செவ்வாய், 9 அக்டோபர், 2012

உலகின் மிகு அகவை மூதாட்டி மரணம் - world old age woman passes away

 உலகின்  மிகு அகவை மூதாட்டி மரணம்

இலண்டன்: ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த, 132 வயது பெண் இன்று காலமானார்.முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து உடைந்த நாடு ஜார்ஜியா. இந்த நாட்டைச் சேர்ந்தவர் அன்டிசா க்விசாவா. 132 வயதான அன்டிசா, உலகின் மிக அதிக வயதான பெண்ணாகக் கருதப்பட்டார். இரண்டு உலகப் போர்களை கண்ட அன்டிசா, 1880ம் ஆண்டு, ஜூலை 8ம் தேதி, பிறந்தவர். 1965ம் ஆண்டு வரை, இவர், தேயிலை பறிக்கும் வேலையைச் செய்து வந்துள்ளார்.இவரது, 60 வயதில் பிறந்த மகன் மைக்கேலுக்கு தற்போது, 72 வயதாகிறது. 12 பேரக்குழந்தைகளும், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகளும் இவருக்கு உள்ளனர். தினமும் கொஞ்சம், பிராந்தி அருந்துவதை, இவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். இதுவும் அவர் ஆயுள் நீட்டிப்புக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக