திங்கள், 25 ஜூலை, 2011

இலங்கையின் கொலைக்கள காணொளி : சந்திரிகா கண்ணீர்

தன் உள்ளம் கரைந்து உருகியதற்குச் சந்திரிகா முதன்மை கொடுத்துச் சிங்கள மக்களைத் திரட்டித் தமிழ் மக்கள் தனி உரிமையுடன் ஆட்சி செய்ய தமிழ் ஈழம் மலர வகை செய்ய வேண்டும். சிங்கள வெறி பிடித்த தலைவர்களுக்கு எதிராகத் துணிந்து போராட வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


இலங்கையின் கொலைக்கள விடியோ: 
சந்திரிகா கண்ணீர்
First Published : 25 Jul 2011 10:16:29 AM IST


கொழும்பு, ஜூலை.25: கொழும்பில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பாலகிருஷ்ணரின் நினைவுப் பேருரையில் உரையாற்றிய இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தனது உரையின் இறுதிக்கட்டத்தின்போது  கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றியதாக அந்த நாட்டின் இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பாக தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா, உரையின் இறுதிப் பகுதியில் சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற விடியோ தொடர்பாக கருத்து தெரிவித்தார்.இந்த விடியோவை பிரிட்டன் தொலைக்காட்சியில் பார்த்த 28 வயதான தனது மகன் தான், சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக அழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார். மேலும் தனது மகளும் இவ்வாறே தெரிவித்தார் என்று அவர் கூறினார்.இதைக்கூறும்போது கண் கலங்கிய முன்னாள் அதிபர் சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் தூதர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா இந்த நிகழ்ச்சியில் உரையாற்றியதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

ராஜபட்சே சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கும் நேரம் வந்தவுடன் யார் யாரெல்லாம் உண்மையை உலகுக்கு சொல்கிறார்கள் நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும்.
By தக்பீர் அலி
7/25/2011 1:49:00 PM
இவரது குடும்பம்தான் இலங்கையில் உல்ல அவ்வலவு பிரச்சனைக்கும் காரனம்.
By valluvan
7/25/2011 1:45:00 PM
I am not at all surprised to Chandrica's son Vimukthi Kumaratunga's reaaction to the C4 documentary. Because,his father Vijey Kumaratunga,who was a popular film star,before he got married to Chandrica,was a honest politician among the sinhalese.He was very sympathatic to Tamils struggle for freedom.That was the reason he was killed by the Janatha Vimukthi Perumuna racists.If he was not killed,he would have become president and not Chandrica, and earlier than Chandrica and the island would not have faced the destruction and degrading in the eyes of the IC. Vimukthi means 'liberation' in sinhala language.
By Kumar.
7/25/2011 12:59:00 PM
மனிதம் செய்யுங்கள் மானிடரே! மதம் ஜாதி எல்லாம் எவனோ ஒருவனின் வசதிக்காக எற்பதடுத்த பட்டது. ஆயிரகனக்கான மக்கள் கொல்லப்படும் போது பார்த்துகொண்டிருக்கும் எந்த கடவுளும் வழிபட தகுதி இல்லாதது. மதம் களைவோம் மனிதம் காப்போம் மானிடரே !
By Hakkim
7/25/2011 12:49:00 PM
இலங்கையுள்ளவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் வலி தெரியும். அராஜகம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்குகெல்லாம் இதுபோன்ற துயர காட்சிகள் இருக்கும். இதற்கு அவர்கள் கேடயம்மாக பயன்படுத்துவது ஜாதி, மதம், மொழியை தான். இலங்கையில் கொடுரமாக கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் அல்ல மனிதர்கள் என்ற எண்ணம் அனைத்துலக மக்களுக்கும் வர வேண்டும். அப்போதுதான் தவறு செய்தவர்கள் தண்டிக்கபடுவார்கள். வராத வரை இது போன்ற \ kaa
By சுரேஷ் S
7/25/2011 12:28:00 PM
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது போலும்!உண்மை எது? பொய் எது? ஒன்றுமே புரியலே!?!
By வேந்தன்
7/25/2011 12:19:00 PM
நீலி கண்ணீர்
By Madhu
7/25/2011 12:08:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக