திங்கள், 8 நவம்பர், 2010

காங்கிரசு - தி.மு.க கூட்டணி உரசல்கள்

within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
இளையபெருமாள் கோவனின் பேச்சை அடிக்கடி படிப்பார் போலிருக்கிறது. சில உண்மைகளைக் குறிப்பிட்டாலும் பொதுவாக ஒரு சார்பு போக்கு எதிரொலிக்கிறது. (பெக்ட்ராம்) அலைக்கற்றை ஊழலைத் தி.மு.க.வின் ஊழலாகப் பார்ப்பதை விட அதன் முதன்மைப் பங்கு காங்.கிற்கும் உள்ளது என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். ஈழப்படுகொலையின் பக்க விளைவுகளைத் தி.மு.க.வும் சுமக்கிறது என்பதைக் கட்டுரையாளர் மறந்து விட்டது ஏனோ தெரியவில்லை! தலைமை அமைச்சராக வர ஆசைப்பட்ட சோனியா மேதகு அப்துல்கலாம் அறிவுரை என்ற பெயரில் வழங்கிய எதிர்ப்புரையால்தான் அந்த ஆசையைத் துறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை எளிதில் மறந்து விட்டார். நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட பல மூத்த தலைவர்கள் இருப்பினும் தன் மகள் இந்திரா பிரியதர்சினியைக் காங். தலைவராக்கி நாட்டு அரசியலில் குடும்பப் பரம்பரையைப் புகுத்திய காங்கிரசு நேருவின் வழியில் கலைஞர் பதினாறடி பாய்ந்துள்ளார். அவ்வளவுதான். தேர்தல் செல்லாது என்று அறிவித்த தீர்ப்பையும் மீறி நெருக்கடி நிலை கொண்டு வந்து பலரைக் காலி செய்த இந்திராவின் மாபெரும் வன்முறை ஊழலைக் கட்டுரையாளர் இளைய பெருமாளாக இருப்பதால் அறியவில்லை போலும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(1 hours ago) ashok said:
nadappu kala arasiyalai therinthukolla intha katturaiyai padithale pothum. good article


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக