சனி, 23 அக்டோபர், 2010

நேற்று தோழர் தியாகு அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரை தீர்ப்பாயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

2010-08-26 01:11:07
தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரை தீர்ப்பாயத்தில் நேற்று தோழர் தியாகு அவர்கள் செந்தமிழன் சீமான் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது தவறு என்று தனது வாதங்களை முன்வைத்தார், அதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி

000. 



முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால், தேசிய ஒருமைப்பாடு உடையும்: வைகோ

சென்னை, அக். 23: முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு உடைத்தால், அதுவே இந்திய ஒருமைப்பாடு உடைவதற்கு அச்சாரமாகிவிடும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரித்திருக்கிறார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கை:இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த பொறியியல் மேதையான பென்னிகுயிக் தன்னுடைய சொத்துகளை விற்று கட்டிய முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எத்தகைய நில அதிர்வு ஏற்பட்டாலும் எந்த பாதிப்பும் நேராத வகையில் உறுதியாகக் கட்டப்பட்டுள்ள அணையாகும். இதில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இந்தியாவின் வேறு எந்த அணையிலும் கிடையாது. 999 ஆண்டுகளுக்கான தண்ணீர் உரிமை தமிழ்நாட்டுக்கு 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் போடப்பட்ட ஒப்பந்தத்திலேயே உள்ளது.இந்த அணையை உடைப்பதற்குக் கேரள அரசு எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டது. எந்த நேரமும் அந்த விபரீதம் நடக்கலாம். அப்படி நடந்தால் தென் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக - பாலைவனமாக மாறுவதைத் தடுக்கவே முடியாது.அணையின் நீர்மட்டம் 152 அடியாக 1979 வரையில் தமிழகம் பயன்படுத்தி வந்தது. கேரளத்தில் அவர்கள் கட்ட திட்டமிட்ட இடுக்கி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு போவதற்கு மலையாள மனோரமா பத்திரிகை மூலம் முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயம் இருப்பதாகப் பொய்ப் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். இதன் விளைவாக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் முன்னிலையில் திருவனந்தபுரத்தில் தமிழ்நாடு-கேரள அரசுகளுக்கு இடையில் ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அணையின் நீர்மட்டத்தைத் தற்காலிகமாக 136 அடியாகக் குறைத்துக் கொள்வது என்றும், அணையை வலுப்படுத்திய பின்னர் நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. கேரள அரசு செய்த பல இடையூறுகளையும் மீறி அணை மேலும் வலுப்படுத்தப்பட்டு விட்டது.இதனிடையே இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதிமன்ற யோசனையின்படி மத்திய நீர்வளத்துறை ஆணையம் அமைத்த இரண்டு நிபுணர் குழுக்கள் அணையைப் பார்வையிட்டு ஆய்வு நடத்தி அணை வலுவாக இருக்கின்றது என்று அறிக்கை சமர்ப்பித்தன.2006-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் அன்று உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளான நீதிபதி சபர்வால், நீதிபதி, தக்கர், நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு நீதிமன்றம் முல்லைப் பெரியாறில் தமிழ்நாடு 142 ஆடி வரைக்கும் நீரை உயர்த்திக் கொள்ளலாம். பின்னர் படிப்படியாக தண்ணீர் மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம். இதற்கு எந்த விதத்திலும் கேரள அரசு தடங்கலோ முட்டுக்கட்டையோ போடக்கூடாது என்று தீர்ப்பு அளித்தது.கேரள அரசு சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டி மார்ச் 18-ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்குத் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று சட்டத்தை நிறைவேற்றியது. உடனடியாக அடுத்த 14-ஆம் நாள் அ.தி.மு.க. அரசு இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.ஆனால் அதற்கு அடுத்து வந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அணையை உடைப்போம் என்று பேசும் அச்சுதானந்தன் அரசு கேரளத்திலும், தமிழ்நாட்டில் திமுக அரசும் பொறுப்பேற்றன. உச்ச நீதிமன்றத்தில் கேரளம் வழக்கை இழுத்து அடித்து 33 வாய்தாக்களை வாங்கியது. மூன்றரை ஆண்டு காலம் கேரளம் இப்படி வாய்தா கேட்டபோது தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மூன்றரை ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தமிழ்நாட்டுக்கே நீதி கிடைக்கும் என்ற நிலை இருந்தபோது கேரள அரசு தந்திரத்தோடு வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்ற அமர்விலிருந்து மாற்றி அரசியல் சட்ட அமர்வு மன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று வாதாடியது.தமிழக முதல்வர் கருணாநிதியின் யோசனையின்பேரில் தமிழக அரசின் வழக்கறிஞர் அதற்கு ஒப்புதல் எழுதிக் கொடுத்தார்.  இதையடுத்து, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவுக்கு முதலில் வரவேற்பு தெரிவித்த கருணாநிதி, பின்னர் தன் நிலையை மாற்றிக் கொண்டு குழுவில் தமிழகம் பங்கேற்காது என்று கூறினார். அதன் பின்னர் குழுவிலே பங்கெடுக்கும் என அறிவித்தார்.முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாக தெரிவித்த ரூர்கி ஐ.ஐ.டி. குழு அறிக்கையையும் நில அதிர்வு நிபுணர்கள் பால், சர்மா இருவர் அறிக்கையையும் ஐவர் குழு ஏற்க வேண்டும் கேரள அரசு என்று வற்புறுத்துகிறது. தமிழக அரசு அதனை எதிர்த்து உள்ளது. இந்த எதிர்ப்பில் உறுதியாக இருக்க வேண்டும். கேரளத்தினுடைய இந்த நிபுணர் குழுக்களின் அறிக்கையை ஆனந்த் தலைமையிலான குழு ஏற்குமானால் குழுவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைக் கேரளம் உடைக்குமானால் இந்திய ஒருமைப்பாடு உடைக்கப்படுவதற்கு அதுவே அச்சாரமாகிவிடும். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்துக்கள்

  இந்தியக் கண்டத்தில் உள்ள வேறு மாநில மக்களுக்கு இவ்வாறு அடுத்த மாநிலத்தால் இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டால் வைக்கோ கூறுவது உண்மையாகும். ஆனால், தமிழர் அல்லாதவர்களால் தமிழர்களுக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகளையும் 
செயற்பாடுகளையும் ஏற்றுக் கொள்ளும் மான உணர்வற்றவர்கள் வாழும் தமிழ் நாட்டில், தம் சொந்த இனம் கொத்துக் குண்டுகளாலும் எரிகுண்டுகளாலும் வஞ்சகத்தாலும்
வாழ்விடங்கள் எரிகாடுகளாகவும் 
புதைகாடுகளாகவும் ஆகும் வகையில் 
கொல்லப்பட்டாலும் கிளர்ந்தெழாத தமிழ் நாட்டில் அப்படி ஒன்றும் நடக்காது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 6:19:00 PM
I have been listening to your statements and the speeches you deliver for the last 30 years. Though my mother tongue is not Tamil, I love Tamil for its rich culture and the beautiful language that no other Indian language equalls. You are the one among the few Tamil politicians who could boldy speak and the rest are cowardly and power craving ones. When the Tamils understand the in-depth meaning of your speech, India is doomed. My hats off to you. India needs leaders more of your skill and intelligence unlike the foreign lady who can in noway feel for the poverty ridden Indians.
By Jim Tolstoy
10/23/2010 5:22:00 PM
Rightly said Mr.Vaiko. India will go fragements for what it has been doing for the Tamils especially these 4 and above years. We have had enough. We have lost great leaders like Prabhakaran and Veerapan who had been nightmares for the Indian government and also for the whole world. They could be defeated because of the cowardly war leashed our against the Tamils and with a lot of false promises by the governmnet. Now even the neighbours try to trouble the Tamils. When are we going to teach them? Let the Tamils decide. They will definitely do something that the India will never forget
By John Christopher
10/23/2010 5:16:00 PM
Long Live Mr. Vaiko. One day you will be placed among the greats of the Tamils. If the Tamils had completely backed you, they could have seen much more progress and development than this. Because you are the only one who could speak in the parliament without fear for the Tamils. We don't have people of your calibre in the regional parties. We have some illiterate and goondas in the parliament. That's what the Tamils want now. Because they get free TV, one rupee rice, free cycle. They forget it is worse than begging. When they are going to realise it is their own tax and their own resources, their own assets, that the government is paying them in different way.
By Aishath Adam
10/23/2010 5:11:00 PM
3. ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பனை. இக்குடைகள் விற்பனையில் ரிலையன்ஸ் முன்னிலை. தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ. 220 ஆக விலை குறைந்தது. சென்ற வாரம் அது 230 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள் – விஜயகாந்த் அறிக்கை. பிரேமானந்தாவின் அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அவர் நிரபராதி எனக் கூறி விடுவித்தார். அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு 95 MBPS - பி.எஸ்.என்.எல் வழங்குகிறது. மாத வாடகை ரூ. 51 மட்டுமே. டாடா இண்டிகாம் தனது புதிய சலுகையை வெளியிட்டது. பத்துத் தலைமுறைக்கு வேலிடிட்டி உள்ள புதிய ப்ரீபெய்டு கார்டின் விலை ரூ. 69. இப்படிக்கு நட்புடன்
By Velumani.V Mannargudi Thiruvarur
10/23/2010 4:24:00 PM
2.. வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உலகப்பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முதலிடம். அவரது சொத்துமதிப்பு 1,00,00,00,00,00,00,000 கோடி. "கிரி டிவி" – மதுரையில் புதிய டிவி சேனலை அழகிரி துவக்கினார். நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை வேலைகள் விரைவில் முடிவடையும். நாடாளுமன்றத்தில் அமைச்சர் உறுதி. காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் – பிரதமர் ராகுல் காந்தி அறிக்கை. சுனாமி தாக்கியதில் கலிங்கப்பட்டிக்குள் தண்ணீர் புகுந்தது. எதிரிக்கட்சிகளின் திட்டமிட்ட சதி என வைகோ முழங்கினார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தெரிவித்தார். ஆனால் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். இந்தியாவின் மக்கள்தொகை 220 கோடியை எட்டி மகத்தான சாதனை. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் இந்தியாவில் 43% பேர் என மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார். பின்லேடன் சுற்றி வளைக்கப்பட்டான் – அமெரிக்கா அறிவிப்பு ஓசோன் படலம் தடவப்பட்ட குடைகள் அமோக விற்பன
By Velumani.V Mannargudi Thiruvarur
10/23/2010 4:23:00 PM
மல்லாக்கப் படுத்து வீட்டின் மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்த நான் கால எந்திரத்தில் 2020-க்குப் பயணித்தால் என்ன எனத் திடீரென்று தோன்றியது. மூளையைக் கசக்கி அங்கு பத்திரிகைகளில் நான் படித்த தலைப்புச் செய்திகளே இவை. குறிப்பு : இதில் கூறப்படும் செய்திகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டவை அல்ல; சிரித்துவிட்டு மறந்துவிடுங்கள்; சிரித்துவிட்டு சில விஷயங்களைக் குறித்துச் சிந்தித்தாலும் சரி. தேதி : 10.9.2020 ஸ்பைடர்மேன் பாகம் 15 இன்று வெளியீடு ஆஸ்திரேலியா எட்டாவது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. பெட்ரோல் விலை சற்றே சரிவு – விலை லிட்டருக்கு ரூ. 999 மட்டுமே. சன் டிவியில் "கோலங்கள்" 4,450 வது பாகத்தைத் தொட்டது. இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கங்குலி தன் பதவியை ராஜினாமா செய்தார். எட்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் 95 வயதாகும் கலைஞர் கருணாநிதி. நடிகர் தனுஷுக்கும், இயக்குனர் சூர்யாவுக்கும் டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்தது தனியார் பல்கலைக்கழகம். வரலாறு காணாத உயர்வு : பங்குச் சந்தை சென்செக்ஸ் 34,000 புள்ளிகளைத் தொட
By Velumani.V Mannargudi Thiruvarur
10/23/2010 4:20:00 PM
HE IS THE ONE WHO IS REALLY FIGHTING FOR THE TAMILS. HE SHOULD COME OUT OF THE AIADMK ALLIANCE.
By Ramesh
10/23/2010 3:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
natpu மீபத்தில் மாவட்டவாரியாகத் தன் கட்சியினரைச் சந்தித்துவரும் தி.மு.க தலைவரான கருணாநிதியின் பேச்சில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை தமிழக அரசியலை இயல்பாகக் கவனித்து வரும் யாரும் உணர்ந்துகொள்ள முடியும். அதில் அவர் தொடர்ந்து வலியுறுத்தும் விஷயம் - உள்கட்சி ஒற்றுமை. அப்படியொரு ஒற்றுமை இருந்தால் ஆயிரம் அ.தி.மு.க.க்கள் வந்தாலும் தி.மு.க வை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் சொல்லவேண்டிய அவசியம் என்ன?
தன்னைக் குறைத்து மதிப்பிட்டு சர்வே ஒன்று ஒரு நாளிதழில் வெளிவந்ததற்காக அந்த நிறுவனம் பட்டபாடு தமிழகத்திற்குத் தெரிந்த ஒன்றுதான். உட்கட்சிப் பிரச்சினை எந்தெந்த விதங்களில் எல்லாம் தி.மு.க வில் வெடித்திருக்கிறது என்பதும் பலருக்கும் தெரியும். தி.மு.க வில் இருக்கும் மோதல்கள் குறித்த பத்திரிகைச் செய்திகள் - அ.தி.மு.க ஆட்சியின்போது வெளிவந்த தகவல்களுடன் ஒப்பிடும்போது குறைவுதான். முதல்வர் கருணாநிதி இப்போதும் அடிக்கடி உட்கட்சி ' ஒற்றுமை' பற்றிக் குறிப்பிடக் காரணம் என்ன?  இல்லாமல் போனதால்தானே!
natpu நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க வுடன் கூட்டணி அமைத்தபோது காங்கிரசுக்கு தி.மு.க மீது இருந்த மதிப்பு இப்போதும் இருக்கிறதா? சோனியாவைத் தேடிப்போய்ப் பார்க்க வேண்டிய நிலையில்தான் மூத்த தலைவரான கருணாநிதியும் இருக்கிறார். தமிழகத்திற்கு வரும் ராகுல்காந்தி கருணாநிதியைப் பார்ப்பதைத் தவிர்க்கும்போது இவர் மட்டும் விமான நிலையத்திற்குப் போய் சோனியாவைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
காரணம் - ஒன்று தான். மத்திய அரசுக்குச் சிக்கல் ஏற்படுத்தும் விதத்தில் பூதாகரமாக வளர்ந்து நிற்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். அந்தத் துறை சார்ந்த ராசா மீது குற்றச்சாட்டுகள் வலுத்துக் கொண்டிருக்கும் நிலையில் - காங்கிரசுக்கு அதனால் ஏற்படும் தர்மசங்கடத்தையும் தி.மு.க உணர்ந்திருக்கிறது. ராசா மீது எதுவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடக் கூடாது என்று தி.மு.க தொடர்ந்து வற்புறுத்தினாரும் அது காங்கிரஸ்.தி.மு.க உறவில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது உண்மை.
காமன்வெல்த் ஊழல் உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - ஊழலை மட்டும் ஒரு காரணமாக வைத்து தி.மு.க அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால் - காங்கிரசுக்கும் அதே குற்றச்சாட்டு பொருந்தாதா என்று தி.மு.க பதிலுக்குக் கேள்வி எழுப்பலாம். ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்படும் தொகை - ஒரு லட்சம் கோடியைத் தொடுமளவுக்குப் போயிருப்பதும், தமிழ்நாட்டு ஊடகங்களில் அது குறித்த செய்திகள் அவ்வளவாக வராத நிலையில் வட இந்திய ஊடகங்களில் ஸ்பெக்ட்ரம் தலையாயப் பிரச்சினையாக இன்று வரை அடிபட்டுக் கொண்டிருப்பதும் காங்கிரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய அவசியத்தை - அதனால் ஏற்படும் இழப்பைப் பொருட்படுத்தாமல் யோசிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரசுக்கு உருவாகியிருக்கிறது.
natpu வாரிசு மோதலும், ஸ்பெக்ட்ரம் ஊழலும் தற்போது தி.மு.க வின் அடையாளமாக அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் - சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய கருணாநிதி பெரியார், அண்ணா கொள்கைகளை நினைவூட்டிப் பேசியிருக்கிறார். தேர்தல் நெருங்கும்போது மட்டும் அவர்களைப் பேசியாக வேண்டிய அவசியம் தி.மு.க வுக்கு இருக்கிறது. திராவிட இயக்கத்தின் தொடர்ச்சி நாங்கள் என்கிற அடையாளத்தையும் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது.
பெரியார் விழா, அண்ணா நூற்றாண்டு நூலகம் இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் நடைபெற்றிருக்க முடியுமா என்றும் நாளைக்கு ஒரு வேளை அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அந்த நூலகத்தை இடித்துத் தள்ளமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா என்றும் உடன்பிறப்புகளை உசுப்புகிற விதத்தில் கேட்டிருக்கிறார். தி.மு.க ஆட்சியில் உருவான வள்ளுவர் கோட்டமும்,  பூம்புகார் உள்ளிட்டவற்றை ஆட்சி மாறியதும்natpu இடித்தத் தள்ளிவிட்டார்களா? அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இரண்டு முறை உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெறவில்லையா?  எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது தான் பெரியாரின் சீர்திருத்த எழுத்துக்கள் அமல்படுத்தப்பட்டு அவை இன்று இயல்பாகி விட வில்லையா?
அப்புறம் ஏன் தி.மு.க தொண்டர்களைத் தூண்டும்விதத்தில் இதையெல்லாம் இடித்து விடுவார்கள் என்கிற அச்சத்தை ஏன் கருணாநிதி பரப்ப வேண்டும்? இலங்கையில் சிங்களர்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்த மாதிரி தமிழகத்தில் நிகழும் என்று எதை வைத்து முடிவுக்கு வந்து ஏன் வீண் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்? காங்கிரசில் முதலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் தி.மு.கவுக்குப் புதிராகத் தெரிந்தார். பிறகு ராகுல் தெரிந்தார். இப்போது சோனியா உட்படப் பலரும் புதிராகத் தெரிகிறார்கள். அதனால் திராவிட நாடு பற்றிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. 'இந்த ஆட்சி போய் இன்னொரு ஆட்சி வருமானால் நிச்சயமாக அண்ணா கனவாகி விடுவார்' என்றும் அவரைப் பேச வைத்திருக்கிறது. தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிற தொல். திருமாவளவன் காங்கிரசுக்கு எதிரான கண்டனத்தைத் துவக்கி வைத்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் மீதான பாசமும் தி.மு.கவுக்கு இப்போது வந்திருக்கிறது. தேர்தல் என்னென்ன உளவியல் மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்துகிறது!
காங்கிரஸ் ஒரு வேளை அ.தி.மு.க கூட்டணிக்குப் போகிறதா என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் - காங்கிரஸ் தயவில் தி.மு.க இருப்பதைப் போன்ற தோற்றம் தற்போது ஏற்பட்டிருப்பதை காங்கிரஸ் ஒருவேளை விரும்பலாம். தி.மு.கவுடன் தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதிகள் என்பதை வற்புறுத்த இந்தச் சந்தர்ப்பத்தை அது பயன்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
natpu அ.தி.மு.க வெவ்வேறு இடங்களில் கூட்டத்தைக் கூட்டுவது ஒருபுறம் தி.மு.கவுக்குப் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் இன்னொருபுறம் காங்கிரசின் மௌனமும், புதிரான செயல்பாடுகளும் பதற்றத்தை அதிகரிக்க வைத்திருக்கின்றன. அதனால் தான் எப்போதோ கீழே போட்டுவிட்ட ஆயுதங்களான திராவிட நாடு, இலங்கைத் தமிழர் பிரச்சினை, பெரியார், அண்ணா கொள்கைகளை எல்லாம் திரும்பவும் கையில் எடுக்க வேண்டிய அவசியம் தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. பத்து,பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இவற்றைச் சொன்னால் இவற்றின் அர்த்தத்தை உணர்ந்தவர்கள் தி.மு.கவில் நிறையப் பேர் இருந்தார்கள். இப்போது தி.மு.கவில் உள்ள இளைய தலைமுறைக்கு தி.மு.கவில் எந்தக் கோஷ்டியில் இருந்தால் பாதுகாப்பு, வருமானம் வர வாய்ப்பு என்கிற யதார்த்தமான விஷயங்களே நிறைந்திருக்கும் போது - தி.மு.கவில் பழைய கொள்கைகளைத் தூசி தட்டிப் பேசினால் இன்றைய தி.மு.கவில் இருக்கும் இளைய தலைமுறைக்கும் அது புதிராகவே இருக்கும்.


Comments

 Ilakkuvanar Thiruvalluvan said:
கட்சி நிலைப்பாட்டிற்கு எவை தேவையோ அவற்றைக் கலைஞர் பேசியுள்ளார். எனினும் அவற்றிற்கான காரணங்களை யூகி நன்கு அலசி ஆராய்ந்துள்ளார். இருப்பினும் காங். யாரும் சீண்டாத கட்சியாக மாறுவதே தமிழ் நலனுக்கு நல்லது. ஆனால் முதன்மைக் கட்சிகள் மக்களிடம் செல்வாக்கு இழந்து வரும் அக்கட்சிக்கு மதிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். தாங்கள் உண்டாக்கும் மாயையில் தாங்களே சிக்குவதால் எக்கட்சியை வேரறுக்க வேண்டுமோ அக்கட்சியையே அடைக்கலம் புகும் அவல நிலைக்குச் செல்கிறார்கள். கொள்கையும் நேர்மையும் தமிழ், தமிழர் நலனும் இருப்பின் அந்த நிலை வராது. இதனை உணர்த்துகிறது கட்டுரை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

செம்மொழி விருதுகள் - யாருக்கும் வெட்கமில்லை

நட்பூ இணைய இதழ்

யாருக்கும் வெட்கமில்லையின் எதிரொலி

natpunatpu

24.10.10 ஞாயிறு இரவு 10.30மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் ஆட்சித்தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் செம்மொழி விருதுகள் குறித்து உரையாடுகிறார்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை இந்த இணைய தளத்தில் பார்க்கலாம்
http://livetvchannelsfree.net/makkaltv.html
http://goo.gl/ORRj

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்று தான்.. - தாமரை - விகடன்

thamilvaddam] கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்று தான்.. - தாமரை - விகடன்









 
'காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடிப் பிடிப்பது உந்தன் முகமே' என்று

பாடல் வரிகளில் பனியின் இதம், 'கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ் சாபம்' என்று இந்திய அரசைச் சாடும் கவிதையில் வெடிகுண்டு வீரியம்... நெருப்பும் மழையும் நிரம்பியவை தாமரையின் எழுத்துக்கள். கவிஞர், பாடலாசிரியர், பெண்ணியவாதி, மரண தண்டனையை ஒழிக்கக் கோரும் மனித உரிமைப் போராளி என இந்தத் தாமரைக்கு இதழ்கள் பல! "எனக்கு இலக்கியம் எப்படி முக்கியமோ... அரசியல் அதைவிட முக்கியம்!" என்கிறார்.
"சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்த சூழல்தான். பெண்ணியம் பேசும் உங்களால், சுதந்திரமாக இயங்க முடிகிறதா? பெண்ணாக நீங்கள் ஏதேனும் அவதிகளைச் சந்தித்தது உண்டா?"
"திரைப்படத் துறை மட்டும்தான் ஆணாதிக்கம் நிறைந்ததா? அரசாங்கம், நிர்வாகம், பத்திரிகை, பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் 'சரிநிகர் சமானமாக' இயங்குகின்றனவா? வீட்டுச் சமையல் அறையில் ஆரம்பித்து, வான்வெளிப் பயணம் வரை ஆணாதிக்கம் இல்லாத இடமே கிடையாது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சிக்கலைச் சமாளிக்கலாம். 'ஆண்கள் எல்லோரும் எதிரிகள், அவர்களை விலக்கிவிட்டு இயங்க வேண்டும்' என்ற வறட்டுப் பெண்ணியம் அல்ல என்னு டையது. 'பெண்ணும் ஒரு மனித உயிரே' என் பதைப் புரியவைத்து, ஆண்களை வென்றெ டுப்பதில் (Winning over) அடங்கி இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்! எனக்கென்று வரையறைகள், நிலைப்பாடுகள் உண்டு. அவற்றில் சமரசம் செய்துகொள்வது கிடையாது. எந்தத் துறையைக் காட்டிலும் திரைத் துறையில் எனக்கு அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. என்னுடைய புரிதலும் அணுகுமுறையும் முதன்மையான காரணங்கள் எனச் சொல்லலாம்!"
"நளினியை விடுதலை செய்வது குறித்து நீங்கள் எடுத்த முயற்சிகள், உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவங்களைத் தந்தது?"
"நளினி, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரே தவிர, அவர் கொலையாளி அல்ல. நடக்கப்போகும் விபரீ தத்தைத் திருப்பெரும்புதூர் சென்றடையும் வரை நளினி அறிந்திருக்கவில்லை என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி தாமஸ் தன் தீர்ப்பிலேயே குறிப்பிட்டார். சந்தர்ப்ப சூழ்நிலையில் குற்றவாளியாக்கப் பட்ட ஒரு பெண்ணை, அவர் இத்தனை ஆண்டுகள் சீரிய முறையில் சிறையில் கழித்த பிறகும் விடுதலை செய்ய மறுப்பது, மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் நளினி விடுதலைக்கான 'கையெழுத்து இயக்கம்' தொடங்கினோம். முதல்வரிடம் விண்ணப்பத்தைக் கையளித்தபோது, அவரும் நளினி விடுதலையையே விரும்புவதாகக் கூறினார். பிறகு, நடந்தவற்றை நாடறியும். நளினி விடுதலையை மறுப்பதற்குப் பின்னணியில், மிகப் பெரிய அரசியல் இருப்பது புரிகிறது. இப்போதும் அரசிடம் நாங்கள் வேண்டுவது, மனித உரிமைகளின் பெயரால் நளினியை விடுதலை செய்யுங்கள் என்பதே!"
"பொதுவாக, எல்லா சினிமாப் பாடலாசிரியர்களும் பாராட்டுக் கவிஞர்களாக மாறிவிட, நீங்கள் மட்டும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து இயங்குவது எப்படி?"
"அரசுக்கு எதிராக இயங்க வேண்டும் என்று எனக்கு 'வேண்டுதல்' ஒன்றும் இல்லை. நான் மக்களில் ஒருத்தி. மக்களுக்கு எதிராக அரசு மாறும்போது, அரசுக்கு எதிராக நான் மாறுகிறேன். இந்த அரசு மட்டுமல்ல; வேறு எந்த அரசு வந்தாலும் இதே நிலைப்பாடுதான். அரசு, தமிழினத்துக்கும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் கேடு செய்யும்போது, எதிர்த்துக் குரல் கொடுக்கிறேன். அது ஒரு படைப்பாளியாக என்னுடைய கடமை. அதுவே தமிழினத்துக்கு நல்லது செய்தால் பாராட்டத் தயங்க மாட்டேன்.
தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன்; அனைவருக்கும் தமிழில் கல்வி கிடைக்கச் செய்யட்டும். பாராட்டுகிறேன். நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யட்டும். பாராட்டுகிறேன். மதுவை ஒழிக்கட்டும். பாராட்டுகிறேன். ராஜபக்ஷே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்றட்டும்... பாராட்டுப் பத்திரமே வாசித்து விடுகிறேன்!"
"ஈழப் பிரச்னைக்காகப் போராடியவர்களில் ஒருவர் நீங்கள். மே 18-க்குப் பிறகு, 'இந்த எல்லாப் போராட்டங்களும் வீண்' என்ற அயர்ச்சி ஏற்பட்டதா?"
"போரோடு முடிந்துவிடவில்லையே ஈழத்துக் கொடுமைகள். முள்வேலி முகாம் கொடுமைகள், சரண் அடைந்தவர்கள் சித்ரவதை, பாலியல் வதை, கொடூரக் கொலைகள், தமிழர் நிலம் சிங்களமயமாக்கல் என்று இன்னமும் தொடர்கின்றனவே. புண் பட்டுக்கிடந்தால் வேலைக்கு ஆகாது என்று துள்ளி எழுந்து, இலங்கைப் புறக்கணிப்பு, போர்க் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவது தொடர்பாக முன்னிலும் அதிகமாகவே வேலை செய்கிறேன். ஈழம்... என் நெஞ்சில் ஆறாத, மாறாத காயம்!"
"இன்றைய இந்திய காங்கிரஸ் அரசின் போக்கு குறித்து?"
"இந்திய காங்கிரஸ் அரசு யாருக்காக எப்படி எல்லாம் செயல்படுகிறது, எப்படிப் பெருங் குழுமங்களுக்கு ஏவல் செய்கிறது என்பதை அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள் பிட்டுப் பிட்டுவைத்துள்ளார்கள். நான் புதி தாகச் சொல்ல வேண்டியது ஏதும் இல்லை. என்னைப் பொறுத்தவரை, இது தமிழினத் தைக் கருவறுக்கப் புறப்பட்ட அரசு. தமிழி னம் வாழ வேண்டும் எனில், தமிழ்நாட்டில் இருந்து காங்கிரஸை அடியோடு ஒழித்தாக வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு ஒரு செல்வாக்கு இருக்கும் வரையில்தான், இரு பெரும் கழகங்களும் மாறி மாறி அதைத் தோளில் சுமக்கவும், அதற்காகத் தமிழனைக் காட்டிக்கொடுக்கவும் போட்டியிடும். தமிழர் நலன், தமிழ்நாட்டின் உரிமைகள் இவற்றை முன்னிறுத்தினால் மட்டுமே, தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்ற நிலையைத் தோற்றுவிப்பது நம் கையில் உள்ளது. அதற்கு முதல் வேலை, காங்கிரஸை வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதுதான். நல்ல வாய்ப்பாக சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெல்லக் கூடாது என்பதை மனதில்கொள்வோம்!"
"ஈழப் பிரச்னையில் கருணாநிதி - ஜெயலலிதா இருவரின் நிலைப்பாடு குறித்த உங்கள் கருத்து என்ன?"
"ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து, பிணக் குவியல்களின் மீது ஏறி வெறியாட்டம் போட்ட காங்கிரஸின் குருதிக் கறை படிந்த கையை இறுகப் பற்றி, அதை இழந்துவிடக் கூடாதெனத் துடிப்பவர் கருணாநிதி. அந்தக் கையை எப்படியாவது கைப்பற்றத் துடிப்பவர் ஜெயலலிதா. 'ஆமாண்டா, அப்படித்தான் செய்வேன், உன்னால முடிஞ்சதைப் பாரு' என்று தெனாவெட்டாகக் காட்டிக்கொடுப் பார் ஒருவர். 'ஐயகோ, என் செய்வேன், அழிகிறதே என் தமிழினமே!' என்று அழுது கொண்டே காட்டிக்கொடுப்பவர் இன்னொ ருவர். இருவருக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு? சாயலில் வேறுபட்டாலும், சாரத்தில் இருவரும் ஒன்றுதான்!"
"'ஈழப் போராட்டத்தின் தோல்வி (அ) பின்னடை வுக்கு எது அல்லது, யார் காரணம் என்று கருதுகிறீர்கள்?"
"சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, ஆதரவு கொடுத்து, உலக நாடுகள் தலையிட்டுக் காப்பாற்றி விடாமல் தடுத்து, வேவு பார்த்து, வழிகாட்டிக் கூட்டுச் சதி செய்து, இனப் படுகொலைப் போரைப் பின்னால் இருந்து நடத்திய இந்திய அரசே முதற்பெரும் காரணம்! எப்பாடுபட்டேனும் இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பைக் கை கழுவிவிட்டு, கபட நாடகங்கள் நடத்தி, இனப் படுகொலைக்குத் துணைபோன தமிழக அரசு, இரண்டாவது காரணம்! இதை வெளிச்சம் போட்டுக் காட்டி, வீதிக்கு வந்து போராடி இனப் படுகொலையைத் தடுக்காமல், 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்று அருட்பெரும் பொன் மொழியை உதிர்த்துவிட்டு, உறங்கப் போய் விட்ட எதிர்க் கட்சித் தலைவி ஜெயலலிதா, மூன்றாவது காரணம்! இந்த நாடகங்களை எல்லாம் ஒரு கட்டத்தில் அறிந்துகொண்ட பிறகு, கொதித்தெழுந்து போராடித் தம் தொப்புள் கொடி உறவுகளைக் காப்பாற்றா மல், கையைப் பிசைந்து முகத்தைத் திருப்பிக்கொண்டதோடு முடித்துக்கொண்ட தமிழக மக்கள், நான்காவது காரணம்!"
__._,_.___

லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

October 22nd, 2010 யாழ். வலிகாமத்தில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 22.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு வீரவணக்க  நாள் இன்றாகும்

ஈழ மண்ணின் தற்போதைய கோலம்


ஈழ மண்ணின் தற்போதைய கோலம்

Share/Bookmark
இது எந்த நாகரிகத்தின் எச்சம்?


தமிழகத்தின் பிரதானக் கட்சிகள் திருச்சியில் அண்மையில் அடுத்தடுத்து நடத்திய மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களின்போதும், கூட்டம் முடிந்த இரவுப் பொழுதுகளில் அந்தக் காட்சியைக் காண முடிந்தது. வெறிச்சோடிய காலி மைதானம், அதில் லட்சம் காலிக் கோப்பைகள், பல்லாயிரக்கணக்கான பொட்டலத் தாள்கள், போத்தல்கள், பாக்குத் தாள்கள், பாலிதீன் பைகள், அறுந்த செருப்புகள், நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள்...  எதற்கான சாட்சிகள் இவை?  அரசியல் கட்சிகளுக்கு இப்போதெல்லாம் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துவது என்பது ஒரு பெரிய காரியமாக இருப்பதில்லை. தொண்டர்களுக்கும் திரள்வதற்குப் பெரிய நோக்கங்கள் ஏதும் தேவைப்படுவதில்லை.பொதுக்கூட்டம் என்றால் வாகனங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், ஒலிபெருக்கிகள், பிரியாணி பொட்டலங்கள், மது போத்தல்கள், பணத்தாள்கள், முழக்கங்கள். பரஸ்பர புரிதல்கள் எளிமையாக இருப்பதால், இந்தக் கூட்டங்கள் சுலபமாக முடிந்துவிடுகின்றன.  ஆனால், கூட்டம் நடைபெறும் இடம் வெறும் உரைகளோடும் முழக்கங்களோடும் கைதட்டல்களோடும் மட்டும் முடிந்துவிடுவதில்லை. ஒரு கூட்டத்தில் லட்சம் பேர் கூடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில மணி நேரங்களுக்குள் அந்தப் பகுதியில் எப்படியும் லட்சம் டீ, காபி விற்பனையாகிறது. பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறது. தின்பண்டங்கள் விற்பனையாகின்றன. சில ஆயிரம் சிகரெட்டுகளும் பீடிகளும் வெற்றிலைப் பாக்கு புகையிலைப் பொருள்களும், பான் பொருள்களும் விற்பனையாகின்றன. யாவும் அங்கேயே பயன்படுத்தப்படுகின்றன. யாவற்றின் எச்சங்களும் அங்கேயே உமிழப்படுகின்றன.  ஒரு சின்ன நிலப்பரப்பு. முழுவதும் குப்பைகள், எச்சங்கள், எச்சில்... ஒரு சாதாரண பொதுக்கூட்டமானது சூழல் சார்ந்தும் சுகாதாரம் சார்ந்தும் எவ்வளவு மோசமான விஷயமாக மாறிவிடுகிறது?  ஒரு பொதுக்கூட்டத்துக்கு அரசியல் கட்சியினர் எவ்வளவோ திட்டமிடுகிறார்கள். கட்சித் தலைவர்கள் ஊர்ஊராகச் செல்கிறார்கள். தெருத்தெருவாகக் கூடுகிறார்கள். ஆள்களைச் சேர்க்கிறார்கள். வாகனங்களைச் சேர்க்கிறார்கள். கூட்டம் நடைபெறும் இடத்தைக் கோட்டையாக்குகிறார்கள். மேடையை அரசவையாக அலங்கரிக்கிறார்கள். வரலாற்றுக் காலத்துக்குத் தம் தலைவர்களையும் தொண்டர்களையும் அழைத்துச் செல்ல எவ்வளவோ மெனக்கெடுகிறார்கள்.   ஆனால், லட்சம் பேர் கூடும் இடத்தில் ஒரு குப்பைத்தொட்டியைக்கூட காண முடிவதில்லையே ஏன்? குறைந்தபட்சம் அது தொடர்பான பிரக்ஞைகூட இன்னும் நம்மிடம்  வரவில்லையே, ஏன்?  உண்மையில் இது ஒரு வெளிப்பாடு. நம்முடைய அகம் வேறு; புறம் வேறு என்பதை அம்பலப்படுத்தும் வெளிப்பாடு.  இந்தியர்கள் தன்னளவிலும் வீட்டளவிலும் மிகுந்த சுத்தமானவர்கள்தான். ஆனால், இந்தியர்களின் சுத்தம் ஏன் அவரவர் வீட்டு வாசலைத் தாண்டும்போது முகம் மாறிவிடுகிறது?  இந்திய கிராமப்புறங்களிலுள்ள சின்ன தனியார் மருத்துவமனைகளாகட்டும், மாநகரங்களிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளாகட்டும்; அவற்றில் காணப்படும் சுத்தத்தை கிராமப்புறங்களிலுள்ள சின்ன அரசு மருத்துவமனைகள், மாநகரங்களிலுள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுத்தத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய பின்னர், அங்கு பேணப்படும் பொது சுகாதாரம் குறித்து இந்தியர்கள் சொல்லிச் சொல்லி மாயும் கதைகளை அவர்கள் இங்கு நடந்துகொள்ளும் விதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.  உண்மையில் இந்தியாவில் சுத்தம் என்பது கிராமம் - நகரம் சார்ந்த விஷயம் அல்ல; ஏழை - பணக்காரர் சார்ந்த விஷயம் அல்ல; படித்தவர் - படிக்காதவர் சார்ந்த விஷயம் அல்ல; கவனிக்க யாருமற்ற சூழலில் - கட்டுப்படுத்த யாருமற்ற சூழலில் - பிறர் நலனைப் பொருள்படுத்தாமல் அசிங்கமாக நடந்துகொள்வதை நாம் ஒரு தேசிய ஒழுங்கீனமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறோம்.  நாம் நம் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியைக் கற்றுக் கொடுக்கிறோம். உயரிய தனி மனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கிறோம். எல்லாவிதமான கலைகளையும் கற்றுக் கொடுக்கிறோம். ஆனால், பொது இடத்தில் ஒரு நல்ல குடிமகனாக நடந்துகொள்ள ஏன் கற்றுக் கொடுப்பதில்லை? குறைந்தபட்சம் ஏன் அதுகுறித்து யோசிப்பதுகூட இல்லை? இந்திய குடிமைச் சமூகமானது பல்வேறு இனங்களையும் சேர்த்துக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள எல்லா இனங்களுக்குமே தம்முடைய இனம் சார்ந்து மிக உயரிய மதிப்பீடுகள் இருக்கின்றன. நாம் எல்லோருமே நம்முடைய வரலாற்றைக் குறைந்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே தொடங்க விரும்புகிறோம்.வாய்ப்புக்  கிடைத்தால் சிந்து சமவெளி நாகரிகத்தை மெசபடோமிய நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கோ எகிப்திய நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கோ நகர்த்திவிடும் சாமர்த்தியம் நமக்கு உண்டு. ஆனால், நாம் இன்று கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் இடத்துக்கேற்ற சுத்தம் எந்த நாகரிகத்தின் எச்சம்?
கருத்துக்கள்

நல்ல வேண்டுகோளை வைக்க முன் வரும் கட்டுரையாளர் தேவையின்றி இக் கட்டுரையில் நாகரிகக் காலம் பற்றிய தவறான குறிப்பினைப் பதிவது ஏன்? இத்தகைய பதிவுகள் இவரின் கட்டுரையையும் இவரையும் மதிப்பிழக்கச் செய்கின்றன. நகைச் சுவை என்றோ அறிவார்ந்த செய்தி என்றோ கருதி வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. கட்டுரைக்குத் தேவையற்ற செய்திகளைத் தினமணி வெட்டி விடலாமே! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 4:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
இப்படிப் பட்ட சிந்தனையாளர்கள்தான் நாட்டுக்கு தேவை.அரசியல் ஓநாய்கள் - மக்களை மதுப்பாடில்களுக்கும், பிரியானி பொட்டலங்களுக்கும் அடிமையாக்கி வைத்திருக்கும் நவீன நாகரீக காலத்தின் கோமாளிகள்- இதைப் படித்தாவது திருந்துவார்களா?
By அப்துல்லா, தலைமை இமாம், மேலப்பள்ளிவாசல், புனலூர்.
10/23/2010 8:54:00 PM
எனக்கும் கட்டுரையாளரின் உண்மை சுடுகிறது. திரு.திருவள்ளுவன் எழுதியதுபோல கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கும் முந்தைய நாகரிகம் பற்றி பேசும் நமக்கு இந்த கட்டுரை கொஞ்சம் உறுத்துகிறது என்பது உண்மைதான்.ஆகவே ஆசிரியர் இந்த மேற்கோளை கடைசியில் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அதே நேரம் இந்தியா முழுவதும் இப்படிதானே என்று என்னை தேற்றி கொள்கிறேன். கூட்டம் சேர்க்கும் தலைவர்கள் இது பற்றி தொண்டர்களிடம் கூறவேண்டும்.குப்பை அள்ளும் நகராட்சிகள் இதற்கு கட்டணங்களை கட்சியிடமிருந்து பெறலாம்.
By Tamilian
10/23/2010 2:50:00 PM
நல்ல வேண்டுகோளை வைக்க முன் வரும் கட்டுரையாளர் தேவையின்றி இக் கட்டுரையில் நாகரிகக் காலம் பற்றிய தவறான குறிப்பினைப் பதிவது ஏன்? இத்தகைய பதிவுகள் இவரின் கட்டுரையையும் இவரையும் மதிப்பிழக்கச் செய்கின்றன. நகைச் சுவை என்றோ அறிவார்ந்த செய்தி என்றோ கருதி வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. கட்டுரைக்குத் தேவையற்ற செய்திகளைத் தினமணி வெட்டி விடலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/23/2010 1:25:00 PM
மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம்தூய்மை தூவா வரும். நாம் இந்த 21 ம் நூற்றாண்டிலும் கற்கால மனிதனாகத்தான் இருக்கிறோம் என்பதை ஏற்றுக்கொன்டுதான் ஆகவேண்டும்.ஒரு நாட்டின் நாட்டு மக்களின் தரத்தை நிர்ணகிக்கும் இடம் பொது இடங்கள்தான்.கோவில்கள் குளங்கள் எப்படி உள்ளன. இந்திய நாகரீகத்தின் எச்சங்களை அங்கு காணலாம்.
By A.Kumar
10/23/2010 11:19:00 AM
The only way to solve this is putting heavy fine without any mercy! And ask all the actors of film industry to show in their films how to behave outside their home! U see in most of the people of Tamil nadu will follow if they see their Demi god is clean with social awareness! Tamilan never learns from newspaper, TV!!! But if their favorite actor do anything on the screen they copy it immediately!! That's the saddest truth!!!
By Ragu
10/23/2010 11:10:00 AM
mihavum sariyakasonneerkal.govt has to orderall the parties tp clean the groundafter the meetig. If they do not do it,they should be punished with heavy fine.
By Vasantha Mani
10/23/2010 6:23:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்