereafter.

Even the language parity the British imperialism conceived to sustain a unitary State in the island was so easily abrogated once the British left, proving that in the historical context of the nations in the island, language parity in law or constitution alone is meaningless without internationally guaranteed parity in territory and power.

* * *

One also has to carefully note a significant reference Brownrigg was making 200 years ago on the territory of Tamils in the island.

In his despatch, he draws a horizontal line from Puththa’lam (Northwestern Province) to Batticaloa (Eastern Province), including those districts (There was no Ampaa’rai district at that time. It was just Batticaloa), and says that north of it was Tamil-speaking (the parts of North Central Province falling within that line was also largely Tamil-speaking at that time).

The language parity policy initiated by the British for the unification of the territories of the two linguistic nations for the creation of a unitary State could not save the territory of Eezham Tamils either in the British times or thereafter.

British imperialism also effected demographic changes in the conquered territory of the Sinhala nation in Kandy, by bringing in plantation labour force from Tamil Nadu. But, for various reasons this didn’t affect the territorial claim and power of the Sinhala nation, compared to the plight of Eezham Tamils who were always at the receiving end in territory and power, in the ‘experiment’ of keeping the island as one by all the imperialists of the last 200 years.

* * *

The colonial trading empires of the Portuguese and the Dutch maintained the separate territories in the island. It was the classical colonialism of the British that wanted to administratively unite the island into a unitary State and the Colebrooke–Cameron Commission of 1833 drafted the blueprint.

Despite proven failure of the State, adamantly continuing and after culminating the imperialist experiment of 200 years into genocide of Eezham Tamils in 2009, the imperialists of today have come out with another ‘Commission’ in the name of Lessons Learnt and Reconciliation Commission (LLRC).

The LLRC recommendations stemming from the neo-imperialist policy outlook of today that doesn’t shun genocide, speak with bold atrocity that no district belong to any ethnicity in the island, which in a State with a dominant nation practically means that Tamils will have no territory at all. Against that backdrop, the recommendations speaking of making the island ‘Trilingual’ also means that the use of Tamil in practice will be nominal as in Malaysia or Singapore.

The LLRC recommendations have been given with international validity as basis for solution, by the imperialists in Washington and New Delhi.

Like New Delhi imperialism ingeniously engineering Eezham Tamil masses with a will in the island to inevitably vote for certain elements that would help it to interpret the will to the contrary, Washington imperialism has managed to find elements in the diaspora to speak on the ‘virtues’ of LLRC-based resolution.

New Delhi Establishment’s External Affairs Minister Salman Khurshid talking of ‘trilingual unity’ without any reference to the territorial integrity of the nation of Eezham Tamils and the without any measures to counter the everyday land-grab and Sinhala colonisation of the territory of Eezham Tamils, has to be understood in the background of the 200 years ‘experiment’ of imperialism in the island that always wronged the Tamil nation.

Earlier, New Delhi sent the Thirukku’ra’l expert former President Abdul Kalam to inaugurate the ‘Trilingual’ hoodwink.

* * *

Because the Eezham Tamils did not challenge the Colebrooke-Cameron unification, or because it was too late when they started challenging it, thanks to pro-imperialist and Colombo-minded leaders among them like Ramanathan, the Sinhala nation today thinks that the unity of the island is its fundamental right. If the LLRC–13A–Trilingual design of today’s imperialism is not challenged, within few years the imperialism would tell that the ‘ground reality’ is that Tamils don’t have a nation of territory in the island.

Peoples in India inherit a heritage that has waged the most unique anti-imperialist struggle of humanity. They have a heritage of grasping all the nuances with which imperialism operates. They have to understand why Eezham Tamils are put in a position of opposing an imperialism that has put itself in the shoes of the British imperialism in continuing or even worsening the injustice to their nation.

Peoples in India, including our brethren in Tamil Nadu, have to be extremely cautious about the orchestration of their so-called ‘national’ media and intelligence-operated ‘research’ foundations cum academics that eulogise an imperialist ‘experiment’ that furthers the genocide of a small nation in their backyard.

As an immediate power in the region and as a country of one sixth of humanity, India’s Establishment in New Delhi is primarily responsible for not only allowing an African scenario of genocide to take place for the first time in South Asia, but also for shielding it and furthering it.
Salman Khurshid [middle] in Jaffna
Salman Khurshid [middle] in Jaffna

நாடகமாடுவோர் நாடகம் என்கிறார்

முன்பு அடிமையாக இருந்ததை யாரும் பெருமை பேச மாட்டார்கள். ஆனால், முன்னாள் அடிமையர் அமைப்புதான் பொதுநல ஆயம். இப்படி ஓர் அமைப்பு செயல்படும் பொழுது அதன் தலைமைப் பொறுப்பு இனப் படுகொலை நாட்டின் தலைமையிடம் இருக்கக்கூடாது என்பதே இயற்கை அறம்.இனப்படுகொலையாளியே தலைமை தாங்கினால் அதன் உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவாக - மனித நேயத்திற்கு எதிராக-ச் செயல்படும் நிலையே வரும். எனவே, இம் மாநாடு சிங்கள மண்ணில் நடக்கக்கூடாது என்பது முற்றிலும் சரியே. ஈழத்தில் பேசப்படும் பேச்சு அச்சத்தினாலும் , அரசால் தெரிவிக்ப்படும் முறையாலும் வெளி வருவனவே. எனவே இவற்றின் அடிப்படையில்   பொல்லாக் கருத்தை வெளிப்படுத்துவது திட்டமிட்ட சதியேயாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

போதுமே நாடகங்கள்!

சமசு, தமிழ் இந்து,

மாசுகோவில் உலகளாவிய இணைய மாநாடு

மாசுகோவில் உலகளாவிய இணைய மாநாடு

First Published : 18 October 2013 12:20 AM IST
ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் இணையம் குறித்த உலகளாவிய மாநாடு வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
இணையத் துறையில் பெரிய நிகழ்வாகக் கருதப்படும் "தி ரஷியன் இண்டர்நெட் வீக்'(ஆர்.ஐ.டபிள்யூ- 2013) எனப்படும் இந்த மாநாடு 6ஆவது முறையாக நடைபெறுகிறது. 3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் இணையத்துறையில் கட்டுப்பாடு, இணைய வர்த்தகத்தின் போக்குகள், நவீன இணையத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், இணையத்தில் திறமையான விளம்பரங்களுக்கான தொழில்நுட்பங்கள், தேடல் இயந்திரங்களின் புதிய வழிமுறைகள் மற்றும் இணையம் சார்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற தலைப்புகளில் கலந்தாலோசிக்கப்படும் என்று மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ரஷியத் தொழிலதிபர்கள், தகவல் தொடர்பு மற்றும் இணையத் தொழில்நுட்ப நிபுணர்கள் மட்டுமின்றி வெளிநாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் இணைய பயனாளிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டிற்காக புதுமையான காட்சிக்கூடம் ஒன்றினை அமைத்துள்ளதாகவும், இதில் கலந்துகொள்ள 14,500 பார்வையாளர்களை எதிர்நோக்குவதாகவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தரைத்துப்புரவுக் கருவி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82903420131018023259.jpg
தரையை சுத்தப்படுத்தும் தானியங்கி கருவி!
மனித உதவியின்றி, தரையை, தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் கருவியை க் கண்டுபிடித்துள்ள, தீபக்: நான், மதுரையில் உள்ள, வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவன். இந்த நவீன உலகிலும், வீடு, அலுவலகம், பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களின் தரையை சுத்தப்படுத்த, பல புதிய கருவிகள் தயாரிக்கப்பட்டாலும், அவற்றை மனிதர்கள் தள்ளிச் சென்றே சுத்தப்படுத்த முடியும்.
எனவே, முழுவதும் தானியங்கி முறையில் செயல்படக் கூடிய தரையை சுத்தப்படுத்தும், 'ஆட்டோமேடிக் புளோர் கிளீனிங் மிஷின்' கண்டுபிடித்தேன். 12 வோல்ட் பேட்டரியால் இயங்கக் கூடிய இந்த தானியங்கி இயந்திரத்தை, 'ரிமோட் கன்ட்ரோல்' மூலமும் கட்டுப்படுத்தலாம்.
இக்கருவியின் அடிபாகத்தில், தரையை சுத்தப் படுத்தும், 'பிரஷ்'ஷும் அதற்கு அடியில், காற்றாடியும் அமைக்கப்பட்டுள்ளது. கருவியின் சேமிப்பு கலனில், சோப் மற்றும் நீர் கலந்த கலவையை ஊற்றிக் கொள்ளலாம். கருவி இயங்கத் துவங்கியதும், சேமிப்பு கலனில் உள்ள சோப் மற்றும் நீர் கலந்த கலவை பிரஷ்ஷுக்கு சென்று, தரையை சுத்தப்படுத்த துவங்கும். பின், ஈரமான தரை, காற்றாடி மூலம் உடனடியாக காய வைக்கப்படும். பிரஷ்ஷின் இதழ்களுக்கு இடையில், இடைவெளி அதிகமாக இருப்பதால், அழுக்குகள் மீண்டும் தரையில் படியாமல், பிரஷ்ஷினுள் தங்கிவிடும். வேலை முடிந்ததும், பிரஷ்ஷை தனியாக எடுத்து சுத்தப்படுத்தலாம். 10 கிலோ எடை கொண்ட இந்த இயந்திரத்தை உருவாக்க, 7,300 ரூபாய் செலவானது.
'சென்சார்' பொருத்தப்பட்டுள்ளதால், மனிதர்களோ, வீட்டு உபயோக பொருட்களோ இருந்தால், இயந்திரம் தானாக திரும்பிக் கொள்ளும். டில்லி, ஐ.ஐ.டி., யில், சி.ஐ.ஐ., சார்பில், 650 போட்டியாளர்கள் பங்கு பெற்ற போட்டியில், எங்கள் கண்டுபிடிப்பு, இறுதி சுற்று வரை சென்றது. தற்போது இதற்கான காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளோம்.
தொடர்புக்கு: 99521 99565.

அரசு வேலை பெற மலையாளம் கட்டாயம்

அரசு வேலை பெற மலையாளம் அவசியம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் அரசு வேலை பெற மலையாள மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, 10ம் வகுப்பு அல்லது டிகிரி வரை மலையாளம் படிக்காத விண்ணப்பதாரர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களே அரசு வேலையில் சேர தகுதி படைத்தவர்களாவர். அதே நேரத்தில், தமிழ் மற்றும் கன்னடம் மொழி படித்தவர்கள், வேலைக்கு சேர்ந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

பொதுநல மாநாட்டில் தலைமையர் பங்கேற்பது ஐயம்.

பொதுநல மாநாட்டில் தலைமையர் பங்கேற்பது ஐயம்.

Comment (1)   ·   print   ·   T+  
பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாக அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி, பி.டி.ஐ. செய்தி நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்தி வெளியிட்டுள்ளது.
திமுக உள்ளிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தெரிவித்து வரும் எதிர்ப்பின் எதிரொலியாக, மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
காமன்வெல்த் மாநாடு, நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை இலங்கையில் நடைபெற உள்ளது. இலங்கை தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் பங்கேற்க காமன்வெல்த் அமைப்பைச் சேர்ந்த இந்தியா உள்பட 54 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, சென்னையில் கடந்த 1-ம் தேதி முதல் 15 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
இதனிடையே, டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வலியுறுத்தினார். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த தியாகுவின் உடல்நிலை குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.
அப்போது பிரதமர் மன்மோகன் சிங், 'காமன்வெல்த் மாநாடு விவகாரத்தில் தமிழ் மக்கள் மற்றும் உங்கள் கட்சியின் (திமுக) உணர்வுகளை மதித்து நல்ல முடிவு எடுப்போம். திமுக தலைவர் கருணாநிதி தலையிட்டு, தியாகுவின் போராட்டத்தைக் கைவிட நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று டி.ஆர்.பாலுவிடம் கூறினார். அதுதொடர்பான கடிதத்தையும் பாலுவிடம் மன்மோகன் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தியாகு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.
இந்த நிலையில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமருக்கு இன்று (வியாழக்கிழமை) எழுதிய கடிதத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், அந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், மாணவர்களும் மிகப் பெரிய அளவில் போராட்டங்களை சாத்தியம் உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அந்தக் கடிதத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் இந்து, 

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

அத்தனைக்கும் ஆசைப்பட்டேன்.. அவ்வளவையும் அடைந்தேன்..!

Comment (3)   ·   print   ·   T+  
சேட்டை சேது
சேட்டை சேது
சேட்டை சேது - பல்வேறு அமைப்புகளின் சார்பில் பெஸ்ட் என்டர்டெய்னர், தன்னம்பிக்கைச் சுடர் போன்ற விருதுகளை பெற்ற  வானொலி தொகுப்பாளர். ஐ.ஆர்.எஸ். நிறுவனம் நடத்திய சர்வேயில் மதுரையின் நம்பர் ஒன் ரேடியோ ஜாக்கியாக இந்த ஆண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இவர், இப்போது இருப்பது சூரியன் எஃப்.எம்-மில்.
விரைவில் சினிமாவில் அரிதாரம் பூசவிருக்கும் சேது, மதுரை மாவட்டத்தின் கடைக்கோடியான அச்சம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பிறக்கும்போதே போலியோ பாதிப்பால், தொடைவரை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிக்கூடத்துக்கு கையால் தவழ்ந்து செல்லும் நிலை. அப்படிப்பட்டவர் இன்றைய நிலையை எப்படி எட்டினார் என்பதில் ஒரு தன்னம்பிக்கை கதை அடங்கியிருக்கிறது.
“இருக்குறதுலயே கொடுமையான சித்ரவதை நம்மை மற்றவர்கள் பரிதாபமாகப் பார்ப்பதுதான். அதனால், எனக்கு என் மீது பரிதாபப்படுபவர்களைப் பார்க்கவே பிடிக்காது. 16 வயசு வரைக்கும் பள்ளிக்கு தவழ்ந்தேதான் போனேன். கொளுத்தும் வெய்யில்ல தார் ரோட்டைத் தாண்டிப் போகணும். அப்பவும் நான் யார்கிட்டையும் ஹெல்ப் கேட்டதே இல்லை. மத்தவங்க என்னைய தூக்கிச் சுமக்கணுமேனு, ஸ்கூல் டூர்க்கு கூப்பிட்டாக்கூட நான் போக மாட்டேன்.
எப்பப் பாத்தாலும் ஜோக் அடிச்சுக்கிட்டே இருப்பேன். நம்மளும் சிரிக்கணும் நம்மள சுத்தி இருக்கவங்களையும் சிரிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட ஆசைகள் எல்லாமே ரொம்ப பெருசு. தவழ்ந்துபோகும் காலத்திலேயே பைக் ஓட்ட ஆசைப்பட்டேன். அதுக்கு முந்தியே கார் வாங்கணும்னு நினைச்சேன். சுயமா நடக்கணும்கிற ஆசை வெவரம் தெரியுறதுக்கு முந்தியே வந்திருச்சு. 17 வயசுல நானே தட்டுத் தடுமாறி கம்பை ஊன்றி நடக்கப் பழகிட்டேன். இப்ப என்னோட பைக், கார் ஆசையும் நிறைவேறிடுச்சி - என்னோட சுய சம்பாத்தியத்துல. நான் ஓட்டுற பைக், கார் எல்லாத்தையும் எனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன். அதுதான் வாழ்க்கை. இருக்கிற இடத்திற்கும், சவாலுக்கும் தகுந்த மாதிரி நம்மை நாமே மாத்திக்கிடணும்" தனது அனுபவத்தைச் சொல்லிக் கொண்டே காரைவிட்டு இறங்கிய சேது, தொடர்ந்தும் பேசினார்.
"சென்னையில் கிடைச்ச சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டுட்டு திண்டுக்கல்லுக்கு ஓடியாந்துட்டேன். அங்க ஒரு லோக்கல் சேனல்ல வாய்கிழியப் பேசுற வேலை, தாவித்தாவி பல வேலைகள்ல இருந்தேன். எதுவுமே செட் ஆகலை. 2007 செப்டம்பரில் மதுரையில் முதன் முதலாக தனியார் எஃப்.எம். ஆர்.ஜே.வுக்காக நடத்திய இன்டர்வியூல செலக்ட் ஆன ஏழு பேருல நானும் ஒருத்தன்.
இப்பத்தான் உங்கக்கிட்டத்தான் முதன்முதலா நான் மாற்றுத் திறனாளிங்கிறதை ஒத்துக்கிட்டிருக்கேன். மற்றபடி அரசல் புரசலாக கேள்விப்பட்டு, போன் போட்டு துக்கம் விசாரிப்பாங்க. ஆர்வம் மிகுதியால என்னைய ஆபீஸுக்கு வந்து பார்க்கிறவங்க, கண்கலங்குவாங்க. அடுத்து ஷோ கேட்கும்போது, 'சேது நீங்க ஜோக் அடிச்சாக்கூட எனக்கு அழுகை அழுகையாக வருது'ன்னு அன்பே சிவம் மாதவன் மாதிரி ஃபீல் பண்ணுவாங்க. எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு நான் சொல்ல வர்றது ஒண்ணு தான். சாதாரணமானவங்களை விட நமக்கு ஏதோ ஒரு திறமை கொஞ்சம் கூடுதலா இருக்கும். அதைக் கண்டுபிடிங்க. யாரையும் பரிதாபமாகப் பார்க்கவிடாதீங்க. சாதிக்கலாம். நீங்க எதுவாக மாறணும்னு நினைக்கிறீங்களோ, அதுவாக மாறுவது நிச்சயம்” நெத்தியடியாய் சொன்னார் சேட்டை சேது.

Occupying Sri Lanka rushes to legalize Sinhalicisation of strategic entrance to Jaffna

Occupying Sri Lanka rushes to legalize Sinhalicisation of strategic entrance to Jaffna

[TamilNet, Thursday, 17 October 2013, 17:34 GMT]
Colombo's ‘National Housing Development Authority’ (NHDA) and the Cvil Military Coordination Office (CIMIC) of the occupying SL military in Jaffna have been jointly engaged in legalising the Sinhala occupation of the strategic entrance to Jaffna city at Naavat-kuzhi this week. The NHDA and CIMIC have been distributing lands to 126 Sihana families that have been occupying the public lands at Naavatkuzhi under the security of SL military despite the protest by the Tamil residents and refugees still struggling to resettle at the locality. Naavatkuzhi is a place just 5 km east of Jaffna city where the two highways A9 and A32, the only existing land arteries that lead into Jaffna from the south and the western coast meet.
Sinhala colonisation in Jaffna
Similar to the Vanni war, genocidal Colombo is now hurriedly engaged in a colonisation war against the unarmed and demographically weakened nation of Eezham Tamils. India and USA, which labelled the former as war against terrorism now smokescreen the latter as ‘reconciliation’ and ‘post-war development’. Shown in pink is the targeted area for industrial and fisheries colonisation. The yellow circles are the major SL military colonies. [Map by TamilNet]


Sinhala extremist forces from South and the occupying SL military with the backing of the colonial military governor of Colombo in North have already provided housing and other assistance to the Sinhalicisation of Naavatkuzhi.

However, the Sinhala occupants need the clearance from Chaavakachcheari PS, the civic body in Thenmaraadchi, in order to obtain certain facilities such as electricity link.

Therefore, the NHDA and CIMIC have hurried the process of legalising the settlement by ‘officially’ dividing the public lands into 50 plots and granting them legally to the Sinhala settlers.

A military base has also been established at the at Kathithadi - Naavatkuzhi junction to provide security to the settlers, who have been occupying the lands for more than 3 years now.

Tamil people were chased out from the area in 1996 when the Jaffna peninsula was completely occupied by the SL military. Before that the LTTE had given the lands to landless people at the locality.

The Eezham Tamils who inhabit the areas since ancient times are living in temporary huts. 300 Tamil families, without proper basic facilities are living at low-lying lands near the site facing floods every year during the rainy season.

On Tuesday, the Tamil refugees staged a protest against the move to legalise the illegal settlement of Sinhalese. When journalists went to the site, the occupying SL military chased them away. Tamil National Alliance (TNA) parliamentarian S. Sritharan and civic council members of the TNA joined the protest.

As the protest gained momentum, the SL officials who had come there from the Civil Military Coordination Office vanished from the site. The occupyng Sinhala settlers confronted the protesters verbally abusing them. The Sinhala settlers claimed that Jaffna was lands of the Sinhalese and that the Tamils had occupied the lands from the Sinhalese.

The occupying Sinhala military is guarding the strategic junction and has imposed an unofficial identity control to enter the lands that have been occupied by the Sinhala settlers.
SL coastal bases in North
Sri Lanka's large military establishments that choke Jaffna peninsula and threaten Indian security. Sinhala colonisation is carried out in places no 11, 13, 14, and 16. The locations: 1. High Security Zone, Valikaamam North, 2. Kaarainakar naval base, 3. Vallan, Pungkudutheevu, 4. Periyathu'rai and Saamiththoadda-munai, Delft (Key location for Kachchatheevu and Rameswaram), 5. Kunthavadi, Delft, 6. Thalai-mannaar, 7. Mannaar Fort, 8. Tha'l'laadi, 9. Poonakari Fort, 10. Elephant Pass, 11. Vettilaikkea'ni, 12. Naakarkoayil, 13. Ariyaalai East and the opposite sandbar Ma'n'niththalai, 14. Naavatkuzhi, 15. Ma'ndaitheevu,16. Jaffna city, 17. Kachcha-theevu and 18. Naachchik-kudaa. The innumerable small military posts and the newly planned cantonments in Vanni are not shown in the map. [Satellite Image courtesy: NASA, Visible Earth. Legend by TamilNet]






Chronology:

Media training centre opened in Jaffna

Media training centre opened in Jaffna

[TamilNet, Thursday, 17 October 2013, 13:07 GMT]
Aiming to improve the abilities of Eezham Tamil journalists in Jaffna, a new Media Training Centre, named after former Senior Editor of TamilNet, Maamanithar D Sivaram (Taraki), has been declared opened in Jaffna on Wednesday. The new training centre is situated close to Jaffna Press Club at Raasaavin Thoaddam. Two senior journalists, S. Ratheyan, the former editor of Eezha-murasu, Eezha-Naatham and Namathu Eezhanaadu, and Iya Sachithananthan, who narrowly escaped when the office of the Eezhanaadu newspaper was set to fire by the SL forces in 1982 and who later became its editor, jointly opened the training centre. Journalists and civil society activists from all walks of life were present at the event.

Taraki Sivaram Memorial Stage


Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Ms Ananthi Sasitharan, who was recently elected to the Northern Provincial Council (NPC) with an overwhelming support of the masses, also took part in the opening ceremony.

Rev. Fr. Ruban Mariampillai, who has a doctorate in Journalism, gave the first lecture to journalists on the same day of opening.

The lecture focused on interview techniques.

The US embassy in Colombo has provided funds for the establishment of the construction of the building, journalists in Jaffna said.

Tamil activists for alternative politics in Jaffna, noting the already prevailing Indian influence at another media centre, have cautioned the journalists in Jaffna to maintain their independency without giving room for competitive geopolitical manoeuvrings to affect journalism upholding the cause of peoples of the region as well as humanity in general.

Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage
Taraki Sivaram Memorial Stage


Related Articles:
11.05.12   Contributions of Sivaram remembered at Memorial Seminar in L..
01.05.10   TamilNet releases Sivaram video footage on Tamil journalism
30.07.05   US's strategic interests in Sri Lanka- Taraki

வியாழன், 17 அக்டோபர், 2013

பொதுநல அமைப்பு : தலைமையருக்கு முதல்வர் மடல்

பொதுநல அமைப்பு :  தலைமையருக்கு முதல்வர் மடல்







இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
 இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்.
தமிழகம் சார்பில் அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்புகளும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவிம் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக உறுதியோடு அறிவிக்க வேண்டும்  என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

வன ஒளிப் படக் கலைஞர் விருது வென்ற சிறுவன்

வன ஒளிப் படக் கலைஞர் விருது வென்ற 14 அகவை இந்திய ச் சிறுவன்

First Published : 17 October 2013 01:54 PM IST






2013ஆம் ஆண்டுக்கான இளைஞர்  வனப் புகைப்படக் கலைஞர்களுக்கான விருதினை இந்தியாவைச் சேர்ந்த 14 வயது உதயன் ராவ் பவார் வென்றுள்ளார்.
இங்கிலாந்தின் நேட்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் பிபிசி வோர்ல்ட் வைட்டுடன் இணைந்து வழங்கும் இந்த விருதினை, மத்தியப் பிரதேச மாநிலம் சம்பல் நதியில் ஒரு முதலை, தனது 11 குட்டிகளை தலையில் சுமந்தபடி செல்வதை எடுத்த உதயன் ரோ பவார் வென்றுள்ளார்.

மதிமுக சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மதிமுக சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

மறுமலர்ச்சி தி.மு.க. மாணவர் அணி, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்காக “நாடாளுமன்றத்தில் வைகோ” என்ற தலைப்பில் மூன்று கட்டப் பேச்சுப் போட்டிகளை நடத்துகிறது.
முதல் கட்டமாக, மாவட்ட அளவிலான போட்டிகள் அக்டோபர் 20 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மூன்று மாணவர்களுக்கு முறையே ரூ.5,000; ரூ.3,000; ரூ.1,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
இதில் வெற்றிபெற்ற மூவரும் 24.11.2013 ஞாயிறு அன்று நடைபெறும் மண்டலப் போட்டிகளில் பங்கு பெறுவார்கள். அதில் வெற்றி பெறும் முதல் மூவருக்கு முறையே ரூ.6,000; ரூ.4,000; ரூ. 2,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும்.
11 மண்டலங்களில் முதல் மூன்று இடம் பெறும் 33 மாணவர்களும் 22.12.2013 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் பங்கேற்பார்கள்.
மாநிலப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு முறையே ரூ. 1 இலட்சம்; ரூ. 50 ஆயிரம்; ரூ. 25,000 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மொத்தப் பரிசுத் தொகை ரூ. 7 இலட்சம் ஆகும்.
மாநில பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசுத் தொகையையும்,  மாவட்ட, மண்டல, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் 120 மாணவ-மாணவியருக்கு “நற்றமிழ் நாவரசு” விருதினையும், போட்டியில் பங்கேற்ற அனைத்துப் மாணவ பேச்சாளர்களுக்கும் சான்றிதழ்களையும், நினைவுப் பரிசுகளையும் 05.01.2014 அன்று காலை 10 மணிக்கு திருச்சி தேவர் அரங்கில் நடைபெறும் விழாவில்  கழகப் பொதுச் செயலாளர் வைகோ வழங்குவார்.
மேலும் விவரங்கள் அறிய
  94433 70232; மின்னஞ்சல்: rajendranmdmk@gmail.com.

ஒரே மேடையில் தோன்றிய ஒன்பது திருக்குறள் செல்வர்கள்

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_828284.jpg

ஒரே மேடையில் தோன்றிய
 ஒன்பது திருக்குறள் செல்வர்கள்



காரைக்குடி:காரைக்குடியில்,வள்ளுவர் பேரவை நடத்திய நிகழ்ச்சியில், ஒன்பது திருக்குறள் செல்வர்களுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழ் வளர்ச்சிதுறை சார்பில், திருக்குறளின் 1330 குறள்களையும், எப்படி கேட்டாலும், அடி பிறழாமல், ஒப்பிப்பவர் "திருக்குறள் செல்வர்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசால் விருதும், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு விருது பெற்ற, 10 பேருக்கு, வள்ளுவர் பேரவை சார்பில், விருது வழங்கும் விழா, காரைக்குடி கண்ண தாசன் மணிமண்டபத்தில் நடந்தது. இதில், தற்போது லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவர் திலீபன், கலைவாணி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் நாச்சாள், சுவாதி, சிவரஞ்சனி, ஒன்பதாம் வகுப்பு மாணவி பானுப்பிரியா,10ம் வகுப்பு ஸ்ரீவர்ஷா, ஐந்தாம் வகுப்பு மாணவி சரோஜா, ராஜராஜன் இன்ஜி., கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவி ராம அபிராமி, மதுரை சட்டக்கல்லூரியில் படிக்கும் மணிமேகலை ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி விருதுகளை பெற்றனர். திருச்சியில் பிளஸ் 1 படிக்கும், நிவேதினி கென்சியா மட்டும் பங்கேற்கவில்லை. எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் அய்க்கண், கிட் அண்ட் கிம் டெக்னிக்கல் இயக்குனர் ராமகிருஷ்ணன் விருதுகளை வழங்கினர். முன்னதாக அதன் தலைவர் செயம்கொண்டான் வரவேற்றார். வள்ளுவர் பேரவை கவுரவ ஆலோசகர் சேவு முத்துக்குமார், ரோட்டரி ஹெரிடேஜ் சங்க தலைவர் முத்துக்குமார், வள்ளுவர் பேரவை செயலாளர் பிரகாஷ் மணிமாறன்,துணை தலைவர் ஸ்டீபன் மைக்கேல்ராஜ் பங்கேற்றனர்.

பரம்பரை மா வகைகளை ப் பாதுகாக்கிறேன்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_82849520131017002724.jpg

பாரம்பரிய மா வகைகளை ப் பாதுகாக்கிறேன்!
தமிழகத்தின் பாரம்பரிய மா ரகங்களை பாதுகாப்பதுடன், 'ராஜு-1' என்ற புதிய மா ரகத்தை கண்டுபிடித்த, செகன்னாத இராசா: நான், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவன். கடந்த, 17 ஆண்டுகளாக, 'நர்சரி கார்டன்' நடத்தி வருவதுடன், பாரம்பரிய முறையில் பல வகை மரக்கன்றுகளை, 'ஒட்டு கட்டும்' முறையில், உற்பத்தி செய்து வருகிறேன். இந்தியாவில், 800க்கும் மேற்பட்ட, மா ரகங்கள் இருக்கின்றன. ஒரு மாங்காயின் சராசரி எடையே, 4 கிலோ இருக்கும், வாழைப்பூ ரகம் என்னிடம் உள்ளது. ஆனால், இதை வர்த்தக ரீதியாக பயன்படுத்த முடியாது. வர்த்தக ரீதியாக, 20 வகை மா ரகங்களே வளர்க்கப்படுகின்றன. வேரிலிருந்து தண்டு வரை ஒரு செடியிலிருந்தும், தண்டுலிருந்து பூக்கள் பூக்கும் பகுதி, மற்றொரு செடியிலிருந்தும் பெறப்படுவதே, பாரம்பரிய ஒட்டு கட்டும் முறை.ஒட்டு கட்டி உருவாக்கப்பட்ட கன்று களில் காய்க்கும் பழங்களின் தன்மை, மேலிருக்கும் செடியின் ரகத்தை போலவே இருக்கும். இப்படி செய்யும் போது, மகரந்த சேர்க்கை மற்றும் ஒட்டு கட்டியதில் ஏற்பட்ட மாற்றத்தால், புதிய மா ரகம் தோன்றியது. தோட்டக்கலைத் துறை உதவியுடன் இதற்கு, 'ராஜு-1' என, பெயரிட்டுள்ளேன். இப்புதிய மா ரகத்திற்கான காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளேன்.இதன் காய், 250 முதல், 300 கிராம் எடை இருப்பதுடன், நீளமாகவும், தோலின் தடிமன் மிகவும் குறைவாகவும் இருக்கும். பழம் பழுத்தாலும், மஞ்சள் நிறத்திற்கு பதில், பச்சை நிறமாகவே இருப்பதால், அழுத்தி பார்த்தே கண்டுபிடிக்க முடியும். மேலும், சதைப்பகுதி கூழ்போல் இருப்பதால், தோலில் சிறிய துளையிட்டு, பழத்தை உறிஞ்சி குடிக்கலாம். இம்மரத்தின் காய்கள், கொத்து கொத்தாகவே காய்க்கும்.அழிந்து போன ரகம் என அறியப்பட்ட, பனங்கருப்பட்டி, மோகன் தாஸ் எனும், 'புளியடி' ரக மாமரமும், என்னிடம் உள்ளது. இப்படி, 100க்கும் மேற்பட்ட அரிய வகை மா மரங்களை, பாரம்பரிய முறையில் ஒட்டு கட்டி பாதுகாக்கிறேன். தொடர்புக்கு: 94420 57077.

தனுசுகோடிக்குப் புதுவாழ்வு புதுமைப் பெண்

புயல் விழுங்கிய தனுசுகோடிக்கு ப் புதுவாழ்வு கொடுத்த புதுமைப் பெண்

Comment (8)   ·   print   ·   T+  
பரபரப்பாக இயங்கும் துறைமுகம், அதன் அருகே ரயில் நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலா பயணிகள், இருபுறமும் நீலக் கடலும், இதமானக் காற்றும். தேனீக்களாய் எந்நேரமும் சுறுசுறுப்பாய் சுழலும் மீனவர்கள்.. இவையெல்லாம் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது ஒருகாலம்.
1964-ம் ஆண்டு டிசம்பர் 24-ல் ராமேஸ்வரத்தை தாக்கிய புயலால் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் துடைத்தெறியப்பட்டது. அந்த பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து இன்னமும் முழுவதுமாக மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தனுஷ்கோடி. இங்குதான் தனது இதய நோயையும் பொருட்படுத்தாது சேவை செய்துகொண்டிருக்கிறார் ஆசிரியர் பிரான்சிசு ஆரோக்கியமேரி.
இன்றைய தனுஷ்கோடியில் சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் கிடையாது. ஆனாலும், தங்களின் தாய் நிலத்தை விட்டுச்செல்ல மனமில்லாமல் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடலே கதி என இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புயலுக்குப் பிறகு இங்கே ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்றுகூட யாரும் நினைக்கவில்லை. அரசுக்கு அப்படியொரு எண்ணம் வருவதற்கே நாற்பது ஆண்டுகள் ஆகிப்போனது. 2004-ல் தனுஷ்கோடி பழைய ரயில் நிலையம் அருகே, ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் ஓராசிரியர் பள்ளி ஒன்றை அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் கொண்டுவந்தார்கள்.
பள்ளிக்கூடம் வந்துவிட்டது.. பாடம் நடத்த ஆசிரியரைக் கொண்டுவர வேண்டுமே.. அதற்கான பணிகளில் இறங்கியபோது, ’வேலைய வேணும்னாலும் எழுதிக் குடுத்துட்டுப் போறேன்.. என்னால அங்கபோயி வேலை செய்யமுடியாது’ என்று அலறியடித்து ஓடிய ஆசிரியர்கள்தான் அதிகம். இப்படி 18 தலைமை ஆசிரியர்கள் தனுஷ்கோடிக்குச் செல்ல மறுத்திருந்த நிலையில்தான், துணிச்சலோடு பொறுப்பை ஏற்றார் பிரான்சிஸ் ஆரோக்கியமேரி.
“ராமேஸ்வரத்திலிருந்து மூன்றாம் சத்திரம் வரைதான் பேருந்து வசதி உள்ளது. அதற்கு மேல் 6 கி.மீ. தூரத்தை மினி வேன் அல்லது குட்டி டிரக்கர்கள் மூலம்தான் எட்டிப் பிடிக்கணும். இதுவும் இல்லாட்டா, நடராஜா சர்வீஸ்தான். இதுக்குப் பயந்துதான் மத்த ஆசிரியர்கள் இங்கே வரப் பயப்பட்டாங்க. நான் இந்தப் பள்ளிக்கு வந்ததை ஒரு சேலஞ்சாத்தான் எடுத்துக்கிட்டேன். எனக்கு இதய நோய் இருக்கு. தினமும் பள்ளிக்கு வர்றதுக்கு பஸ்ஸுல வேன்ல அலையுறது ரிஸ்க்கான வேலைதான்.
பயணத்துல இருக்கும்போது சில நேரங்கள்ல இதைப் பத்தியெல்லாம் யோசிப்பேன். ஆனா, இங்க வந்து இந்த பிள்ளைங்களப் பாத்ததுமே அதெல்லாம் மறந்துருவேன். டவுன்ல இருக்கிற பிள்ளைங்களுக்கு எத்தனையோ பள்ளிக்கூடங்கள் இருக்கு. ஆனா, இவங்களுக்கு இது மட்டும்தானே இருக்கு. இவங்களுக்கு கல்வி அறிவைப் போதிக்கிறது கடவுளுக்கு சேவை செய்யுறதுக்கு சமம் இல்லையா.. அதனால்தான் என் கஷ்டங்களை எல்லாம் தள்ளிவைச்சிட்டு இந்தப் பணியை ஏத்துக்கிட்டேன். மனுஷன் பிறக்குறது ஒருமுறைதானே..!” புல்லரிக்க வைத்தார் ஆரோக்கியமேரி.
அவரது தன்னலம் கருதாத உழைப்பால் நடுநிலைப் பள்ளியாக உயர்ந்திருக்கும் இந்தப் பள்ளியில் இப்போது 73 குழந்தைகள் படிக்கிறார்கள். மேரி போலவே பொதுநல சிந்தனை கொண்ட குருஞானேஸ்வரி, முத்துக்குமார், சசிகுமார் ஆகியோரும் இப்போது இங்கே சேவையில் இருக்கிறார்கள். புயல் தாக்கியதற்கு பிறகு இதுவரை இங்கே மின்சார வசதியும் எட்டிப் பார்க்கவில்லை. அதனால், வீட்டிலிருந்து தனது லேப்டாப்பை சார்ஜ் செய்து எடுத்துவந்து பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் மேரி.
தனுஷ்கோடிதான் அழிந்துவிட்டதே என்ற நினைப்பிலேயே அரசு நிர்வாகம் இருப்பதால் இங்கே எந்த அடிப்படை வசதியும் வந்து சேரவில்லை. அதற்காக குறைசொல்லிக் கொண்டிருக்காமல், மேரி உள்ளிட்ட நான்கு ஆசிரியர்களும் தங்கள் கைக்காசை போட்டும் போதாதுக்கு, மீனவ மக்களிடம் நிதிதிரட்டியும் குடிதண்ணீர் கிணறு ஒன்றை பள்ளி வளாகத்தில் தோண்டி இருக்கிறார்கள்.
ஃபைபர் பொருட்களால் கட்டப்பட்டிருப்பதால் பள்ளியின் மேல்கூரையை கடல்காற்று அடிக்கடி சூறையாடி விடுகிறதாம். இதனால் இங்குள்ள பள்ளிக் குழந்தைகள் மழையில் நனைந்து, குளிரில் நடுங்கி, வெயிலில் காய்ந்து தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை சிரமங்களுக்கு மத்தியில் ஆறுதலான ஒரு செய்தி, ஆரோக்கிய மேரியின் முயற்சியால் சமீபத்தில் இங்கு அழைத்துவரப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்க ஒப்புதல் தந்திருக்கிறார்.
என்றோ ஒருநாள் புயல் விழுங்கிய தனுஷ்கோடிக்கு புதுவாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த புதுமைப் பெண் பிரான்சிஸ் ஆரோக்கிய மேரி!

மாற்றத்தின் வித்தகர்கள் - 3: குறுங்காடு தங்கச்சாமி

மாற்றத்தின் வித்தகர்கள் - 3: குறுங்காடு தங்கசாமி

Comment (9)   ·   print   ·   T+  
3
  • குறுங்காடு தங்கசாமி
    குறுங்காடு தங்கசாமி
தமிழ்நாட்டில் இயற்கை ஆர்வலர் மத்தியில் பிரபலமான ஒரு பெயர் சேந்தங்குடி தங்கசாமி. ‘மரம் தங்கசாமி’என்று சொன்னால், பெயர் எளிதில் விளங்கும்.
ஒரு சாதாரண விவசாயியான தங்கசாமி ஏராளமான மரங்களை வளர்த்துப் பணக்காரர் ஆன கதை எல்லோராலும் எழுதப்பட்டது. அது சுயமுன்னேற்றக் கதை. தங்கசாமியிடம் நம் சமூகம் கவனிக்காமல் விட்ட இன்னொரு கதை உண்டு - எதிர்கால இந்திய விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கான விதை அது - குறுங்காடு வளர்ப்பு!
பத்து ஏக்கர் நிலம். அதில் ஒரு வீடு. வீட்டையொட்டி சின்னதாய்க் காய்கறித் தோட்டம். சுற்றிலும் குறுங்காடு. ஆமாம், சின்னக் காடுதான் அது. புன்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, அழிஞ்சி, நாட்டு வாதுமை, புங்கன், பெருங்காலி, தங்கபட்டி, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, செண்பகம், கறிவேப்பிலை, வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்பு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியம், வாகை, கொண்டைவாகை, இயல்வாகை, வாதநாராயணம், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சி, நாவல், நெல்லி, பலா, வில்வம், மா, இலுப்பை, கொடுக்காப்புளி, சப்போட்டா, இலந்தை, சீதா, மாதுளம், அரநெல்லி, கரம்போலா, கொய்யா, கம்பளி, அகத்தி, அத்தி, அழிஞ்சி, பூமருது, அசோகா, மயில் கொன்றை, திருவாட்சி, மந்தாரை, கொக்கு மந்தாரை, மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, நெருப்புக் கொன்றை, தேக்கு, சந்தனம், ஆலம், அரசம்... நூற்றுக் கணக்கான மரங்கள் அல்ல; வகைகள். ஏழாயிரத்துச் சொச்ச மரங்கள். கூடவே, சிறிதும் பெரிதுமான பல்லாயிரக் கணக்கான உயிரினங்கள்... இதுதான் தங்கசாமியின் குறுங்காடு.
ஒருகாலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் வெம்மைக்கும் வறட்சிக்கும் சரியான உதாரணம் தங்கசாமியின் ஊரான சேந்தங்குடி. இன்றைக்கு அந்தப் பிரதேசத்துக்குள் நுழையும்போதே காற்றில் குளுமையை உணர முடிகிறது. எங்கும் பசுமை வியாபித்திருக்கிறது. 46 ஆண்டுகளில் தங்கசாமி உருவாக்கிய மாற்றம் இது.
“பாரம்பரியமான வெவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு முடிச்சதும் வெவசாயத் துறையிலேயே வேலை கிடைச்சுது. வீட்டுல சொன்னாக, ‘யப்பா... வீட்டுக்கு நீ ஒரே புள்ள. நீ பாட்டுக்கு வேலைக்குப் போயிட்டீன்னா, குல வெவசாயம் செத்துப்போகும்’னு. சரிதான்னுட்டு, பயிற்சியை மட்டும் முடிச்சுப்புட்டு வயக்காட்டுக்கே வந்துட்டேன். படிச்ச ஆளு, அதுவும் அப்ப வெவசாயப் பயிற்சி வேற எடுத்துக்கிட்ட துடிப்பு, ஊரு முழுக்கப் பச்சைப் புரட்சியைப் பேசுறான்... சும்மா பழைய வழியிலேயே போவ முடியுமா? நவீன வெவசாயம்… நவீன வெவசாயம்னு கூவிக்கிட்டு உரம், பூச்சிக்கொல்லில தொடங்கி பட்டுப்பூச்சி, தேனீ வளர்ப்பு வரைக்கும் போய்ட்டேன். கொஞ்ச நாள்தான். எல்லாம் காலி. 30 ஆயிரம் கடன். 1960-ல 30 ஆயிரம் எவ்வளவு பெரிய தொகை? ஒரு குடியானவன் சேத்து அடைக்குற காசா அது? மனசு விட்டுப்போச்சு. தற்கொலைதான் கடைசி வழின்னு தோணுச்சு. ஒடிஞ்சு உட்கார்ந்துட்டேன்.
அப்போதான் ரேடியோல ஒரு குரல். சீனிவாசன் ஐயா பேசுறார். ‘மரப் பயிறும் பணப் பயிரே...’, ‘தோப்பில்லா குடும்பத்துக்குக் காப்பில்லை’னு. அப்படியே கடவுளே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு மரத்தைக் கட்டிக்கிட்டேன். வெவசாயம் பண்றதுக்குத்தானே தண்ணியோட்டம் உள்ள பூமியா இருக்கணும்? மரம், பூமிக்கேத்த மாதிரி நடலாம். அங்கேயும் இங்கேயுமா இருந்த வயவாய்க்கால் எல்லாத்தையும் பங்காளிங்ககிட்டே கொடுத்துட்டு, கடனை அடைச்சேன்; ஒரே இடத்துல பத்து ஏக்கராவா சேர்த்து வாங்குனேன். மரக்கன்னா நட்டேன். கொஞ்ச வருஷம். நட்டேன். வெட்டுனேன். நட்டேன். வெட்டுனேன். தேவையான காசு வந்துடுச்சு. ஒரு நா விடியக்காலையில முழிச்சுப்பார்க்குறேன். அது நா வரைக்கும் நான் மரமா பார்த்தது எல்லாம் திரண்டு காடா நிக்குது. சத்தியமா அன்னைக்கு வரைக்கும் மரத்தைக் காசாத்தான் பார்த்தான் இந்தத் தங்கசாமி; ஆனா, காடு காசு இல்லை; அது சாமி. பொறி தட்டிடுச்சு. ‘தங்கசாமி இனி உனக்கு வேலை இதுதான்டா’ன்னு.
அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் காடுதான் என் மூச்சுலேயும் பேச்சுலேயும் கலந்துகெடக்கு. யாரு என் வீட்டுக்கு வந்தாலும் சரி; யாரு வீட்டுக்கு நான் போனாலும் சரி... மரக்கன்னு ஒண்ணைப் புடிச்சு நட்டுடறது. வீட்டுல எந்த விசேஷ நாள்னாலும் மரக்கன்னை நட்டுப்புடுறது. இன்னைக்கு என் கை பட்ட மரக்கன்னு உலகம் முழுக்க முளைச்சுக் கெடக்கு. நம்புவீங்களா, கோடி வெதை, கன்னுங்களைத் தன் கையால கொடுத்திருக்கான் தங்கசாமி. என் மவன் கல்யாணத்து அன்னைக்கு மட்டும் ஊருல 10 ஆயிரம் கன்னுகளைக் கொடுத்தேன். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல்னு எங்கெங்கோ இருந்து வர்ற புள்ளைங்க இந்த வெவசாயிகிட்டே இருந்து பாடம் கத்துக்கிட்டுப்போவுதுங்க.
ஆனா, இந்தக் கதை எல்லாம் இப்போதான். ஆரம்பத்துல சுத்தி நின்ன அத்தனை பேரும் என்ன சொன்னான் தெரியுமா? தங்கசாமி ஒரு லூஸுப் பையன்னான். அப்புறம், தங்கசாமி மாதிரி நம்மளும் மரம் நட்டுக் காசு பார்க்கலாம்னு எல்லாரும் மரம் நட்டான். இங்கே நான் சுட்டிக்காட்டணும்னு நெனைக்குற விஷயம் ஒண்ணு உண்டு. மரம் வளர்க்குறதுக்கும் குறுங்காடு வளர்க்குறதுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. மரம் வளர்க்குறது நீங்க ஒரு வீடு கட்டுற மாதிரி; குறுங்காடு வளர்க்குறது ஒரு அரண்மனையையே கட்டி எல்லாருக்கும் இடம் கொடுக்குற மாதிரி. ஒரு ஆச்சரியம் என்னன்னா, வீடு கட்டுறதைவிட அரண்மனை கட்டுறதுதான் எளிமையான விஷயம்கிறதுதான். மரம் வளர்க்குறது ஒரே மாதிரி மரங்களா பத்திவிடறது. குறுங்காடு வளர்க்குறது எல்லா வகை மரங்களுக்கும் இடம் கொடுக்குறது.
மரங்கள்ல பூமிக்குச் சத்து கொடுக்குற மரங்களும் உண்டு; பூமிகிட்டே இருந்து சத்தை எடுத்துக்குற மரங்களும் உண்டு. குறுங்காடுங்கிறது இந்த ரெண்டு வகை மரங்களையும் உள்ளடக்கினது. மனுஷங்களுக்கான பூ மரங்கள் - பழ மரங்கள் மட்டும் இல்லை; பறவைங்க விரும்பி வர்ற மரங்களும் இங்கே இருக்கும். காரண காரியங்கள் இல்லாம வளர்க்குற மரங்களுக்கு இடையிலேயே செஞ்சந்தனம், தேக்கு, ரோஸ்வுட், வாழை, தென்னைனு காசு பார்க்க என்னென்ன மரங்கள் வேணுமோ அதுகளையும் நாம வளர்த்துக்கலாம்.
ஒரு முத்தின செஞ்சந்தன மரம் விலை இரண்டரை லட்சம். இங்கே பல நூறு செஞ்சந்தன மரம் நிக்குது. நான் எவ்வளவோ பெரிய கோடீஸ்வரன்? பாம்பு, பல்லியில ஆரம்பிச்சு எந்தெந்த மூலையில இருந்தோ இங்கே வர்ற பேர் தெரியாத பறவைகள் வரைக்கும் இந்தக் காட்டுல ஆயிரமாயிரம் உயிரினங்கள் வாழுது. எனக்கு எவ்வளவு சொந்தஞ்சோளி?
நம்ம வெவசாயிகளுக்கு நான் சொல்றது சின்ன யோசனைதான். உங்க நெலம் எவ்வளவு இருக்கோ, அதை மூணாப் பிரியுங்க. ரெண்டு பங்குல மாத்தி மாத்தி விவசாயம் பண்ணி நாசமாப் போங்க - அது உங்க உரிமை, கடமை. மிச்ச ஒரு பங்குல மட்டுமாவது கண்டிப்பா மரங்களை நடுங்க. உங்க சந்ததி பொழைச்சுக்கும். விவசாயிங்க மட்டும் இல்லை; அரசாங்கமும் இதை யோசிக்கணும். பெருகுற மக்கள்தொகையால கெடுற சுற்றுச்சூழலையும் உணவுத் தேவையையும் சமாளிக்கணும்னா, தரிசாக் கெடக்குற நெலத்திலெல்லாம் பல வகை மரங்களை நடணும்” - தீர்க்கமான குரலில் பேசுகிறார் தங்கசாமி.
பக்தர்கள் மலைக்கு மாலை போடுவதுபோல, தங்கசாமியும் மாலை போடுவது உண்டு. இது 18-வது வருடம். ஆண்டுதோறும் மாலை போட்டு, 48 நாட்கள் விரதம் இருந்து, குடுமியான்மலை, ஆடுதுறை என்று வேளாண் மையங்களுக்குச் சென்று விரதம் முடிக்கிறார். போகும் வழிநெடுக குறுங்காடு பிரச்சாரம். “இந்த நாடு விவசாயிகளின் நாடு; இந்த நாட்டின் மறுமலர்ச்சி கிராமங்களில் இருந்துதான் தொடங்கும்” என்கிற காந்தியின் வார்த்தைகள்தான் தங்கசாமியின் இயக்கத்துக்கான ஆதார சுருதி. தன்னுடைய பயணத்தில் தங்கசாமி தவறாமல் வலியுறுத்தும் காந்தியின் வார்த்தைகள் இன்னும் சிலவும் உண்டு: “எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றும் வல்லமை இந்த பூமிக்கு உண்டு; ஆனால், எல்லாருடைய பேராசையையும் நிறைவேற்றும் திராணி அதற்குக் கிடையாது!”
சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com