செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

விடை பெற்றார் நிருபமா பேய்

இனப்படுகொலைகளுக்கு இதுவரை செய்த உதவிகளுக்காகவும் இனி்யும் சிங்களஅமெரிக்க உறவிற்குப் பாலமாக இருந்து  தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும் அளிக்கப்பட்ட விருந்து. இதற்கு முன்பும் வெறியுறவுச் செயலர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தூதர்களும் மாறியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு அளிக்கப்படா விருந்து இவருக்கு அளிப்பதில் இருந்தே சிங்கள இந்தியக் கூட்டுக் கொலைகளைப்பற்றிப் புரிந்து கொள்ளலாம். வருத்தத்துடன்   இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


விடை பெற்றார் நிருபமா ராவ்

First Published : 31 Jul 2011 02:48:25 AM IST


கொழும்பு, ஜூலை 30: இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் நிருபமா ராவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச சனிக்கிழமை பிரிவுபசார விருந்து அளித்தார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள ராஜபட்ச வீட்டில் சனிக்கிழமை காலை அவரை நிருபமாராவ் சந்தித்துப் பேசினார். அப்போது நிருபமா ராவுக்கு, ராஜபட்ச காலை விருந்து அளித்ததாக இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய வெளியுறவுத் துறை செயலாளராக உள்ள நிருபமா ராவ் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு இந்த பிரிவுபசாரத்துக்கு ராஜபட்ச ஏற்பாடு செய்திருந்தார். வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்படும் முன் நிருபமா ராவ், இலங்கையில் இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.ஓய்வு பெற்றுள்ள அவர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்துகள்

பதவியின் பின்பும் தமிழ்களை அழிக்க திட்டம் தீட்டி இருப்பார்கள் இருவரும் .அட கருணாநிதி ஒரு கடிதம் மன்மோகன் சிங்கத்திற்கு எழுதப்பா இந்த பொண்ணு எப்படி நியாயமாக நடந்து இருப்பாள் என்று.
By esan
8/1/2011 4:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக