சனி, 13 நவம்பர், 2010

மரணத் தண்டனையை நீக்கும் தீர்மானம்: ஐ.நா.வில் இந்தியா எதிர்ப்பு

மரண தண்டனையை ரத்து செய்யும் தீர்மானம்: ஐ.நா.வில் இந்தியா எதிர்ப்பு


நியூயார்க், நவ.12: மரண தண்டனையை ரத்து செய்யும் விதத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 107 நாடுகள் வாக்களித்துள்ளன. தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் உள்பட 38 நாடுகள் வாக்களித்துள்ளன. 36 நாடுகள் வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தன. மரண தண்டனையை ரத்து செய்ய வகை செய்யும் இதே தீர்மானம், 2007-லும் ஐ.நா. பொது சபையில் கொண்டுவரப்பட்டது. அப்போது தீர்மானத்தை ஆதரித்து 104 நாடுகளும், எதிர்த்து 54 நாடுகளும் வாக்களித்தன. வாக்களிப்பதில் இருந்து 29 நாடுகள் ஒதுங்கியிருந்தன. மரண தண்டனையை எதிர்க்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதன் மூலம் இதை அறிய முடிகிறது. அதேபோல எதிர்த்த, வாக்களிப்பதில் இருந்து ஒதுங்கிய நாடுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இது வரவேற்கத்தக்கது என்று ஐ.நா. சபை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்

ஈழத் தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான கும்பலுக்கு மரணத்தண்டனை அளிக்க வேண்டியுள்ளது. அதுவரை மரணத் தண்டனை தேவை என இந்தியாவி்ன் உள்ளுணர்வு சொல்லுகிறது. எனவேதான், ஐ.நா.வின் தீர்மானத்தை எதிர்க்கிறது. இனப்படுகொலை புரிந்த கொடுங்கோலர்களுக்கு மரணத் தண்டனை வழங்கியபின் இந்தியா ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்கும். 
இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 3:17:00 AM
சமுதாயத்திற்கு எவ்வித பிரயோஜனமும் இல்லாவிட்டாலும், ஒரு சமுதாயத்திற்கு ஆபத்தையும், அழிவையும் மட்டுமே விழைவிக்கக்கூடிய ஒருவனை கட்டாயம் தூக்கிலிடப்பட் வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டு மொத்த சமுதாயமும் சீகுலைந்து விடும். இன்னும் சொல்லப் போனால் உழைக்காமல் பிறரது உயிரையும் உடமைகளையும் பறித்து அதன் மூலம் வாழ்க்கை ந்டத்தும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களையும் தூககிலிடும் நாள் வந்தால்தான் நாடு நாடாக இருக்கும். இல்லாவிட்டால் நாடு சுடுகாடாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
By ALLAHBUX, ADVOCATE
11/12/2010 8:08:00 PM
காந்தியின் கொள்கைகளை குழிதோண்டி புதைத்த முதல் அரசு, காந்தி என்ற பெயரையும் அவர் தோற்றுவித்த காங்கிரஸ் என்னும் பெயரையும் வைத்துள்ள இன்றைய ஆட்சியாளர்கள். வேதனை!
By மரமண்டை
11/12/2010 7:23:00 PM
மக்களின் கருத்தை பிரதிபலிக்காமல் அதிகாரிகளின் கருத்தை பிரதிபலிக்கும் எந்த விடயமும் எற்டூக்கொள்ளமுடியாது
By saravanan.s
11/12/2010 6:46:00 PM
nalladu. nalai itha uoozhalkarargalukkum kooda thandanai kodukka vendi varum. visaranai illamak encounter kooda panna athu uthavum
By raman
11/12/2010 6:21:00 PM
அஹிம்சையை போதித்தது நமது தேசம். அதையே தம் வாழ் நாளில் கொள்கையாகக் கொண்ட மகாத்மா காந்தியை போற்றி புகழ்கிறோம். போதித்த நாம் மரண தண்டனையை ஆதரிக்கிறோம். ஊருக்கு உபதேசம் சொல்லுகிறோம் நாம். இது மககளின் கருத்து அல்ல. ஆள்பவர்களின் கொள்கை என்பதையே காட்டுகிறது.
By Ramarasu
11/12/2010 5:41:00 PM
மரண தண்டனையை நீக்க கூடாது: அப்பொழுதுதான் கொடிய குற்றங்கள் குறையும். அதுவும் விரைவாக தீர்ப்பு வெளியான உடன் நிறைவேற்றப்பட வேன்ன்டும்'
By KPS
11/12/2010 5:02:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக