வியாழன், 4 ஆகஸ்ட், 2011

இலங்கையில் தற்போதைய நிலை நீடித்தால் 194 ஆவது நாடு உருவாவதைத் தடுக்க முடியாது!– விசயதாச இராசபட்ச

இலங்கையில் தற்போதைய நிலை நீடித்தால் 194வது நாடு உருவாவதை தடுக்க முடியாது!– விஜயதாச ராஜபக்ஷ


இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை நீடித்தால் 194 வது  நாடு உருவாவதனை தடுக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.
அரசியல்வாதிகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேராசிரியர் நந்ததாச கோதகொடவின் நினைவுப் பேருரையில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால சமூக ஒன்றுமை நோக்கிய எதிர்கால பயணம் என்ற தொனிப்பொருளில் அவர் உரையாற்றியுள்ளார்.
சர்வதேசத்தில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்கள் நீடிக்குமாயின் நாடு பிளவுபட்டு 194வது நாடொன்று உதயமாவதனை எவாரும் தடுக்க முடியாது.
அல்லது சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாற்றமடையும் எனவு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக