திங்கள், 8 அக்டோபர், 2012

காவேரி நீர்ச் சிக்கல் -போராட்டம் -முத்துலட்சுமி பேட்டி

காவேரி நீர்ச் சிக்கல் -  தமிழ் அமைப்புகளை த் திரட்டி குடிநாயக முறையில் போராட்டம்-முத்துலட்சுமி பேட்டி
 மாலை மலர்
காவேரி நீர் பிரச்சினை: தமிழ் அமைப்புகளை திரட்டி ஜனநாயக முறையில் போராட்டம்-முத்துலட்சுமி பேட்டி
உளுந்தூர்பேட்டை, அக்.7-

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார். திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்த வீரப்பன் மனைவியும், மலைவாழ் மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவருமான முத்துலட்சுமி உளுந்தூர்பேட்டை வந்தார் அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கன்னடத்திற்கு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஓசூர் வரை வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவற்றை கன்னட அமைப்புகள் கைவிட வேண்டும். இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்த நிலை நீடித்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கும். கன்னட திரைப்பட இயக்குனர் ரமேஷ் கன்னடத்தில் அட்டகாசம், தமிழகத்தில் வனயுத்தம் என்ற பெயரில் ஒரு சினிமா படம் தயாரித்துள்ளார். அதில் எனது கணவர் வீரப்பன் போல் வேடமணிந்தவர், மம்மட்டியான் 4 கொலை செய்தான். நான் 500 கொலை செய்தேன் விளம்பரத்திற்காக என கூறும் ஒரு வசனமும் அந்த படத்தில் உள்ளது. அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டுமென கோர்ட்டில் வழக்குதொடர்ந்தேன். அதற்கு அந்த படத்தை போட்டு பார்க்க எனக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

அதில் உள்ள பாதிப்புகளை நான் கோர்ட்டில் தெரிவித்தேன். அந்த காட்சியை நீக்க வேண்டும். இது வன்முறையை தூண்டுவதுபோல் உள்ளது. என் கணவர் எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளியாக நிறுத்தப்படவில்லை. அவர் செய்த தவறுகளை ஒரு திரைப்படமாக வந்து அது இளைஞர்களின் மனநிலையை தவறான நிலைக்கு கொண்டு செல்லும். இந்த திரைப்படம் வெளியே வந்தால் தமிழக இளைஞர்கள் தவறான பாதையில் நடக்க நேரிடும். எனது கனவர் செய்த தவறின் காரணத்தினால் எனது குடும்பமும், மலைவாழ் மக்கள் எவ்வளவோபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் மக்கள் மத்தியில் வண்முறையை தூண்டும் வகையில் எதுவும் அமையக்கூடாது என்பதால் தான் நீதிமன்றம் வரை சென்றுள்ளேன்.

இதற்கு மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்க வேண்டும். எனது கணவரின் 8-ம் ஆண்டு நினைவுநாள் வரும் 18-ந் தேதி அனுசரிக்கிறோம். எனது கணவர் தமிழகத்திற்காக குரல் கொடுத்தார். அன்று கன்னட வெறியர்கள் தமிழகத்தில் வந்து கொடி பிடித்து கோஷங்களை எழுப்பவில்லை. அவர் இருக்கும் வரை கன்னட வெறியர்கள் அடங்கி கிடந்தனர். ஆனால் இன்று ஓசூர்வரை வந்து தமிழர்களை தாக்குகிறார்கள். அதனால் கன்னடத்தில் உள்ள தமிழர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 18-ந் தேதிக்கு பிறகு தமிழ் அமைப்புகளை திரட்டி காவேரி நதிநீர் பிரச்வினைக்காக போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம். தமிழர்கள் வன்முறையின்றி ஜனநாயக ரீரியில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட தொண்டர்படை சந்தோஷ், ஒன்றிய செயலாளர் கோபி, நகர செயலாளர் பாலா, நகர தலைவர் பிரேம், துணைச் செயலாளர் லட்சுமணன், ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக