புதன், 10 நவம்பர், 2010

மரணத்தண்டனையே கூடாது என வாதி்ட்டுவரும் இந்நாளில் காவல்துறையின் படுகொலை அறமற்ற செயல். கொடுந் தண்டனைக்குரிய குற்றம் செய்திருந்தாலும் உண்மையிலேயே அவன் தப்ப முயன்றிருந்தால் காலில் சுட்டிருக்க வேண்டியதுதானே. வேறு யாருக்கும் கடத்தலில் தொடர்பு இருந்து அதனை அவன் காவல்துறையில் தெரிவித்து அதனால் கொலை செய்து விட்டார்களோ என ஐயம் உள்ளது. காவல் துறையின் படுகொலைகளை நிறுத்த கொன்ற காவல் படையையும் தொடர்ச்சியான மேல் அலுவலர்களையும் இடை நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் காவல் படுகொலைகள் நிற்கும். மேலும் குற்றம் சாட்டப்படுபவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்லர் என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். 2. பண்டார வன்னியனுக்குப் பாராட்டுகள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக