சனி, 16 அக்டோபர், 2010

இனத்தின் அடையாளம் மொழிதான்: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்


விழாவில் பேசுகிறார் லட்சுமியம்மாள் கல்வியியல் கல்லூரித் தலைவர் எம்.வருவான் வடிவேலன். உடன் (இடமிருந்து) தருமபுரி தமிழ்ச் சங்கச் பொருளாளர் பொ.சச்சிதானந
தருமபுரி, அக். 15: ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான் என்று தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசினார்.  தருமபுரி தமிழ்ச் சங்கம் வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அவர் பேசியது:  தமிழ்ச் சங்கங்கள் ஊருக்கு ஊர் ஏன் உருவாக்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். ஒரு இனத்தின் அடையாளமே மொழிதான். என்னதான் ஆங்கிலத்தில் பேசினாலும், ஆங்கிலேயர் போல் உடையணிந்து கொண்டாலும், வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் குடியுரிமையே பெற்றிருந்தாலும், அவர்கள் சார்ந்த இனத்தின் பெயரால்தான் ஒருவர் அடையாளம் காணப்படுவார்.  அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர் என்பதால் ஆப்ரோ அமெரிக்கர் என்றுதான் அழைக்கின்றனர். அதுபோலதான் தெலுங்கு பேசுபவர்களை தெலுங்கர்கள் என்றும், மலையாளம் பேசும் மக்களை மலையாளிகள் என்றும், தமிழ் பேசுபவர்களைத் தமிழர்கள் என்றும் அந்தந்த மொழியின் அடையாளத்தில்தான் இனம் காண்கின்றனர். எனவே நாம் நமது மொழியின் அடையாளம் அழிந்துபோகாமல் பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.  நமது நாட்டில் இருந்து ஏராளமான மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவம், பொறியியல், பொருளாதாரம் படித்து பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். அதற்கேற்ப ஏராளமான மேலாண்மைக் கல்வியியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் தான் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உருவாக்கப்படுகின்றனர்.  ஆனால் அந்தக் கல்லூரிகளில் தரமான மாணவர்கள் எத்தனை பேர் உருவாக்கப்படுகின்றனர் என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. அடிப்படைக் கல்வி தரமாகப் போதிக்கப்பட்டு, அதன் பிறகு மேற்படிப்புகள் சிறப்பாக இருந்தால் மட்டுமே நல்ல மனிதர்களை நாம் உருவாக்க முடியும். தரமான மாணவர்கள் உருவாக்கப்பட அவர்களுக்கான அடிப்படைக் கல்வியில் கவனம் செலுத்தும் வகையிலான போதிய ஆசிரியர்கள் நம்மிடம் இல்லை.  மாணவர்களின் அடிப்படை பலமாக அமையாவிட்டால் நாளைய இந்தியா இன்று உள்ள பெருமைகள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. எனவே அவர்களை அடிப்படையில் தரமானவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பு பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு உள்ளது.  அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆசிரியர் படிப்பு என்றால் மதிப்பு மிக்கதாகவும், ஆசிரியர் பணி என்றால் கெüரவமானது என்றும் கருதப்பட்டது, போற்றப்பட்டது. அப்போது அவர்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை. ஆனால் இப்போதோ அதிகமான ஊதியம் வழங்கப்படுகிறது. இருப்பினும் இப்போது அவர்களுக்கு உரிய மரியாதையோ, கெüரவமோ வழங்கப்படுவதில்லை.  ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஆசிரியர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் மதிக்கப்பட வேண்டும். இளைஞர்கள் ஆசிரியர்களாக வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட வேண்டும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று விழைய வேண்டும். ஆனால் இந்த மூன்று பிரிவினரும் இன்றைய சமுதாயத்தில் இழிவாகவே நடத்தப்படுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் நாளைய தலைமுறை வளமையாகவும், பலமானதாகவும் இருக்கும்.  ஆசிரியர் பணி என்பது பாடப்புத்தகத்தை போதிக்கும் பணி மட்டுமல்ல, மாணவர்களை மொழி, இன, நாட்டுப் பற்று உள்ளவர்களாக, மனித நேயமுள்ளவர்களாக மாற்றுவதேயாகும்.  நாளைய இந்தியா வளமானதாகவும், பலமானதாகவும் இருக்க நாம் அடிப்படைக் கல்வியிலும் கவனம் செலுத்தியாக வேண்டும். அஸ்திவாரம் சரியாக அமைந்து விட்டால் மட்டுமே கட்டடம் பலமாக இருக்கும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்களாகிய நீங்கள் ஆற்ற வேண்டிய தேசிய கடமை அதுதான்' என்றார் வைத்தியநாதன்.  சங்கத் தலைவர் வழக்கறிஞர் ந.ராசேந்திரன் வரவேற்றார். செயலர் மருத்துவர் கி.கூத்தரசன், கல்வி நிறுவனத் தலைவர்கள் எம்.வருவான் வடிவேலன்,பி.ராஜமாணிக்கம், சா.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ÷நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.  
கருத்துக்கள்

இனத்தின் அடையாளம் மொழிதான் என்பதன் மூலம் தமிழினத்தின் அடையாளம் தமிழ் மொழி ; அதனைக் காக்க வேண்டும் என்ற உண்மையை உரைத்த ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்களை எவ்வளுளவு பாராட்டினாலும் தகும். சாலமன் போன்றோர் அறியாமையால் ஏதோ எண்ணுகின்றனர்; எனவே தவறாக எழுதுகின்றனர். தமிழர்களின் தேசிய மொழி தமிழே எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றே உணர்த்தியதையும் நாம் தமிழர் என்ற உணர்வைத் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விதைத்ததையும் நினைவு கூர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:43:00 PM
Aasiriyar, Intha soll vilakkam ithuva? Aa_Seer_Iyam_ar Aa=In depth Seer=Clearing Iyam=Doubts Engo padithullen, ithu sariyaa?
By Muthapan
10/16/2010 2:40:00 PM
ஆப்பிரிக்கர் கருப்பாக இருப்பதால் பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் பேசுபவனை எப்படி வித்தியாசம் காண முடியும். எல்லோரும் இந்தியன். மொழி என்பது முக்கியம்தான். அதற்காக நம்மை மற்றவர்களிடமிருந்து அன்னியப்படுத்திக்கொள்ளக்கூடாது! ஏனென்றால் நம் மொழிப்பற்றை பயன்படுத்தி கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளின் குடும்பம் கொழுத்ததுதான் மிச்சம். மற்றபடி தமிழுக்கு எதிர்ப்பாக சொல்லவில்லை.
By Solomon
10/16/2010 1:41:00 PM
ஏனென்றால் நம் மொழிப்பற்றை பயன்படுத்தி நம்மை கருணாநிதி போன்ற அரசியல்வாத்களின் குடும்பம் கொழுத்ததுதான் மிச்சம்.மற்றபடி தமிழுக்கு எதிர்ப்பாக சொல்லவில்லை.
By Solomon
10/16/2010 1:37:00 PM
ஆப்பிரிக்கர் கருப்பாக இருப்பதால் பார்த்தவுடனே தெரிந்து விடுகிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் பேசுபவனை எப்படி வித்தியாசம் காண முடியும். எல்லோரும் இந்தியன். மொழி என்பது முக்கியம்தான். அதற்காக நம்மை மற்றவர்களிடமிருந்து அன்னியப்படுத்திக்கொள்ளக்கூடாது!
By Solomon
10/16/2010 1:35:00 PM
// இளைஞர்கள் ஆசிரியர்களாக வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட வேண்டும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று விழைய வேண்டும். // மிக மிக நல்ல கருத்து ஆசிரியர் அவர்களே! நாளைய சமுதாயத்தை நலமுள்ளதாக்க எல்லா பணிகளையும் விட ஆசிரியர் பணி தான் மிகச் சிறந்த பணி/சேவை. ஆதலால் இளைஞர்கள் புதியதோர் உலகைப் படைக்க ஆசிரியர் பணிக்கு முன்வர வேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை அறியாமல் பேசுகிறீரே என்று வேதனையாக உள்ளது. விவசாயிகளின் இன்றைய நிலை தெரியாமல் இளைஞர்களை அந்த தொழிலுக்கு வந்து கஷ்டப்படச் சொல்கிறீரே. கண்ணையும் காதையும் கட்டிக்கொண்டு வாழ்கிறீரா? ராணுவத்துக்கு இளைஞர்களை வரச்சொல்கிறீர். நல்ல எண்ணம்தான். அப்படியென்றால் இப்பொழுது ராணுவத்தில் பல் போன கிழடுகள்தான் சேர்கிறார்கள் என்கிறீர்களா? எத்தனை இளைஞர்கள் கையில் கட்டு கட்டாக பணத்தை வைத்துக்கொண்டு Military recruitment office முன்னால் தவம் கிடக்கிறார்கள் என்று தெரியாதா உமக்கு? இதுகூட தெரியாமல் எப்படி பத்திரிகை ஆசிரியராக இருக்கிறீர் நீங்கள்?
By வெங்கட்
10/16/2010 1:28:00 PM
தமிழ்நாட்டில் கருத்து பகுதி தணிக்கை இல்லாமல் உடனடியாக பிரசுரம் செய்தது தினமணி மட்டுமே. இப்போது மற்றவர்களும் இதே வழியை பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். தினமணி எதற்கும், எல்லாவற்றிக்கும் முன்னோடி. எதிர்காலத்தை அறியும் இன்றைய தொலைநோக்கி. தமிழ் வளர்க்கும் தினமணிக்கும் ஆசிரியருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். கருத்து எழுதுபவர்கள் அதிகம் வரக்காரணம் தினமணி. தமிழ் வளருகிறது. தமிழன் வளருகிறான். இனி தமிழ் அழியாது.
By Dillu Durai
10/16/2010 11:29:00 AM
தமிழ் வளர்க்கும் தின மணிக்கும் ஆசிரியருக்கும் நல் வாழ்த்துக்கள். ஆசிரியர் உரை கேட்டதும் அந்த நாட்களில் [1950 களில்]குமரித் தமிழர் பட்ட பாடுகளும், 'கண்டால் அறியும்' என்று கூறி, தமிழரை அடையாளம் கண்டு அழிக்க முயன்ற திரு. பட்டம் தாணு பிள்ளை அரசின் கொடுமைகளும், அவற்றை மேற்கொண்டு முன்னேறிய தமிழரின் துணிவும் உழைப்பும் நினைவுக்கு வந்தன. ஆனால் இன்று, தமிழரே தமிழ் பண்பாட்டை அழிக்கிறோமா எனும் எண்ணமும் எழத்தான் செய்கிறது!
By GERSHOM CHELLIAH
10/16/2010 8:59:00 AM
அப்படியா னால் திராவிடம் என்பது ஏமாற்று வேலை என்பது நிறுபிக்கப்படுகிறது.
By Unmai
10/16/2010 8:25:00 AM
Let me add a little more. In those days, it was the care of mother & then that of father in a family + grand-parents that helped all round development in an individual. If a mother feeds her child telling great moral stories, fables, songs, folk-lore, talk in own native tongue, help gently to understand right vs wrongs, good conduct etc., then all will be well!
By ASHWIN
10/16/2010 8:24:00 AM
தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச்செய்யும் தினமணி ஆசிரியருக்குப் பாராட்டுகள்.
By மு.இளங்கோவன்,புதுச்சேரி
10/16/2010 6:34:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கவிதாயினி சௌந்தரா கைலாசம் காலமானார்

சென்னை, அக்.16: ப.சிதம்பரத்தின் மாமியார் சௌந்தரா கைலாசம் நேற்றிரவு காலமானார். முன்னாள் நீதிபதி கைலாசத்தின் மனைவியான சௌந்தரா கைலாசம், தன் கணவரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் எழுதும் கடிதங்களில் ”நாதன் தாள் வாழ்க” என்றே முத்திரையிடுவார். இவர், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தாயார். மிகச் சிறந்த கவிதைகளைப் படைத்த கவிதாயினி இவர். சிலேடைகளை கவிதைகளில் புகுத்துவதில் வல்லவராகத் திகழ்ந்தவர். சிலேடைச் செல்வராகத் திகழ்ந்த கி.வா.ஜகன்னாதன் மற்றும் அன்றைய தமிழறிஞர்களுடன் நட்பு கொண்டு, தமிழ் மேடைகளில் கவிதை முழக்கமிட்டவர்.
கருத்துக்கள்

பலரின் நல்லெண்ணத்திற்குரிய கவிஞர் சௌந்தரா கைலாசம் அவர்கள் மறைவிற்குத் தினமணி இணைய நண்பர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு அறிஞருடன் அவரைச் சந்தித்த பொழுது குடும்பத்தினர் ஒருவர் பற்றி அவர் கவலையுடன் தெரிவித்த கருத்துகள் அவரது நடுநிலை உணர்வை வெளிப்படுத்தின. அந் நிகழ்வு நினைவிற்கு வருகின்றது. தனிப்பட்ட முறையிலும் ஆழ்நத இரங்கல்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/16/2010 2:34:00 PM
இந்த நல்ல குடும்பத்திலா புகுந்துடிச்சு நல்ல பாம்பு.............
By pannadai pandian
10/16/2010 1:36:00 PM
TAMIZH WORLD HAS LOST A GOOD SCHOLAR.WHEN ARE WE GOING TO SEE THE LIKES OF THEM AGAIN? oUR SYMATHIES TO THE FAMILY MEMBERS.
By S Raj
10/16/2010 10:09:00 AM
A GOOD SOUL. OUR SYMPATHIES AND CONDOLENCES TO THE BEREAVED MEMBERS OF THE FAMILY. Dr S Ramasami Dr P Damayanthi
By Dr S Ramasami, Dr PDamayanthi
10/16/2010 9:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
எதிர்க்கட்சிகள் விடுவிக்க வலியுறுத்துவதால் சரத் பொன்சேகாவின் குடியுரிமை பறிப்பு: ராஜபக்சே முடிவு
கொழும்பு, அக். 14-
 
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, ஆயுதங்கள் வாங்கியதில் முறைகேடுகள் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 30 மாத ஜெயில் தண்டனையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
 
சரத் பொன்சேகாவை விடுவிக்கும் வரை போராட்டம் நடத்தப்போவதாக புத்த மதக்குருக்களும் கூறியுள்ளனர். இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கு சிங்களர்களிடம் ஆதரவு கிடைத்து வருகிறது.
 
இது இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொன் சேகாவை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு உருவாகி வருகிறது.
 
இதையடுத்து சரத் பொன்சேகாவுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த ராஜபக்சே ஆலோ சித்து வருகிறார். சரத் பொன்சேகாவின் குடியுரிமையை பறிக்க ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. குடியுரிமையைப் பறித்தால், அடுத்து வரும் 7 ஆண்டுகளுக்கு பொன்சேகாவால் எந்தத் தேர்தலிலும் போட்டியிட முடியாது.
 
அப்படி செய்வதால் அரசியலில் தனக்கு எதிரியாக திகழும் பொன்சேகாவை ஒழித்து விட முடியும் என்று நினைக்கிறார். மேலும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரும் பிரச்சி னையை திசை திருப்பவும் ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.
 
ஜனாதிபதியாக விரைவில் பதவி பிரமாணம் எடுக்க ராஜபக்சே ஏற்பாடு செய்துள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவை பலகோடி ரூபாய் செலவழித்து கொண்டாட அவர் உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் எதிர்த்து கேள்வி கேட்பாரே இல்லாததால் ராஜபக்சே இப்படி ஆணவத்துடன் ஆட்டம் போடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
 
கருத்து 
Saturday, October 16,2010 02:24 PM,
Ilakkuvanar Thiruvalluvan said:
இப்படிப்பட்ட தவறுகளையும் குற்றங்களையும் பக்சே செய்வது நல்லது. வினை விதைத்த அவ்ன வினை அறுக்கப்போகிறான். அதனை இவை விரைவு படுத்தும். முன்பு வினை விதைத்த பொன்சேகோ இப்பொழுது வினை அறுக்கின்றான். தமிழினப் படுகொலையாளிகள் விரைவில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு அழியட்டும். மனித நேயர்கள் பெருகட்டும். தமிழ் ஈழம் மலரட்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
Thursday, October 14,2010 04:30 PM, karuna said:
ராஜபக்ச sayvathu சரி tamil ஹிந்து payankaravathikai alithavar
Thursday, October 14,2010 11:31 AM, இரா. ஜா. செ said:
இந்த மாதிரி கேடுகெட்ட செயல்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் மட்டுமே நடக்கும். குடியுரிமை பறிப்பு, தேர்தலில் போட்டியிட தடை, ஒட்டு போடும் உரிமை பறிப்பு என்பதெல்லாம் உலகமே இந்தியாவிடம் கற்றுக்கொண்ட பாடம். பால் தாக்கரே தான் முதல் பலி இதில். ஐந்து வருடம் அவருக்கு ஒட்டு போட தடை விதித்து தங்கள் ஆட்சியை மராட்டியத்தில் தக்கவைத்துக்கொண்டது காங்கிரஸ். அதை பின்பற்றுகிறான் ராஜ பக்ஷே, இந்தியா வாழ்க
On Thursday, October 14,2010 02:48 PM, நடுநிலையாளன் said :
பால் தாக்கரேவின் ஓட்டுரிமையை பறித்தல்தால் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை. பால் தாக்கரேவும் நம் ஊர் மருத்துவர் ஐயா டாக்டர் ராமதாசும் ஒரே ஜாதி.
On Thursday, October 14,2010 07:52 PM, Maniyan said :
மருத்துவர் ஐயா பற்றி என்ன தெரியும் உங்களுக்கு
On Thursday, October 14,2010 10:53 PM, நடுநிலையாளன் said :
எனக்கு மட்டுமல்ல. ஒட்டு மொத்த தமிழர்களுக்கும், ஏன் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் மருத்துவர் ஐயாவைப்பற்றி மிக நன்றாக தெரியும்.
On Thursday, October 14,2010 11:47 PM, saravanan said :
ஸ்டாப் யுவர் கம்மண்ட்ஸ் ராமதாஸ்
On Thursday, October 14,2010 11:55 PM, balaji said :
நீ ஒரு அர குற
 
விஷ ஊசி" வழக்கில் 4 பேருக்கு தூக்கு
பணத்துடன் சென்னைக்கு வந்தவர்களை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், 4 பேர் தூக்குத்தண்டனையும், 4 பேர் ஆயுள் தண்டனையும் அடைந்தனர்.
 
சென்னை நகரில் 1970_ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 1972_ம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கும்பல் 7 பேர்களை கொலை செய்தது. இந்த துணிகரக் கொலைகளை, பண ஆசையால் அந்த கும்பல் மிகவும் சாதூரியமாக நடத்தி வந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் போல நடித்து கைவரிசை காட்டினார்கள்.
 
கொலை செய்யப்பட்டவர்களில் பலர் வியாபாரிகள். தொழில் விஷயமாக சென்னைக்கு வந்தபோது, இந்த கொலை கும்பலிடம் மாட்டிக்கொண்டு உயிரை துறந்தார்கள். கொலை செய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் வருமாறு:-
 
1. ராமநாதன் செட்டியார் என்கிற வடிவுல்லான் செட்டியார் (24). ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஓ.சிறு வயல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
 
2. சாகுல் அமீது (29). ராமநாதபுரம் மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர். மலாயாவில் உள்ள ஈப்போ நகரில் தொழில் செய்து வந்தவர்.
 
3. மூர்த்தி (25), சென்னை. இவரும் விஷ ஊசி கும்பலைச் சேர்ந்தவர். அதிகாரிகளுக்கு ரகசியமாக தகவல் கொடுக்கிறார் என்று சந்தேகப்பட்டு, இவரையும் கொன்றுவிட்டனர்.
 
4. புகாரி தம்பி (40), காயல்பட்டினம், நெல்லை மாவட்டம்.
 
5. சித்திக் (45), காயல்பட்டினம்.
 
6. முகமது சாலிக் (60), காரைக்கால்.
 
7. தைக்கா தம்பி (38), கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.
 
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு பணத்துடன் வரும் வியாபாரிகள், பணக்காரர்கள் ஆகி யோரை இவர்கள் முன் கூட்டியே நோட்டம் பார்த்து வைத்துக் கொள்வார்கள். அந்த நபர் சென்னை வந்ததும், கொள்ளைக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களில் ஒருவர் அவரை மடக்குவார். சுங்க இலாகா அதிகாரி என்று கூறி மிரட்டுவார்கள்.
 
"நீ சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடு பட பணத்துடன் வந்திருக்கிறாய். உன்னிடம் இருப்பது கறுப்புப்பணம். உன்னைப் பிடித்து வரும்படி அதிகாரி உத்தரவிட்டு இருக்கிறார். என்னுடன் வா" என்று சற்று தூரத்தில் நிற்கும் கார் அருகே இழுத்துப் போவார்.
 
காரில் இருக்கும் தன் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரை சுட்டிக்காட்டி, "ஐயாவிடம் உள்ளதைச் சொல்" என்று மிரட்டு வார். வியாபாரி மிரள்வதை பயன்படுத்தி, இந்த கோஷ்டியினர் அவரை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு போவார்கள்.
 
காரில் அதிகாரி போல இருப்பவர், "இவனுக்கு உண்மையைச் சொல்ல வைக்கும் மருந்தைக்கொடு" என்று கட்டளையிடுவார்.
 
உடனே அந்த நபருக்கு தூக்க மருந்து அல்லது அதிக மயக்கம் தரும் பெத்தடின் ஊசி மருந்து உடலில் செலுத்தப்படும். மயங்கி விழுந்ததும் அவனை சாகடித்து பணத்தை கொள்ளை அடித்துக்கொள்வார்கள்.
 
இறந்தவர் யார் என்று தெரியாமல் இருக்க, அவர் உடலில் உள்ள எல்லா துணிகளையும் அகற்றிவிடுவார்கள். காரில் இருந்தபடியே பிணத்தை கீழே உருட்டி தள்ளிவிடுவார்கள்.
 
2 பிணங்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்கள். ஒருவரை தூக்கு போட்டு தற்கொலை செய்ததை போல மரத்தில் தொங்க விட்டார்கள். ராமநாதன் செட்டியாரை செங்கல்பட்டு அருகே ஒரு சுடுகாட்டில் குற்றுயிராக போட்டுவிட்டு வந்தனர். பிறகு அவர் ஆஸ்பத்திரியில் இறந்தார்.
 
மற்றவர்களை கார் "பேன்" பெல்ட்டினாலும், மப்ளரினாலும் கழுத்தை இறுக்கிக் கொன்றனர்.
 
இந்த மாதிரி இவர்கள் ரூ.5 லட்சம் வரை கொள்ளை அடித்ததாக கூறப்பட்டது. இவற்றில் ரூ.3 லட்சம் பெறுமான ரொக்கம், தங்கக் கட்டிகள், தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், கார்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன.
 
தமிழக போலீசார் இலங்கை, பர்மா, மலாயா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளுக்கு போய் புலன் விசாரணை நடத்தி துப்பு துலக்கினார்கள். பல நாள் திருடன் ஒரு நாள் சிக்கித்தானே தீரவேண்டும். அந்த வாக்குக்கு ஏற்ப விஷ ஊசி கொலை கும்பல் போலீசாரிடம் சிக்கினார்கள்.
 
தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி ஐ.ஜி. அருள் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத்துறை சூப்பிரண்டு ஞானசம்பந்தம் தலைமையில் டிப்டி சூப்பிரண்டு தியாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், லட்சுமி நரசிம்மன், மனோகர், சுந்தர மூர்த்தி, கந்சாமி, சப்_இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, தலைமை போலீஸ்காரர் ஷெரீப் ஆகியோர் புலன் விசாரணை நடத்தி 9 பேர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்தார்கள். பிடிபட்ட கொலைகாரர்கள் பெயர் விவரம்:-
 
1. டி.வி.வைத்தீசுவரன் என்கிற வைத்தி (வயது 38). சென்னை ஜார்ஜ் டவுனைச் சேர்ந்த மருந்துக்கடை வியாபாரி.
 
2. சி.ஆர்.பார்த்தசாரதி என்கிற சாரதி (37), நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர். கார்களை விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார்.
 
3. கே.லட்சுமணன் (30). ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர். மோட்டார் டிரக் டிரைவர்.
 
4. கே.கண்ணன் (25), சென்னை கம்பெனி சிப்பந்தி.
 
5. எம்.எம்.தாவூத் (41), ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர்.
 
6. ஏ.அïப்கான் (28), ராமநாத புரத்தைச் சேர்ந்தவர். டூரிஸ்டு டாக்சி கம்பெனி பங்குதாரர். முன்பு கார் டிரைவராக இருந்தவர்.
 
7. வி.மஜீத் (37), கீழக்கரை அச்சக தொழிலாளி.
 
8. கோபால் (33), சென்னை வன்னிய தேனாம்பேட்டையைச் சேர்ந்த கார் டிரைவர்.
 
9. வேணுகோபால்.
 
இந்த வழக்கில் வேணுகோபால் அப்ரூவராக மாறிவிட்டார். எனவே, மற்ற 8 பேர் மீதும் சென்னை துணை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அரசு தரப்பில் 6 பெண்கள் உள்பட 257 பேர் சாட்சியம் அளித்தார்கள். குற்றவாளிகள் தரப்பில் 6 பேர் விசாரிக்கப்பட்டனர். இந்த பரபரப்பு வழக்கில் 10_1_1975 அன்று நீதிபதி விஜயரங்கம் தீர்ப்பு வழங்கினார்.
 
குற்றம் சாட்டப்பட்ட வைத்தீசுவரன், பார்த்தசாரதி, கே.லட்சுமணன், கே.கண்ணன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனையும், தாவூத், அïப்கான், மஜீத், கோபால் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
அப்ரூவர் வேணுகோபால் விடுதலை செய்யப்பட்டார். தீர்ப்பு 1,064 பக்கங்கள் இருந்தன. தீர்ப்பில் நீதிபதி விஜயரங்கம் கூறியிருந்ததாவது:-
 
ஒரு பாவமும் அறியாத அப்பாவிகள் இதில் கொலையுண்டு இருக்கிறார்கள். அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் இவர்களின் எதிரிகள் அல்ல. அவர்களுக்கு இவர்களை முன் பின் தெரியாது. இந்த நிலையில் பணத்தாசை பிடித்து எப்படியும் பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டமிட்டு இந்த கொலைகளைச் செய்து இருக்கிறார்கள்.
 
இப்படிப்பட்ட கொடூரமான செயலுக்கு மிகக்கடுமையான தண்டனையே பரிகாரமாகும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கில் துப்புதுலக்கிய போலீஸ் அதிகாரிகள், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் ஆகியோரை நீதிபதி பாராட்டினார்.
 
தீர்ப்பைக் கேட்டதும், தூக்குத்தண்டனை அடைந்தவர்களில் ஒருவரான கே.கண்ணன் கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவருடைய கைகளும், கால்களும் உதறின. உடனே கோர்ட்டு சிப்பந்திகள் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தனர். தீர்ப்பைக் கேட்க குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் மற்றும் திரளான பொதுமக்களும் கோர்ட்டில் கூடியிருந்தனர்
+++++++++++++++++++++++
கருத்து
Saturday, October 16,2010 04:11 AM, Ilakkuvanar Thiruvalluvan said:
இருவரும் சரியான கேள்வி கேட்டுள்ளனர். பணம் விளையாடியதால் ஆயுள் தண்டனையாகக் கருதப்பட்டு விடுதலை ஆனார்கள். அதுவும் காரணம் என்ன சொல்லப்பட்டது தெரியுமா? தூக்குத் தண்டனையைவிடக் கொடுமையானது அதற்காகக் காத்திருக்கும் மன உளைச்சல் என்று. ஆனால், நளினி முதலான பலர் இன்னும் சிறையில் இருக்கின்றனர். இத் தீர்ப்பின் அடிப்படையில் கூட அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யலாம். ஆனால் தமிழர் நாடாக நம் நாடு இல்லையே! நாம் தமிழர் என்னும் உணர்வைத் தமிழர் தந்தை ஆதித்தனார் விதைத்ததும் பலர் உணரவில்லையே! சீமான் உணர்த்தும் பணியைத் தொடங்கியதும் சிறைக்கு அனுப்பப்பட்டாரே! தமிழ் நாட்டில் தமிழ் முதன்மையும் தமிழர் தலைமையும் பெறும் பொழுதுதான் விடிவு கிடைக்கும். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
Friday, August 20,2010 01:17 PM, தாரிக் said:
இவ்வளவு சொன்னீங்களே அவனுங்கள தூக்குள போட்டாச்சா இல்ல இன்னும் சுகமா கஞ்சி சாப்பிட்டுகுட்டு இருக்கானுங்களா அத சொல்லவே இல்ல
Wednesday, August 11,2010 04:45 PM, raj said:
They hanged or not