புதன், 14 அக்டோபர், 2009

இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் - திருமாவளவன்
வீரகேசரி நாளேடு 10/13/2009 11:40:39 PM - இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும் புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கை வந்துள்ள தமிழக பாராளுமன்ற குழுவின் உறுப்பினரும் விடுதலைச் சிறுதைகள் அணியின் தலைவருமான தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தம்மை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எம்மிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.

இலங்கை விஜயம் தொடர்பாகவும் அகதிமுகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் ஊடாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம். இதனை விட விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்யொன்றினையும் நான் சமர்ப்பிப்பேன் என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள விடுதலை சிறுத்தைகளின் தலைவரும் எம்.பி.யுமான தொல் திருமாவளவன் நேற்று கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். E-mail to a friend

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக