லசந்தவை போட்டுத்தள்ளியது நானே அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்க அறிவிப்பு |
பிரசுரித்த திகதி : 14 Jul 2009 |
களனி, ஹூனுபிட்டியவில் ச.தொ.ச நிலையமொன்றைத் திறந்துவைக்கும் நிகழ்விற்காக கடந்த வியாழக்கிழமை (09) ஹூனுப்பிட்டிய பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டமொன்றிலேயே அமைச்சர் மேர்வின் சில்வா இதனைக் கூறியுள்ளார். மேர்வின் சில்வாவின் இந்த பகிரங்க உரையின் ஒலிநாடவை ஜனாதிபதிக்கும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் பொதுச் செயலருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக, இந்தத் தகவல்களை வழங்கிய களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரை இந்தக் கூட்டத்தின்போது அமைச்சர் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும் வரையில் தாம் யாருக்கும் அஞ்சப்போவதில்லை எனவும், எந்தவொரு சக்திக்கும் அடிபணியப் போவதில்லை எனவும் மேர்வின் சில்வா கெக்கரித்துள்ளார். மேர்வின் சில்வாவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டு சில தினங்களான நிலையில், நேற்று முன் தினம் (12) அதிகாலை களனி, ஹூனுபிட்டி, பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள களனி பிரதேச சபையின் தலைவரின் வீட்டிற்குள் பிரவேசித்த இனந்தெரியாத குழுவினர் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பிரதேச சபைத் தலைவரின் மனைவி, சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
செவ்வாய், 14 ஜூலை, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக