சனி, 18 ஜூலை, 2009

ரைம்ஸ் பத்திரிகையுடன் இலங்கை அரசு
ஒரு நிழல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளது
பிரசுரித்த திகதி : 18 Jul 2009

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று லண்டன் ரைம்ஸ் கூறுவதை இலங்கை உயர் ஸ்தானிகர் மறுத்துள்ளார்.

லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் நீதிபதி நிகால் ஜயசிங்க, லண்டன் ரைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் ரொபேர்ட் கோலுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், மே 19 இலிருந்து போர் முடியும்வரை 20,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் உட்பட ஐ.நா அமைப்பின் ரகசிய ஆதாரங்களைக் காட்டி ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியைத் தாம் மறுப்பதாக எழுதியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் உண்மையில் ஆதாரம் அற்றவை என்றும் உண்மையில் ஷெல் வீச்சு காரணமாக அந்த அளவுக்கு மக்கள் இறக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

அவர் எவ்வளவுக்கு மறுப்புரை வழங்கினாலும்,, வன்னியில் இடம்பெற்ற இறுதி நேர யுத்தத்தின்போது மக்கள் அனைவரும் செறிந்து ஒரே இடத்தில் தஞ்சமடைந்திருந்தபோது இலங்கை ராணுவத்தினரால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக