சனி, 29 அக்டோபர், 2016

வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் விற்பனைத் திட்டம்

தலைப்பு-வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம் : thalaippu_veeduthoarum_thiruvalluvar

வீடுதோறும் திருவள்ளுவர் சிற்பம்

விற்பனைத் திட்டம்

பூம்புகார் நிறுவனம் – ஓர் அறிமுகம்
 தமிழக அரசின் தமிழ்நாடு  கைவினைஞர்கள் மேம்பாட்டுக்  கழகத்தின் விற்பனை நிறுவனம் ‘பூம்புகார்.’  தமிழர்களின்   மரபார்ந்த  பண்பாட்டினைச், சிற்பம், ஓவியம், எழுத்து போன்ற பல்வேறு கலைகளில் பதிவு செய்து, பழமைகளை மீட்டெடுத்துப் பாதுகாத்து, வளர்த்து அவற்றை இன்றைய தலைமுறையினருக்கும் வெளி உலகுக்கும்  வணிகமுறையில் கொண்டு செல்லும் பணியில் 1973 ஆம் ஆண்டிலிருந்து  பூம்புகார் நிறுவனம் திறம்படச் செயல்படுகிறது.
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
 திருக்குறள் மனித வாழ்வின் இலக்கண நூல்  [Thirukkural is the Manual of Life]. அதனை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களின் ஐம்பொன் சிற்பத்தை உலகில் உள்ள தமிழர்  இல்லம் ஒவ்வொன்றிலும் வீற்றிருக்கும் முயற்சியினைப் பூம்புகார் நிறுவனம்  தொடங்கியுள்ளது.
 திருவள்ளுவர் தமிழ் மொழியின், தமிழ் இனத்தின் அடையாளம்.  திருவள்ளுவரின் திருஉருவம் ஒவ்வொரு தமிழரின் இல்லத்தையும் அணிசெய்யச் செய்வது நமக்குக் கிடைத்துள்ள பெருமை. உலகில் எவருக்கும் கிடைக்க முடியாத பெரும்  பேறு என்பதை நாம் அனைவரும் அறிவோம்
பூம்புகாரின் ‘தமிழறிஞர் இல்லம்தோறும்
திருவள்ளுவர் சிற்பம் அமைப்புத் திட்டம்
  திருவள்ளுவரின் புகழ் நிலைத்து இருக்கும் வகையில் அவரது அழகிய சிற்பத்தை  ஐம்பொன்னில்  உருவாக்கிப் பூம்புகார் வழங்குகின்றது.  இந்தச் சிற்பத்தை உலகின் தமிழன்பர்கள் அனைவரும் எளிதில் விரும்பி வாங்கும் வகையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் குறைந்த விலையில் தருகின்றது.
திருவள்ளுவர் சிலை விவரம்
 மாழை :  ஐம்பொன்,
 உயரம் :  6″ ,
எடை:     கிட்டத்தட்ட இரண்டு  அயிரைக்கல்(கிலோ)
 சிற்பம் ஒன்றின் விலை
இந்தியாவில்
விற்பனை வளாக விலை உரூ. 4050/-
ஆசிரியர்களுக்குச் சிறப்பு விலை உரூ. 2990/- மட்டுமே.  தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் வேண்டியதற்கிணங்கத் தமிழன்பர் அனைவருக்கும் சிறப்பு விலை உரூ  2990/- மட்டுமே!
வெளிநாடுகளுக்கு
 சிற்பவிலை(Idol Cost)           தாலர்($) 80 /-
சிற்பத்தைப்  பொதிந்து  உறையிடும்  கட்டணம்  (packaging charges)தாலர்($)10 /-
 ஆக மொத்தம் சென்னை  துறைமுகம்  / விமானநிலையம் வரை
  விலை (Chennai FOB Price)  தாலர்($) 90 /- [U S Dollar ninety only]
பணம் செலுத்தும் விபரம்
பெயர் : பூம்புகார் (Poompuhar) நிறுவனம் [தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம்/The Tamilnadu Handicrafts Development Corporation Limited ]
வங்கி :    தொழிற்கடன், முதலீட்டு இந்திய நிறுவனம் (ஐ.சி.ஐ.சி.ஐ.), அண்ணாசாலை கிளை, சென்னை, தமிழ்நாடு 600 006
(ICICI BANK LTD, NEW 298, ANNA SAALAI, CHENNAI- 600006 , Tamilnadu, பேசி / PHONE – 022 – 67574314 / 4322)
நடப்புக் கணக்கு (Current Account) எண்:  603805010004
இந்திய நிதிமுறைமைக் குறியீடு IFSC Code : ICIC0006038
காந்தமை உரு அறிகுறி MICR Code : 600229017
கிளைக்குறியீடு Branch Code :  006038 ( நிதிமுறைமைக்குறியீட்டின் இறுதி 6 எண்கள் / Last 6 Characters of the IFSC Code)
இக்கணக்கில் நேரடியாக உரூ. 2990/- அல்லது தாலர் 90  பணம் செலுத்தி அதன் விவரத்தினை சுகி   இராசேந்திரன், விற்பனைச் செயல்  அலுவலருக்குப்
பேசி எண்   / பகிரன்(whats-app)9659799909 அல்லது 9659799919 எண்ணுக்குக் குறுஞ்செய்தி (SMS) மூலம் தகவல் அனுப்புங்கள்
விரைவில் தங்களுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிற்பம் அனுப்புகின்றோம்.
அல்லது
தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சிக்கழகம் பெயருக்குக் கேட்புவரைவோலையை  (The Tamilnadu Handicrafts Development Corporation Limited Payable At Chennai. (Individual A/c Payee Crossed  Demand Draft for Rs 2,990/-) அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
 (சென்னை தவிர வெளி இடங்களுக்கு / வெளிநாட்டிற்கு அனுப்புகைச் செலவு வாங்குவோரைச் சார்ந்தது).
உங்கள் இல்லங்களை அணி செய்ய, உற்றார் உறவினர்களுக்குச் சிறப்பு நாள்களில் அன்பளிப்பாக வழங்க, அமைப்புகளிலும் கல்வியகங்களிலும் வீற்றிருக்கச்செய்ய
திருவள்ளுவர் சிற்பத்தை வாங்குவீர்!
மரு.சந்தோசுபாபு இ..ஆ.ப. ;dr-santhos-bab-i-a-s
மரு. சந்தோசு பாபு  இ.ஆ.ப.
 தலைவர் & மேலாண்மை இயக்குநர்
தநா.கை.வ. கழகம்
சுகி.இராசேந்திரன் :suki-rasenthiran
சுகி இராசேந்திரன் 
விற்பனைச் செயல்  அலுவலர்
பூம்புகார்

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4 : மயிலை சீனி.வேங்கடசாமி




தலைப்பு-தமிழ்நூல்கள் எவ்வாறு அழிந்தன?-மயிலை சீனி. ; thaliappu_marainthupona_thamizhnuulgal_mayilaiseeni

தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன? 2/4

தீயில் எரிந்த ஏடுகள்

வரகுணராம பாண்டியன், அதிவீரராம பாண்டியன் என்பவர்கள் திருநெல்வேலியில் அரசாண்டிருந்த பாண்டிய அரசர்கள். இருவரும் தமையன்தம்பி முறையினர். பாண்டியப் பேரரசு வீழ்ச்சியடைந்து பாண்டி நாடு அயல் நாட்டவர் கையில் சிக்கியபோது, அவர்களின்கீழ்ச் சிற்றரசராக இருந்தவர்கள். இவர்களில் அதிவீரராம பாண்டியன் தமிழில் நைடதம் என்னும் காவியத்தையும், வேறு நூல்களையும் இயற்றிப் புகழ் படைத்தவர். இவர் இயற்றிய நைடதத்தைப் பற்றி ‘நைடதம் புலவர்க்கு ஒளடதம்’ (ஒளடதம் – அமிர்தம்) என்னும் பழமொழி வழங்குகிறது. இவருடைய தமையனாரான வரகுணராம பாண்டியனும் கல்வியில் சிறந்த புலவர். வரகுணராமனின் மனைவியும் சிறந்த புலமை வாய்ந்தவர். அதிவீரராமன் நைடதத்தை இயற்றி, அதனைத் தம் தமையனிடம் அனுப்பி, அதைப் படித்துப் பார்த்து அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டாராம். தமையனான வரகுணன் அந்நூலைத் தம் மனைவியிடம் கொடுத்து மதிப்புரை கூறும்படி சொன்னாராம். அரசியார் அதைப் படித்துப் பார்த்து, இதன் நடை, வேட்டை நாயின் ஓட்டம்போல் இருக்கிறது என்று கூறினாராம். வேட்டை நாய் வேகமாக ஓடி வேட்டைப் பொருள் சிக்கியவுடன் ஓட்டத்தின் வேகம் குறைவது போல, இந்நூலில் சுயம்வரகாண்டம் வரையில் இருக்கிற செய்யுள் நடைபோல் மற்றக் காண்டங்களில் இல்லை என்பது கருத்து.
  இத்தகைய புலமை வாய்ந்த அரசகுடும்பத்தில் அருமையான ஏட்டுச்சுவடிகள் ஏராளமாக இருந்தன. வரகுணராமன் காலமான பிறகு, அவருக்குச் சந்ததி இல்லாதபடியால், அவருடைய சொத்துகள் திருநெல்வேலியில் கரிவலம்வந்த நல்லூரில் இருக்கும் பால்வண்ண நாதர் கோவிலுக்குச் சொந்தம் ஆயின. அவற்றுடன் அவருடைய நூல் நிலையத்திலிருந்த ஏட்டுச்சுவடிகளும் கோவிலுக்குச் சேர்ந்து விட்டன அவருடைய சொத்துகளைப் பெற்றுக்கொண்ட கோயில் அதிகாரிகள், வரகுணராமனுக்கு ஆண்டுதோறும் படையலிட்டு (சிரார்த்தம் செய்து)வருகின்றனராம்.
கோவிலுக்குக் கிடைத்த வரகுண பாண்டியனுடைய நூல் நிலையத்து ஏட்டுச்சுவடிகள் காலப்போக்கில் கவனிப்பார் அற்றுச் சிதிலமாய்ப் போயின. சில காலத்துக்குப் பிறகு அந்தச் சுவடிகள் கோவில் கணக்கு ஏட்டுச் சுவடிகளுடன் கலந்துவிட்டனவாம். பிற்காலத்தில் அந்த ஏட்டுக் குப்பையை ஓமத்தீயில் எண்ணெயில் தோய்த்துக் கொளுத்திவிட்டார்களாம்.
  1889ஆம் ஆண்டில் உ.வே. சாமிநாதய்யர், பால் வண்ண நாதர் கோயில் ஏட்டுச்சுவடிகளைப் பார்ப்பதற்குக் கரிவலம்வந்த நல்லூருக்குப் போனாராம். போய்க் கோவில் தருமகர்த்தாவைக் கண்டு பேசினாராம். அதற்குத் தருமகர்த்தா சொன்ன விடை இது:
“குப்பைகூளமாகக் கிடந்த சுவடிகளை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் கூளங்களையெல்லாம் ஆகமத்தில் சொல்லியிருக்கிறபடி செய்துவிட்டார்கள். பழைய ஏடுகளைக் கண்ட இடங்களில் போடக் கூடாதாம். அவற்றை நெய்யில் தோய்த்து ஓமம் செய்துவிட வேண்டுமாம். இங்கே அப்படித்தான் செய்தார்கள்.”
இது தெரிந்த செய்தி; தெரியாத செய்திகள் எத்தனையோ!
மதுரைத் தமிழ்ச் சங்கத்து நூல்நிலையத்தில் இருந்த ஏட்டுச் சுவடிகளில் பல, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்குமுன்னர் தீப்பிடித்து எரிந்துபோயின. அவற்றில் அச்சில் வராத சிலபல ஏட்டுச்சுவடிகளும், இருந்தனவாம். திருக்குறளுக்கு எழுதப்பட்ட பத்து உரைகளும், அதில் இருந்தனவாம்: வேறு அருமையான நூல்களும் இருந்தனவாம்.

ஆற்று வெள்ளத்தில் ஏட்டுச்சுவடிகள்

பதினெட்டாம் பெருக்கு ஆற்று வெள்ளத்தில் போடப்பட்ட ஏடுகள் எத்தனை என்று கணக்குச் சொல்லமுடியாது. கவிராயர்கள், புலவர்கள், வித்துவான்களின் வீடுகளில் இருந்த ஏட்டுச்சுவடிகள், அவர்கள் பரம்பரையில் வந்த படிப்பில்லாத முழுமக்களிடம் சிக்கி விடும். கல்வி வாசனையற்ற அவர்கள் அந்த நூல்களின் அருமை பெருமைகளை அறியாமலும், என்ன செய்வதென்று தெரியாமலும், இடத்தை அடைத்துக்கொண்டு வீணாகக் கிடக்கிறதே என்ற கவலையுடன் அவற்றைக் கொண்டு போய் ஆற்று வெள்ளத்தில் போட்டுவிடுவார்கள். இவ்வாறு நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒன்றைக் கூறுகிறேன் கேளுங்கள்.
  1890ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக்கொண்டு அறிஞர் உ.வே.சாமிநாதய்யர் திருநெல்வேலிக்குச் சென்றார். சென்று, திரிகூடராசப்பகவிராயரை உடன் அழைத்துக் கொண்டு, கவிராயரின் உறவினரான திருநெல்வேலி தெற்குப் புதுத் தெரு வழக்குரைஞர் சுப்பையாபிள்ளை வீட்டுக்குப் போய் அவரைக் கண்டார். கண்டு, பரம்பரையாக அவர்கள் வீட்டில் இருந்துவந்த ஏட்டுச் சுவடிகளைக் காட்டும்படி கேட்டார். அதற்கு, ஆங்கிலம் படித்த, ஆனால், தமிழ் படிக்காத அந்த வழக்குரைஞர் கூறினாராம்:
  “எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக் கணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து பயனில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பயனில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று எண்ணினேன்.. ஆற்றிலே போட்டுவிடலா மென்றும் ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டி ஆற்றில் விடுவது வழக்காறு என்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் வாய்க்காலில் விட்டுவிட்டேன்.”
  இச்செய்தியை வழக்குரைஞர் ஐயா கூறிமுடித்த பிறகு, உடன் வந்திருந்த திரிகூடராசப்பக் கவிராயர் சொன்னாராம்: “நான் வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச்சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டுபோன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து, அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே இழுவறைப்பேழையின்(பீரோவின்)மேல் வைத்தேன்.
அவர் பிடுங்கி இழுவறைப்பேழையின்(பீரோவின்)மேல் வைத்த கட்டிலிருந்துதான் சாமிநாதையருக்குத் திருப்பூவணநாதர் உலாவும், சிலப்பதிகாரத்தைச் சேர்ந்த சில ஏடுகளும் கிடைத்தனவாம்.
  இதுபோன்ற பதினெட்டாம் வெள்ளப்பெருக்கில் வெள்ளத்தில் விடப்பட்ட ஏடுகளின் எண்ணிக்கை எத்தனையோ! அவற்றில் என்னென்ன நூல்கள் போயினவோ, யார் அறிவார்?
மயிலை சீனி வேங்கடசாமி :mayilaiseenivenkadasamy
மயிலை சீனி.வேங்கடசாமி: மறைந்துபோன தமிழ்நூல்கள்

(தொடரும்)

மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு




மாணிக்கவாசகம் பள்ளி, அறிவியல் இயக்கம், பாராட்டு01 ;manickavasakam_palli_ariviyal01
தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
 நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா – நாகசாகி  நாள் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் பெற்ற காயத்திரி, ஐயப்பன், கிசோர்குமார், சனசிரீ, அரிகரன், சுருதி ஆகிய மாணவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கபட்டது.
பயிற்சி அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்தப்பட்டனர்.
 பள்ளி விடுமுறை நாளன்று காரைக்குடிக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர்  சிரீதருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிறைவாக மாணவர்  இராசேசு நன்றி  நவின்றார்.
மாணிக்கவாசகம் பள்ளி, அறிவியல் இயக்கம், பாராட்டு02 ;manickavasakam_palli_ariviyal02