செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

Awards for whom? விண்ணப்பித்து வாங்குவதா விருது?

கட்டுரையாளரின் நோக்கம் தற்பெருமை அடிப்படையிலானதே அன்றி உண்மையை உணர்த்த வேண்டும் என்பதாக இல்லை. சௌராட்டிரராக இருந்தும் சரியான தமிழ் ஒலிப்பில் நடிகர்களுக்கேற்றவாறு குரலை மாற்றி அமைத்தும் சிறப்பாக மாடிய சிறப்பிபற்குரியவர் சௌந்தரராசன். அவருக்கு விருது கொடுப்பதைக் கேலி பேசக்கூடாது. இன்னாருக்கு விருது வழங்கியிருக்கலாம் எனக் கூறலாமே தவிர, தகுதியானவர் பெற்ற விருதைக் கேள்விக்குறியாக்கக்கூடாது.  தமிழே தெரியாத கலைஞடர்களுக்குக் கடந்த ஆண்டுதான் விருதுகள் அளித்துள்ளார்களா? ஆண்டுதோறும்  அவிழ்த்துப் போட்டு ஆடிப் பண வரவிற்குக்காரணமான யாருக்கும்  விருதுகள் அளிக்கவில்லையா? தமிழக விருதுகள் என்றாலே பொதுவாகத் தமிழரல்லராதவருக்குக் கொடுப்பது வழக்கமாக இருக்கும் பொழுது ஏதோ புதிய செய்தி போல் கூறி உள்ளார். விருதுகள் பற்றிய உண்மையை உணர்த்த வேண்டியவர் தடுமாறித் திசை மாறி எழுதி உள்ளார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

விண்ணப்பித்து வாங்குவதா விருது?

First Published : 02 Aug 2011 12:39:48 AM IST


தமிழக அரசு தரும் "நல்லாசிரியர்' விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர் 5-ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி, "கலைமாமணி' விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் அட இவருக்கா இந்த விருது எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதும், சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது.இதனால், இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகி, விருது பெற்றவர்களுக்கும், ஏன் விருதுக்குமே கூட மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது. அரசுகள் மாறலாம், கட்சி,அரசியல் மாறலாம். ஆனால், மரபுசார்ந்த சில மாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு.சொல்லப்போனால், திரைக் கலைஞருக்கும் ஆசிரியருக்கும் அரசு விருது தருவதுபோல, எடுத்துக்காட்டான உழவர்களுக்கும், பொதுநோக்கில் சேவைபுரியும் அரசு ஊழியர், மருத்துவருக்கும், புதுமைசெய்யும் இளைஞருக்கும் நல்லவற்றைத்தரும் இதழ் மற்றும் செய்தியாளர்களுக்கும் நமது அரசு விருது வழங்கி கெüரவம் செய்தால் பல துறைகளிலும் உற்சாக ஊற்றுக் கிளம்பும்.அரசியல் கடந்து, மக்களால் மதிக்கப்படும் சான்றோர், புனிதமான பணிகளில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டோர் ஆகிய பெருமக்களை, அரசு, தானே முயன்று தகவல் சேகரித்து, தகுதியானவரை அடையாளம்கண்டு, அழைத்துப்பாராட்டி, விருதுபெறும் அவரது தகுதிகளை அனைவரும் அறியச்சொல்லி, அவரது பணிதொடர வாழ்த்தி, பின்னர் விருதுதந்து அனுப்ப வேண்டும்.ஆனால், இன்றுள்ள நிலை நல்லாசிரியரோ, கலைமாமணியோ அவரே தனது தகுதிகளை எடுத்து விளம்பி - அவற்றுக்கான சான்றுகளையும் இணைத்து - விண்ணப்பித்த பிறகு, சிபாரிசுகளின் அடிப்படையில் தேர்வுசெய்து, நூற்றுக்கணக்கானோரை வரிசையாக வரச்சொல்லி இலவச விநியோகம்போல, விருது கொடுத்து அனுப்புவதில் என்ன கெüரவம் இருக்கிறது? இதன் பலன்தான் என்ன?கடந்த ஆண்டு தமிழே தெரியாத நடிகை தமன்னாவுக்கும், ஸ்ரேயாவுக்கும் தமிழ்நாடு அரசு "கலைமாமணி' விருது தந்தது நகைப்புக்கு இடமானது. கலைக்கு மொழி கிடையாது எனும் பொத்தாம் பொதுவான விளக்கம் போதாது.மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதுதான் தகுதி என்றால், சர்க்கஸ் கோமாளிகளுக்கும் விருது கொடுத்து கௌரவிப்பதுதானே முறை? அவரும் கலைஞர்தானே? அவர்கள் படும்பாட்டுக்கு அங்கீகாரமாவது கிடைக்கும்.சிலர், பலருடைய சிபாரிசுகளால், தகுதியற்றவர்க்கும் வாரிவழங்கப்படும் விருதுகளால், சான்றோர் பலரும் விருதுகளைப் பார்த்து எள்ளி நகைப்பதும் சற்றே தள்ளி நடப்பதும் நடக்கும்தானே.முதலில் ஒரு கேள்வி: ""எனக்குக் கடன் வேண்டும், உரியமுறையில் திரும்பக் கட்டிவிடுவேன் என்று ஆசிரியர் அரசிடம் விண்ணப்பம் செய்யலாம், எனக்குப் பணி இடமாறுதல் வேண்டும், இந்த இடம் கிடைத்தால் நல்லது'' என்று அரசிடம் விண்ணப்பிக்கலாம். இவற்றை விட்டு, ""எனக்கு விருது கொடுங்கள்'' என்று சுயமரியாதை உள்ள யாரும் விண்ணப்பம் போடுவார்களா என்ன? ஏன் இது நமது அரசுகளுக்குப் புரிவதில்லை?இப்போது, இந்த விருதுகளைப்பெற விண்ணப்பம்போடும் பலரும், அதை எப்படியாவது வாங்கிவிடச் செய்யும் செலவு உள்ளிட்ட செயல்கள் விருதுகளே வெட்கப்படும்படியல்லவா உள்ளன.அப்படியானால், இதுவரை விருதுபெற்ற யாருக்கும் சுயமரியாதை கிடையாதா என்று கேள்வியைத் திருப்பினால், அப்படி எல்லோரையும் சொல்லிவிட முடியாது.பெரும்பாலோர் அப்படி இருந்தாலும், சுயமரியாதை உள்ள சிலர், தம் மீது அன்பு கொண்டவர்களின் தொந்தரவு தாங்காமல், கையெழுத்தைப் போட்டுக் கொடுத்துவிட்டு விருதுவாங்க மட்டுமே மேடைக்கு வந்ததும் உண்டு. இப்படியான விருதை அவர்கள் பெரிதுபடுத்தாமல் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக ஏற்றுக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.அப்படியானவர்களைச் சந்திக்கும்போது, விருதாளர்களைத் தேர்வுசெய்யும் முறை மற்றும் விருதுவழங்கும் முறை சரியல்ல என்றே அவர்களும் மனம் கசந்து சொல்கிறார்கள்.இலக்கியத்தில் இன்றும் எல்லோராலும் மதிக்கப்படும் இந்திய அரசின் கெüரவம்மிகுந்த இலக்கிய விருதான சாகித்ய அகாதெமி விருதுக்கான தேர்வுக்குழுவில் நான் சிலமுறை இருந்திருக்கிறேன். அவர்கள் பல படிகளை வைத்திருக்கிறார்கள். முதல்கட்டத் தேர்வின்போது, பத்துப்பேர்களைக் கேட்பார்கள்.பரிந்துரைக்கான புத்தகங்களை அனுப்பி வைப்பதோடு, இந்த நூல்கள் தவிரவும், உங்கள் பார்û வயில்பட்ட விருதுக்குத் தகுதியான நூல் என்று கருதுவதை நீங்களே வாங்கிக்கொண்டு, அந்த நூலின் தகுதிகளை எங்களுக்குத் தெரிவியுங்கள், அந்த விலையை நாங்கள் தந்துவிடுவோம் என்றும் நடுவர்களுக்குத் தெரிவிக்கப்படும். அறிவிக்கப்படும்வரை எழுத்தாளருக்குத் தெரியாமலே இது நடக்கும். பலகட்டத் தேர்வு செய்தோரை அவர்களுக்குத் தெரிய வழியுமில்லை.இதேமுறையில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் என் தலைமையிலான தேர்வுக்குழு, 1997-ம் ஆண்டின் சிறந்த நாவலாக "சாய்வு நாற்காலி' நாவலைத் தேர்வு செய்தது.மதுரை திருப்பரங்குன்றத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவில் நானே என் கையால் அந்த விருதை எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரானுக்கு வழங்கியபோது விருதுபெற்றவரைப் போலவே விருது தந்தவர்களும் மகிழ்ந்தோம். அதன்பின்னரே சாகித்ய அகாதெமி விருதும் அதே நாவலுக்காகக் கிடைத்ததை மதிப்புக்குரிய படைப்பாளியான அவரே கூறி மகிழ்ந்தார்.விருதுக்குத் தேர்வு செய்யும் குழுவை முதலில் சரியாகத் தேர்வு செய்துவிட்டால்எல்லாம் சரியாக நடக்க வழியுண்டு. இன்னொன்று விருதுபெறுவோரின் வயது சார்ந்தது.ஆசிரியப் பணியில் ஓய்வுபெற ஒன்றிரண்டு ஆண்டுகளே உள்ள அல்லது ஓய்வுபெற்றுப் பணி நீட்டிப்பில் உள்ளவர்களுக்கே பெரும்பாலும் நல்லாசிரியர் விருது என்று புகழ்பெற்றுவிட்ட மாநில அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது விண்ணப்பத்தின் அடிப்படையில் தரப்படுகிறது.இந்த விருதை நாற்பது வயதுக்கும் முன்னதாகத் தர முடிந்தால், அவரது நல்லாசிரியப் பணியை மீதமுள்ள ஆண்டுகளில் பள்ளிக்குழந்தைகளும் பயன்பெற உதவியிருக்காதா, என்ன? நிச்சயம் அதற்கொரு பாதிப்பு அவர்களிடம் இருக்கும்.இதைவிட்டு முதியோர் உதவித்தொகைபோல விருதுகளை ஓய்வுபெறும் வயதில் விருது தந்து வீட்டுக்கு அனுப்புவதால், அவர் வேண்டுமானால், ஓய்வுபெற்ற மற்றும் விருதுபெற்ற என்று சாகும்வரை போட்டுக் கொள்ளலாமே தவிர, விருதுபெற்ற முதியவரால் சமுதாயத்துக்குப் பணிபுரிந்த துறைக்கு என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது?பொள்ளாச்சியில் இருந்துகொண்டு கவிஞர் சிற்பி, மூத்த படைப்பாளி ஒருவருக்கும் இளைய படைப்பாளி ஒருவருக்குமாக - இரு பிரிவுகளாக - விருதுடன் கூடிய ரொக்கப்பரிசுகளை ஆண்டுதோறும் தந்து கெüரவிப்பதுபோல தமிழக அரசும் கலைமாமணி, நல்லாசிரியர் விருதுகளை இளையவர்க்குத் தனியாகவும், மூத்தவர்க்குத் தனியாகவும்கூட வழங்கலாமே. சான்றோரைக் கெüரவிப்பது தேவை. அதைவிடவும் அவரது பணி விருதுபெற்ற பின்னரும் சமூகத்துக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கும் கிடைக்குமாறு அரசு யோசிக்க வேண்டாமா? இளைஞருக்குக் கொடுத்து, ஒருவேளை அவர் தவறு செய்துவிட்டால்... விருதுக்கு அவமரியாதையாகிவிடுமே என்றால், இப்போது விருதுபெற்றோரில் விருதுபெற்ற பிறகும் தவறுசெய்து தண்டனை பெற்றவர்களும் உண்டே!குற்றப்பட்டியலில் பெயர் இடம்பெற்ற ஒருவருக்கு மத்திய அரசு "பத்மஸ்ரீ' விருது தந்ததும் நடந்ததே. அதோடு, அரசு விருதுபெற்றோர் காலமாகும்போது, அந்தந்தத் துறைசார்ந்த அரசு உயர் அலுவலர்கள், ஏன் மாவட்ட ஆட்சியரேகூட வந்து அஞ்சலி செலுத்தி, அரசின் சார்பாக கெüரவிப்பது அல்லது அரசின் சார்பாக இரங்கல் செய்தி வெளியிடுவது, விருதுபெற்றவரின் குடும்பத்துக்கு மட்டுமல்ல, விருதுக்கே கெüரவமாக இருக்குமே. இதையும் அரசு யோசிக்கலாமே?பின்னணிப் பாடகர் டி.எம்.செüந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்பிரமணியனும் "பத்மஸ்ரீ' விருது பெற்றுவிட்டார். பி. சுசிலா "பத்மபூஷண்' விருதே பெற்றுவிட்டார்.இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்திய அரசு, இவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் "பத்மஸ்ரீ' விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம்தானே? பாவம், அவர் இந்த விருதுவாங்கும் தொழில்நுட்பம் தெரியாதவரோ என்னவோ?அரசு விழாக்களில் பாடப்படும் "நீராரும் கடலுடுத்த' எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு மட்டுமல்லாமல், பல்லாயிரம் திரைப்பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த இசைமேதை எம்.எஸ்.வி. போன்ற எண்ணற்ற மேதைகளும், நல்ல ஆசிரியர்களும் மட்டுமல்ல, விருதுக்குத் தகுதிவாய்ந்த உழவர்களும், அரசு ஊழியர்களும், மருத்துவர்களும், எடுத்துக்காட்டான இளைஞர்களும், இதழாளர் மற்றும் செய்தியாளர்களுமாய் பற்பலர் விளம்பர வெளிச்சமே இ ல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறார்கள்.விருதுகளுக்காக ஏங்கி அல்ல, விருதுகளை அலட்சியப்படுத்திவிட்டு தான் தரும் விருதுகளின் கெüரவத்தைக் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அரசின் கடமையை உரிமையோடு எடுத்துச்சொல்ல வேண்டியது நம் கடமை.கட்டுரையாளர்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர்.

1 கருத்து: