புதன், 3 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர்படுகொலை தொடர்பில் தொடர்ந்து மெளனம் ஏன்? டி.இராசா

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தொடர்ந்து மெளனம் ஏன்? டி. ராஜா

First Published : 03 Aug 2011 02:46:22 AM IST


புது தில்லி, ஆக. 2: இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், அமெரிக்க அரசுகள் தமிழர்களுக் எதிராக இலங்கை அரசு செய்த கொடுமைகளைக் கண்டனம் செய்யும் போது இந்திய அரசு மட்டும் தொடர்ந்து மெüனம் சாதித்துவருவது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா தில்லியில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசும் போது "இலங்கையில் நடந்த அட்டூழியங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலுக்குத் தற்போது தலைமைப் பொறுப்பில் இந்தியா உள்ள நிலையில் அந்த அறிக்கையின் மீது மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?' என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக