செவ்வாய், 9 நவம்பர், 2010

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?

தலையங்கம்: ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ?


கணினி பயன்பாட்டில் தமிழ்மொழியின் வரிவடிவங்களை உலகம் முழுவதும் சிரமம் இல்லாமல் எழுதவும், படிக்கவும் வகை செய்யும் டேஸ் 16 (TA​M​IL ALL CH​A​R​A​C​T​ER EN​C​O​D​I​NG​ 16) மென்பொருளைப் பயன்படுத்த அனுமதி தந்த தமிழக அரசு, தற்போது அந்தப் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி இக் கடிதத்தை எழுதியிருப்பதோடு, தன் கடிதத்தின் மீது தகவல் தொழில்நுட்பத் துறை மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை குறித்து தமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர்களின் குழுவை அமைத்து, கலந்து ஆலோசித்து, பின்னர் இது தொடர்பான வேறு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் முதல்வர்.உலகம் முழுவதும் மின்அஞ்சல், குறுந்தகவல், தமிழ்ப் பதிப்புத்துறைக்குப் பயன்படும் இந்த ஒருங்குறி (யுனிகோட்) மென்பொருளைப் பரிந்துரைத்ததில் அப்படி என்ன இமாலயத் தவறு நேர்ந்துவிட்டது? ஒரு தவறும் இல்லை. இதில் பிரச்னை வெறும் ஐந்து எழுத்துகளின் வரிவடிவம்தான். அவை-ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ. இந்த ஐந்தெழுத்துகளும் சம்ஸ்கிருத வார்த்தைகள் என்பதாக முதல்வருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எழுப்பிய பிரச்னையின் காரணமாகத்தான் இப்போது இந்த டேஸ் 16 மென்பொருளுக்கான தமிழக அரசின் பரிந்துரையை நிறுத்தி வைக்குமாறு கூறுகிறார் முதல்வர்.இந்த ஐந்து வரிவடிவங்களும் தமிழர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட வரிவடிவங்கள். தமிழில் சம்ஸ்கிருத வார்த்தைகள் மலிந்து மணிப்பிரவாளம் புழங்கிய காலத்தில், சம்ஸ்கிருதத்தில் இருந்த, ஆனால் தமிழில் இல்லாத ஒலிப்புகளுக்கான வரிவடிவம்தான் இவை. இந்த வரிவடிவம் வேறு எந்த வடமொழியிலும், அல்லது திராவிட மொழிக் குடும்பத்திலும்கூட கிடையாது. தமிழில்தான் இந்த ஐந்து எழுத்துகளும் துல்லியமான ஒலிப்புமுறைக்காக வரிவடிவம் தரப்பட்டன.இன்றைய நடைமுறையை உதாரணமாகச் சொல்வதென்றால், ஆங்கில எழுத்து ஊ-ல் தொடங்கும் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது இப்போது நாம் முன்னொற்றாகப்  ஃ பயன்படுத்தி ஃபெயில், ஃபெலோஷிப், ஃபிரன்ட்ஸ் என்று எழுதுவதைப் போன்ற ஒரு வசதிக்காக உருவாக்கப்பட்டதுதான் மேற்சொன்ன 5 வரிவடிவங்களும். "பஸ் மோதி பசு மரணம்' என்பதை "பசு மோதி பசு மரணம்' என்று எழுதினால் எத்தனை பொருள் மாறுபாடு ஏற்படும்? அக்காரணம் கருதி, தமிழர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த வரிவடிவம். சம்ஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லாத ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவது வரவேற்கத்தக்கதுதான். பாராட்டுக்குரியதுதான். தமிழ் உணர்வு உள்ளவர்கள் செய்ய வேண்டிய செயல்தான். இன்றைய நாளில் "பேருந்து மோதி பசு மரணம்' என்று எழுதவும் அதைப் பாமரரும் புரிந்துகொள்ளவும்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.  "காமாக்ஷியம்மன் கோயில்' என்பதுபோய், இப்போது "அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம்'  என்று எழுதும் நிலை உருவாகியுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த சம்ஸ்கிருத ஒலிப்புக்கான தமிழ் வரிவடிவங்கள்  தானே வழக்கொழிந்துபோகும் நிலை உருவாகலாம். ஆனால், இந்த வரிவடிவங்களுக்காகத் தமிழ் மொழியின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நிறுத்திவைப்பது எந்த வகையில் சரியானது? மேலும், தமிழில் பஞ்சாங்கம், ஜோதிடநூல்கள் அச்சிடுவோர் இந்தச் சொற்களை, வரிவடிவங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது, இவை கணினியில் இடம்பெறாமல் தடுப்பது முறையாகுமா?மேலும், முந்தைய தலைமுறையின் மிகச்சிறந்த படைப்பாளிகளின் படைப்புகளை செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால், அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த வரிவடிவங்களை நீக்கிவிட்டு வெளியிடுதல் சரியானதாக இருக்குமா? ஒரு படைப்பில் "ஜன்மபூமி' என்றிருந்தால் அதை "சன்மபூமி' என்றும், "அருட்பெரும்ஜோதி' என்பதை "அருட்பெரும்சோதி' என்றும் வெளியிட்டால் அது செம்பதிப்பு ஆகுமா? ஜெயலலிதாவை செயலலிதா என்று எழுத முடியுமா? ஸ்டாலினை ச்டாலின் என்று அழைப்பதா? ரஜினி காந்தை ரசினி காந்த் என்றும், ஐஸ்வர்யா ராயை ஐசுவர்யா ராய் என்றும் அச்சிடுவதா? சம்ஸ்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குதல் நன்று. ஆனால், தானே மெல்ல வழக்கொழிந்துவரும் 5 வரிவடிவங்களுக்காக உலகம் முழுவதும் இணைய தளத்தில் ஒன்றுபோல அனைத்துத் தமிழருக்கும் பயன்தரக்கூடிய மென்பொருளையே நிறுத்தி வைப்பது சரியல்ல. பெருவாரியான தமிழ் ஆர்வலர்களின் பேரக்குழந்தைகளின் பெயர்களை ஸ,ஷ,க்ஷ,ஜ,ஹ இல்லாமல் உச்சரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பது முதல்வருக்குத் தெரியாதா என்ன? தேவையில்லாத சர்ச்சைகளை தேவையே இல்லாத வேளையில் கிளப்பி, மக்களின் பார்வையைத் திசை திருப்புவது என்பது அரசியல்வாதிகளுக்குக் கைவந்த கலை. இதுவும் அந்த ரகத்தைச் சேர்ந்தது என்பது மட்டும் தெரிகிறது. கண்ணெதிரில் தமிழை விழுங்கும் ஆங்கிலத்தைத் தமிழக அரசும், தமிழ்ச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் செத்துப்போன மொழியின், செத்தஉடலாக இற்றுக்கொண்டுவரும் 5 வரிவடிவங்களுக்காகத் தமிழக அரசு வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்கிறது. இதனால் யாருக்கு லாபம்?
கருத்துகள்

தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்களேன். தமிழரின் தலையெழுத்து என்னவெனில் தமிழ் தொடர்பான பணிகளில் தமிழ்ப் பகைவர்களை அல்லது தமிழறியாதவர்களை அமர்த்துவது. எனவே, முதல்வர் அமைக்க இருக்கும்வல்லுநர் குழுவில் உங்களுக்கும் இடம் உண்டு என்று தெரிகிறது. தமிழே! நீ இன்னும் எத்தனைக்காலம்தான் பகைவர்களால் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்பாயோ! தினமணியில் இப்படி ஓர் உரையா? வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:22:00 AM
தினமணி புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு இவ்வாறு எழுதியுள்ளது. ஆனால், தினமணி தன் ஆரியப் புததியைக் காட்டி விட்டது எனப்பழிச் சொல் வரும். பிற மொழிச் சொற்களைக் கையாள வேண்டிய கட்டாய நேர்வு வரும் பொழுது அயலெழுத்துகளை நீக்கி நம் மொழியில் எழுத வேண்டும் என்ற தொல்காப்பியனாரின் கட்டளையை மீறியதால்தான் கிரந்த எழுத்துகள் உருவாகிப பல அயற்சொற்கள் புகுந்து தமிழ் சிதைந்து புதுமொழியாக உருவாகி அதனால் தமிழ் பேசும் பரப்பு குறைந்து புதிய மொழியினரும் அதைப் பேசுநரும் தமிழைப் பகையாகக் கருதும் இழிநிலையும் ஏற்ப்ட்டது. அந்த எழுத்துகளையே வரும் தலைமுறையினருக்குக் கற்பிக்காத சூழல் ஏற்பட்டால்தான் தமிழ் வளரும்; வாழும். கிரந்தத்திற்குத் தனியாக எழுத்துரு இருப்பதை எதிர்க்கவில்லை. தமிழில் மேலும் கிரந்தத்தைப் புகுத்துவதையும் கிரந்தத்தில் தமிழச் சேர்த்துத் தமிழ் எழுத்துகளைக் கிரந்தமாகக் காட்டுவதையும்தான் உலகத்தமிழறிஞர்கள் எதிர்க்கின்றனர். அதற்கேற்ப முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். நீங்களே குறிப்பிடும செத்துப் போன மொழியின் செத்த வடிவங்களுக்காக நீங்கள் ஏன் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என விளக்குங்க
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 3:17:00 AM
  இந்தத் தலையங்கம் மூலம் தினமணியின் இரண்டு ஆசைகள் நன்றாகத் தெரிகிறது ஒன்று, சமசுகிருதம் அழிந்துவிடகூடாது என்பது அடுத்து இந்தியை எதிர்த்துப் போராடிய தமிழர்கள் இன்னும் கிணற்றுத் தவளைகள்போல்  உள்ளார்களே என்ற கவலை
By ரிஜி.கரியாப்பட்டினம்
11/9/2010 3:15:00 AM
(continuation-2) Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit language/grammar, to promote Tamil literature. This is preciously why Tamil literature is enormously enunciated with pure divinity and Manu Neidhi (Sanskrit words that depict true social justice). Therefore, Sanskrit is not so called ‘Annia (or Vada) Mozhi” but our true “Annai (or Thaai) Mozhi” – that is, with no doubt, Sanskrit is the mother language of all our Indian languages including Tamil. Therefore, respecting Sanskrit is just like respecting our own mother. Hope our great CM will also consider organizing a Maa-Nadu” (or in Sanskrit called Maha-Melana) for Sanskrit in Tamilnadu before other States take the credit.
By av
11/9/2010 3:14:00 AM
(continuation) If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, “Karunanidhi” is a Sanskrit word. Similarly, “Dravida Munnetra Kazhagam” – the word “Dravida” itself is a Sanskrit word, which means south, This party’s symbol was emanated from Aryan symbol – that is “Udhaya Suryan” - two Sanskrit words. Both (Periyar) Ramasamy and Annadurai not only had their names in Sanskrit but also they belonged to Aryan race – (Mudaliars/Nayakars were Aryans who took administrative nature of work in a number ancient kingdoms. Tholkappiar, who wrote Grammar for Tamil language, was an Aryan. Without his great work, Tamil language would not have been compared with other classical language. Tamil language was well developed by then ruled great kings like Pandias or Cholas, who were true lovers of Tamil language. Those kings greatly respected saints and true scholars, who were also expert in Sanskrit
By av
11/9/2010 3:11:00 AM
Some researches well indicate that many Indian languages including Tamil, Marathi, Punjabi, Bengali or other such ancient languages were once spoken by different small groups of tribal then lived all over Indian subcontinent. Like English has influence in our day-to-day use (for example, words such as “bus”, “paper”, “road”, “bench”), several centuries back, Sanskrit language and associated culture had great influence with all our Indian languages and our way of life. Sanskrit is NOT a dead language. It is the source language of all Indo-European languages including contemporary Dravidian languages. If we carefully go through thousands of words in either Tamil or any other Indian language, we could sense the influence of Sanskrit. For example, “Karunanidhi” is a Sanskrit word. Similarly, “Dravida Munnetra Kazhagam” – the word “Dravida” itself is a Sanskrit word, which means south, This party’s symbol was emanated from Aryan symbol – that is “Udhaya Suryan” - two Sanskrit words. Both
By av
11/9/2010 3:09:00 AM
தலையங்கம் எழுதிய தமிழ் தெரியாத மதிப்பிற்குரிய ஆசிரியரே, அருட்பெருஞ்சோதி எப்பொழுது அருட்பெரும்ஜோதி ஆனது?
By Thenramizh Irumporrai
11/9/2010 1:46:00 AM
உங்கள் தலையங்கம் மிகவும் ஏற்புடையதே!. மொழி வளர, பிற மொழிச்சொல்கழையும் உள வாங்குதல் உரம் சேர்க்கும். ஆங்கிலத்தில் இல்லாத பிற மொழிச்சொற்களா? சில, உச்சரிப்புகளை இப்போது உள்ள தமிழ் எழுத்துகளால் கொண்டுவர இயலாது. என்னை பொறுத்த வரை இவ்வைந்து எழுத்துகளுடன், எஃப் உச்சரிக்க கூடிய ஒரு வரிவடிவமும் உருவாக்குவது தமிழை செழுமைப்படுத்த உதவும்.
By Suresh M
11/9/2010 1:15:00 AM
Tholkappiyar accepted these words. Pure Tamil does not require these words .But in today world it is necessary as we have to express many other Tamilized Words. Let us Tamilize these words . we make hue and cry for small compromise but English words have already replaced Tamil words in day to day life. Even in villages people go for " condolence " not YELAVU. words like FUNCTION, Tiffen,Rice, Water, DOOR, DAY,NIGHT are used by Tamils instead of original tamil words.T
By krishnan
11/9/2010 12:51:00 AM
தினமணி கூறுவதுபோல் நாளடைவில் வழக்கழிந்து போகும் இந்த 5 எழுத்துகர்ளூக்காக தமிழுக்கு ஏற்படும் சிற்ப்பை தடுக்கலாமா முதல்வர். ஷ்பெக்ர்ம் மறைக்க காமன்வெல்த் ஊழல் போல் வருகின்ற சட்டசபை தேதலுக்காக முதல்வர் நடத்தும் நாடகமே இது. புரிந்து கொள்வானா தமிழன்?
By Pa.Tha.Velan
11/8/2010 11:51:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English v

1 கருத்து:

  1. Let the language development shall not be politicised.as far as i know no one uses these letters now in their daily usage and if they are used its only in the names of persons like janaki , kamal hassan ,rajnikanth suhasini etc... there is no need to panic on the inclusions. Tamil is a modern language and its more used in the Internet and in other modern applications. it has grown with the latest developments in the techonology.

    sanskrit is an idle language and there are no many users of the language. Its mostly used for the reference to grammars of various languages that has emanated from it.As far as i know its only used in the temples and a village near bangalore that speaks only sanskrit.

    This is my humble opinion..

    பதிலளிநீக்கு