ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

சைவ சம​யம் பர​வ இலங்கைத் தமி​ழர்​களே முக்கிய காரணம்: பழனி சாது சண்​முக அடி​க​ளார்



சிதம் ​ப​ரம்,​​ பிப்.​ 6:​ சைவ சம​யம் உல​க​ள​வில் பர​வி​ய​தற்கு முக்​கிய கார​ண​மாக உள்​ள​வர்​கள் இலங்கைத் தமி​ழர்​களே என பழனி சாது சண்​முக அடி​க​ளார் தெரி​வித்​தார்.​சி​தம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக சாஸ்​திரி ஹாலில் 12-வது உலக சைவப் பேரவை மாநாடு வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​யது.​ மாநாட்டு தொடக்க நிகழ்ச்​சி​யாக குன்​றக்​குடி தெய்​வ​சி​கா​மணி பொன்​னம்​பல தேசிக பர​மாச்​சா​ரிய சுவா​மி​கள் மாநாட்டு கொடி​யினை ஏற்​றி​னார்.​ நகர்​மன்​றத் தலைவி ஹெச்.பௌ​ஜி​யா​பே​கம் தேசி​யக் கொடியை ஏற்​றி​னார்.​ திரு​முறை பண்​ணிசை அமுது நிகழ்ச்​சி​யு​டன் மாநாடு தொடங்​கி​யது.​பழனி சாது சண்​முக அடி​க​ளார் வர​வேற்று பேசி​யது:​ இலங்​கை​யில் தமி​ழர்​கள் துணி​ம​ணி​கள் உள்​ளிட்ட வாழ்​வா​தா​ரங்​களை இழந்​த​னர்.​ ஆனால் அவர்​க​ளி​ட​மி​ருந்து தமிழ் மற்​றும் சம​யத்​தைப் பிரிக்க முடி​ய​வில்லை.​ அந்​த​ள​வுக்கு அவர்​கள் வாழ்க்கை முறை​யில் தமிழ் மற்​றும் சம​யத்தை கடை​பி​டித்து வாழ்ந்து வந்​த​னர் என தெரி​வித்​தார்.​லண்​டன் மெய்​கண்​டார் ஆதீ​னம் மற்​றும் உலக சைவப் பேர​வைத் தலை​வர் யோகா​னந்த அடி​கள் பேசி​யது:​​ தமி​ழர்​கள் மேலை நாடு​க​ளில் கல்வி,​​ வணி​கம்,​வேலை மற்​றும் தூது​வர்​க​ளாக சென்​றார்​கள்.​ அங்கு தான் கற்​றுக் கொண்ட கல்வி,​​ கலா​சா​ரம்,​​ மதத்​தை​யும் பின்​பற்றி வந்​த​னர்.​ முதல் முத​லாக சைவ சித்​தாந்த அமைப்பு இங்​கி​லாந்​தில் உரு​வாக்​கப்​பட்​டது.​பின்​னர் லண்​ட​னில் சிவ​நந்தி அடி​க​ளா​ரால் உலக சைவப் பேரவை தொடங்​கப்​பட்​டது.​ கொழும்பு, ​​ தென்​ஆப்​பி​ரிகா,​​ மொரி​ஷி​யஸ்,​​ மலே​சியா,​​ இந்​தியா ​(தஞ்​சா​வூர்)​,​​ ஆஸ்​தி​ரே​லியா,​​ சுவிட்​சர்​லாந்து உள்​ளிட்ட நாடு​க​ளில் உலக சைவப் பேரவை மாநா​டு​கள் நடத்​தப்​பட்​டுள்​ளது.​÷இந்​தி​யாவி​லி​ருந்து 24 வயது இளை​ஞர் ஒரு​வர் தென்​ஆப்​பி​ரி​கா​வுக்​கும்,​​ 30 வயது இளை​ஞர் ஒரு​வர் அமெ​ரிக்​கா​வுக்​கும் சென்​ற​னர்.​அங்​கி​ருந்த திரும்பி வரும்​போது ஒரு​வர் மகாத்மா காந்​தி​யா​க​வும்,​​ மற்​றொ​ரு​வர் விவே​கா​னந்​த​ராக திரும்பி வந்​த​னர்.​ அது​போன்று இலங்​கையி​லி​ருந்து 2 பேர் இங்​கி​லாந்து மற்​றும் பிரான்​சுக்கு சென்​ற​னர்.​ அவர்​க​ளில் ஒரு​வர்​தான் சிவ​நந்தி அடி​க​ளார்,​​ மற்​றொ​ரு​வர் யோகா​னந்த அடி​கள் என்​றார்.​த​ரு​ம​பு​ரம் ஆதீ​னம் சண்​முக தேசிக ஞான​சம்​பந்த பர​மாச்​சா​ரிய சுவா​மி​கள் தலைமை வகித்​துப் பேசி​யது:​​ எல்​லோ​ரும் ஒருங்​கி​ணைந்து ஒரே குர​லாக ஒலித்​தால்​தான் சம​யத்தை வளர்க்க முடி​யும்.​ வெறும் கூட்​டத்தை கூட்​டி​னால் மட்​டும் வளர்க்க முடி​யாது.​ அறி​ஞர்​கள் சொல்​வதை மற்​ற​வர்​கள் பின்​பற்ற வேண்​டும்.​ சைவத் தூணாக இருந்த ஆறு​முக நாவ​ல​ரின் வழியை நாம் பின்​பற்ற வேண்​டும்.​ கிறிஸ்​த​வர்​க​ளின் சூழ்ச்​சி​யில் சிக்கி பணி​யாற்​றிய அவர் அதன் பின்​னர் அதை உதறி விட்டு இந்​தியா வந்து சைவ சம​யத்தை வளர்த்​தார்.​வே ​தம்,​​ ஆக​மம்,​​ புரா​ணம் இவை மூன்​றும் முக்​கி​யம்.​ பேசு​ப​வர்​கள் ஒரு வட்​டம்,​​ அரங்​கம் அமைத்​துக் கொள்ள வேண்​டும்.​ சம​யத்​துக்கு அள​வு​கோல் கிடை​யாது.​ சம​யம் என்​பது பக்​கு​வப்​பட்ட சமை​யல் போன்​றது.​ தற்​போது கல்​வித் துறை​யில் வர​லாறு,​​ பூலோ​கம் யாரும் படிப்​ப​தில்லை.​ மருத்​து​வம்,​​ பொறி​யி​யல்,​​ கணினி ஆகி​ய​வற்​றை​தான் படிக்​கின்​ற​னர்.​ படித்​து​விட்டு வேலைக்கு போய் கண் பார்வை பறி​போய் விடு​கி​றது.​ இடுப்பு வலி வந்து விடு​கி​றது.​ பணம் சம்​பா​திப்​பதை முக்​கி​ய​மாக வைத்து படிப்​ப​தால் இத்​த​கைய இன்​னல்​க​ளில் அடை​கின்​ற​னர்.​ சம​யத்தை பற்றி எத்​தனை ஆண்​டு​கள் படித்​துள்​ளீர்​கள்.​ எனவே சம​யத்தை பற்றி நன்​றாக படிக்க வேண்​டும் என சண்​முக தேசிக ஞான​சம்​பந்​தர் தெரி​வித்​தார்.​தி​ரு​வண்​ணா​மலை துறை​யூர் ஆதீ​னம் கல்​யா​ண​சுந்​தர சிவப்​பி​ர​காச பர​மாச்​சா​ரிய சுவா​மி​கள் தொடக்​க​வு​ரை​யாற்​றி​னார்.​ நிகழ்ச்​சியை டாக்​டர் பத்​மினி கபா​லி​மூர்த்தி தொகுத்து வழங்​கி​னார்.​ மாநாட்​டில் மதுரை ஆதீ​னம் அரு​ண​கிரி ஞான​சம்​பந்​தர்,​​ இலங்கை யாழ்ப்​பா​னம் நல்​லை​யா​தீ​னம் சோம​சுந்​தர தேசிக ஞான​சம்​பந்​தர்,​​ குன்​றக்​குடி பொன்​னம்​பல தேசிக பர​மாச்​சா​ரி​யார்,​​ திருப்​ப​னந்​தாள் ஆதீ​னம் முத்​துக்​கு​மா​ர​சாமி தம்​பி​ரான்,​​ பேரூர் ஆதீ​னம் சாந்த​லிங்க ராம​சாமி அடி​க​ளார்,​​ மரு​தா​சல அடி​க​ளார்,​​ ஊரன் அடி​க​ளார்,​​ அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக பதி​வா​ளர் எம்.ரத்​தி​ன​ச​பா​பதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​ற​னர்.​

உண்மைதான். ஆனால் சைவச் சமயப் பரப்புநர்களான ஈழத் தமிழர்கள் கூட்டம்கூட்டமாக் கொத்துக் குண்டுகளாலும் எரி குண்டுகளாலும் பிற அறமற்ற முறைகளாலும் அழிக்கப்பட்ட பொழுதும் எஞ்சியோர் இப்பொழுதும் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதும் மடச் சாமியார்கள் உறங்குவது ஏன்? வேறு சமயத்தவர்க்கு இன்னல் என்றால் அச் சமயத்தலைவர்கள் வாளாவிருப்பார்களா? உண்மையான சைவ நெறி என்பது மக்களை நேசித்துக் காப்பதே! எனவே, சைவ சமயத்தைக் காப்பாற்ற தமிழ் ஈழததைக் காப்பாற்ற முன் வாருங்கள். வளர்க சைவ நெறி! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/7/2010 4:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக