சனி, 18 ஜூலை, 2009

இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு
உறுதியான நடவடிக்கைக்கு வற்புறுத்தல்:
பிரதமர்



புது தில்லி, ஜூலை 17: இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந் நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவிடம் வலியுறுத்தியதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.எகிப்தில் அண்மையில் நடைபெற்ற அணிசாரா இயக்க நாடுகள் கூட்டத்தின்போது ராஜபட்சவிடம் பேசியது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளிக்கையில் மன்மோகன் சிங் கூறியதாவது: ராஜபட்சவுடனான சந்திப்பில் அதிகமான நேரம் தமிழர்களின் மறுவாழ்வு குறித்தே பேசப்பட்டது. தமிழர்களின் நிலை குறித்த நமது அக்கறையை ராஜபட்சவிடம் எடுத்துக் கூறினேன்.தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சார்ந்துதான் இலங்கையுடன் இந்தியாவின் உறவு அமையும் என்பதையும் விளக்கினேன்.அதிகாரப் பகிர்வு திட்டத்தின் அடிப்படையில், தமிழர்களின் அரசியல் பங்களிப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என அவரிடம் கூறினேன் என்றார்.
கருத்துக்கள்


'தமிழர்களின் மறுவாழ்வுக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சார்ந்துதான் இலங்கையுடன் இந்தியாவின் உறவு அமையும்' என்பதை முன்பே வலியுறுத்தியிருந்தால் ஈழத்தில் கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் அழிபொறிகளாலும் கூட்டம் கூட்டமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்களே! இன்னும் என்ன என்ன கொடும் படைக்கருவிகள் வழங்க இருப்பது குறித்துப் பேசினார்களோ!. அதிகாரப் பகிர்வு என்னும் பேச்சிற்கே இடமில்லை என்னும் இராசபட்சேவிடம் அதுபற்றி என்ன பேசியிருக்க முடியும்? பக்சேவிற்கு உள்ள 134 பாதுகாப்பு அறிவுரையாளர்கள் போதா என்றுதான் இந்தியாவும் பாதுகாப்பு நெறியாளர்கள் பலரை வழங்கியுள்ளதே! பக்சே அதற்கு நன்றி கூறினாரோ? ஈழ நாட்டைச் சுடுகாடாகவும் இடுகாடாகவும் ஆக்கியதற்குப் பாராட்டினாரோ இவர்? யார் அறிவார்! நாராயணன்களுக்கும் மேனன்களுக்கும்தான் தெரியும்! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

இப்படிக்கு இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2009 5:26:00 AM

Tamil Self Rule is the only solution to the conflict

By senthil
7/18/2009 4:45:00 AM

If India genuinely concerns on the Ealam Tamils welfares,it has to be strict with Srilanka to make a federal state in the united northeast of the Tamils traditional soil with perfect legitimate authority.Unless,the crisis never come to an end.It will fire again massively and distroy the whole island.

By Rajan Thambinayagam
7/18/2009 4:39:00 AM

If India genuinely concerns on the Ealam Tamils welfares,it has to be strict with Srilanka to make a federal state in the united northeast of the Tamils traditional soil with perfect legimate authority.Unless,the crisis never come to an end.

By Rajan Thambinayagam
7/18/2009 4:34:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக