செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

இலங்கை அகதிகளுக்கு்த் தமிழக அரசு ஓய்வூதியம்


பாராட்டுகள்.அவர்களை முகாம்களில்அடைத்து வைக்காமல் நாட்டு மக்களுள் ஒரு பகுதியினராகத் தன்னுரிமையுடன் வாழ விரைவில் வழி செய்யுங்கள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
இலங்கை அகதிகளுக்கு தமிழக அரசு ஓய்வூதியம்
First Published : 02 Aug 2011 11:52:11 AM IST


சென்னை, ஆக.2: இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாகத் தங்கி உள்ளவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களை தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவின்மூலம் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 5544 இலங்கைத் தமிழர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதிமாகப் பெறுவார்கள் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக