செவ்வாய், 9 நவம்பர், 2010

தக்காளி விலை கிடுகிடு உயர்வு

திருத்தணியில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

திருத்தணி, நவ. 8: திருத்தணியில் கனமழை காரணமாக, தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.  ÷தமிழகம் முழுவதும் 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்படைந்து, திருத்தணிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.  ÷தொடர் கனமழையின் காரணமாக, திருத்தணி காமராஜர் மார்க்கெட், அரக்கோணம் சாலையில் உள்ள உழவர் சந்தை போன்ற இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தக்காளி கிலோ ரூ. 6-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ÷இந்நிலையில் திருத்தணிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளதால் ஞாயிற்றுகிழமை விலை உயர்ந்து கிலோ ரூ. 15 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ÷இது குறித்து காய்கறி வியாபாரி பழனி கூறியது: "திருத்தணியில் உள்ள காமராஜர் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு சென்னை, பெங்களூர், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.  ÷தினமும் 4 முதல் 6 லோடுகள் தக்காளி வரத்து உள்ளது. கடந்த மாதம் 20 கிலோ கொண்ட பெட்டி ரூ. 160-க்கும், முதல் ரகம் ரூ. 190-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  ÷சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ. 10 முதல் அதிகபட்சமாக ரூ. 12-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ÷தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 8 வரை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ. 10-க்கு விற்ற இரண்டாம் ரக தக்காளி தற்போது ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது.  ÷தக்காளி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது' என்று அவர் கூறினார்.
கருத்துகள்

திருத்தணிகைச் செய்தியாளர் சுறுசுறுப்பாக இருக்கிறார் போல் தெரிகிறது. சென்னை மயிலாப்பூரில் நேற்றுத் தக்காளி ஒரு கிலோ 26 உரூபாய்க்கு விற்றது. கடந்த வார விலை 10 உரூபாய்தான். நேற்றுக் கோயம்பேடு விலை என 11 உரூபாய்தான் குறிக்கப்பட்டிருந்தது. தக்காளி விலை எங்கும் உயர்ந்துள்ளது. ஆனால், பிற செய்தியாளர்கள் பொதுவான செய்தி என்று விட்டுவிட்டார்கள் போலும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/9/2010 4:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக