செவ்வாய், 26 ஜூலை, 2011

சீமானைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய இளைஞர் காங்கிரசு வலியுறுத்தல்

யுவ காங்கிரசு, யுவபாத், யுவராசு என்றெல்லாம் மொழிக் கொலை புரிவோர் தமிழ்த்தேசியத்திற்கு எதிராகச் செயல்படுவோர் ஈழத்தில் படுகொலைகளுக்குக் காரணமில்லை எனில் அந்நாட்டுநாடாளுமன்றத்தில்  அமைச்சர்கள் இந்தியாவின்  பணியைத்தான் - இந்தியா சொன்னதைத்தான் செய்தோம் என்று கூறியபோது ஏன் மறுக்க வில்லை.இப்பொழுதாவது இந்தியா உண்மையிலேயே என்னென்ன உதவிகள் செய்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்குமா? அவ்வாறில்லாமல் பொய்கூறி மக்களைத் திசை திருப்ப்ப பார்க்கும் இளைஞர் காங்கிரசாரை உடனே தளையிட்டுச் சிறையிலடைக்க வேண்டும். உண்மையை மறைக்க அவதூறு உதவாது என்பதை அவர்களும் உணர வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


1 கருத்து: