திங்கள், 8 அக்டோபர், 2012

இனப்படு கொலையாளிகளும் போர்க்குற்றவாளிகளும் தாயகப் போராளிகள மீது வழக்கு

இராணுவத்திடம் சிக்கியுள்ள 60 விடுதலைப்புலிகள் மீது போர் க் குற்ற வழக்கு: இலங்கை அரசு அறிவிப்பு

ராணுவத்திடம் சிக்கியுள்ள
 60 விடுதலைப்புலிகள் மீது போர் குற்ற வழக்கு: இலங்கை அரசு அறிவிப்பு
மாலை மலர் கொழும்பு, அக். 8-

இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இறுதி கட்ட போரின் போது விடுதலைப்புலிகள் பலர் ராணுவத்தினரிடம் சிக்கினர். அவர்களில் 300 பேர் கைது செய்யப்பட்டு ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்களில் 60 விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை இலங்கை ராணுவ அதிகாரி ஜெனரல் சுகத் கம்லத் தெரிவித்துள்ளார். இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதாகவும், அதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும் இவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததும் மற்றும் நாடு கடந்த தமிழீழம் அரசை அமைக்கும் ரகசிய சதித்திட்டத்தில் புலம் பெயர் தமிழர்களுடன் தொடர்பு வைத்துள்ள நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் செல்போன்கள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப செயல்பட்ட ஆதாரங்களை தீவிரவாத விசாரணை பிரிவு கண்டுபிடித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களிடம் விசாரணை நடத்த அனுராதபுரம், வவுனியா, மன்னார், வெலிக்கடை ஆகிய சிறைகளில் 4 புதிய உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட 300 விடுதலைப்புலிகளில் 150 பேர் மீது மோசமான குற்றங்கள் இழைத்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனவே அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக