சனி, 9 அக்டோபர், 2010

தலையங்கம்: தமிழுக்கு என்ன லாபம்?


தமிழை வளர்ப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழியாக தமிழ்த் திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைப்பதும் தமிழை வளர்க்கும் என்று அரசு கருதியதால் தமிழில் பெயரிட்டு வெளியாகும் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார் தமிழக முதல்வர் கருணாநிதி. இதனால் தமிழும் வளரவில்லை, அரசுக்குக் கிடைக்க வேண்டிய கேளிக்கை வரியும் கிடைக்காமல் போனது என்பதுதான் மிச்சம்.  இந்த வருவாய் இழப்பால் நேரடியாகப் பாதிக்கப்படுவது பஞ்சாயத்து நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள்தான். இவற்றுக்குத்தான் திரையரங்க கேளிக்கை வரியின் வருவாய் கிடைத்துவந்தது. கிராமப்புற வளர்ச்சி பற்றிப் பேசிக்கொண்டு, பஞ்சாயத்துகளின் வருவாய் ஆதாரங்களை முடக்குவது உதட்டளவு அக்கறை அல்லாமல் வேறென்ன?  தமிழக முதல்வர் அரசாணை வெளியான பிறகு இதற்காக எல்லாருமே தங்கள் படத்துக்கு தமிழ்ப் பெயரை வைத்தார்கள் - சலுகை பெறுவதற்காக. ஆனால் பாடல்களும், வசனங்களும் ஆங்கிலம் கலந்து கிடந்தன. இத்தகைய படங்கள் தமிழுக்கும் தமிழர்தம் கலாசாரத்துக்கும் ஏற்படுத்திய இழப்புதான் அதிகமே தவிர, இதனால் தமிழுக்கு ஒரு பயனும் இல்லை என்று அறுதியிட்டுச் சொல்லிவிட முடியும்.  ஒரு படத்துக்கான வரி விலக்கு என்பது அந்தப் படம் தேசிய ஒற்றுமை குறித்துப் பேசுவதாலோ அல்லது நம் வரலாற்றை வெகுஜன மக்களிடம் கொண்டுசேர்க்க உதவுகிறது என்பதாலோ அளிக்கப்படும் சலுகை. அதை அரசின் பாராட்டு என்று சொன்னாலும் மிகையில்லை. ஆனால் அத்தகைய பாராட்டு அந்தப் படம் வெளியானபிறகு, அது மக்களிடம் வரவேற்பைப் பெற்ற பிறகு அத்தகைய முடிவை அரசு மேற்கொள்வதாக இருக்க வேண்டும். அதுதான் சரியான முறையும் கூட.  அன்றைய காலம் தொட்டு அண்மைக்காலம் வரை அப்படியாகத்தான் வரிவிலக்குகள் அளிக்கப்பட்டன. கப்பலோட்டிய தமிழன், ராஜராஜசோழன் போன்ற அன்றைய படங்களுக்கும், அண்மைக்காலங்களில் வெளியான கருத்தம்மா, பாரதியார், பெரியார் போன்ற படங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டதை யாரும் குறை சொல்லவே முடியாது.  இதே வரிவிலக்கு, ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ரூ.160 கோடியில் தயாரிக்கப்படும் படங்களுக்கும்கூட, தமிழில் பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் கேளிக்கை வரிச் சலுகை என்பது இந்த வரிச் சலுகையை பொருளற்றதாக்கிவிடுகிறது.  கேளிக்கை வரி திரையரங்க நுழைவுக் கட்டணத்தில் 10 விழுக்காடாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரே நேரத்தில் 2,500 திரையரங்குகளில் ஒரு திரைப்படம் ரூ.200 கட்டணத்தில் வெளியாகுமேயானால், இதனால் கிடைக்கும் ஒருநாள், 5 காட்சிகள் வசூலில் மட்டும் ஏறக்குறைய 9 கோடி ரூபாய் கேளிக்கை வரியாக கிடைக்கும். இத்தகைய சாத்தியக்கூறுகளைப் பார்க்கும்போது, தமிழில் பெயர் இருப்பதாலேயே எல்லாப் படங்களுக்கும் கேளிக்கை வரி வழங்குவது என்பதால் அரசுக்கு என்ன லாபம்? என்ற கேள்வி எழுகிறது.  திரையரங்குகளில் கூட்டம் குறைகிறது என்பதால், கட்டணத்தை ஆளாளுக்கு ஒருவிதமாக உயர்த்தியபோது, தமிழக அரசு தலையிட்டு, திரையங்குகளில் உள்ள தொழில்நுட்பக் கருவிகள், வசதிகளை மையமாக வைத்து, மாநகரம், நகரம் இரு பகுதிகளிலும் உள்ள திரையரங்குகளை ஏ,பி, சி என தரம்பிரித்து அதற்கான கட்டணங்களையும் நிர்ணயித்தது. அது ஒரு நல்ல முடிவு என்று பொதுமக்களால் பாராட்டப்பட்டது. ஆனால், திரையரங்க உரிமையாளர்கள் முதல்வரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, 2002-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு முதலாக புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. இதன்படி அரசு நிர்ணயித்த கட்டணத்தில் 75 விழுக்காட்டை திரையரங்குகள் உயர்த்திக் கொள்ளலாம். மொத்த இருக்கைகளில் 10 விழுக்காடு அளவுக்கு (முதலில் 20 விழுக்காடாக இருந்தது) குறைந்தபட்ச கட்டணத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்தக் குறைந்தபட்ச கட்டணம் என்பது மாநகரங்களில் ரூ.10 ஆகவும், நகரங்களில் ரூ.5 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால் முதல் ஒரு வரிசை இருக்கைகள் மட்டுமே குறைந்தபட்ச கட்டணத்துக்காக ஒதுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.  இத்துடன் விஷம்போல ஒரு சலுகையையும் தமிழக அரசு அறிவித்தது. முதல் இரண்டு வாரங்களுக்கு திரையரங்குகள் கூட்டத்துக்கு ஏற்ப கட்டணத்தை, வணிக வரி அதிகாரிகளின் அனுமதியுடன் உயர்த்தலாம் என்பதுதான் அது. தமிழ்நாட்டில் எத்தனை படம் ஒரு வாரம் முழுதாக ஓடுகிறது? ஆகவே, 2007 ஜனவரி முதலாக, உயர்த்தப்பட்ட நுழைவுக் கட்டணம் குறித்து "சி' படிவம் கொடுத்தால் போதும் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனால் திரையரங்குகளில் விருப்பம்போல கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். அதனால்தான் எந்திரன் படத்துக்கு வெளிப்படையாகவே ரூ.200, 300 என்று அறிவித்தார்கள்.  சரி, இப்படி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, கட்டணம் உயர்த்தப்பட்டதே இதற்கான வணிக வரி, வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில்தான் செலுத்தப்பட்டுள்ளதா என்றால் சந்தேகம்தான்.  ஒவ்வொரு திரையரங்கும் மாவட்ட வணிக வரித் துறையில் வாரம்தோறும் வசூல் அடிப்படையில் வணிக வரி செலுத்துகின்றன. ஆனால் வசூல் எவ்வளவு என்று தீர்மானிப்பவர்கள் திரையரங்க உரிமையாளர்கள்தான். இதில் அதிகாரிகள் ஆய்வு என்பது இல்லவே இல்லை என்று சொல்லலாம். கேளிக்கை வரியும் கிடையாது. வணிக வரியும் முறைப்படி வருவதில்லை. லாபம் சம்பாதித்துக் கொழிப்பவர்கள் தயாரிப்பாளர்களும் தியேட்டர் அதிபர்களும். இதற்கு பொதுமக்களின் நன்மைக்குக் கிடைக்க வேண்டிய வரிப்பணம் ஏப்பம் விடப்படுகிறது. நன்றாக இருக்கிறதே நியாயம்...  ஒரு படம் வெளியான பிறகு அதன் தரம், கதையின் மையம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும். திரைப்படத்துக்கான சலுகை அத்துறையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நல்ல கருத்தாழமும், சமூக சிந்தனையும் கொண்ட திரைப்படங்களையும், குறைந்த பட்ஜெட்டில் திரைப்பட விழாக்களில் போட்டி போடும் அளவிலான படங்களையும் எடுக்க ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும். அதேநேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைப்பதும் தடைபடக்கூடாது.
கருத்துக்கள்

தலையங்கத்தின் பயனாக முதல்வரின் அறிக்கை வந்துள்ளது. ஆனால் அத்துடன் முற்றுப்புள்ளி இடப்படும். தலையங்கத்தில் சுட்டிக்காட்டியவை தொடரும். தமிழ் உணர்வாளர்கள் பெருகினாலன்றி விடிவு கிடையாது. நண்பர் ஒருவர் எந்திரன் தமிழ்ச் சொல்லல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். இயங்கும்திறனுடையது என்னும் பொருளில் இயந்திறம் எனக் குறிக்கப்பெற்றுப் பின்னர் இயந்திரம் என்றாகி எந்திரன் என்றாகி இருக்க வேண்டும். இப்பொழுது நாம் மீண்டும் இயந்திரம் என்றே சொல்லுகிறோம். பெருங்கதையில் எந்திரயானை குறிக்கப் பெற்றுள்ளது. நான் என்னுடைய அனைவருக்குமான அறிவியல் தமி்ழ் நூலில் எந்திரன் என்றே குறிப்பிட்டுள்ளேன். பொருத்தமான தமிழ்ச் சொல் எனத் தமிழ்க்குடிமகன் பாராட்டினார். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2010 2:05:00 PM
Sooner, CM would reply to this 'editorial' and Mr. Mathi's cartoon about 'Tamil name for Tamil movie' CM can not take corrective actions and digest his errors rather he would justify by asking howmany movies were released with Tamil name in previous government?
By Rajesh
10/9/2010 2:00:00 PM
Your editorial is absolutely correct. This ROBOT has become "Yenthiran" just to avail tax, which is ridiculuos. Everwhere it is advertised as "ROBOT". This concession should immediately be withdrawn in public interest. Interested lawyers can even file suit, if necessary, to get relief on this worst nature.
By solomon
10/9/2010 1:29:00 PM
எல்லாம் சரிதான்.....தங்களுடைய பத்திரிக்கையில், தாழ்த்தப்பட்ட என்பதற்கு பதிலாக வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, தாழ்ந்த வகுப்பை சேர்ந்த... என்றும், பிற்ப்படுத்தப்பட்ட என்பதற்கு பதிலாக பின்தங்கிய வகுப்பை சேர்ந்த.... என்று எழுதுகிறீர்கள்.... இது எந்த தர்மம்.. யுத்த தர்மமா... மனு தர்மமா... (அ) சனாதன தர்மமா.... இந்த தமிழால் யாருக்கு லாபம் ஏற்ப்படுத்த முயல்கிறீர்கள்...அதை கண்டித்து யார் தலையங்கம் எழுதுவது.... "முதலில் உன் கண்ணில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு, அடுத்தவனுக்கு முயற்சி செய்"!!!!!.
By manu
10/9/2010 11:26:00 AM
SERUPPADI!!! ENTHIRAKKUM, gOVERNMENTUKKUM!!!! !!!!!! !!!!!!!!! !!!!!!
By vbdoss
10/9/2010 11:09:00 AM
Excellent.
By Muralikumar
10/9/2010 11:09:00 AM
கலைஞர் தமிழ் பெயர் வைப்பது அவர் குடும்ப நலனுக்குத்தான்,எந்திரன் வரி கலாநிதி பாக்கெட்டினுள், வைகோவை,ராஜேந்தரை,ராதாரவியை, அன்பழகனை இன்னும் பலரை ஓரம் கட்டி ஸ்டாலின்,கனிமொழி,அழகிரி,மாறன் குடும்பம் என எப்பவோ அண்ணாவின் திமுக ஏப்பம் விடப்பட்டது,பத்திரிக்கை திமுக ஜால்ரா பாடாவிட்டால் "அதோகதி"தான்,எனவே தினமணி ஊதும் சங்கு செவிடன் காதில் ஊதும் சங்கே,தலைவர்கள் யாருக்கும் நாட்டுப்பற்று அறவேயில்லை,இருந்தால் தம்மை தேர்ந்தெடுத்த நாட்டுமக்களுக்கு துரோகம் இழைக்கமாட்டார்கள்,இன உணர்வு ஒழிந்து, தம் குடும்ப உறவு எப்போது மேலோங்கியதோ அப்போதே உண்மை திமுக செத்துவிட்டது,அண்ணாவோடு,வாழ்க அண்ணாநாமம்,மோசமான தலைவர்கள் உள்ள சமுதாயம், தலைவர்களே இல்லாத சமுதாயத்தவர்களை விட மோசமானவர்கள்,
By அன்புமணி
10/9/2010 10:50:00 AM
Frist of all medias, Papers and TV Channels have not guts to raise any issue against MK & Co., . That is main issue.
By Noushad
10/9/2010 10:45:00 AM
Don't ask any question against them. Because tamil is ruling by M.K. TRADING COMPANY
By NOUSHAD
10/9/2010 10:42:00 AM
tamilukum labam illay nattu makkalukum labam illay ivvlavu selavu saidu padam edupavargal vari katuvathal ondrum kuraindu poi veda mattargal
By amjath
10/9/2010 10:31:00 AM
மா பாஸ்கரன் அவர்களே, உங்களை துண்டுபோட வைத்தவர்கள் யார்? திரைப்பட துறையினரும் விநியோகஸ்தர்களும்... ரசிகர்களும் இல்லை, பத்திரிக்கைகளும் இல்லை... இன்று இணையதளங்களில் உடனே வெளியாகிவிடுகிறது. தெருக்களிலும் CD / DVD கிடைக்கின்றன. படத்தை ஒருமுறை இணையதளத்தில் பார்த்துவிட்டாலும், 'படம் நன்றாக இருக்கிறது' என்று அரங்குகளுக்கு செல்கிற பல நண்பர்களை பார்த்திருக்கிறேன். படம் நன்றாக இருந்தால் எப்படியும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள். தமிழ்பெயர்களுக்கு வரிச்சலுகை தருவதற்கு முன்புவேண்டுமானால் உங்கள் திரையரங்குக்கு மக்கள் வந்திருக்கலாம். வரிச்சலுகைக்கு பிறகுதான் குறைந்திருப்பார்கள். கவனித்து பாரும். இந்த வரிச்சலுகையினால், திரைத்துறையின் கடைநிலை ஊழியர்கள் வளர போகிறார்களா? இல்லவே இல்லை. முன்பெல்லாம் ஒரு படம் எத்தனை நாள் ஓடுகிறது என்பது பெருமையாக இருந்தது. இன்றெல்லாம் முதல் நாள் டிக்கெட்டின் விலை எவ்வளவு என்பதுதான் பெருமையாக இருக்கிறது. இந்த களேபரத்தில் வீழ்ந்து போன டூரிங் டாக்கிச்காரர்களில் நீரும் ஒருவர்.
By kumaran
10/9/2010 10:22:00 AM
Exempting entertainment tax in the name of Tamil promotion is a biggest fraud ever committed by Karunanidhi govt. at the cost of excequer.In fact there should be a CBI enquiry to go into the ramification of this fraud.
By annakan
10/9/2010 10:22:00 AM
There is no point in shouting from the roof top for this type of loot. All is done with the blessings of our CM for the benefit of his family members only. After all he is not giving it from his own wealth. He is giving away our money for the benefit of few cheats.Rajni is not a holy cow. Only tamilians are fools and can be fooled permanently
By kamaraj
10/9/2010 10:20:00 AM
தமிழ் எங்கே வளர்கிறது? அல்லது அரசுக்கு என்ன கிடைக்கிறது? தமிழன் பொறுமைசாலி, அவன் காதுல கார் கூட ஓட்டலாம்.
By kumaran
10/9/2010 9:59:00 AM
முதன்முதலில், ஒருவன் தன் சொந்த மொழியில் பேசுவது என்பது அவனுடைய கடமை. அதுவே அவனுக்கு இயல்பு. அது போலவே, தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். இதில் பெருமை என்ன வேண்டிகிடக்கு? தமிழில் பெயர் வைக்காமல் போனால் அவமானம். அப்படி வைத்து அதற்கு வரிவிலக்கு செய்தால் அதைவிட அவமானம். அது ஒருவகை லஞ்சமாக தெரிகிறதே. அடிப்படையிலேயே தவறு. இன்று திரைப்படங்களை தயாரித்து வெளியிடபடுவது பெரும்பாலும் ஆளும்கட்சி குடும்பத்தினர்களும் உறவினர்களும்தான். வரிச்சலுகைகளால் அனுபவிக்கபோவது யார்?. Quarter cutting என்று ஒரு படத்திற்கும் வரிச்சலுகை, 'வ' என்று பெயர் சூட்டபட்டிருப்பதால். உயிர், சிந்து சமவெளி, மிருகம், இந்த படங்களெல்லாம் அழகான தமிழ் பெயர்கள். ஆனால் குடும்பங்களோட சேர்ந்து பார்க்க முடியுமா? எந்திரன் போன்ற வெகுஜன படங்களை எடுப்பவர்கள், போட்ட முதலுக்கான பணத்தை, அதிக விலை வைத்தும், அதிக அரங்குகளில் வெளியிட்டும் ஒரே நாளில் அள்ளிவிடுகிறார்கள். அவர்கள் என்றும் எதையும் இழக்கபோவதில்லை. இவைகளுக்கெல்லாம், வரிவிலக்கு என்றால், அநியாயம். அக்கிரமம். தமிழ் எங்கே வளர்கிறது? அல்லது அரசுக்கு என்ன கிடைக்கிறது? தமிழ
By kumaran
10/9/2010 9:57:00 AM
THE PRESENT DAY TAMIL CINEMA IS , CONTENT WISE BULL SHIT. IT IS A PURE ENTERTAINMENT SECTOR.MOST OF THE CINE FELLOWS ARE TAX EVADERS INCLUDING OUR VIJAYAKANT. BUT ALL CINE WATCHERS ARE TAX PAYERS. MU KA WANTED TO FAVOUR CINE INDUSTRY AND HE GAVE THIS CONCESSION. ALL THESE DAYS THE MEDIA WAS KEEPING QUIET INSTEAD OF PROTESTING IMMEDIATELY. BUT BETTER LATE THAN NEVER.THE CINE FELLOWS ARE MOSTLY WITH OUT SCRUPLES BARRING A HANDFUL FEW. ASK PMK RAMADOSS. AS MU KA IS FROM CINE INDUSTRY HE KEEPS ON GIVING FREBIES TO THEM MAKING TAMILNADU BANK CRUPT.
By WILLIAMS R
10/9/2010 9:45:00 AM
தங்களுடைய கட்டுரையில் தெரிவித்தபடி, பாரதி, பெரியார் மக்களை சென்றடைந்த, வெற்றி பெற்ற படங்கள் என்று யார் சொன்னது... பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கும் அத்துறைக்கு உதவி செய்வதில் தவறில்லை"(பொய்மையும் வாய்மையிடத்த புரைத்தீர்த்த நன்மை பயக்கும் எணின்".) பல கோடி சம்பளம் வாங்கும் உச்ச நடிகர்களை கண்டிப்பதை விட்டு,விட்டு, பல ஆயிரம் பேருக்கு வெலை கொடுக்கும் இத்துறைக்கு உதவி செய்வதை குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை. மன்னிக்கவும்....கடந்த கால தலையங்கங்கள் போலவே இதுவும் உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"....
By mani
10/9/2010 9:32:00 AM
Sir, The editorial is really excellent. The government should take note of the same and do real and genuine service for the development of tamil language. Thanks with regards J.Venkat
By J.Venkat
10/9/2010 9:22:00 AM
அரசாங்கத்தால் எந்த உதவியும் பெறாமல் பல வழிகளில் அரசாக்கத்திற்றகுவருவாய் தரும் ஒரு தொழில் சினிமா துறை. நசிந்து வந்த தொழிலை இன்று வாழவைத்தவர் கலைஞர். தேவையில்லாமல் எந்திரன் தயாரிப்பாளர் மேல் உள்ள பொறாமையால் தினமணியும், அதன் கைக்கூலிகளும் வாய்க்குவந்தபடி எழுதுகின்றீர்கள் ஒரு மாதக்காலமாக. சரி நான் கேட்கிறேன் உங்களை அரசாங்கத்திடம் மானியவிலையில் காகிதம் வாங்கிவிட்டு அதனைவெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்றுவிட்டு, மண்ணெண்ய் வாடை வீசும், சாணிக்கலரில் மறுபயனீட்டுத்தாளில், தரமற்றத்தாளில், தரமற்ற செய்திகளை வெளியிட்டு கொள்ளயடிக்கும் தினமணி நாணயமான நிறுவனமா? இதற்கு நேரடியாக பதில் கூறி தலையங்கம் எழுதவும். இலவச டிவியில்மக்கள் அனைத்துச்செய்தி சேனல்களிலும் முழுமையாத்தெரிந்து கொண்ட செய்தியை நீக்கள் வெளியிடுகின்றீரகள். அதனை அநியாயவிலைக்கு வாங்கிப்படிக்க வேண்டுமா? நியாயமா? இதற்கு தினமணியின் பதில் என்ன? கைக்கூலிகளின் பதில் என்ன?என்னுடைய இரண்டி டூரிங்டாக்கீஸிலும் வாழைப்போட்டு விட்டு, இப்போது தலையில் துண்டுபோட்டுள்ள முதலாளி நான். மாரிமுத்து பாஸ்கரன்,திருவிடைமருதூர், தஞ்சைஜில்லா-
By மா.பாஸ்கரன்
10/9/2010 9:15:00 AM
முழுக்க முழுக்க உண்மை. அரசு எந்திரத்தை ஆட்சியில் உள்ளவர்களின் சொந்த பயனுக்காக உபயோகப்படுத்துவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இந்த நிலை மாறும் பொழுதான் தமிழன் முன்னேறுவான். வரிகளை குறைப்பதால் அல்ல.
By கோவைக்காரன்
10/9/2010 8:24:00 AM
கலைத்துறையை சார்ந்தவர் முதல்வராக இருப்பதால் முந்தைய கலைத்துறையை சார்ந்த முதல்வர்கள் அந்த துறைக்கு என்ன செய்தார்களோ அதைவிட அதிகமாக செய்தார் செய்கிறார் செய்வார் என துறையினர் கூறவேண்டும். அவர்கள் ஆதரவு தங்களுக்கு வாக்குகளாக ”பின்னுட்டமாக (FeedBack)”கிடைக்க வேண்டும் என்பதுவே. எனவே, பலன் இல்லாமல் இல்லை. கேளிக்கை வரி என்பது தயாரி்ப்பாளருக்கு சுமை கிடையாது. அதை செலுத்தப்போவது ரசிகனே. பின் எதற்றாக விலக்கு? வசூலிக்கப்படும் கட்டணம் ஒருபோதும் அரசுக்கு முழுமையக செலுத்தப்பட்டது கிடையாதே! வரிவிலக்கினால் ரசிகனுக்கு பலன் கிடைத்திருக்க வேண்டும ஆனால் உண்மையில் ஒன்றும் கிடையாது. உள்ளாட்சிகளின் வரிவருவாய் பாதிப்புகள் அணைத்தும் அரசால் ஈடு செய்யப்படுவதில்லை. எனவே இதனால் தயாரிப்பாளருக்கு தியோட்டர் உரிமையாளருக்கு தான் வருவாய் உள்ளாட்சிகளுக்கும் ரசிகர்களுக்கும் தன் பாதிப்பு.
By Unmai
10/9/2010 8:21:00 AM
Instead of this if tax on petrol, diesel is reduced all people will be directly or indirectly benefited.
By gopalan
10/9/2010 8:19:00 AM
முறுக்கு மீசை வைத்த ஆசிரியர் தோற்றத்தில் மட்டும் இல்லை..எழுத்திலும் இருக்கிறார் என்பதை தினமணி நிரூபித்து விட்டது.தி.மு.க மற்றும் அ.தி.மு.க யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த திரைத்துறையினர் காட்டவேண்டியதைக்காட்டி,புகழ்பாடி,ஆட்சியாளர்களை மனம் குளிர வைத்து விடுகின்றனர். தமிழகத்தில் மாபெரும் கொள்ளை அரசு ஆதரவுடன் நடந்து வருகிறது.தமிழ் நாடு தவிர இ ந்தியாவில் வேறு எங்கேயும் இல்லாத சலுகை இங்கே மட்டும் ஏன்? அபிமன்யு/திருப்பூர்.
By apimanyu
10/9/2010 8:13:00 AM
சிறந்த ஆசிரியவுரை. தமிழ்ப்பெயர் என்று குறிப்பிட்டு வரிநீக்கம் பெற்ற பல படங்களின் பெயர்களும் பிறமொழிச்சொற்கள் என்பதை அறிய வேண்டும். மு.இளங்கோவன் புதுச்சேரி
By mu.elangovan
10/9/2010 8:00:00 AM
தொடர்க ! வெல்க ! எந்திரன் எதிர்ப்புத் தொண்டு !
By vasudevan.mu
10/9/2010 7:51:00 AM
Dear Editor, Your reason sounds good and valid. The government should revise its decision and should make the rule as it was. Film like "entheran" should not be given any tax exemptions. Xavier. P.J
By Xavier. P.J
10/9/2010 7:37:00 AM
Tamil Film industry is dominated by one family. Thus this concession even a infant knew it.
By K HARIPRASATH
10/9/2010 7:29:00 AM
இப்போது இதைப் பற்றி தலையங்கம் எழுதுவது ஏன் என்று கேட்போர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ரூ 160 கோடியில் எடுக்கப்பட்ட எந்திரனுக்கு வரி விலக்கு கொடுக்கப்படுவது முட்டாள்தனம் என்று இப்போது சொன்னால் அது எல்லோருக்கும் எளிதில் புரியும். இதற்கு முன்பு இந்த வரி விலக்கைப் பற்றி யோசிக்காமல் இருந்திருக்கலாம், அதற்காக எப்போதுமே கேட்கக் கூடாது என்பது ஏற்கத்தக்க வாதமல்ல.
By பாஸ்கரன்
10/9/2010 6:52:00 AM
this is one of the way to take gov money by the karunanithi and family.....it is sciencetific corruption as told by sakkaria commission
By avudaiappan
10/9/2010 6:50:00 AM
திரைப்படத்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்படும் வரிச்சலுகையை தமிழ்மொழியின் வளர்ச்சியென்ற ஒரேயொரு கோணத்தில் மட்டுமேபார்த்து இக்கட்டுரை விமர்சித்துள்ளது.தமிழில் பெயர்வைத்தால் கேளிக்கை வரிவிலக்கென்பது உப்புக்குசப்பாணியான ஒரு காரணி.உண்மையான காரணம் அதுவாக இருக்கமுடியாது.பல லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கும் இத்துறை சமீபகாலமாய் மிகப்பெரும்சரிவை நோக்கிச்செல்லுகின்றதென்பது பாமரர்களுக்கும் புரியும் எளிய உண்மை.வணிகவளாகங்களாகவோ,மூடப்பட்டோ வரும் திரையரங்கங்களும்,வெளியாகும் படங்களில் பெரும்பாலானவை போட்டமுதல் கூட தேறாமல் போண்டியாவதுமே இதற்குச்சாட்சி.சின்னத்திரையில் தொடங்கி "தம்படிகூட" பெறாத நம் கதாநாயகர்களின் சம்பளம்வரை இச்சரிவுக்குபலகாரணங்களிருந்தாலும் நலிந்துவரும் ஒருதுறைக்கு முட்டுக்கொடுக்கும் ஒருசெயலாகவும் தமிழக அரசின் இக்கேளிக்கைவரிவிலக்கை எடுத்துக்கொள்ளலாம்.மாயன்
By மாயன்
10/9/2010 6:43:00 AM
வெளிநாட்டு நிறுவனங்கள், வேலைவாய்ப்புகளைத்தருகின்றகாரணங்களால் போட்டிபோட்டுக்கொண்டு மாநிலங்களத்தனையும் பல்வேறு சலுகைகைகளை வாரிவழங்கிக் கவரும் இக்காலகட்டத்தில் நம்மிடமேயுள்ள ஒருதுறை அழிந்துபோகாமல் காக்கும் ஒருமுயற்சியாகவும் இவ்வரிச்சலுகையைக்கொள்ளலாம். மாயன்.
By மாயன்
10/9/2010 6:40:00 AM
அரசுக்கு வேண்டுமானால் வருவாய் இழப்பாக இருக்கலாம், கருணாநிதி குடும்பத்துக்கு வருவாய் அதிகரிப்புதானே? விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதில் வித்தகர் கருணாநிதி.
By உத்தமன்
10/9/2010 6:37:00 AM
அருமையான, சாட்டையடி தலையங்கம். இந்த மக்கள் விரோத, ஊழல் மலிந்த, தவறான நிர்வாக முறை கொண்ட ஆட்சியை தொடர்ந்து எதிர்க்கும் தினமணிக்குப் பாராட்டுக்கள். அத்தோடு இன்று சன் பிக்சர்ஸ் இரண்டு நாளிதழ்களுக்கு நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகவும் படித்தேன். இந்த பிரச்சனையில் வாசகர்களின் முழுமையான ஆதரவு தினமணிக்கு நிச்சயம் உண்டு.
By பாஸ்கரன்
10/9/2010 6:36:00 AM
So this thought dawned on you just now after enthiran release!!!. Whatever bad you write about this movie or give any number of links to watch it online, or sit or stand upside down, you cannot succeed in defeating this movie. The movie is already a grand hit and has been internationally acclaimed. Before the power of the people who made it such a big sucess, you are a BIG ZERO...Dei Editor thevidayapaiaya.. naye.. link koduthu panam sampathikama, un amma, pondatti, ponnu, akka, thangachi ellarium thozhilukku annupu... 5, 10 vadhu kedikkum!!!!
By vijayfan
10/9/2010 6:25:00 AM
நல்ல கேள்வி. தமிழுக்கு லாபம் கிடையாது. ஆனால் "முதல் திராவிட குடும்பத்துக்கு" பெருத்த லாபம். எப்படி "திராவிடம்" என்று இல்லாத ஒன்றை சொல்லி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்தார்களோ அதை போல் தமிழை வளர்க்கிறோம் என்று "முதல் திராவிட குடும்பத்தை" வளர்க்கிறார்கள்.
By selvan
10/9/2010 6:13:00 AM
Dear Sir, The ruling party is keen on supporting populist schemes but not on good govvernance.Who told you that the motive behind their announcement was to promote Tamil? Good cinema propagating and promoting knowledge to the masses would be inconvenient to the ruling party. If another party comes to power, they can easily blame their predecessors.
By Madhavn
10/9/2010 4:15:00 AM
THE CONCEPT OF GIVING AWAY FUNDS TO FILM PRODUCERS JUST FOR THE NAME TITLE IN TAMIL IS HIGHLY IDIOTIC AND NONSENE. RAJINI GETS CRORES OF RUPEES FOR ANY OF HIS MOVIES AND ALL HIS MOVIES ARE HIGH BUDGETED MOVIES PRODUCED BY CROREPATHIS. BUT POOR TAX PAYERS MONEY IS BEING AGAIN GIVEN TO THEM, JUST BECAUSE THEIR MOVIE TITLE IS IN TAMIL - BUT SHOOTING IS IN OVERSEAS. WHAT NONSENSE CONCEPT?? THERE SHOULD BE A RULE : THE PRODUCTION COST MUST BE WIHTIN THIS MUCH RUPEES, ALL SONGS MUST BE IN TAMIL WIHTOUT MIX OF ENGLISH WORD, SHOTTING MUST BE WITHIN TAMIL NADU ONLY. ( THIS FELLOW VAIRAMUTHU, BLOODY CHEATER IN NAME OT TAMIL POET, TALKS IN VAKKANAI TAMIL, BUT FOR HIS EATING SHITTY FOOD, HE WILL MIX ENGLISH WORDS IN HIS LYRICS!!) BUT THESE FELLOWS RAJINI, ALL TOP FILM COMPANIES WASH THE ASSHOLE OF KARUNANIDHI AND LOOT GOVT MONEY JUST BY MAKING THE TITLE IN TAMIL. HIGHLY IDIOTIC NONSENSE AND ABSURD.
By vana
10/9/2010 4:04:00 AM
THE CONCEPT OF GIVING AWAY FUNDS TO FILM PRODUCERS JUST FOR THE NAME TITLE IN TAMIL IS HIGHLY IDIOTIC AND NONSENE. RAJINI GETS CRORES OF RUPEES FOR ANY OF HIS MOVIES AND ALL HIS MOVIES ARE HIGH BUDGETED MOVIES PRODUCED BY CROREPATHIS. BUT POOR TAX PAYERS MONEY IS BEING AGAIN GIVEN TO THEM, JUST BECAUSE THEIR MOVIE TITLE IS IN TAMIL - BUT SHOOTING IS IN OVERSEAS. WHAT NONSENSE CONCEPT?? THERE SHOULD BE A RULE : THE PRODUCTION COST MUST BE WIHTIN THIS MUCH RUPEES, ALL SONGS MUST BE IN TAMIL WIHTOUT MIX OF ENGLISH WORD, SHOTTING MUST BE WITHIN TAMIL NADU ONLY. ( THIS FELLOW VAIRAMUTHU, BLOODY CHEATER IN NAME OT TAMIL POET, TALKS IN VAKKANAI TAMIL, BUT FOR HIS EATING SHITTY FOOD, HE WILL MIX ENGLISH WORDS IN HIS LYRICS!!) BUT THESE FELLOWS RAJINI, ALL TOP FILM COMPANIES WASH THE ASSHOLE OF KARUNANIDHI AND LOOT GOVT MONEY JUST BY MAKING THE TITLE IN TAMIL. HIGHLY IDIOTIC NONSENSE AND ABSURD.
By vana
10/9/2010 4:01:00 AM
சும்மா இருய்யா, இப்பதான் நானே இந்த வாலி,வைரமுத்து,பாரதிராஜா,சந்திரசேகரு, ரஜினி,கமலு, ரகுமானு, கௌதமுனு எல்லாப் பயலுகளையும் தமிழு,மாநாடு, பாராட்டு விழா, விருது, அது இதுன்னு சொல்லி சரிக்கட்டி, துதி பாடிகளாகவும்,பிரசார பீரங்கியாகவும் திரைத்துறை ஓட்டுக்காக சரிகட்டி வைச்சிருக்கேன், உனக்கெதாவது வேனும்ன கொல்லப்பக்கமா வா, இல்லேன்னா என்னைப் பத்தி பாராட்டி தேர்தல் நேரத்துல நாலு கட்டுரை எழுது. உனக்கும் ஏதாவது வரிச் சலுகைக்கு ஏற்பாடு பண்றேன். சும்மா இருக்கமா, நீயே உள்ள புகுந்து ஆட்டத்த கலைச்சுடுவ போல..
By மு.க
10/9/2010 3:39:00 AM
FIRST OF ALL ,THE WORD " ENDRAN " IS NOT AT ALL A TAMIL WORD.IT IS A CORRUPT WORD FROM SANSKRIT WORD "YANTRA".IT IS NOT A ORIGINAL TAMIL WORD.SO,THE TAMILNADU GOVERNMENT CANCEL THE TAX EXEMPTION TO THIS FILM " ENDRAN ". FIRSTLY,THE GOVERNMENT MUST REVIEW WHICH IS TAMIL WORD AND WHICH IS THE CORRUPT WORD FROM OTHER LANGUAGES.
By krishnamoorthy s p
10/9/2010 3:33:00 AM
Boss engira Bhaskaran (Stalin movie) , Va Quarter cutting, Great Tamil spirit, Muttal tamizha nee thiruntha mattai
By SN
10/9/2010 3:29:00 AM
முதல்வர் ஐயா, வணக்கமுங்க..அதென்னெங்க கோடிகளில் புரளும் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைச்சா வரி விலக்கு, ஆயிரம்,லட்சங்களில் நடைபெறும் சிறுகடைகளுக்கு கூட தமிழில் பெயர் வைக்காவிட்டால் அபராதம். உங்களுக்கே அராஜகமா தெரியலையா. இது தான் சமூக நீதியா? மருத்துவர் ஐயா நீங்கள் கூட குரல் கொடுக்கவில்லை?
By கடைக்கோடி குடிமகன்
10/9/2010 3:16:00 AM
ஐயகோ ஐயகோ தமிழும் தமிழருமா?? எங்கே எங்கே திராவிட தெலுங்கரான என் அன்பு பெரியார் ஏன் ஏன் திராவிட தெலுங்கரான என் அன்புக்குரிய அண்ணா அவர்கள் என்னிடம் கட்சியை ஒப்படைக்கும் போது கொடுத்த வாக்குறிதியை சத்தியத்தை மறப்பேனா, அது என்ன சத்தியம் வாக்குறுதி இந்த தினமணி பத்திரிகைக்கு தெரியுமா, தமிழாவது தமிழராவது மண்ணாங்கட்டி, திராவிட தெலுங்கர் ஏன் ஏன் என் உயிர் மூச்சு என் உதிரம் பெரியார் அண்ணா என்னிடம் வாங்கிய அந்த வாக்குறிதியும் சத்தியத்தையும் என் வாழையடி வாழையாக பல மனைவிமாருக்கு பிறந்த என் வாருசுகள் காக்க வேண்டும், என் வாருசுக்களுக்கு கூறிய இரகசியத்தை என் நாவால் கூற மாட்டேன் ஆனால் என் வீட்டு வேலைகார‌ தமிழ் நாய் ஒட்டு கேட்டுவிட்டது,
By thamilan
10/9/2010 3:16:00 AM
பெரியார் அண்ணா வளியில் தமிழை கொன்று தமிழை சிதைத்து சினாபின்ன மாக்குவதாக வாக்கு கொடுத்து அதை எத்தனை தமிழரை கொன்று நிறைவேற்றினேன், ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியான தமிழை ,வட்டார மொழி என்று கூறி ,பெரும் நிலப்பரப்பை கேரளா ஆந்திரா கர்நாடகத்துக்கு விட்டு கொடுத்தேன். திருப்பதி கோவிலை கூட என் இனத்திற்காக விட்டு கொடுத்தேன், மத்தியரசு கடன் வேண்டும் திருப்பதி கோவிலின் சுத்து மதிலிலிருக்கும் தமிழ் தேவார திருவாசக திருக்குறளை தகரம் இட்டு அடைத்து தமிழை மறைக்க சொன்னேன், என் இனத்துக்காக ஏன் ஏன் என் மகன் மகள் இன்றும் என் வீட்டில் என் தாய்மொழியான‌ சுந்தர தெலுங்கில் தான் உரையாடி மகிழும் படி கேட்டுள்ளேன்,அதனால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் வட்டாரமொழியுடன் சேர்த்து.
By thamilan
10/9/2010 3:15:00 AM
தமிழரின் 1400 தமிழ் பள்ளிகளுக்கு மூடுவிழா வைத்து. அதனை ஆங்கில பள்ளிகளாக்கிய என் திராவிட இனத்துக்கு இதைவிட யார் என்ன செய்வர், அத்தேடு விட்டேனா, தனிநாடு கேட்டேன் இல்லை இல்லை சுயாட்சி யாருக்கு எனது குடும்பத்திற்கு, சுயாட்சி கேட்டு கட்சிக்கு பாதகம் வந்தால் ஐயகோ ஐயகோ என் திராவிட தெலுங்கர் எங்கே போவது, அதனால், என் குடும்பத்துக்கு மாத்திரம் மத்தியிலும் மானிலத்திலிம் விண்ணிலும் மண்ணிலும் சுயாட்சி கேட்டு பெறுவதை பெற்றாகியாகி விட்டது, பரலோக பதவிக்காக
By thamilan
10/9/2010 3:13:00 AM
செம்மொழியை வைத்து ஒரு நாடகம் ஐயகோ நடிக்க சிவாஜி இல்லையே ஐயகோ ஐயகோ.வாழையடி வாழையாக திராவிட தெலுங்கை காக்க என் மகனை அரியணையில் ஏற்றி வைக்க தமிழருடைய தமிழ்நாட்டில் 20 வீதம் அற்புதம் அற்புதம் இதனால் அண்ணா பெரியாரின் பக்கத்தில் தமிழனுடைய சரித்திரத்த்கை அழித்து சிதைத்து அவன் நாட்டில் மூலைக்கு மூலை எனக்கும் ... சிலைவைத்து அழகுபார்த்து இன்னும் எனக்கு ஈரேழு பதின்நான்கு பிறப்பு தேவை திராவிட தெலுங்கை வளர்த்து தமிழனை இருந்த இடம் தெரியாமல் அழிப்பதற்கு , ஐயகோ ஐயகோ இப்போது மட்டும் தமிழரை தமிழை நின்மதியாக இருக்க விடுவேணா??
By thamilan
10/9/2010 3:12:00 AM
Sir, your thalaiangam is right. But my concern is you have been quiet for 4 years. Now when Enthiran is released you are conveying indirect message.This is because you are anti-sun Tv network. If your concerns are genuine you should have raised the issue 4 years ago. No need for your crocodile tears.
By kamachi
10/9/2010 3:03:00 AM
well said
By veera
10/9/2010 2:47:00 AM
Weldon Dinamani.............
By sainny jain
10/9/2010 1:29:00 AM
Kindly send this to our Tamil Nadu Chief
By Nour
10/9/2010 1:03:00 AM
யாருக்கு இந்த தலையங்கம் கூத்தாடிகளை நல்வழி படுத்தவா அல்லது அரசுக்கு எச்சறிக்கையா சினமாதுறை சாராத ஒருவர் நம் தமிழ்நாடின் முதல்வர் ஆனால்மட்டுமெ இதற்கு நல்ல முடிவு கிடைக்கும், இப்பொது உள்ள வரிவிலக்கு முறை மக்கள் வரிபணம்தான் வீனகுறது ,,ஐயா ராமதாஸ்இதற்கு நல்ல முடிவு கூராவும்
By ரிஜி.கரியாப்பட்டினம்
10/8/2010 11:39:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திரு சரவணன் அவர்களே! நாம் எண்ணற்ற தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதச் சொற்களாகத் தவறாகக் கருதி வருகிறோம். சான்றாக வருடை என்றால் ஆட்டைக் குறிக்கும். ஆடு போல் காட்சியளிக்கும் நட்சத்திரக் கூட்மும் வருடை எனப்படும். வருடை காட்சியளிக்கும் பொழுது தொடங்கும் காலம் வருடம் எனப்படும். இதனைச் சமற்கிருதததில் வருஷம் என்றதால் வருடம் என்பதைச் சமற்கிருதம் எனத் தவறாகக் கருதுகிறோம். இதுபோல்தான் இயந்திரம் என்னும் தமிழ்ச் சொல்லைத் தவறாக அயற் சொல்லாகக் கருதுவதும். இருப்பினும் நீங்கள் குறிப்பிட்டாற் போன்று சட்டம் கொண்டு வந்தால் போதும். ஆனால் ஆட்சியாளர்க்கு மனம் இருக்காது. திரைப்பட நிறுவனங்களின் பெயர்களையே ஆங்கிலத்தில் வைப்பவர்களுக்குத் தமிழில் படப்பெயர் சூட்ட சட்டம் கொண்டுவர மனமா வரும்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2010 6:29:00 AM
Another excellent editorial. Are the government personeels and politicians patriotic and have social conscience enough to act on your suggestion?
By Raj
10/10/2010 1:31:00 AM
Instead of giving tax relief to the flims which are having title name in absolute tamil, the Government should tax double time for the flims which are having title name in English or not having in absolute tamil. This is the wise decision, if the Government or Ruler really has interest in developing Tamil Language. Government also get more revenue through double tax. If any one wish english title is suitable to their movie like "quarter cutting" let them pay double tax and keep the name as their wish.
By S Murthy
10/10/2010 12:58:00 AM
குஆடேருக்கும், பிரியாணிக்கும் ஓட்டு போடுற சொஅரனை கெட்ட தமிழன் இருக்கும் வரை கருணா ,ஜெயா கட்சிகள் அராஜகம் ஒழியாது.
By கட்ட துரை
10/10/2010 12:10:00 AM
மொழி-ய வைத்து பிழைப்பு நடத்தி இன்னிக்கு உலக பணக்கார வரிசையில் ஒரு குடும்பம் இருக்குதுனா அது இந்த கருணாநிதி குடும்பம்தான்.சினிமா ஆதிக்கம் ஒழியனும் .நாடு உருப்படுனும்
By கட்ட துரை
10/10/2010 12:01:00 AM
I totally agree with you. But please note that after the withdrawal of the Entertainment tax completely, the cinema theaters were permitted to collect a maximum admission rate between Rs.50 and 85/- depending upon the category. (G.O (Ms) No.1241 Dated 25.12.2006 and GO 1265 Dt. 31.12.2006)and now the theaters cannot increase the rates. Unfortuantely many people think that the theaters were permitted to increase the rates during the first few days but it is Wrong. Now what the theaters collecting were totally illegal and was done without minding any Rules. Mathi
By mathi
10/9/2010 11:59:00 PM
ஐயா ராமதாசை ஆச்சில உக்கார வையுங்க , இந்த சினிமா நாதாரிங்கல்க்கு அவருதான் சரியான ஆப்பு வைப்பாரு
By கட்ட துரை
10/9/2010 11:51:00 PM
who is thinking of tamil ?only papers like dinamani is expressing such matters.the real botheration must come from the public.you are showing the way...let them follow.thats all.
By rangaraj
10/9/2010 11:27:00 PM
450 crores was spent in name of Tamil conference. What is real achievement. There is still no online tool to do translation from other languages to Tamil. Only Hindi language has this tool in India. Tamil technical terms have not been standardized. Tamil not compulsory in Tamil Nadu, on other hand Hindi is compulsory in Tamil Nadu CBSE schools, more and more schools are shifting to CBSE and dropping Tamil. Tamil translation in signboards is not required through Tamil Nadu. Everything in the name of Tamil by this government is a big fraud.
By DMK Drama
10/9/2010 10:29:00 PM
திரு.இலக்குவனார் அவர்களே, இயந்திரம் என்ற சொல்லையே நாம் தமிழ்ச்சொல்லாகக் கருதமுடியாது. 'யந்த்ரா' என்ற சமஸ்கிருத சொல்லின் தமிழ்வாசிப்புதான் 'யந்திரம்/இயந்திரம்' எல்லாம். பிறகெப்படி 'எந்திரன்' தமிழ்ச்சொல்லாகும்? தமிழில் வெளியிடப்படும் படங்களுக்கு தமிழ்ப்பெயர்தான் வைக்கவேண்டும் என்று சட்டம் போட்டுவிடலாமே..! எதற்கு வரிவிலக்கு...? ஏன் மக்கள் வயிற்றில் அடித்து சினிமாக்காரர்கள் பிழைக்க வழிசெய்ய வேண்டும்? அவர்கள் எம் அடித்தட்டு மக்கள் போல பிழைக்க நாதியற்றா இருக்கிறார்கள்..? அவர்களின் SCV பிழைப்புக்காக "இலவச கலர் டிவி" என்ற புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டுவந்தவர்கள், அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும் சினிமாவில் இறங்குவதை மனதில்கொண்டுதான் இப்படி வரிவிலக்கு அளித்திருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஆச்சரியமில்லை!
By சரவணன், சென்னை
10/9/2010 10:26:00 PM
Good article. Worth publising. What is the reaction to this from the govt.? Who will ensure that the money collected as Tax is paid to the government? Many say that only children will like this movie. Media is misused - readers are confused.
By Dr.S.Ashokan
10/9/2010 9:37:00 PM
டாரண்ட் பயன்படுத்தி டவுன்லோடு செய்து பார்க்கவும். சீனாக்காரன் போட்ட அதே படம், அப்படியே இருக்கு, www.torrenthound.com/hash/3ce836c784fdb9ef820904a313cd47c4fcf31049/torrent-info/Endhiran-2010-DVDScr-Quality-TCRip-1CD-x264-~-Tamil-Movie
By இடி அமீன், உகாண்டா.
10/9/2010 9:35:00 PM
good editorial.keep it up.thats why in india then british govt to appointed a person to head for viilage are town or state a good and respectable persons but now we the tamils.....? uneducated our relatives are voting for money and briyani and the educated inttelectuals tamil relatives are not going for voting.thats why this type of PEAYATCHI IS running. what about our govt owned cable tv, spent around about how many crores?people tax money wasted by this govt,because of their family dispute.
By bparani
10/9/2010 8:44:00 PM
good editorial.keep it up.thats why in india then british govt to appointed a person to head for viilage are town or state a good and respectable persons but now we the tamils.....? uneducated our relatives are voting for money and briyani and the educated inttelectuals tamil relatives are not going for voting.thats why this type of PEAYATCHI IS running. what about our govt owned cable tv, spent around about how many crores?people tax money wasted by this govt,because of their family dispute.
By bparan
10/9/2010 8:44:00 PM
good article... keep on writing...
By Veeraa ,Thanjai ( Singapore )
10/9/2010 6:55:00 PM
unakku enna endhiran mel appadi oru erichchal ???
By mallu
10/9/2010 4:29:00 PM