வியாழன், 28 ஜனவரி, 2010

மொழிப் போராட்​டம்​தான் ஆட்சி மாற்​றத்​துக்கு அடிப்​ப​டை​யாக அமைந்​தது: அமைச்​சர்​ உப​ய​துல்லா



புதுக் ​கோட்டை,​​ ஜன.​ 27: ​ ​ மொழிப்​போ​ராட்​டம்​தான் தமி​ழ​கத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட அடிப்​ப​டை​யாக அமைந்​தது என்​றார் தமி​ழக வணிக வரித்​துறை அமைச்​சர் சி.நா.மீ.​ உப​ய​துல்லா.​​ ​ புதுக்​கோட்​டை​யில் நகர திமுக சார்​பில் திங்​கள்​கி​ழமை நடை​பெற்ற மொழிப்​போர் தியா​கி​கள் வீர​வ​ணக்க நாள் பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்று அவர் பேசி​யது:​​ ​ கடந்த 1965 ஆம் ஆண்டு ஜன.25-ம் தேதி இந்தி மொழியை கட்​டா​ய​மாக்கி மத்​திய அரசு அறி​வித்​தது.​ இதற்கு திமுக கடும் எதிர்ப்​புத் தெரி​வித்து இந்தி பிர​சார சபாக்​கள் முன்​பாக ஆர்ப்​பாட்​ட​மும்,​​ சட்ட நகல் எரித்​தும் போராட்​டம் நடத்​தி​யது.​ அந்​தப் போராட்​டத்​தில் மாண​வர்​கள்,​​ இளை​ஞர்​கள் அதிக அள​வில் ஈடு​பட்​ட​தால் தமி​ழ​கமே கொந்​த​ளித்​தது.​​ ​ ​ இந்த மொழி எதிர்ப்​புப் போராட்​டம்​தான் தமி​ழ​கத்​தில் ஆட்சி மாற்​றத்​துக்கு அடிப்​ப​டைக் கார​ண​மாக அமைந்​தது.​ அதன்​பி​றகு நடந்த தேர்த​லில் அண்ணா தலை​மை​யில் திமுக ஆட்​சி​யைப் பிடித்​தது.​​ ​ இந்​நி​லை​யில்,​​ கரு​ணா​நிதி தலை​மை​யி​லான ஆட்​சி​யில்​தான் எதிர்​கட்சி உறுப்​பி​னர்​க​ளுக்கு பேச அதிக வாய்ப்​பு​கள் அளித்து சட்​டப்​பே​ர​வை​யில் ஜன​நா​யக மாண்பு காக்​கப்​பட்டு வரு​கி​றது.​ ஐந்​தா​வது முறை​யாக முதல்​வ​ரான கரு​ணா​நிதி பல்​வேறு நலத்​திட்​டங்​களை நடை​மு​றைப்​ப​டுத்தி வரு​கி​றார்.​ அதில் இல​வச டிவி,​​ காஸ் இணைப்பு மற்​றும் தற்​போது அறி​வித்த கான்​கி​ரீட் வீடு திட்​டம் ஆகி​யவை நாட்​டுக்கே உதா​ர​ண​மா​கத் திகழ்​கின்​றன என்​றார் உப​ய​துல்லா.​​ ​ கூட்​டத்​துக்கு,​​ நக​ரச்​செ​ய​லர் அரு.​ வீர​மணி தலைமை வகித்​தார்.​ நிர்​வா​கி​கள் த.​ சந்​தி​ர​சே​க​ரன்,​​ இரா.சு.​ கவி​தைப்​பித்​தன்,​​ ஆ.​ செந்​தில்,​​ நகர்​மன்ற உறுப்​பி​னர் ப.​ ரெங்​க​ராஜ்,​​ நகர் மன்​றத்​து​ணைத் தலை​வர் க.​ நைனா​மு​க​மது,​​ எம்.எம்.​ பாலு,​​ கே.என்.ஆர்.​ ரவிச்​சந்​தி​ரன் உள்​ளிட்​டோர் முன்​னிலை வகித்​த​னர்.​​ ​ மாவட்​டச் செய​லர் பெரி​யண்​ணன்​அ​ரசு,​​ பொள்​ளாச்சி உமா​பதி,​​ கா.வி.​ நெடுஞ்​செ​ழி​யன் ஆகி​யோர் பேசி​னர்.​​ ​ தொடர்ந்து மொழிப்​போ​ராட்​டத் தியா​கி​கள் ந.​ காந்தி,​​ எம்.​ பார்த்​த​சா​ரதி,​​ மாபொசி,​​ ஆலங்​குடி சுப்​பையா ஆகி​யோர் பாராட்​டப்​பட்​ட​னர்.
கருத்துக்கள்

பண்பாளர் மாண்புமிகு அமைச்சர் உபயதுல்லா கூறுவது உண்மைதான். ஆனால், மொழிப்போரால் ஆட்சிக்கு வந்தும் மொழிப்போருக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவு திராவிடக் கட்சிகள் அரும்பணியாற்ற வில்லை என்பதுதான் வேதனையானது. மொழி நலம் கருதிய போராட்டங்களைத் தொடரும் வகையில்தான் பயிற்சிமொழியாக, வழிபாட்டு மொழியாக, ஆட்சி மொழியாக, கலை மொழியாக இன்னும் தமிழ் தனக்குரிய தலைமை இடத்தைப் பெறாமல் உள்ளது. கட்சிகளுக்குக் கொத்தடிமையராக இல்லாமலும் கட்சி நலன் மறந்தும் ஒன்றுபட்டுப் போராடித் தமிழ் நாட்டில் தமிழுக்கே தலைமை; தமிழர்க்கே முதன்மை என்னும் நிலையை எட்ட வேண்டும். மொழிப் போராளிகளுக்கான வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/28/2010 4:33:00 PM

a first blinder mistake... remaining

By velupillai
1/28/2010 1:17:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக