சனி, 15 அக்டோபர், 2011

great wall of china is in damaging condition: சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்

 
சேதம் அடைந்ததால் இடிந்து விழும் சீனப்பெருஞ்சுவர்

 பெய்ஜிங், அக். 15-
 
உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் திகழ்கிறது. இது சீனாவில் கி.பி. 3-ம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது. 5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருகிறது.
 
அதற்கு பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் காரணமாக கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும். மேலும் சீனா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின்போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்தனர். அவற்றை அதிக விலைக்கு விற்றனர்.
 
இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டு தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.

மெய்யாலுமா...?

மெய்யாலுமா...?

First Published : 15 Oct 2011 01:31:11 AM IST


அரசு தேர்வாணையத்தின் தேர்வு முறைதான் கண்துடைப்பு என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது என்றால், இப்போது தேர்வாணைய உறுப்பினர்களின் வீட்டில் நடந்த ஊழல் கண்காணிப்புத் துறையின் அதிரடி சோதனைகளும் கண்துடைப்புதான் என்று பரவலாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலையில் சோதனை நடைபெறப் போவதாகவும், முக்கியமான தகவல்களைப் பத்திரப்படுத்தும்படியும், தேவையான தஸ்தாவேஜுகளையும், தொலைபேசி எண்கள் போன்ற அன்றாடத் தேவைகளையும் பாதுகாத்துக் கொள்ளும்படியும் வியாழக்கிழமை மாலை நான்கு மணிக்குக் கூட்டம்போட்டு உறுப்பினர்களை எச்சரித்துவிட்டார் தலைவர் என்று சொல்கிறார்கள்.  ÷இந்த அதிரடி சோதனை கண்துடைப்பு என்பதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. இதெல்லாம் "தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதைதானே சாமி' என்று தேர்வாணையத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் அங்கலாய்த்தார்.  ÷தேர்வாணையத்தில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணமாவனர் தொடர்ந்து ஏழு வருடங்கள் பதவியில் தொடர்ந்த முன்னாள் செயலர். அவரோ "மீனே மீனே மீனம்மா' - என்று ஜாலியாகப் பாட்டுப் பாடியபடி வலம்வந்து கொண்டிருக்கிறார். முறைகேடுகளுக்குக் காரணமான முந்தைய தலைவர் காசியில் இருக்கிறாரா, ராமேஸ்வரத்தில் இருக்கிறாரா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் புதிதாக வந்தவர்கள் வீட்டில் சோதனை போட்டால், தேர்வாணைய முறைகேடுகள் எப்படித் தெரியவரும் என்று எழுப்பப்படும் கேள்வியில் நியாயம் இருக்கிறதுதானே?  ÷அதிகாரிகள் ஒன்றுக்கொன்றாகி ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொள்வதில் ஒற்றுமை நிலவுவதாகவும், ஆட்சி மாற்றத்தால் நடத்தப்படும் எல்லா சோதனைகளும் கண்துடைப்பு சோதனைகள்தான் என்றும் சொல்லப்படுகிறதே, மெய்யாலுமா...?    சாதாரணமாக ஜீன்ஸ் பேண்டும், டீ ஷர்ட்டுமாக குடும்பத்துடன் லட்சத் தீவுகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விடுமுறையைக் கழிக்கப் பயணமாகும் "நார்த் பிளாக்' நாயகன், இப்போதெல்லாம் கேஷத்திராடனத்தில் இறங்கிவிட்டது பலரை வியப்பிலாழ்த்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, பார்க்காத ஜோசியர் இல்லை, போகாத பரிகாரத் தலங்களில்லை என்று கிரகங்களை நம்பத் தொடங்கிவிட்டாரே பொருளாதார மேதை என்று அவரது ஆதரவாளர்களே ஆச்சரியத்தில் சமைந்து விட்டிருக்கிறார்கள்.  ÷சனிப்பெயர்ச்சியால் 2ஜி தன்னைப் பிடித்துக்கொண்டு விட்டதோ என்று சனி பகவானுக்குப் பரிகாரம் செய்யக் கிளம்பி விட்டிருக்கிறாரோ என்று நினைத்தால் தவறு. இதில் சிதம்பர ரகசியம் எதுவும் கிடையாதாம். இவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டிருக்கும் மக்களவைத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறதாம். அது பாதகமாகப் போய்விட்டால் என்ன செய்வது என்கிற கவலைதான், கார்ப்பரேட் நிறுவனங்களையும் நீதிமன்றங்களையும் மட்டுமே பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவரைக் கடவுளைப் பற்றியும் நினைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள். மெய்யாலுமா...?    தேர்தல் வழக்கு என்று சொன்னதும், வழக்குத் தொடுத்தவர் பற்றிய ஒரு செய்தி. ஒன்றன் பின் ஒன்றாக வந்த தேர்தல் தோல்விகளால் துவண்டு விடவில்லை அந்த 63 நாயன்மார்களில் ஒருவர் பெயர் கொண்ட அந்த முன்னாள் அமைச்சர். அம்மையாரின் முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மிக அதிகமாக சம்பாதித்து சரித்திரம் படைத்தவர் என்கிற பெருமைக்குரிய இவர், பொதுப்பணியில் மட்டுமல்ல அடுத்தவர்களைக் கவிழ்க்கும் களப்பணியிலும் கெட்டிக்காரர் என்கிறார்கள்.  ÷அதிகார மையத்தின் முக்கியஸ்தர்கள் ஒருவரைத் தனது பணபலத்தால் ராவணனை வாலி தனது வாலால் கட்டிப் போட்டதுபோல இவர் கட்டிப்போட்டிருப்பதாகவும், எப்படியும் மீண்டும் இழந்த இடத்தையும், தொலைத்த பணத்தையும் திரும்பப் பெற்றுவிடுவேன் என்று சபதம் போட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். சிவகங்கைச் சீமானுக்கே தண்ணி காட்டியவர் இப்போது குறிவைத்திருப்பது யாருக்குத் தெரியுமா? அம்மாவின் அருளாசியுடன் அமைச்சரவையில் இடம்பெற்றுவிட்ட பெண்மணிக்கு. கண்ணனை மீறிய கோகுலமா என்று கொதிக்கிறாராம் மனிதர்.  ÷"எனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை, அவளை ஓரம் கட்டி ஒழித்துக் கட்டாமல் விடப்போவதில்லை. அதற்காக எனது சொத்தெல்லாம் அழிந்தாலும் பரவாயில்லை'' என்று நெருங்கிய நண்பர்களிடம் சூளுரைத்திருக்கிறாராம்.  ÷பாவம் அந்த அம்மணி. "அண்ணா' என்று அழைத்துப் பார்த்தார். நகர்ப்புறத்துக்கு அம்மாவால் நகர்த்தவும் செய்யப்பட்டார். பயனில்லை. இப்போது, என்ன செய்வாரோ, எப்படி காயை நகர்த்துவாரோ என்கிற பயத்திலேயே உலவுகிறாராம் அம்மணி. "அம்மா என்னைக் கைவிட்டுவிட மாட்டார்' என்கிற நம்பிக்கையில் உழன்று கொண்டிருப்பவருக்குத் தெரியாது அவருக்கு எதிராக ஒரு கூட்டணி வளர்ந்து வருவது.  ÷ஆயிரம் வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தாலும் தெரியாத அளவுக்கு ரகசியமாகக் கண்ணும் கண்ணும் வைத்தாற்போல வளர்கிறதாம் மதியாலோசனை, மன்னிக்கவும், சதியாலோசனை. என்னுடைய இடத்தில் இன்னொருத்தியா என்று அவரும், எனக்கு எதிராகப் பெண்ணொருத்தியா என்று இவரும் கைகோத்துச் செயல்படுகிறார்களாமே, மெய்யாலுமா...?    மாவீரன், அஞ்சாநெஞ்சன் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் அந்தப் பெயருக்கு ஏற்றபடி நடந்துகொள்கிறார்கள். மதுரைக்காரரையே எடுத்துக் கொள்வோம். தலைநகர் பக்கம் போவதையோ, தனது அலுவல்களை கவனிப்பதிலோ அக்கறையே இல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம் தமிழகத்துக்கு வருவதையே தவிர்க்கிறாராமே, தெரியுமா?  ÷எப்போதாவது காதும் காதும் வைத்தாற்போல வந்து போகிறாரே தவிர, நாலு பேர் பார்ப்பதுபோல நடமாடுவதைக்கூடத் தவிர்க்கிறாராம். அதுமட்டுமா, இவரது தொண்டர் வட்டம், மூடப்பட்ட வழக்குகள் தோண்டப்படுமோ என்று பயந்து தமிழகத்திலிருந்தே எஸ்கேப்பாகித் தலைநகரைத் தஞ்சம் அடைந்திருக்கிறதாமே, மெய்யாலுமா...?    அமைச்சர் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர். குளுகுளு வாசஸ்தலத்தைச் சேர்ந்தவர். ஊட்டியில் விளையும் உருளைக்கிழங்கையும், முட்டைக் கோசையும் எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். ஊட்டிக்காரர்கள் மட்டும்தானா சாப்பிடுகிறார்கள்? அதுபோலத்தானே அமைச்சர்களின் பதவியும்? எல்லோருக்கும் அமைச்சராக இருக்க வேண்டாமோ? தனது சொந்த ஜாதிக்காரர்களுக்கு மட்டும்தான் அமைச்சர் என்று நினைத்துக் கொண்டால் எப்படி?  ÷இவரைப் பற்றி ஒரு ஜோக். யாராவது சிபாரிசுக்கு வந்தால் எஸ்.சி.யா என்று விசாரித்துத் தெரிந்துதான் உதவுகிறாராம். மலைவாழ் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் எஸ்.டி. அல்லவா, பிறகு ஏன் இவருக்கு எஸ்.சி. மீது கரிசனம் என்று கேட்டுவிடாதீர்கள். எஸ்.சி.என்றால் ஷெட்யூல் கேஸ்ட் (நஸ்ரீட்ங்க்ன்ப்ங்க் ஸ்ரீஹள்ற்ங்) அல்ல. சேம் கேஸ்ட் (நஹம்ங் ஸ்ரீஹள்ற்ங்). இப்போது புரிகிறதா அவரது பரிபாஷை?  ÷ஜாதிப்பற்று இருக்க வேண்டியதுதான். அதற்காக ஒருவர் தனது ஜாதிக்காரர்களுடன்தான் பேசுவது பழகுவது என்றா இருக்க முடியும்? ""இவரோட புத்திபோற போக்கப்பாரு'' என்று கூறி கட்சிக்காரர்களே சிரிக்கிறார்களாமே, மெய்யாலுமா...?    ஆளும் கட்சி சார்பில் சென்னை மாநகராட்சிக்கான தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலர்கள் அத்தனை பேரும் வெளியில் சொல்ல முடியாமல் ஒருவரை மனதாரத் திட்டுகிறார்கள் என்பது அந்த மனித நேயருக்குத் தெரியாமலா இருக்கும்? அவரிடம் "துரை', "துரை' என்று கெஞ்சிப் பார்த்தும், சாமி, சாமி என்று கும்பிட்டுப் பார்த்தும் எந்தவித பயனுமில்லை என்று குமுறுகிறார்கள் ஆளும்கட்சி வேட்பாளர்கள்.  ÷விஷயம் வேறொன்றுமில்லை. மொத்தம் 200 டிவிஷன்களில் போட்டிபோடும் வேட்பாளர்களைத் தங்களுக்கும் செலவு செய்து கொண்டு அவருக்கும் சேர்த்து இலவசமாகப் பிரசாரம் செய்யச் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வரத்தானே செய்யும்? வேறு கட்சியாக இருந்தால் ஆட்சிக்கு வந்த பிறகு தண்ணி காட்டலாம். அம்மா கட்சியில் அடக்கித்தானே வாசிக்க வேண்டும்.  ÷அவரிடம் கேட்டால் என்ன சொல்கிறாராம் தெரியுமா? ""இவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினால் கொடுத்து மாளாது... கடைசி இரண்டு மூன்று நாள்களில் எதாவது கொடுத்து சமாதானப்படுத்திக்கொண்டு விடலாம்'' என்று சமாளிக்கிறாராம். பலவீனமான முப்பது நாற்பது பேருக்கு மட்டும் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தனது வெற்றியை உறுதி செய்துகொள்ள முயற்சிக்கிறாராம்.  ÷""வேட்பாளர்கள் கிடக்கட்டும். ஆளும்கட்சித் தொண்டர்கள் ஆளுக்கு ஆள் காசு, காசு என்று ஆலாய் பறக்கிறார்களே. அவர்களை யார் சமாளிப்பது? இவர் வெறும் கையில் முழம்போட நினைத்தால் நாங்களும், வேட்பாளர்களும் நினைத்தாலும் வட்டமும் பகுதியும் காலைவாரிவிட்டுவிடுமே. கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றும் அவரை ஜெயிக்க வைக்க முடியாமல் போனால் அம்மாவுக்கு யார் பதில் சொல்வது?'' என்று மாவட்டங்களும் எம்.எல்.ஏ.க்களும் புலம்புகிறார்களாமே, மெய்யாலுமா...?

கடலோரக் காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு

கடலோர காவல்படை மூலம் மீனவர்களைப் பாதுகாக்க 
நீதிமன்றம் உத்தரவு

First Published : 15 Oct 2011 02:56:01 AM IST


மதுரை, அக். 14: தமிழக மீனவர்களை பாதுகாக்க கடலோரக் காவல்படை மூலம் 10 நாளில் நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.  இதுதொடர்பாக, வழக்குரைஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி வந்து தாக்கி வருகின்றனர். இதனால், மீனவர்கள் உயிரிழப்பு, ஊடல் ஊனமடைவது, மீன் வலைகளை அறுப்பது, மீன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவதும் அடிக்கடி நடக்கின்றன.  இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  இந்திய முப்படையினரும் மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு இலங்கையுடன் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  இவைதவிர மீனவர்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என வழக்குரைஞர்கள் வாஞ்சிநாதன், வி.கண்ணன் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என். பாஷா, எம். வேணுகோபாலன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அளித்த இடைக்கால உத்தரவில், இலங்கை-இந்திய கடல் எல்லை குறுகிய பரப்பளவில் உள்ளது.  இதில், தமிழக மீனவர்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில், இந்தியக் கடல் எல்லையில் கடற்படைக் கப்பல்களையும், தமிழக கடலோர காவல்படை படகுகளையும் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணிகளைச் செய்ய 10 நாளில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.  மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படும் சம்பவங்களினால், இந்திய கடல் எல்லைக்குள்ளேயே மீனவர்கள் மீன்பிடிக்க இயலவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளனர்.  இதுதொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவுத்துறை செயலர், மத்திய அரசு பாதுகாப்புத் துறை செயலரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு

கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 
தமிழ்-பிராமி எழுத்துகள், நெல் மணிகள் கண்டுபிடிப்பு

First Published : 15 Oct 2011 01:41:16 AM IST

Last Updated : 15 Oct 2011 02:03:08 AM IST

புதுச்சேரி மணற்கேணி பதிப்பகம் சார்பில் நடந்த கருத்தரங்கில் பழனி அருகே உள்ள பொருந்தல் என்னும் இடத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வு தொடர்பாக பேசுகிறார் புதுவைப
புதுச்சேரி, அக். 14: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கா. ராஜன் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நடத்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த நெல் மணிகள், தமிழ் - பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற மட்பாண்டங்கள், கண்ணாடி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
÷பழனியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள பொருந்தல் என்ற இடத்தில் இவர்கள் 4 ஈமக்குழியில் அகழ்வாராய்ச்சி செய்தனர். இதில் கிடைத்த பொருள்களின் புகைப்படங்கள் மற்றும் அப்பொருள்களின் காலவரையறை உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கு புதுச்சேரி மணற்கேணி பதிப்பகத்தின் சார்பில் வியாழக்கிழமை நடந்தது. ÷மணற்கேணி இதழின் ஆசிரியரும் முன்னாள் எம்எல்ஏவுமான ரவிக்குமார் தலைமை வகித்தார். அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டவை குறித்து பேராசிரியர் ராஜன் பேசியது: ÷பொருந்தல் பகுதியில் உள்ள வாழ்விடத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கண்ணாடி மணிகள் மெருக்கேற்றப்பட்ட அழகிய கண்ணாடி மணிகளாக இருக்கின்றன. ÷இந்த மணிகள் பல்வேறு நிறத்திலும் கிடைத்துள்ளன. சதுரங்கத்தில் பயன்படுத்தும் காய்கள், சுடுமண் பொம்மைகள், தந்தத்தில் ஆன தாயக் கட்டைகள், சுடுமண்ணில் ஆன காதணிகள், செப்புக் காசு, தங்கப் பொருள்கள் போன்ற தொல்பொருள்கள் இங்கு கிடைத்துள்ளன. ÷இந்த ஊரில் உள்ள ஈமக் காட்டில் 4 ஈமச்சின்னங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டன. இந்தக் குழிகளில் 4 கால்களைக் கொண்ட ஜாடியில் நெல் மணிகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் 2 ஈமக் குழிகளில் கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவில் உள்ள பீட்டா அனாலிட்டிக் என்ற ஆய்வுக் கூட்டத்தில் காலக்கணிப்பு செய்யப்பட்டது. ÷இந்த அகழ்வாராய்ச்சியில் ஒரு தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்பு பெற்ற பிரிமனை வைக்கப்பட்டிருந்தது. அந்த எழுத்துப் பொறிப்பு அறிஞர்களால் வைய்ரா என்று எழுதப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த எழுத்துப் பொறிப்போடு கிடைத்த நெல்மணிகள் அமெரிக்காவின் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் நெல் மணிகள் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அந்த நிறுவனம் ஆய்வறிக்கை கொடுத்திருக்கிறது. அதனால் அந்த நெல்லோடு இருந்த தமிழ்-பிராமி எழுத்துகளும் அதே காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யலாம். ÷நெல்லில் தானாக விளையும் நெல், பயிர் செய்யப்படும் நெல் என்று இரண்டு வகை இருக்கிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ள இந்த நெல்மணிகள் எந்த வகையைச் சேர்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. ÷இதைக் கண்டறிய புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். ÷அவர்களின் ஆய்வு மூலம் இவை பயிரிடப்பட்ட நெல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர் ராஜன். ÷புதுச்சேரி பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வாளர் மு. செல்வகுமார் வரவேற்றார். பொருந்தல் காட்டும் தமிழின் தொன்மை என்னும் தலைப்பில் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் டி. சுப்பிரமணியன், வரலாற்று நோக்கில் பொருந்தல் என்னும் தலைப்பில் பிரெஞ்சு நிறுவனத்தின் பேராசிரியர் கோ. விஜயவேணுகோபால், பொருந்தல் அகழ்வாய்வும் சங்க இலக்கியமும் என்னும் தலைப்பில் பேராசிரியர் ராஜ் கெüதமன் ஆகியோரும் பேசினர்.

வெள்ளி, 14 அக்டோபர், 2011

Sitrampalam proves self-determination not a diaspora fantasy

Sitrampalam proves self-determination not a diaspora fantasy

[TamilNet, Saturday, 24 September 2011, 05:24 GMT]
Prof SK Sitrampalam, Senior Vice President of Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK), writing in Thinakkural this month on the importance of Eezham Tamils asserting to their right to self-determination, disproved a distorting campaign by Colombo, New Delhi, Washington, international crisis managers and even the UN panel report trying to tell that this right is not an aspiration of the Tamils in the island but only in the diaspora. While the concerted campaigners assert to their audacity without seeking a referendum and while the Eezham Tamils in the island are constitutionally and militarily gagged to open mouth on the issue, the bold voice of Sitrampalam coming from the island was highly appreciated by many. Today, Tamils in the island are left to feel more compellingly for liberation than Tamils in the diaspora, Tamil political circles said.

S. K. Sitrampalam
Prof Sitrampalam in his article appeared on 11 and 18 of this month in Thinakkural, Colombo, was highly critical of the political unpreparedness of the TNA leadership in taking up the issue of the right to self-determination of Eezham Tamils with New Delhi.

He was citing a recent meeting of Tamil political parties convened by a Congress politician, Dr. Natchiappan in New Delhi, and accused that the TNA in its eagerness to save its ‘holdings’ in India, dubiously wronged long-standing Tamil aspirations.

Sitrampalam appreciated the steady role played by All Ceylon Tamil Congress (ACTC) in New Delhi. ACTC did what the TNA should have done, he said.

Sitrampalam traced the political call for the Tamil right to self-determination from the 1944 Communist Party resolution, 1951 national conference of the ITAK (Federal Party) and 1976 Vaddukkoaddai Resolution to 1985 Thimbu Talks and 2002 CFA.

Asking why the TNA should deviate now, Sitrampalam says the reason is the infiltration of TNA by certain elements not conducive to the long legacy of the Tamil national struggle.

At a crucial time, the TNA should not turn treacherous to the efforts of the people of Tamil Nadu and the diaspora, Sitramplam points out.

If the TNA could firmly assert itself to the fundamentals such as, the Tamil nation, its homeland and its right to self determination, even India cannot simply ignore them, Sitrampalam argues, adding that the TNA would be kicked out by the people if it compromises with the fundamentals.


* * *


Meanwhile, the dangers Prof. Sitrampalam discusses don’t stop with TNA and New Delhi, diaspora activists pointed out, citing the presence of Western equivalents of Natchiappans working for the agenda of Washington in the name of ‘silent diplomacy’.

What failed in New Delhi will be tried in some other form in the West this time, with the involvement of a section of diaspora elements that have more faith in ‘behind the scene activities’ than in mobilising people’s struggle, the diaspora activists said.

Of the two architects of the Tamil genocide, New Delhi and Washington, at least New Delhi is comparatively well exposed and is significantly checked nowadays, thanks to the people of Tamil Nadu, even though it is said that there are fresh oppressions initiated now against the voices of the grassroot in Tamil Nadu.

But, the diaspora is yet to do its share about Washington, especially the diaspora in the USA is the most backward of all the Tamil diaspora in this regard, the activists said.

The diaspora activists cited to the silence of the US diaspora in re-mandating the Vaddukkoaddai Resolution when all others did that. They pointed out at the pathetic performance of democracy by the US diaspora in forming the Transnational Government of Tamil Eelam.

The activists asked why the US diaspora is not exposing, indicting and rising up against the Establishment in Washington and against architects like Robert Blake who paved way, and are paving way, for the Tamil genocide.

In the opinion of the diaspora activists who were commenting to TamilNet, the imbalance caused by the diaspora not rising up against the Establishments in the West that were equally culpable as that of India, will not compliment the people’s struggle mounting up in Tamil Nadu.

The Eezham Tamil diaspora in the US could contribute better and could set a paradigm by aligning with the sizeable Tamil Nadu diaspora and other likeminded diaspora in the US, in making the question universal and rising up against the US establishment in demanding a change in the outlook, the activists said.

The larger Eezham Tamil diaspora of a different social composition in Canada may have to take care of the diaspora in the US, they said.

The diaspora may have to realise that the question of Eezham Tamils has become one that of universal importance and justice. Rather than entering into a people’s struggle against the real forces responsible for the misery, pinning hopes on individually dealing with it behind the screen with the same forces that commit the crime, will not work, the diaspora activists said, adding that filing cases against petty war criminals is not a compensation for the failure in rising up against the Establishments demanding for the right to self-determination.


* * *


The following were comments from TamilNet political commentator in Colombo:

The war crimes investigations and the question of independence or self-determination of Eezham Tamils are not two different issues as differentiated especially by the Establishments in the West, which are implying that the war crimes investigations are for the sake of ‘post-war reconciliation’ in a ‘united Sri Lanka’.

Everybody, including the designers and abettors of the war, knows well that the entire reason for the crime-filled war in the island was not ‘terrorism’ but denial of liberation to a people long suffering from genocide. Otherwise, the end of the war and the annihilation of the LTTE should have ended the genocide of Eezham Tamils and should have brought in liberation to them through political means.

The primary war crime therefore actually stems from denying the existence of genocide and this was committed and is being committed by all those who ‘do not see’ genocide by State in the island.

All the actors know well that the way the post-war ‘reconciliation’ is taking place, unless there is international action, the annihilation of Eezham Tamils as a nation is certain sooner or later. But they allow the process, committing further and further crimes.

They also know very well that the war crimes investigations deliberated and manipulated by them at every stage, to become a long drawn-out one, is not going to bring in the needed justice to the Eezham Tamils.

It is increasingly exposed that besides the personalities in the island who practically committed the crimes in waging the genocidal war, there were a few international names that had key involvement in the process undertaken by all the powers and 30 odd countries.

The names of Robert Blake of the USA, Erik Solheim of Norway, MK Narayanan and Shiv Shankar Menon of India, and Ban Ki Moon and Vijay Nambiar of the UN, known to the outside world, are just a tip of the iceberg.

They might have just played the role of CEOs of the design, but they are the key witnesses in any genuine international investigation to tell the world what forces were operating behind them in setting blatant genocide as paradigm for the international system. They all continue to occupy official positions.


* * *


An objection raised by Sri Lanka’s Attorney General Mohan Peiris at Geneva against international investigation of war crimes was that why Sri Lanka alone and why not Afghanistan and Iran. Cuba echoed it.

No one can deny that war crimes in Afghanistan and Iraq have to be investigated for justice. But the crucial question is whether imperialist wars are equated with genocidal wars of States that are chronically obsessed with genocide. In other words, whether genocidal wars waged by such States have become integral part of imperialist wars, or perhaps is it that the wars in Afghanistan and Iraq are perceived as larger genocidal wars against global Muslims?

The West is answerable to Eezham Tamils for failing to place the case of Eezham Tamils as a case of genocide and for Sri Lanka successfully making undue advantage of this failure.

The US Secretary of State Hilary Clinton is particularly answerable for the US-created deliberate twist still haunting Eezham Tamils, because it is she who wanted to differentiate nationalist wars from ‘terrorist’ wars, before coming to power.

If genocidal wars and imperialist wars are going to be equated then the world will sure plunge into a deeper international crisis, affecting thousands of nations in the world. It is unfortunate that a country like Cuba is strangely on the side of imperialists rather than opening an avenue for all war-threatened peoples all over the world through pursuing war crimes against Sri Lanka.


* * *


As Prof Neelson pointed out in Geneva this week, Eezham Tamils have to be cautious in trusting the West – in trusting secret diplomacies, as they are always meant for dishonest ends or for blunting the cause.

The escape route of those who committed the crimes and those who want genocide to be an accepted international paradigm is making the Eezham Tamils to accept subjugation, to give up the aspiration of liberation or the right to self-determination, even if they suffer from genocide.

Prof Neelson may say that Eezham Tamils should keep the right to self-determination as a long-term goal, as it is not on the cards. But, Eezham Tamils even symbolically side-tracking their right to self determination is the one that gives victory, impunity and escape to war criminals. It will be the one that will help international war criminals to pursue genocide as a paradigm.

The call for self-determination by Eezham Tamils is therefore not merely for the sake of the liberation of Eezham Tamils. It is of great universal significance for the entire world. Nations and peoples all over the world should understand the significance and help Eezham Tamils in upholding the call for the right to self-determination – not in dropping it even for the time being.

But the most important requirement is that the TNA in the island and TGTE, GTF and the country councils in the diaspora, carried away by ‘secret diplomacy,’ should not sit on the uprising of Eezham Tamils in the island and in the diaspora. They may be committing the greatest blunder not only to Eezham Tamils but also to entire humanity of future.

History of humanity tells us, what wars and negotiation tables could not achieve were finally achieved only by universal uprisings and revolutions of peoples – not by mere rebellions that would be brutally suppressed.

The path Eezham Tamils and global Tamils are going to take depend very much on how the Establishments are going to respond to the question of the independence or right to self-determination of Eezham Tamils – whether all-out onslaught again or accommodation in appropriate spirit.

Related Articles:
21.09.11   Don’t be intimidated, Prof Neelson tells Tamil diaspora
10.06.11   Sitrampalam receives dead-dog threat
22.03.11   China urged to play constructive role in the island: Prof Si..
31.08.10   Nirupama faces civil society outburst in North

Sri Lanka entices India in Commonwealth Games bid

Sri Lanka entices India in 

Commonwealth Games bid

[TamilNet, Thursday, 13 October 2011, 02:41 GMT]
If Sri Lanka becomes successful in the bid to host 2018 Commonwealth Games in Hambantota, India will get 5 billion dollar investment opportunity in building facilities, The Hindu Business Online reported SL envoy Prasad Kariyawasam saying in New Delhi on Tuesday. The construction corruption of the 2010 Commonwealth Games in New Delhi and the diplomatic corruption of Rajapaksa being the ‘Guest of Honour’ are well known. While Sri Lanka’s very membership in Commonwealth and it hosting the 2013 Heads of Govt Meet have become controversies likely to be raised in Perth this month, Colombo entices India by offering partnership in swindling ‘Common Wealth’ to further development imbalance of the nation of Eezham Tamils and to diplomatically establish Genocide as an acceptable State paradigm for the region, Tamil politicians commented.

“If we win the bid, then there will be a lot of opportunity in the construction sector for all, and naturally India being the closest neighbour with the capacity will be very competitive in terms of getting contracts because they might be able to deliver at cost effective prices,” Sri Lanka’s High Commissioner in New Delhi said adding that “Indians will also have an understanding of how to handle the manpower even if they do not want to bring in their own manpower.”

The city proposed by Sri Lanka for the 2018 Commonwealth Games is Hambantota, the native place of Mahinda Rajapaksa in the down south, where a Chinese-built harbour and an international airport are coming up. Hambantota is expected to develop as an exclusive Sinhala city and as an alternative to Colombo.

India’s investments currently range around 400 million dollars [0.4 billion] and the major investors include Tata, CEAT, Ultratech Cements, IOC, Airtel and Ashok Leyland, The Hindu Business Online said while reporting on the 5 billion dollar [5000 million] enticement of genocidal Sri Lanka.

Meanwhile, the Canadian Prime Minister has recently announced that he would not take part in the Commonwealth Heads of Government Meet of 2013, if the venue were going to be Sri Lanka.

While the matter of Sri Lanka hosting the 2013 Commonwealth Heads of Government Meet will be finally decided at the current CHG meet in Perth, Australia, this month, the venue of Commonwealth Games 2018 will be decided after a few months time.

The Commonwealth decisions are mostly taken by consensus among the countries that were formerly under the British Empire.

The Commonwealth has a major responsibility in delivering justice to a paradigm of universal injustice set by the genocide of Eezham Tamils by State in Sri Lanka – a legacy resulting from the unitary State created by the British Empire, Eezham Tamil politicians in the island said.

There was a time South Asians played a significantly positive role in favour of the peoples of Africa when Africa was facing paradigm-related global questions such as Apartheid and national liberation.

It is now Africa’s turn to voice for the peoples of South Asia who suffer under a new breed of Establishments in the region that try to set a despicable paradigm by nakedly experimenting with the genocide of Eezham Tamils struggling for national liberation and by upholding a fundamentally genocidal State in the island of Sri Lanka, the Tamil politicians said.

Africa has a large number of members in the Commonwealth. They should set a new inspiration to the world by rising above the powers and Establishments that meddle with a universal question of justice in the island. The Commonwealth without a repressive ‘Security Council’ system is an ideal platform to spearhead such global struggles, the Tamil politicians further said.

Related Articles:
15.09.11   Tamil Nadu Chief Minister has say in appealing to Commonweal..

மூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் - புகழ்ச்செல்வி [படங்கள்]

மூவர் உயிர் காக்கும் உண்ணா நிலையில் நாங்கள் தமிழர்கள் மற்றும் புகழ் செல்வி [படங்கள்]

சாவுத் தண்டனையிலிருந்து மூவர் உயிர் காக்க மரண தண்டனைக்கு எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும், உண்ணா நிலை போராட்டத்தின் 21 நாளான இன்று நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்துடன் புகழ் செல்வி திங்கள் இதழும் இணைந்து உண்ணா நிலையில் ஈடுபட்டன.
காலை 10 மணிக்கு உண்ணா அறப் போரை பெருந் தமிழர் சௌந்தராஜன் அவர்கள் துவக்கி வைத்து தமிழகத்தின் முதல் பெண் போராளி செங்கொடியின் புகைப்படத்திற்கு ஒளிசுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தி சிறப்புரை ஆற்றினார்.வரவேற்புரை மகேந்திர வர்மன் அவர்களும்,அவரை தொடர்ந்து புகழ் செல்வி ஆசிரியர் பரணி பாவலன்,நாங்கள் தமிழர்கள் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் தேவன்,கல்பாக்கம் தமிழ்மணி , அழகுமலை, புகழ்ச் செல்வி பன்னீர் செல்வம் உட்பட உண்ணா நிலையில் பங்கேற்ற பல்வேறு தோழர்கள் உரை ஆற்றினர்.
மதியம் செங்கொடியின் இறுதி கட்ட நிகழ்வின் ஒளி படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக புலவர் ரத்தினவேல் அவர்களும் தமிழர் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் அதியமான் ,மூசு ரத்தினசாமி உரை ஆற்ற பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள் பழச்சாறு கொடுத்து உண்ணா நிலையை முடித்து வைத்தார்.
சிறப்பாக நடத்தப்பட்ட இந் நிகழ்வில் பல்வேறு அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
You might also like:

வியாழன், 13 அக்டோபர், 2011

அரசியல் ஆத்திசூடி

அரசியல் ஆத்திசூடி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/10/2011


1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்!
2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.
4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்!
5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்
6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்!
7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்
8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்!
10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்!
11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்!
12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்!
13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்!
14. கயவருக்கு வாக்களிக்காதீர்!
15. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்!
16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்!
17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்!
18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்!
19. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்!
20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்!
21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் !
22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் !
23. கொடுங்கோலருக்கு வாக்களிக்காதீர் !
24. கோழைக்கு வாக்களிக்காதீர் !
25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் !
26. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் !
27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் !
28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் !
29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் !
30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் !
31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்!
32. சூதருக்கு வாக்களிக்காதீர்!
33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் !
34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்!
35. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் !
36. சொல்தவறுவோர்க்கு வாக்களிக்காதீர்!
37. சோம்பேறிகளுக்கு வாக்களிக்காதீர் !
38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு வாக்களிக்காதீர்!
39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம் ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்!
40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு வாக்களிக்காதீர்!
41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்!
44. தமிழ்ப்பகைவருக்கு வாக்களிக்காதீர் !
45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் !
46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் !
47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் !
48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் !
50.தெளிவில்லாதவருக்கு வாக்களிக்காதீர் !
51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் !
52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் !
54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் !
55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் !
57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் !
58. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் !
59. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் !
60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அறியாதவருக்கு வாக்களிக்காதீர் !
61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்!
62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்!
65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) வாக்களிக்காதீர்!
66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்!
67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
68. பாடுபடாதவருக்கு வாக்களிக்காதீர்!
69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்!
70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்!
73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
74. பேராசையாளர்க்கு வாக்களிக்காதீர்!
75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்!
76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
77. போக்கிலிகளுக்கு வாக்களிக்காதீர்!
78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
79. மாண்பற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்!
81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்!
82. முரடர்க்கு வாக்களிக்காதீர்!
83. மூடர்க்கு வாக்களிக்காதீர்!
84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்!
87. மொழிக்கொலைஞர்க்கு வாக்களிக்காதீர்!
88. மோசடியாளர்க்கு வாக்களிக்காதீர்!
89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்!
90. வஞ்சகர்க்கு வாக்களிக்காதீர்!
91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்!
93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்!
95. வேடதாரிகளுக்கு வாக்களிக்காதீர்!
96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்!
97. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
98 ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்!
99. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்!
100. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்!
101. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
102. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்!
103. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!.
104. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
105. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்!
106. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்!
107. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்!
108. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
109. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
110. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
111. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்! (கிளப்பவர் – எழுச்சியுடன் உரைப்பவர்)
112. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
113. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்! (குயிற்றுநர் – மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)
114. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
115. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்!
116. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்!
117. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
118. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
119. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
120. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்!
121. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
122. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
123. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்! (பரவுநர் – துதிப்பவர்)
124. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
125. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
126. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
127. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
128. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்!
129. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
130. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்
131. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்!
132. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்!
133. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
134. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
135. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
136. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
137. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்!
138. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
139. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு வாக்களிப்பீர்!
140. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
141. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
142. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்!
143. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
144. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
145. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
146. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்!
147. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
148. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்!
149. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
150. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்!
151. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்!
152. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்!
153. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்!
154. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்!
155. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்!
156. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்!
157. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
158. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
159. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
160. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
161. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
162. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
163. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
164. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்!
165. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
166. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
167. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்!
168. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்!
169. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
170. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்!
171. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்!
நன்றி மீனகம் (meenakam.com)


உலக தமிழர் பேரவைத்தலைவரைத் திருப்பி அனுப்புவதா? சீமான் கண்டனம்

சென்னைக்கு விமானத்தில் வந்த
உலக தமிழர் பேரவை தலைவரை திருப்பி அனுப்புவதா?சீமான் கண்டனம்
சென்னை, அக். 13-
 
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈழத் தமிழர் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காத மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள், அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது.
 
மனிதாபி மானமற்ற, சட்டத்திற்குப்புறம்பான செய லாகும். 77 வயதான மதிப்பு மிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.   இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை இம்மானுவல் அடிகளார் வைத்திருந்தும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல் வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது
 
இந்தியக் குடியேற்றத்துறை. எப்படி 80 வயதிற்கு அதிகமான பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த போது, எவ்வித காரணமும் கூறாமல் விமானத்தில் இருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல், மனிதாபிமான மற்று திருப்பி அனுப்பியதோ, அதே போல் உரிய பயண ஆவணங்களுடன் வந்திருந்த இம்மானுவல் அடிகளாரையும் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக நாம் விசாரித்ததில் அவர் முன்பொருமுறை இந்தியா வந்திருந்த போது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக இங்கு தங்கி விட்டார் என்றும் அதன்படி அவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
 
இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நுழைய அவருக்கு அனுமதி இல்லையென்றால், அவருக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்லக்கூடிய விசா வழங்கியது ஏன்? எனவே இது மத்திய அரசின் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட அவமதிப்பாகும்.   ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சேவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை. தமிழனத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும்.
 
எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும், சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்தது போல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டில் இருந்து வேரோடும் வேரடி மண்ணோடும்  கிள்ளி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

mulivaaykkaal genocide photos :முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சிப்படங்கள்

முள்ளிவாய்க்கால் மக்கள் படுகொலை புதிய அதிர்ச்சி புகைப்படங்கள் ..! (Photo in)

முள்ளி வாய்க்கள் பகுதியில் தஞ்சம் என தங்கி இருந்த மக்கள் மீது மிகையொலி விமானங்கள் பல் குழல் எறிகணைகள் நச்சு குண்டுகளை வீசி படு கோரமாக அப்பாவி தமிழ் மக்களை இனவெறி கொண்டு சிங்களம் அழித்துள்ளது.உடல் சிதறி அவையவங்கள் தூண்டிக்க பட்டு இரத்த போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவ சிகிச்சை பலன் இன்றி மக்கள் பலியாகியுள்ளனர் . அப்பாவி மக்கள் தங்கி இருந்த பகுதி மீது குண்டுகளை வீசி கொலை செய்த சிங்களம் அங்கு புலிகள் மறைந்திருந்து  தாக்குதலை நடத்தினர் அவர்கள் மீது நடத்திய தாக்குதலினாலேயே இவர்கள் பலியானார்கள் என கூறியுள்ளது .எமது மண்ணை  அபகரித்து அங்கு பூர்விகமாக  வாழ்ந்த தமிழ் மக்களை ஏதிலிகளாய் ஆக்கி
மாபெரும்  இனவெறி இன அழிப்பு தாண்டவத்தை நடத்தி முடித்துள்ளது .
இந்த சிங்கள இன அழிப்பின் பின் பல்லாயிரம்  மக்களும்  மாவீரர்களின் குருதியில் படிந்த தேசம் இன்று அந்நிய  பேய்களின்
ஆக்கிரமிப்பில் ..சிக்கி தனது முகத்தை சிதைத்துள்ளது .நமது மண்ணை  இழந்து மக்களை இழந்து அவையவங்கள் இழந்த சமுகமாக புதிய ஒரு சமுகம் உருவாக்க பட்டு தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளை
சிதைத்து எயிட்ஸ் என்ற கொடிய நோயை திணித்து புதிய போர் ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்களத்தின் புதிய தாக்குதல் வியுகங்களை முறியடித்து பிரிந்த அனைத்து  தமிழர்  அமைப்புக்களும் ஒன்று பட்டு ஓரணியில் நின்று எமது மாவீரர் கனவுகளை  நனவாக்கும் ஆற்றலோடு அனைவரும் பயணிப்போம் .
தமிழீழ விடியலுக்காக  தமது இன்னுயிர்களை ஈகம் செய்தவர்கள் நாளில் அணைத்து  மக்களும் ஒருமித்து ஓர் இடத்தில ஒன்று திரண்டுஎமது மாபெரும் ஒன்று பட்ட பலத்தினை உலகிற்கும் எதிரிக்கும்  காட்டி தலைவன் காட்டிய வழியில் வீறு நடை  கொண்டு நடப்போம் .
இந்த மக்களின் கோர காட்சி படங்களை சிங்களத்தின் கோர படு கொலைகளை  பார்த்த பின்னரும் பிரிந்து நின்று பல அணிகளாகதமிழீழ விடுதலை புலிகளின் பெயர்களை வைத்து புலிகள் தலைமை என்று கூறி தமிழர் விடியலுக்கு தடங்கள் ஏற்படுத்துவபவர்களை மக்கள் ஓட்ட ஓட விரட்டியடித்து  எமது மண்ணில் இறந்த மக்களுக்கும் மாவீரக்ளினதும் தமிழீழ தனியரசாம் என்ற கனவை நனவாகக் இவரைகளை விரட்டி அடிப்போம் . விதையாகி வீழ்ந்த மாவீரகள் மக்கள் மீது  சத்தியம் செய்து …நாம் நாம் தமிழர்களாய் பயணிப்போம் ..இது தமிழர்களின் வரலாற்று  நிர்பந்தம்.

Bookmark and Share

About the Author

has written 5248 stories on this site.

Sri Lanka organises sea-paramilitary to attack Tamil Nadu fishermen

Sri Lanka organises sea-paramilitary to attack Tamil Nadu fishermen

[TamilNet, Tuesday, 11 October 2011, 21:40 GMT]
Calling themselves ‘Somalian pirates’ a sea-paramilitary created and deployed by Sri Lanka’s Navy is intensifying its mid-sea attacks on Tamil Nadu fishermen in the waters of the Palk Bay, Gulf of Mannaar and off the southern tip of India, news sources in Jaffna said. Largely Sinhalese from the south, along with a Tamil gang inducted by the SL Navy from Koddadi, a coastal locality near military occupied fort of Jaffna city, man the paramilitary. SL Navy has given military training to this outfit. A Sri Lankan minister is also suspected to be involved in the operation. Several lakhs worthy of fish catch of the fishing fleets of Tamil Nadu is routinely seized after attack by this paramilitary getting inside Indian waters, while the SL Navy holds off the fishing fleets along the maritime boundary. One such attack took place while the Indian foreign secretary was visiting Jaffna on Sunday.

The sea-paramilitary trained by the SL Navy leaves the shores in the evenings without any fishing equipment with them, but returns in the mornings carrying fish catch worthy of lakhs of rupees, news sources said.

News reports coming from Tamil Nadu range from accusing the ‘Somalian pirates’ to local fishermen of Sri Lanka for the mid-sea raids and attacks. But the hands of the SL Navy trained paramilitary behind the attacks are increasingly becoming clear in recent times. The attacks also have escalated in the recent months.

Fisheries officials and fishing communities in the peninsula are afraid to open their mouth on the issue for fear of life.

Political observers in Jaffna suspect a deep conspiracy behind the whole affair, aiming at wedging Eezham Tamils and Tamil Nadu. The benefits of such a divide go not merely to genocidal Colombo, they point out.

Following the announcement of striking gas in the waters by an Indian company, there is speculation about industrialisation of the waters. Colombo announced the bidding of five more portions in the Palk Bay for oil exploration, but it is stalled during the visit of the Indian foreign secretary, as India wanted to re-demarcate the maritime boundary first.

Briefing about the future of Sri Lanka’s military to visiting US Asst Secretary of State, Robert Blake, in December 2009, the SL defence secretary Gotabhaya Rajapaksa was particularly harping on the expansion of SL Navy, ostensibly reasoning that it will prevent the LTTE coming back. He was promising SL Navy’s help in countering ‘piracy’ and trafficking of persons and narcotics.

While SL Navy’s ‘piracy paramilitary’ is coming to light now, a Wikileaks cable revealed the hands of a Sinhala minister in the narcotic smuggling from India to Maldives via Sri Lanka.

But both India and the USA conduct grand Naval exercises with Sri Lanka, and both assist the genocidal Navy.

SL Navy’s ‘expansion’ was particularly targeting on building new bases in the country of Eezham Tamils, especially in the islets off Jaffna, at the closest locations to the Tamil Nadu coast. Amidst opposition from Eezham Tamil fishing communities, Sinhala fishermen in large numbers were brought to these places in recent times by the SL Navy to catch sea cucumbers, conch and prawns.

Besides, new installations that come up in these places near SL military or naval bases, in the name of ‘tourism enclaves’ or ‘pilgrim enclaves’ also raise suspicions among strategic observers.

GTF leader denied entry to India

GTF leader denied entry to India

0
Posted on : 13-10-2011 | By : tnn | In : eelamnews

The Global Tamil Forum says its president Fr. S.J. Emmanuel was refused entry on arrival in India yesterday (Oct. 11).
In a statement, it said the Tamil community around the world was disheartened and disappointed to know about the incident.
It said that the 77 year old was refused entry on arrival in India at the Chennai International Airport, despite having a valid entry clearance – visa to India, issued by the Indian High Commission in Germany.
Tamil people as a community regret this incident and expect India as the regional superpower to play a significant role in finding a negotiated political settlement for the legitimate grievances of the Tamil people and to the ethnic conflict in the island of Sri Lanka, GTF says.
As the global leader of Tamil people, we look upon Tamil Nadu chief minister Jayalalitha Jayaram to champion the Tamil cause of the Tamil people of the island nation, it adds.
Related Posts Plugin for WordPress, Blogger...




நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐந்து மக்கள்சார்பாளர்களாகத் தேர்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு !

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் உபதேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளாக பிரான்சில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
1) தேர்தல் தொகுதி – 92ம் மாவட்டம்
திருமதி. திருநாவுக்கரசு மனோவதனி
2) தேர்தல் தொகுதி – 93ம் மாவட்டம்
திரு. மைக்கல் கொலின்ஸ் ஜோசப்
திரு. கருணைராஜன் முத்தையா
3) தேர்தல் தொகுதி – பிரான்ஸ் வட பிராந்தியம்
திரு.பாக்கியசோதி வள்ளுவன்
4) தேர்தல் தொகுதி – பிரான்ஸ் தென் பிராந்தியம்
திரு. நீக்குலாஸ் மரியதாஸ் நிக்கோலாஸ் ஜோய்
ஆகிய ஐவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம்-பிரானஸ் தெரிவித்துள்ளது.
மே 02, 2010 இல் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் தேர்தலில் தேர்தல் தொகுதி 92, 93 மாவட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக குறித்த மாவட்ட தேர்தல்கள் செல்லுபடியாகா என்று தேர்தல் ஆணையத்தினால் முடிவெடுக்கப்பட்டது.
அத்துடன், பிரான்சின் வட பிராந்தியம், தொன் பிராந்தியம் ஆகிய இரண்டு தேர்தல் தேர்தல் தொகுதிகளது உறுப்பினர்கள் அரசவையில் இருந்து விலகிக் கொண்டிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட தேர்தல் தொகுதிகளுக்கான வெற்றிடங்களையும் நிரப்புவதற்குரிய உபதேர்தல் தேர்தல் மூலம் மேற்குறிப்பிட்ட ஐந்து உறுப்பினர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக்கு, மக்கள் பிரதிநிதிகள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாதம் ஊடகசேவை
You might also like:

"நான் வளர்த்த மரப் பிள்ளைகள்!'


ஆயிரம் மரங்களை பிள்ளைகளாக வளர்த்த திம்மக்கா: என் சொந்த ஊர் கர்நாடகத்தில் உள்ள கூதூர் எனும் குக்கிராமம். 16 வயதுல, என் கணவர் சிக்சையா கையில புடிச்சு கொடுத்துட்டாங்க. கல்யாணமாகி 10 வருஷமாகியும் குழந்தை எதுவும் உண்டாகல; ஏறாத கோவில் இல்லை. அக்கம் பக்கத்தினர் ஜாடை மாடையா பேசின பேச்சு உயிரை வதைச்சுது. காலையில இருந்து சாயங்காலம் வரை காட்டுல உழைச்சுட்டு வீடு வந்தா, சோறு இறங்காது; நிம்மதியா தூக்கம் வராது; ஒரு கட்டத்துல, தூக்கு மாட்டிக்கலாம்னு நினைக்கற அளவுக்கு மனசு வெறுத்துட்டேன். "வயித்துல சுமந்து வளர்க்கறது மட்டும் தான் உசுரா...' ஆண்டவன் படைப்புல ஆடு, மாடு, மரம், செடின்னு எல்லாம் உயிருதான்ங்கிற உண்மையை, அப்போ என் மனசு தவிச்ச தவிப்பு மூலமா உணர்ந்தேன்.

கன்றுகள் நட்டு, தண்ணி விட்டு, அவற்றையே புள்ளையா வளர்த்தேன். ஊர்ல எல்லாரோட புள்ளைகளும் அவுங்கவங்க அப்பன், ஆத்தாவை தான் பார்த்துக்குவாங்க. ஆனா, என் புள்ளைங்க ஊருக்கே நிழல் கொடுக்கும்னு என் மனசுக்கு ஒரு தெளிவு கிடைச்சுது. அப்படி நான் பாடுபட்டு வளர்த்த ஆயிரம் மரங்கள் தான், இன்னிக்கு பொட்டல் காட்டுக்கு வர்ற சாலையை சோலையாக்கி தந்திருக்கு. "மரத்தை வெச்ச மகராசி, நீ நல்லா இருக்கணும்'னு சனங்க எல்லாம் சொல்லும்போது, நல்ல புள்ளையை பெத்த புண்ணியவதி மனசு குளிர்ற மாதிரி, என் மனசும் குளிர்ந்து போகுது. இந்த பசுமை சேவைக்காக, சிறந்த தேசிய குடிமகன் விருது, நான்கு குடியரசு தலைவர்களின் கையால் பெற்ற விருதுகள், மூன்று பிரதமர்களிடமிருந்து பெற்ற விரு துகள், பல முதல்வர்கள் அளித்த மாநில விருதுகள், பட்டங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது!

குழந்தை எழுதுவது ஒரு அற்புதம்!

பிற மொழியினர் போன்று தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் மொழியில் எழுதக் கற்றுக் கொடுப்பதே இதில் குறிப்பிட்டுள்ள சிறப்புகளைத் தரும். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

குழந்தை எழுதுவது ஒரு அற்புதம்!-

12-10-2011

"படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது, ஆனால் எழுதுதல் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது"
பிரான்சிஸ் பேகனின் ஒரு புகழ்வாய்ந்த பொன்மொழி இது.
எழுதுவதில் ஒரு மந்திரம் இருக்கிறது. ஒரு குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.
வரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு இது ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை.
உங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
குழந்தையின் எழுதும் திறனை மேம்படுத்தல்
எழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது. எழுதும் செயல்பாட்டில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.
பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.
ஊக்குவித்தல்
உங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக, வற்புறுத்தக்கூடாது மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்யக்கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம்.
குழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். டிக்ஷனரி(Dictionary) உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.
இதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.
நீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம். எனவே, உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.
இடம், நேரம் முக்கியமல்ல
உங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல.
மேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.
முறையான அணுகுமுறை
ஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கவியலா அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.
தனியுரிமை பாதுகாப்பு
உங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அது மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.
விமர்சனம் தவிருங்கள்
ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம். நுட்பம், விரிவான விவரணங்கள், சிந்தனை மற்றும் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் போன்ற அம்சங்கள்தான் எழுத்தில் இருப்பதுதான் ஒரு வளரும் மேதையின் அடையாளங்கள். எனவே, அதுபோன்ற அம்சங்களை அடையாளம் கண்டு நிச்சயமாக பாராட்ட வேண்டும்.
பின்பற்றுதல்
உங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.
தகவல்தொடர்பை ஊக்குவித்தல்
உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.
மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.
கேட்பவற்றை எழுத வைத்தல்
உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.
பட்டியலிடும் பழக்கம்
அதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.
சஞ்சிகைகள்(Journals)
சஞ்சிகைகள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக 2 வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை. சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.
நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. மேலே சொன்ன அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு யுகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிடலாகாது.

வாசகர் கருத்து

 good 
by mmasal,India    10/12/2011 1:24:50 PM IST
 payanulla karthukkal. kaditham ezthum thinam enru oru naal kondadalam. 
by uma,India    10/12/2011 12:11:30 PM IST
 அருமையான கறுத்து தொகுப்பு. இது பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோகளுக்கும் உதவும் ஆனால் இதை அவர்கள் உணர்வார்கள? 
by லக்ஷ்மிகாந்தன்,India    10/12/2011 11:54:14 AM IST