வியாழன், 4 ஆகஸ்ட், 2011

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசுபெறும் நூலாசிரியர்கள்

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசுபெறும் நூலாசிரியர்கள்

First Published : 04 Aug 2011 03:18:09 AM IST


நாமக்கல், ஆக. 3: 2011-ம் ஆண்டுக்கான நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கியப் பரிசுபெறும் நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பரிசுபெறும் நூலாசிரியர்களுக்கு அக்டோபர் 2-ம் தேதி நாமக்கல் செல்வம் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். இத்தகவலை கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளைத் தலைவர் பொ. செல்வராஜ், துணைத் தலைவர் சி.க. கருப்பண்ணன், செயலர் கா. பழநிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  பரிசு பெறும் நூல்கள்: முதன்மைப் பரிசு ரூ.50 ஆயிரம் (தமிழ்): "பனிநிலவு' நூலை எழுதிய லண்டனைச் சேர்ந்த வவுனியூர் இரா. உதயணனுக்கு வழங்கப்படுகிறது. பிறமொழியில் பரிசுபெறும் நூல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.  சிறப்புப் பரிசு ரூ.10 ஆயிரம் பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூலாசிரியர்களும் அவர்களின் படைப்புகளும்: வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) - சங்கானைச் சண்டியன், நாகரத்தினம் கிருஷ்ணா (பிரான்ஸ்) -மாத்தகரி, சை.பீர்முகமது (மலேசியா) - பெண்குதிரை, நடேசன் (ஆஸ்திரேலியா) - வண்ணத்திகுளம், தெணியான் (இலங்கை) -ஒடுக்கப்பட்டவர்கள், கே. விஜயன் (இலங்கை) - மனநதியின் சிறுஅலைகள், சிவசுப்பிரமணியன் (இலங்கை) - சொந்தங்கள், தனபாலசிங்கம் (இலங்கை) - ஊருக்கு நல்லது சொல்வேன், கலைச்செல்வன் (இலங்கை) - மனிததர்மம், உபாலி லீலாரத்னா (இலங்கை) - கு.சி.பாவின் சுரங்கம், தாகம் நாவல்களின் சிங்கள மொழியாக்கம், புரவலர் ஹாசிம் உமர் (இலங்கை) -கொடைச்சிறப்பு.  இவைதவிர தமிழ்நாட்டைச் சேர்ந்த பரிசு பெறும் நூலாசிரியர்களும் அவர்களின் படைப்புகளும்: ஆர்.எஸ். ஜேக்கப் - பனையண்ணன், சுப்ரபாரதி மணியன் - சுப்ரபாரதி மணியன் கதைகள், ப.ஜீவகாருண்யன் - கவிச்சக்ரவர்த்தி, குறிஞ்சிவேலன் - முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள், மயிலை பாலு - தமிழ் மொழிபெயர்ப்புக்கான வாழ்நாள் சாதனை, லேனா தமிழ்வாணன் - ஒரு பக்கக் கட்டுரை 500, வெண்ணிலா - நீரில் அலையும் முகம், ஜீவபாரதி பூங்குருநல் அசோகன் - குமரமங்கலம் தியாக தீபங்கள், தில்லி டாக்டர் ஹெச். பாலசுப்ரமணியன் - தமிழ்-இந்தி இந்தி-தமிழ் மொழியாக்க வாழ்நாள் சாதனை, என்.சிவப்பிரகாசம் - ஊழல் எதிர்ப்பு சேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக