இடதுசாரி இயக்கங்களின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள்கூட, அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களிடம் காணப்படும் எளிமையையும் நேர்மையையும் பாராட்டவே செய்வார்கள். ஏனைய கட்சிகள் எதிலும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களில் கட்டுப்பாடும், கொள்கைப் பிடிப்பும் உண்டு என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த நிலைமை முற்றிலுமாக மாறி, இடதுசாரிக் கட்சிகள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், உள்கட்சிப் பூசல்கள் என்று எல்லா விஷயங்களிலும் ஏனைய கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை சமீபகாலமாகத் தெளிவாக்கி வருகிறார்கள்.
. . . . . . .
. . . .
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, அச்சுதானந்தனின் தனிப்பட்ட நேர்மையும், ஊழலற்ற நிர்வாகமும் காரணம் என்று யாரும் கருதவில்லை. ஆனால், கட்சிச் செயலர் பினராயி விஜயன் சம்பந்தப்பட்ட லாவ்லின் ஊழல்தான்.
இடதுசாரி இயக்கங்களின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி படுதோல்விக்கு வழிகோலியது என்பது உலகறிந்த உண்மை.
எளிமைக்கும், நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும், சித்தாந்தப் பிடிப்புக்கும் பெயர்போன முன்னாள் திரிபுரா முதல்வர் நிரூபன் சக்ரவர்த்தி, கேரளத் தலைவர்கள் எம்.வி. ராகவன் மற்றும் கே.ஆர். கௌரி வரிசையில் இப்போது முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனும் பொலிட்பீரோவிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். இதன் தொடர்விளைவாகக் கேரளத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமடைவது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும் ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழக்கவும் செய்கிறது.
நேர்மை உறங்கும் நேரம்... வேறு என்னவென்று சொல்ல?
7/14/2009 4:59:00 AM
7/14/2009 2:38:00 AM