வெள்ளி, 1 மார்ச், 2019

பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு

அகரமுதல


பெரியார் பெருந்தொண்டர் – சுயமரியாதைச் சுடரொளி காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மாநாடு


மாசி 19,2050 ஞாயிறு 03-03-2019, 
மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம்: அண்ணா திடல், அண்ணாசாலை, புதுச்சேரி
மாலை 3.00 மணி
கலைமகள் இயல் இசைப் பட்டறை வழங்கும் பறை இசை
மாலை 4.00 மணி: பரபரப்பான பட்டிமன்றம்
தந்தை பெரியார் தொண்டால் அதிகம் பயன்பெற்றோர் – ஆண்களா? பெண்களா?
நடுவர்: புலவர் கோ. சாரங்கபாணி
ஆண்களே! – முனைவர் அதிரடி அன்பழகன், கவிஞர். எழிலேந்தி
பெண்களே! – பேராசிரியர் மு.சு.கண்மணி, வழக்குரைஞர். ம.வீ. அருள்மொழி

மாலை 5.00 மணி மாநாடு தொடக்கம்

வரவேற்புரை: சிவ. வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்)
தலைமையுரை: இரா.கமலக்கண்ணன் (சட்ட மன்ற உறுப்பினர், கல்வி – வேளாண்மைத்துறை அமைச்சர்)
முன்னிலை: இரா.சிவா (தெற்கு மாநில தி.மு.க அமைப்பாளர்)
இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், மூத்த தலைவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி)
மாநாட்டைத் தொடக்கி வைப்பவர்

வே.நாராயணசாமி (முதலமைச்சர், புதுவை அரசு)

காரை சி.மு.சிவம் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு நிறைவுரை

தமிழர் தலைவர் முனைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
இரவு 7 மணி – தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
சாதி/மத மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையர்களைப் பாராட்டிப் பரிசளிப்பு.

பெரியார் பெருந்தொண்டர்களுக்குக் காரை சி.மு. சிவம் நினைவுப் பரிசு வழங்குதல்.

நன்றியுரை: வீ.அழகரசன்

வள்ளலார் பெருவிழா

அகரமுதல
மாசி 18 /சனி/மார்ச்சு 2 மாலை 5.00
சந்திரசேகர் மண்டபம், 
மேற்கு மாம்பலம் , சென்னை
அனைவருக்கும் வணக்கம்!
சாதி மதவெறியால் மக்களை இரு கூறாகப் பிரிக்கும் ஆரியத்துவ ஆன்மிகத்திற்கு மாற்றாக, சாதி – மத வேறுபாடுகளுக்கு எதிரான வள்ளலாரின் தமிழர் ஆன்மிகத்தை முன்னிறுத்தும் வகையில் தமிழ்நாடெங்கும் ‘வள்ளலார் பெருவிழா’ நிகழ்ச்சிகளைj; தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தி வருகிறது.
வரும் மாசி 18 /மார்ச்சு 2 அன்று மாலை சென்னை மேற்கு மாம்பலம் சந்திரசேகர் மண்டபத்தில் நடைபெறும் “வள்ளலார் பெருவிழா” நிகழ்வில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழர் ஆன்மிகச் செயல்பாட்டாளர் ஐயா சத்தியவேல் முருகனார் முதலானோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
திரு.வி.க. நகரில் வள்ளலார் வழியில் நாள்தோறும் எட்டாயிரம் பேருக்கு உணவளித்து வரும் திருமதி. தனலட்சுமி அம்மையார், கண் பார்வையற்றோருக்குப் பள்ளி நடத்தி உதவிகள் செய்து மறைந்த ஐயா கண்ணியப்ப சுவாமிகள் போன்றோர் விருது அளித்துப் பாராட்டப்படவுள்ளனர்.. தமிழர்களின் வீரக்கலைகளும், கலை நிகழ்வுகளும் நடக்கின்றன.
இந்நிகழ்வில், தாங்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனத் தங்களை அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், தங்களால் இயன்ற நிதிப் பங்களிப்பைச் செய்யவும் வேண்கோள் விடுக்கிறேன். 

நன்றி!
தோழமையுடன், 
க. அருணபாரதி
தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
பேச: 9025162216, 9841949462

கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! அரசிற்கு நன்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

கலைமாமணி விருதாளர்களுக்குப் பாராட்டுகள்!  அரசிற்கு நன்றி!

தமிழ்நாடு அரசு 201 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குவதாக அறிவித்துள்ளது. விருது பெறும்  அனைவருக்கும் பாராட்டுகள்!  2010 ஆம் ஆண்டிற்குப் பின் கலமாமணி விருது வழங்காமை குறித்து கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? என
 எழுதியிருந்தோம். தொடர் நடவடிக்கை எடுத்த பொழுது இயல் இசை நாடக மன்றித்திலிருந்தும் தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையிலிருந்தும் நம் மடலை அரசிற்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டினர். அவ்வப்பொழுது நாமும் நினைவூட்டினோம். 23.02.2019 அன்று  தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! 
என எழுதிய கட்டுரையில் கலைமாமணி விருது வழங்காமை குறித்தும் குறிப்பிட்டிருந்தோம். எனவே, தமிழக அரசு மேலும் காலங்கடத்தாமல் விருதுகளை அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  
விருதுகள் பெறும் பலரும் நம் நட்பு வட்டத்திலும் அறிமுக வட்டத்திலும் உள்ளவர்களாகவும் தக்கவர்களாகவும் உள்ளனர். விருது பெறும் கலைஞர்கள் அனைவருக்குமே நம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. (திருவள்ளுவர், திருக்குறள் 672)
என்னும் தமிழ் நெறியை இனியேனும் அரசு பின்பற்றுவதாக!
– இலக்குவனார் திருவள்ளுவன்

கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள்

[முன் குறிப்பு: அரசாணையில் உள்ளவாறே பிறமொழிச்சொற்களும் கிரந்த எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. மாற்றித் திருத்த இயலவில்லை.}

வியாழன், 28 பிப்ரவரி, 2019

திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை : சிறப்புப் பொதுக்கூட்டம்

அகரமுதல
மாசி 21, 2050   செவ்வாய்   5.3.2019 மாலை 6.30 – 8.30 மணி
இடம்:  நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார்திடல், சென்னை-7திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (DRAVIDIAN MANIFESTO) சிறப்புப் பொதுக்கூட்டம்

தலைமைகலி.பூங்குன்றன்

வரவேற்புரைவழக்குரைஞர் அருள்மொழி

சிறப்புரைதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

– திராவிடர் கழகம்

அளவளாவல் – திரு சி.எசு.நடராசன்

அகரமுதல
மாசி 19, 2050  ஞாயிற்றுக்கிழமை 3.3.2019  மாலை 4.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம்,வெண்பூங்கா அடுக்ககம்,   

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017

அளவளாவல் – திரு சி.எசு.நடராசன், தேசியச் சொற்கள்(National Words ) நூலாசிரியர்

தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 மாலை 3 மணி இடம்: பெரியார் மன்றம், தருமபுரி
தருமபுரி மண்டலத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
அமைப்பு: தருமபுரி, திருப்பத்தூர், ஒசூர், கிருட்டிணகிரி
தலைமை: வீ.சிவாசி (தருமபுரி மண்டலத் தலைவர்)
வரவேற்புரை: கோ.திராவிடமணி (தருமபுரி மண்டலச் செயலாளர்)
முன்னிலை: இளையமாதன் (மாவட்டத் தலைவர், தருமபுரி),
அகிலா எழிலரசன் (மாவட்டத் தலைவர் திருப்பத்தூர்),
பெ.மதிமணியன் (மாவட்டத் தலைவர், கிருட்டிணகிரி),
சு.வனவேந்தன் (மாவட்டத் தலைவர், ஒசூர்)
தொடக்க உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
கருத்துரை: தஞ்சை பெரியார்செல்வன் (தலைமைக் கழகப் பேச்சாளர்),
ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்),
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)
பொருள்: வேலூரில் நடைபெற உள்ள மார்ச்சு 10, 2019 மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு
நன்றியுரை: வண்டி ஆறுமுகம் (மண்டல இளைஞரணிச் செயலாளர்)
ஏற்பாடு: தருமபுரி மண்டலத் திராவிடர்கழகம்.

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

அகரமுதல

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி

இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி),
வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி),
கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்)
நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),
 தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக),
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),
கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக),
பி.என்.பி.இன்ப சேகரன் (சட்டமன்ற உறுப்பினர்,திமுக.பென்னாகரம்),
 கோவி.சிற்றரசு (மாவட்டச் செயலாளர், இந்தியத் தேசியக் காங்கிரசு), 
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்),
எம்.எசு.இராமன் (எ) எழிலன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், விசிக),
எசு.தேவராசன் (மாவட்டச் செயலாளர், இ.பொ.க.மா.பொ.க.),
ஏ.குமார் (மாவட்டச் செயலாளர், [இ.பொ.க. (மா.)]
நன்றியுரை: ஊமை. மு.கருணாநிதி (பெங்களூரு)