சனி, 18 ஜூலை, 2009

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் போலி முகத்திரை கிழிந்தது
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

இலங்கை செஞ்சிலுவைச் சங்கமானது 76 லட்சம் ரூபாவை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரியிருந்தது. பொருட்களை இறக்க, அதனை கொண்டு செல்வது போன்ற செலவுகள் எனக் கோரி இந்தத்தொகை கோரப்பட்டிருந்தது. இச்செய்தி காட்டுத் தீ போலப்பரவியதாலும், பல பத்திரிகைகளில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டதாலும் பின்னர் பணம் கோரும் படலம் கைவிடப்பட்டது. அதேசமயம் நேற்றைய தினம் தாம் அவ்வாறு பணம் எதுவும் கோரவில்லை என இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் டெய்லி மிரர் இணையத்திற்கு தெரிவித்திருந்தது. DAILY MIRROR LINK

இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பிய தொலைநகலின் பிரதிகள் தற்போது அதிர்வு இணையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவை இங்கு இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தாம் பணம் கோரவில்லை என பொய்யான தகவலை வெளியிட்டுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.

இவர்களா இதயசுத்தியுடன் போர் நடைபெற்ற காலங்களில் காயப்பட்ட தமிழர்களுக்கு உதவியிருப்பார்கள். தற்போதும் பல பகுதிகளில் சேவையாற்றிவரும் இவர்களின் பணியை மிகுந்த சந்தேகக்கண் கொண்டே பார்க்கவேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக