சனி, 22 டிசம்பர், 2012

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு : இணையப் பதிவு


சென்னை :பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர், அந்தந்த பள்ளிகளில் உள்ள, இணையதள வசதியைப் பயன்படுத்தி, தங்களைப் பற்றிய விவரங்களை, பதிவு செய்ய வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு, மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கி, ஏப்ரலில் முடிகிறது. இந்த தேர்வை, 10.5 லட்Œம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள், "சிடி'யில் சேகரிக்கப்பட்டு, கல்வி மாவட்ட வாரியாக, குறிப்பிட்ட மையங்களில் ஒப்படைத்து, பின் அவை, தேர்வுத் துறை இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.தேர்வுத் துறையில், பல்வேறு திட்டங்கள், இணையதளம் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரங்களையும், இணையதளம் வழியாக பதிவு செய்ய, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.மாணவ, மாணவியர், தங்களது பள்ளிகளில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, ஆசிரியர் உதவியுடன், தங்களைப் பற்றிய விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என,
தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.பதிவு செய்யப்படும் தகவல்களில் தவறுகள் இருந்தால், அதை உடனடியாக சரி செய்து கொள்ளவும், வழி செய்யப்பட்டுள்ளது. ஜன., 4ம் தேதிக்குள், இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தரா தேவி, வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து, வசுந்தரா தேவி கூறுகையில், ""தேர்வுத் துறை இணையதளத்தில், ஒவ்வொரு பள்ளியும், அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள, "பாஸ்வேர்டை' பயன்படுத்தி, இணையதளத்திற்குள் சென்று, விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தகவல்கள் சரியாக இருக்கிறதா என்பதை, தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்,'' என,தெரிவித்தார்.இணையதளத்தில் பதிவு செய்யப்படும் தகவல்கள், "நிக்' மையங்கள் மூலம் பெறப்பட்டு, சென்னையில் உள்ள தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது.பின், மாணவ, மாணவியர் குறித்த விவர பட்டியல், தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.இந்த புதிய திட்டத்தால், தேர்வுப் பணிகள், பெரும் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாக, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இணையதள பதிவின் போது, மாணவ, மாணவியர் கவனிக்க வேண்டிய, முக்கிய அம்சங்கள் குறித்து, தேர்வுத் துறை கூறியிருப்பதாவது:
*
தேர்வர்களின் பெயர், பிறந்த தேதி, இனம், மொழி, எந்த மொழிகளில் தேர்வை எழுதுகின்றனர் என்ற விவரங்களை, ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் சரிபார்க்க வேண்டும்.* மாணவர்களின் புகைப்படங்கள் மிகவும் முக்கியம். சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை, "அப்லோட்' செய்ய வேண்டும்.* உடல் ஊனமுற்றவர்களாக இருந்தால், "ணீட' என, குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் மிகவும் முக்கியம் என்பதால், தலைமை ஆசிரியர் மேற்பார்வையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்.* சரியான தகவல்களை பதிவு செய்தால்தான், பிழையில்லாத மதிப்பெண் பட்டியலை வழங்க முடியும். இதை உணர்ந்து, தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். தவறுகள் நடந்தால், சம்பந்தபட்ட தலைமை ஆசிரியர் மீது, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தேர்வுத் துறை கூறியுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள் திருத்தம் செய்யலாம்:பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், தங்களை குறித்த விவரங்களை, பழைய முறையில், ஏற்கனவே வழங்கி உள்ளனர். எனினும், அந்த விவரங்களில், ஏதேனும் தவறுகள் இருந்தால், உடனடியாக, இணையதளம் வழியாக, திருத்தம் செய்யலாம் என, தேர்வுத் துறை இயக்குனர் தெரிவித்தார். ஜன., 4ம் தேதி வரை, இந்த திருத்தங்களை, அந்தந்த பள்ளிகளில் உள்ள இணையதளம் வழியாகச் செய்ய வேண்டும் என, அவர் அறிவுறுத்தி உள்ளார்.


ஊறுகாய் முதல் புட‌ைவை வரை... வாழைப்பழ கண்காட்சி


சென்னை: தமிழகத்தில் அதிக அளவு வாழைப்பழ உற்பத்தி இருப்பதால், அதன் பயன்பாட்டை விளக்கும் இரண்டு நாள் கண்காட்சி சென்னையில் நேற்று துவங்கியது. இந்த கண்காட்சி சென்னையில் நடப்பது இது முதல் தடவை ஆகும்.
இந்திய தொழிற்கூட்டமைப்பு, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை இணைந்து, சென்னையில் முதல் வாழைப்பழ கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளன.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று துவங்கிய, இந்த இரண்டு நாள் கண்காட்சியில் தோட்டக்கலை, வேளாண்துறை, தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம், வேளாண் பல்கலை, தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகிய அமைப்புகள் பங்கேற்கின்றன. மேலும், வாழை உற்பத்தி தொடர்பான பல்வேறு தனியார் நிறுவனங்களின் அரங்குகளும் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் விளையும் பூவன், நெய் பூவன், கற்பூரம், செவ்வாழை, , ரஸ்தாலி, ரொபாஸ்டா, அரிச்சல், கிராண்ட் நைன், மொந்தன், விருப்பாட்சி உள்ளிட்ட பல ரக வாழைப்பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
வாழைப்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் குழந்தைகளுக்கான சத்துமாவு, சத்து பானங்கள், வாழைத்தண்டு, வாழைப்பூ ஊறுகாய்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஊறுகாய்களை சுவைத்து, அவற்றை வாங்கி செல்வதில் பார்வையாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். வாழை நாரில் தயாரிக்கப்படும் புடவைகள், கைப்பைகள், வீட்டு அலங்கார பொருட்கள் உள்ளிட்டவையும், பார்வையாளர்களைக் கவர்கின்றன. வாழைப்பழத்தை பழுக்க வைக்க பயன்படும் நவீன குளிர்சாதன இயந்திரங்களும், வாழை விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கண்காட்சியை ஒட்டி, நவீன முறையில் வாழைப்பழங்களை அறுவடை செய்தல், ஏற்றுமதி செய்தல் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. இதில், விவசாயிகள், வேளாண் விஞ்சானிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இக்கண்காட்சி குறித்து இந்திய தொழிற்கூட்டமைப்பின் வேளாண்மை மற்றும் உணவு தயாரிப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில், தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் தான் வாழைப்பழங்கள் அதிகளவில் விளைகிறது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 25 சதவீத வாழைப்பழ விளைச்சல், தமிழகத்தில் தான் உள்ளது. வாழைப்பழ உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்ந்தாலும், அவற்றை விற்பனை செய்வதிலும், ஏற்றுமதி செய்வதிலும் சில பின்னடைவுகள் உள்ளன. இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. வாழைப் பழங்களை கையாள்வது, ஏற்றுமதி செய்வது குறித்து விளக்கவே, இந்த கண்காட்சி முதல் முறையாக இங்கு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இதில், தோட்டக்கலைத்துறை கமிஷனர் சந்தோஷ்பாபு, சி.ஐ.ஐ., நிர்வாகி புருஷோத்துமன் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சித்த மருத்துவத்தை நாடும் நோயாளிகள்


காரைக்குடி:அலோபதி டாக்டர்களே, சித்த மருத்துவத்தை பரிந்துரைப்பதால், சித்த மருத்துவப்பிரிவில், நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சித்த மருத்துவ டாக்டர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு நாளைக்கு 60 க்கும் குறைவான நோயாளிகளே வந்தனர். டெங்குவுக்கு சித்த மருத்துவத்தில், உள்ள நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளதால், அதை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 120 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு மட்டுமல்லாமல், அனைத்து நோய்க்கும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். சித்த மருத்துவ துறையும், நிலவேம்பை, சிறப்பு ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர். எந்த மருந்துக்கும் இந்த ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்றார்.

கை கொடுக்கிறதுகாளான் வளர்ப்பு!'

சொல்கிறார்கள்

கை கொடுக்கிறதுகாளான் வளர்ப்பு!'
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பவுண்டேஷன் வழங்கும், கிராமப்புற சாதனையாளர் விருதை பெற்ற பிரகதாம்பாள்: என் சொந்த ஊர், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் கிராமம். ஐந்தாம் வகுப்பு வரை தான், படித்திருக்கிறேன்.நெல்லு சோறு சாப்பிடக் கூட வழியில்லாத அளவுக்கு, வறுமை உள்ள பெரிய குடும்பம். தட்டுத் தடுமாறி, கல்யாணமும் முடிந்தது. என் கணவர், விவசாயத்தில், டிப்ளமோ படித்திருக்கார்.

சென்னை, ஆடுதுறை வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில், லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்தார். மாதச் சம்பளம், 750 ரூபாய் தான். ரொம்ப கஷ்டப்பட்டோம். நானும், ஏதாவது தொழில் செய்யணும் என நினைத்து, தையல் வேலை, கூடை பின்னுவது, கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வது என, பணம் சம்பாதித்தேன். அதில் வரும் வருமானத்தின் மூலம், வீட்டுச் செலவை சமாளித்தேன்.நான்காண்டு களுக்கு பின், வம்பன் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கே, என் கணவர், டிரான்ஸ்பர் செய்யப்பட்டு, கிராமத்திற்கு வந்தோம்.அங்கு, 16 பேர் சேர்ந்து, 10 ஆயிரம் சேமிப்போடு, மகளிர் சுய உதவிக் குழு ஆரம்பித்தேன். வம்பன் ஆராய்ச்சி நிலையத்தில், ஐந்து நாள் காளான் வளர்ப்பு பற்றி, பயிற்சி எடுத்துக் கொண்டேன்.

காளான் வளர்ப்புக்கு தேவையான அனைத்தையும் தெரிந்து கொண்டேன். வங்கிக் கடன் வாங்கி, குழு உறுப்பினர்கள் சேர்ந்து, காளான் வளர்ப்பு தொழில் துவங்கினோம்.
இப்போது, இந்த தொழிலில், மாதம், 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிறது. தினமும், நான்கு அல்லது மூன்று மணி நேரம் தான் வேலை செய்கிறோம். ஒவ்வொருத்தரின் பங்களிப்பை பொறுத்து, லாபத்தை பங்கிட்டு கொள்வோம்.உழைக்கிற நேரத் தை கூட்டினால், லாபமும் அதிகம் பெறலாம்.இதுவரை, 100 பெண்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி கொடுத்திருக்கேன்.

தேசிய க் கணித நாள்

கணிதத்தை க் காதலி :இன்று தேசிய க் கணித  நாள்

உலகின் சிறந்த "கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜன். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.
ராமானுஜன் யார்:


ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர், 1887, டிச.22ல், ஈரோட்டில் பிறந்தார். 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார். அப்போது, "மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேனேஜர் எஸ்.என்.அய்யர், ராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை.

இருப்பினும், 1913ல் ராமானுஜன், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அனுப்பினார். அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து, ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று, 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. ராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பினார். 1920ல் மறைந்தார்.

Jaffna University Teachers' Union President summoned

Jaffna University Teachers' Union President summoned to Vavuniyaa

[TamilNet, Friday, 21 December 2012, 17:38 GMT]
Sri Lankan ‘Terrorist’ Investigation Department (TID) has placed a phone call to the head of Jaffna University Teachers Association (JUTA) Lecturer A Rajakumaran and summoned him to the notorious TID office in Vavuniyaa, informed circles at the University of Jaffna told TamilNet on Friday. The JUTA has been firm in defending the rights of the students and has extended support to the protest by the students. It has also held its own protests against the detention by the TID.

The TID from Vavuniyaa takes direct instructions from SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa.

Mr Rajakumaran is the head of the department of the English Language Teaching Centre at the University of Jaffna.

A caller from the TID has reportedly told Mr Rajakumaran that they needed to record statement from him regarding the incidents on 26 and 27 November, the sources further said.

Earlier, the TID has also been against the Bishop of Mannaar Rt. Rev. Dr. Rayappu Joseph, who had established that 146,679 people had gone unaccounted for in the Vanni by citing the statistics of the SL government itself.

Chronology:

எழுத்தாளர் செல்வராசின், "தோல்' புதினத்திற்குச் சாகித்ய அகடமி விருது


எழுத்தாளர் செல்வராசின், "தோல்'  புதினத்திற்குச்  சாகித்ய அகடமி விருது

புதுதில்லி: இந்தாண்டுக்கான சாகித்ய அகடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில், திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர், டி.செல்வராஜ் எழுதிய, "தோல்' என்ற நாவலுக்கு, விருது கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில், வெளியாகியுள்ள கதை, நாவல்களில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய எழுத்தாளர்களுக்கு, ஆண்டுதோறும் சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டு, 24 இந்திய மொழிகளில் இருந்து, கவிதை நூல்கள் 12, சிறுகதை 4 , நாவல்கள் 4 மற்றும் சுயசரிதை, விமர்சனம் பிரிவில் தலா ஒரு நூல்கள் தேர்வு பெற்றுள்ளன.தமிழில் திருநெல்வேலியை சேர்ந்த, டி. செல்வராஜ் எழுதிய, "தோல்' நாவல், விருதுக்கு தேர்வு பெற்றுள்ளது.
தமிழில் சிறந்த நூலை தேர்வு செய்யும் குழுவில், பேராசிரியர் கே.வி. பாலசுப்ரமணியன், அப்துல் ரகுமான், சா.கந்தசாமி ஆகியோர், இடம் பெற்று இருந்தனர்.செல்வராஜ் திண்டுக்கல்லில் வழக்கறிஞர் பணியாற்றி வருகிறார்.திண்டுகல்லை சுற்றி செயல்படும் தோல் பதனிடும் தொழிலை மையமாக வைத்து, "தோல்' நாவலை எழுதியுள்ளார்.

செம்மொழித்தமிழ் விருதுகள்: பிரணாப் வழங்கினார்

செம்மொழி த் தமிழ் விருதுகள்: பிரணாப்  வழங்கினார்

First Published : 22 December 2012 02:19 AM IST














2008-09 ஆண்டுக்கான செம்மொழி தமிழ் விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை வழங்கினார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் மொழி வளர்ச்சிக்காக சேவையாற்றிவரும் 92 வயது புலவர் சி. கோவிந்தராசனாருக்கு "தொல்காப்பியர் விருது' வழங்கப்பட்டது.
அ. லட்சுமி தத்தை, சு. மாதவன், மு. ராமகிருஷ்ணன், ச. செந்தமிழ்ப்பாவை ஆகியோருக்கு "செம்மொழி தமிழ் இளம் அறிஞர்' விருது வழங்கப்பட்டது.
வெளிநாட்டவர் பிரிவில், "குறள் பீடம்' விருதுக்குத் தேர்வு பெற்ற பிரான்ஸýவா குரோ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. விருது பெற்றவர்களின் விவரம்:
தொல்காப்பியர் விருது: 1920-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்த புலவர் சி. கோவிந்தராசனார், திருச்சியில் வசித்து வருகிறார்.
கரந்தை தமிழ்க் கல்லூரி, தமிழவேள் உமாமகேஸ்வரனார் கரந்தை கலைக் கல்லூரி ஆகியவற்றில் சுமார் 30 ஆண்டுகள் தமிழ் பணியாற்றினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் சிறப்பு நிலை ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நாட்டின் தலைசிறந்த தொல்லியல் அறிஞராக விளங்குகிறார்.
இவரது ஆய்வில்தான், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகி கோட்டம், நாமக்கல் அருகே உள்ள கொல்லிமலையை ஆட்சி செய்த சங்க கால நாயகனான வல்வில் ஓரி சிலை, முல்லைக்கு தேர் தந்த பாரி மன்னன் வாழ்ந்த பறம்பு மலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
"கண்ணகி கோட்டம்', "கண்ணகியர் அடிச்சுவட்டில், புகார் முதல் காஞ்சிவரை' ஆகியவை இவர் எழுதிய பிரபல நூல்களாகும்.
கோவிந்தராசனாருக்கு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்துள்ளது. அவரது தமிழ்ச் சேவையை சிறப்பிக்கும் வகையில் தொல்காப்பியர் விருது, பாராட்டு பத்திரம், ரூ. 5 லட்சம் பொற்கிழி, நினைவுப் பரிசு ஆகியவற்றை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
குறள் பீடம் விருது: திருக்குறள், பரிபாடல் ஆகிய நூல்களை பிரெஞ்சில் மொழியாக்கம் செய்தவர் பிரான்ஸýவா குரோ (79). அந்நாட்டில், பாரிஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள உயர் ஆராய்ச்சி நிறுவனத்தில் தென்னிந்திய வரலாறு மற்றும் மொழியியலுக்கான பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
சங்க கால தமிழில் இருந்து தற்கால தமிழ் வரையிலான இவரது ஈடுபாடு, பல்வேறு தமிழ்ப் படைப்புகளை பிரெஞ்ச் மொழிக்கு கொண்டு சென்றுள்ளது. இவர் பரிபாடல், திருக்குறள் காமத்துப்பால் ஆகியவற்றை பிரெஞ்ச் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார்.
இளம் அறிஞர்களுக்கான விருது: இளம் தமிழ் அறிஞர்களிடையே தமிழ் ஆராய்ச்சித் திறனை வளர்க்கும் வகையில் கீழ்க்கண்ட நான்கு பேருக்கு தலா ரூ. ஒரு லட்சம் பொற்கிழி, விருது வழங்கப்பட்டது.
அ. லட்சுமி தத்தை (39): புதுச்சேரி லாஸ்பேட்டை சமுதாயக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ்க் குடும்பம், நாவலும் சமூகமும், சமணம் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
மு. ராமகிருஷ்ணன் (41): செம்மொழி தமிழாய்வுக்கான மத்திய நிறுவனத்தில் இணை ஆய்வறிஞராகப் பணிபுரிகிறார். தமிழில் எட்டு கட்டுரைகளையும், இரண்டு நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
சு. மாதவன் (43): திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியம், சமூகம் சார்ந்த 25 கட்டுரைகள், "தமிழ் அற இலக்கியங்களும் புத்த சமண அறங்களும்', "பன்முகத் தமிழியல்', "இந்திய சமூகம் - மார்க்கமும், பெரியாரும்' என்பவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.
ச. செந்தமிழ்ப்பாவை (44): காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையின் இணை பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது வழிகாட்டுதலில் மூன்று பேர் பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளனர். சங்ககால தமிழ் எழுத்துகள் தொடர்பான இவரது தேடலும் ஆய்வும், "செம்மொழி தமிழ் இளம் அறிஞர்' விருதுக்கு இவரை தகுதி பெறச் செய்துள்ளன.
இந்தியில் தமிழ் வரலாறு: அறிஞர்கள் அதிருப்தி
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற செம்மொழி தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில், தமிழ் மொழியின் பாரம்பரியத்தை மத்திய அரசு அதிகாரியொருவர் ஹிந்தி மொழியில் அறிவித்தார். விருது பெறுவோரின் குறிப்புகளும் ஹிந்தி மொழியிலேயே வாசிக்கப்பட்டன.
இது, விருது பெற வந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
"தமிழ் மொழிக்கான உயரிய விருது வழங்கும் விழாவை, குறைந்தபட்சம் திருக்குறளை வாசித்தாவது தொடங்கியிருக்க வேண்டும்' என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் அறிஞர்கள் தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

SL Commander threatens VC-led team visiting Palaali

SL Commander threatens VC-led team visiting Palaali

[TamilNet, Friday, 21 December 2012, 07:46 GMT]
Following the refusal of the Deans of the University of Jaffna to meet the SL commander of the occupying forces at Palaalai military base on Wednesday, the Vice Chancellor of the University of Jaffna on Friday morning led a team of some academics and the parents of the four detained student leaders to meet the SL commander at Palaali. The SL Commander Maj. Gen. Mahinda Hathurusinghe threatened the visiting team that if they insist on the release of the detained students for the re-opening of the University, then there will be no chance of the students getting released. He ignored the pleading and crying parents of the students, who attempted to prostrate before him.

He ridiculed about two of the detained students, Tharshananth, the secretary of the Jaffna University Student Union and Solomon a student activist, as ‘Brigadiers’ of the diaspora forces. He named three persons in the diaspora, Rudrakumaran, Nediyavan and Vinayagam, whom he imagined or wanted to project as driving forces behind the Jaffna University students.

The Jaffna University students ‘dream’ that Pirapaharan would come and lead their struggle, Hathurusinghe told the visiting team.

Responding, an academic Dr Satkunarajah, who accompanied the Vice Chancellor Prof Vasanthi Arasaratnam to the meeting, came hard on Huthurusinghe.

Dr Satkunarajah told Hathurusinghe that it was such an attitude of the SL forces against the Jaffna University students right from early 1980s that escalated the crisis to its later stages. Whether the SL commander is re-enacting it now, he asked.

The meeting of the VC-led team going to Palaali took place at the orders of the SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa, informed sources said. Only selected media persons were allowed to cover the meeting.

Meanwhile, the SL Police spokesman in Colombo was telling media that the four Jaffna University students are not detained, but have volunteered to go through a ‘rehabilitation’ programme by the SL military.

Chronology:

Eastern province under flood, uprooted people of Champoor suffer

Eastern province under flood, uprooted people of Champoor suffer

[TamilNet, Thursday, 20 December 2012, 23:44 GMT]
In the fourteen divisional secretariat divisions in the Batticaloa district more than one hundred and fifty thousand people had been rendered homeless following heavy rain with winds at high speed for the last few days. They have sought asylum in public buildings but the Colombo government has been showing indifferent attitude in providing immediate relief through its regional and divisional officials, complain affected people. In Trincomalee district four temporary welfare centers at Ki'liveddi, Paddith-thidal, Ma'nat-cheanai and Kaddaip-pa'richchaan where more than two thousand uprooted people from Champoor are residing are submerged in flood water due to the heavy rain for a week.

The entire belongings of the uprooted people of Champoor are damaged in flood water and they find no place to cook their meals.

There are no potable water and no toilet facilities as all latrines and wells in these temporary shelters are submerged in flood water.

No medical facilities are provided to them as the medical officers were unable to visit these welfare centres as the areas are surrounded with flood water.

The normal life in the three districts in East, Batticaloa, Trincomalee and Ampaa'rai has been disturbed since Sunday due to the outbreak of heavy rain.

Villages that come under the Divisional Secretariat divisions of Koa'ralaip-pattu North, Koralaip-pattu, Ea'raavoor Chengkaladi, Koa'ralaip-pattu South, Kaththaankudi, Ma'nmunaip-pattu, Theruvilpattu, Paddippazhai and Periya Poaratheevup-pattu in the Batticaloa district are under flood water.

Following four feet flood entering into the village Chiththaa'ndi in Ea'raavoor-pattu Chengkaladi DS division, all inhabitants in the village have been shifted to Chiththaa'ndi MMV school.

The Colombo government has not shown any interest in providing urgent relief assistance such as cooked meals and good drinking water to the flood victims to them as they could not move out for the last three days due to the bad weather from their homes in Vellaave'li DS division.

Vanthaa'rumoolai, Aiyangkea'ni, Tha'lavaay, Ea'raavoor, Kommathu'rai, Mu'rakkoaddaagn-cheanai, Thevapuram and Koppaave'li, Eerak-ku'lam, Periya-vedduvaan, Poalak-kaadu, Pe'nduka'l-cheanai, Ilukku, Chanthive'li, and Kiraan in Paduvaankarai area and villages Mayilavedduvaan, Veappavedduvaan along Badulla road have also been affected due to heavy rain and flood.

Batticaloa Disaster Management Unit said 154 villages had been affected by rain and flood.

135,464 persons from34,753 families were rendered homeless up to now 154 houses had been completely damaged and 607 houses partially damaged and those displaced had been had been sheltered in 17 temporary sheds.

In the same time low lying areas in Ampaa'rai district have been affected by flood and several roads are under flood water and the transport services had been suspended.

More than ten thousand people in twenty GS divisions that come under Naavithanve'li DS division have been badly affected by the flood.

Mini cyclone has hit around 17 houses in Cho'rikal-munai area.

The main road near Kiddaangki Bridge is under four feet of flood water.

Transport between Batticaloa and Vaazhaich-cheanai and Batticaloa-Colombo have been affected due to rain flood.

Floods caused by torrential rains in the island have affected over 180,000 persons, in eleven districts.

According to the figures issued by the Disaster Management Centre (DMC), 180,054 persons of 46,627 families have been affected while the death toll has risen to twenty.

Thirty-four persons have been injured in flood related accidents. The worst affected districts were Hambantota, Matale, Kandy, Nuwara Eliya, Polonnaruwa, Badulla, Moneragala, Batticaloa, Kurunegala, Puththa'lam and Kegalle.

SL Disaster Management Ministry said that the 14 people had gone missing in several flood affected districts.

ஈழத் தமிழர்கள் மீது பொய் வழக்கு: மனிதாபிமானமற்ற செயல் - வைகோ

ஈழத் தமிழர்கள் மீது பொய் வழக்குப்போடுவது மனிதாபிமானமற்ற செயல் : வைகோ

இலங்கையில்,மரண வேதனைகளைச் சுமந்து, தாய்த் தமிழகத்தில் ஆறுதலும் அன்பான அரவணைப்பும் தேடி வந்த, ஈழத் தமிழ் இளைஞர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று வைகோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரசுக்கு அனைத்து வழிகளிலும் உதவி செய்து, தமிழ் இனப் படுகொலைக்கு துணை நின்ற மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதற்காகவே, பொய்யான காரணங்களைச் சொல்லி வருகிறது. அதற்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக காவல்துறை கியூ பிரிவு போலிசார் ஈழத் தமிழ் இளைஞர்களை, விடுதலைப்புலிகள் என்று குற்றம்சாட்டி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து,  வழக்குப் பதிந்து, அவர்களை சிறையில் அடைக்கிறது.
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னர், சென்னை பல்லாவரம்-பொழிச்சலூர் அருகே இப்படி கைது செய்யப்பட்ட நான்கு ஈழத் தமிழர்களில் மகேஸ்வரன் என்ற இளைஞர் இடுப்புக்குக் கீழ் கால்கள் இயங்கமுடியாத துன்பத்தில் இருப்பவர். காவல்துறை வழக்கம்போல, கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்தி, காவல்துறையினரே தயாரித்த வாக்குமூலத்தை, கைதானவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் என்று அறிவிக்கிறது. இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சட்டப்படி செல்லுபடி ஆகாது.
இலங்கையில் சிங்கள இராணுவத்தினரின் கொடூரத் தாக்குதலால், படுகொலைகளால், வீடு வாசல், சொந்த உறவுகள் அனைத்தையும் இழந்து, கண்ணீரில் துடிதுடித்து நிழல் தேடி, தாய்த் தமிழகத்துக்கு வருகின்ற ஈழத்தமிழர்களை இப்படிப் பொய்வழக்குப்போட்டு சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். கண்டனத்துக்கு உரியதாகும்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி, உதயதாஸ், சுரேஷ்குமார் ஆகிய நால்வரையும் தமிழக அரசு, மனிதநேயத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

விக்கிரபாண்டியபுரத்தின் மனிதநேயம்

வீடு வரை' மட்டுமல்ல உறவு "கடைசி வரை' கைகொடுத்த சிற்றூர்* விக்கிரபாண்டியபுரத்தின் மனிதநேயம்

கமுதி:ராமநாதபுரம், கமுதி அருகே விக்கிரபாண்டியபுரத்தைச் சேர்ந்த சிலையழகு என்பவர், துபாய்க்கு சென்று, அங்கு இறந்தார். மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்.எல்.ஏ., உதவாத நிலையில், கிராமத்தினர் வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் மூலம், அவரது உடல் சொந்த ஊர் வந்தது.விக்கிரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் சிலையழகு. அ.தி.மு.க., பிரதிநிதியாக இருந்தார். ஆறு ஆண்டுகளுக்கு முன், துபாய்க்கு, கட்டுமான பணிக்குச் சென்றார். இந்நிலையில், அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி, உடலை பெற்றுக்கொள்ளுமாறு, டிச.,14 ல், கட்டுமான ஏஜன்சியினர், சிலையழகு குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவரது குடும்பத்தினர் பணமின்றி தவித்தனர்.

முதுகுளத்தூர் எம்.எல்.ஏ., முருகன் (அ.தி.மு.க.,), அமைச்சர் சுந்தரராஜை சந்தித்து, உதவுமாறு கிராமத்தினர் முறையிட்டனர்; உதவி கிடைக்கவில்லை. அந்த கிராமத்தினர், வீடு, வீடாக பணம் வசூலித்தனர். இதில் கிடைத்த 50 ஆயிரம் ரூபாயை, நிறுவனத்திற்கு அனுப்பினர். நேற்று காலை, சிலையழகு உடல் ஊர் வந்தது. கிராமத்தினர் செலவில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. சிலையழகிற்கு மனைவி காளிமுத்து, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.

கிராமத்தினர் கூறுகையில், "அமைச்சர், எம்.எல்.ஏ., விடம் முறையிட்டபோது, ரேஷன் கார்டு நகலை மட்டும் பெற்றுக் கொண்டனர். "கலெக்டரிடம் பேசிக்கொள்கிறோம்' என்றனர். பின், இதுகுறித்து கேட்டபோது, "கொஞ்சம் வேலையாக இருக்கிறோம், பின்னர் பார்ப்போம்' என, கூறிவிட்டனர்' என்றனர்."முதல்வர் ஜெ., யின் உதவி கிடைக்குமா?' என, சிலையழகு குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

முருகன் எம்.எல்.ஏ., கூறுகையில், ""முழு தகவல் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அழைத்து சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தோம். உடலை கொண்டு வரும் பணி நடந்து வரும் நிலையில், அவசர வேலையாக சென்னை சென்றுவிட்டேன்,'' என்றார்.அமைச்சர் கூறுகையில், ""நான் அந்த தொகுதி எம்.எல்.ஏ., இல்லை. விக்கிரபாண்டியபுரத்தில் இருந்து யாருமே என்னை சந்திக்கவில்லை,'' என்றார். கலெக்டர் நந்தகுமார் கூறுகையில், ""என்னிடம் மனு கொடுக்கவில்லை,'' என்றார்.

மறைவிற்குப் பிறகும் நினைவுபடுத்தும்!'

சொல்கிறார்கள்

"மறைவிற்குப் பிறகும் நினைவுபடுத்தும்!'

தமிழில் நாவல் எழுதி, இலக்கியத்திற்கான விருது பெற்ற, "திருநங்கை' பிரியா பாபு: என் சொந்த ஊர் முசிறி. திருநங்கைகளுக்கு, சிறு வயதில், பெண் தன்மை இருக்கும். ஆனால், ஆணா, பெண்ணா என்ற புரிதல் இருக்காது. 15 வயதிற்கு மேற்பட்டுதான், பாலினம் பற்றிய சுய சிந்தனை ஏற்படும்.

அத்தகைய வயதில், நான் சந்தித்த துன்பங்கள் பல. என்னை, அனைவரும், கேலிப் பொருளாகவே பார்த்தனர். இதனால், மனம் வெதும்பி தற்கொலைக்கு முயன்றேன். காப்பாற்றி, உயிர் பிழைக்க வைத்தனர்.பின், சமூகத்தில், விளிம்பு நிலையில் வாழும், என்னை போன்ற திருநங்கைகள் மத்தியில், விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

எழுத்தாளர் சு.சமுத்திரம், திருநங்கைகள் பற்றி எழுதிய, "வாடா மல்லி' என்ற நூல் தான், நான் எழுத்தாளராக முக்கிய காரணமாக அமைந்தது.திருநங்கையாக மாறத் துடிக்கும் மகனுக்கும், அவனது தாய்க்கும் இடையே நடக்கும் மனப் போராட்டத்தை," மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலில், எழுதினேன். திருநங்கை எழுதிய முதல் தமிழ் நாவல் இது தான்.

இந்நூலைப் பாராட்டி, சிறந்த இலக்கியத்திற்கான விருதை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்கியது. "திருநங்கையர் வழக்காறுகள்' என்ற குறும்படத்தையும் இயக்கினேன். சென்னையில், "வானவில்' அமைப்புடன் இணைந்து, திருநங்கைகளுக்கு, எழுதுவதற்கு பயிற்சி அளிக்கிறேன். கட்டுரை, சுயசரிதை, ஆய்வுக் கட்டுரை எழுதுவது தொடர்பாக, பயிற்சி தருவதில், ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளேன். இந்தியாவின் பட்டிதொட்டிகளில் பயணம் செய்து, "கண்ணாடி' கலைக் குழு மூலம், விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிறேன்.

திருநங்கைகளுக்கு, வாக்காளர் அடையாள அட்டை பெற்று தருவது, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவச திட்டங்களை பெறுவது தொடர்பான தகவல்கள் தருவது என, பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறேன்.திருநங்கைகள் குறித்த ஆவணங்கள் திரட்டி, நூலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இந்நூலகத்தை, திருநங்கைகள் தினமான, ஏப்ரல், 15 அன்று, திறக்க இருக்கிறேன். இது, மறைவிற்கு பிறகும் என்னை நினைவுபடுத்த உதவும்.


வியாழன், 20 டிசம்பர், 2012

Deans foil SL military attempt to direct Jaffna University

Deans foil SL military attempt to direct Jaffna University

[TamilNet, Thursday, 20 December 2012, 01:53 GMT]
The commander of the occupying Sinhala military in Jaffna, Maj. Gen. Mahinda Hathurusinghe now ventures to directly order the academics and to run the University of Jaffna from his military base at Palaali, news sources in Jaffna said, citing his call to the deans of the faculties to meet him at Palaali on Wednesday to talk to them on resuming classes at the university. All the faculty deans in unison rejected the call and told the Vice Chancellor that it amounts to militarisation of education. Meanwhile, the talks between the Student Council and the Vice Chancellor of the university on Wednesday failed as the students have categorically conveyed their decision of not attending to classes until all the student leaders detained by the SL military are released.

The Deans realising the nature and gravity of the SL militarisation of the education of Tamils comes after their meeting with the SL Defence Secretary and presidential sibling Gotabhaya Rajapaksa at Colombo, informed circles said.

The Deans who went to see the Jaffna University student leaders detained by the SL military at the Welikanda camp in the Polonnoruwa–Batticaloa border, later visited the SL Defence Secretary in Colombo to discuss their release.

Gotabhaya talking to the Deans in his typical arrogant way, told them not wait for the release of the students to resume the university, as he could release the students only after their ‘rehabilitation’ by the military, which might take time, sources close to the university circles said.

The Vice Chancellor of the university, whose appointment was decided by the SL President, is under severe pressure by Colombo and its occupying military in Jaffna to re-open the university.

The Deans of the faculties are senior academics (one of the Heads of Departments) elected once in two years by all the academic staff of the concerned faculties.

The decision of the Deans not to go to Palaali at the call of the occupying SL military commander has found overwhelming appreciation in the university circles and among the public in Jaffna.

Meanwhile some of the Deans and former Deans of the faculties are harassed in an intimidating way by the occupying military that visits their residences often, news sources in Jaffna further said.

Chronology: