புதன், 10 பிப்ரவரி, 2010

விரிவான செய்தி
  
ஜெனரல் சரத் பொன்சேகா கைது (4ம் இணைப்பு )

08 February, 2010 by admin



எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சரத்பொன்சேகாவின் பணிமனைக்குச் சென்ற இராணுவப் பொலிசார் அவரைக் கைதுசெய்ததாக அறியப்படுகின்றபோது. சம்பவ இடத்தில் ரவுக் கக்கீம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. என்ன காரணங்களுக்காக தம்மை கைதுசெய்கிறீர்கள் என சரத்பொன்சேகா கேட்டபோது, காரணங்கள் எதுவும்
கூறாமல் அவர் கைகளைப் பிடித்து, மரியாதைக் குறைவாகவும், ஒரு முன் நாள் இராணுவ தளபதி என்றுகூடப்பாராமல் அவரை அதிகாரிகள் இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர் வாசல் தலத்திற்கு வெளியே நின்றிருந்த ஏ.எப்.பி செய்திச்சேவையின் நிருபரின் கமராவில் உள்ள சிப்பை இலங்கை இராணுவத்தினர் உடைத்தெறிந்ததாகவும் ஏ.எப்.பி செய்தியாளர் விசனம் தெரிவித்துள்ளார்.



Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 50262





படைஉடையில் இருப்பதைப்பார்த்தாலே இப்படம் பழைய படம் எனப்புரியும். செய்தியை முந்தித் தரவேண்டும் என்பதற்காக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சேகாவை மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டது போன்ற படத்தை வெளியிடலாமா? சிங்கள அரசிற்கு ஆதரவாகச் செயல்படுவது போன்ற தோற்றத்ததை இப்பட வெளியீடு உருவாக்கவில்லையா? உடனே இக்காணொளியை நீக்க அன்புடன் வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக