9- ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு


தை 2046 -/ 29 சனவரி – 1 பிப்ரவரி 2015


மலாயாப் பல்கலைக்கழகம்


கோலாலம்பூர்

banner_9th_international_tamil_seminar
9-ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2046, தைத்திங்கள் (சனவரி 29 முதல் பிப்ரவரி 1, 2015 வரையிலும்) கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இம்மாநாடு ஆசிய நாடுகளிலும் அமெரிக்க – ஐரோப்பிய கண்டங்களிலும், ஏனையபகுதிகளிலும் தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை, சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்.

உரிய நாள் விவரம்

பதிவு தொடங்கல் சூலை 1, 2014
கட்டுரைச் சுருக்கம் இறுதி நாள் செப்.30, 2014
கட்டுரைச் சுருக்க ஏற்பு அறிவிப்பு அக்.10,2014
கருத்தரங்க நிகழ்விவரம் தளத்தில் பதியும் நாள் அக்.10,2014
முழுக் கட்டுரை அளிக்க இறுதி நாள் நவ.30, 2014
கட்டுரையாளர்கள், பங்கேற்பாளர்கள்
பதிவு இறுதி நாள் திச.15, 2014

முழு விவரம் காண வலைவரி  http://umconference.um.edu.my/9icsts2014