வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தூதர் மீது போர்க்குற்ற நடவடிக்கை: சுவிட்சர்லாந்திடம் வலியுறுத்தல்

இலங்கைத் தூதர் மீது போர்க்குற்ற நடவடிக்கை: சுவிட்சர்லாந்திடம் வலியுறுத்தல்
First Published : 05 Aug 2011 02:01:22 AM IST


ஜெனீவா, ஆக.4: இலங்கை ராணுவ முன்னாள் கமாண்டரும், அந்நாட்டின் ஜெர்மனிக்கான தூதருமான ஜகத் டையûஸ போர்க்குற்றவாளியாக அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்து அரசிடம் இரு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.  இலங்கையில் நடந்தப் போரில் சுமார் 1 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரில் முக்கிய பங்காற்றியவர் அந்நாட்டின் முன்னாள் ராணுவக் காமாண்டர் ஜகத் டையஸ். இவர் இப்போது ஜெர்மனியின் துணைத் தூதராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுவிட்சர்லாந்து, வாட்டிகன் நாடுகளுடன் தூதரக உறவை வலுப்படுத்தும் அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் படுகொலையில் ஜகத் டையஸýக்கும் பங்கு உண்டு. அவரைப் போர்க்குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்திடம் அச்சுறுத்தப்பட்ட மக்களின் நல அமைப்பு, டிஆர்ஐஏஎல் என்ற இரு அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக