திங்கள், 25 ஜூலை, 2011

தமிழ் மக்கள் ஒன்றிணைவே த.தே.கூவின் வெற்றி – சந்திரநேரு சந்திரகாந்தன்

தமிழ் மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் ஓரணியின் கீழ் ஒன்றிணைந்து தமது அபிலாசைகளை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நன்குணர்த்தியுள்ளனர் என தமிழ் தேசியகூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில், காரைதீவு ஆகிய இரு பிரதேச சபைகளுக்கு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்டு வெற்றி பெற்று இரு சபைகளையும் கைப்பற்றியுள்ளது எனவே தமிழ்த் தேசியகூட்டமைப்பிற்கு வாக்களித்த தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கையொன்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் வெளயிட்டுள்ளார்.
தமிழ் மக்களை அரசியல் ரீதியாக தோற்கடிக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக அரசு பல்வேறு அழுத்தங்கள் கொடுத்து அமைச்சர்கள் பட்டாளத்துடன் குடிகொண்டு செயற்பட்டனர் ஆனால் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்பதைஎள்ளளவும் மாறாது தமிழ் மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து உணர்த்தியுள்ளனர்.
தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை சின்னாபின்னமாக்கி அதனை உடைத்தெறிய பலவழிகளிலும் அரசும் அதன் அருவருடிகளான தமிழ் அரசியல் வாதிகள்ஊதுகுழலாக செயற்பட்டனர் இவைகள் அனைத்தையும் தமிழ் மக்கள் சிறுபொருட்டாக மதித்து செயற்பட்டு தமது நீண்டகால அபிலாசைகளை அடைவதற்கான முதல் படியில் கால் வைத்துள்ளனர்.
எனவே தமிழ் மக்கள் இவ்வாறே எதிர்காலத்தில் ஓரணியில் திரண்டு எமது அபிலாசைகளையும் இலட்சியத்தையும் அடைய ஒற்றுமையாக தடம்புரளாது செயற்படவேண்டும்.
தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக தடமபுரண்டு செயற்படுகின்ற தமிழ் அரசியல் வாதிகளே இனியாவது யதார்த்தத்தை உணர்ந்த தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காகசெயற்பட முன்வரவேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிட்ட தமிழ் பிரதேச சபைகள் அனைத்தையும் கைப்பற்றி நாங்கள் தமிழர்கள் என தலைநிமிர்ந்து நிற்கின்றனர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த என் அன்பான இனிய தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றிகள் என அவ்வறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்
Short URL: http://meenakam.com/?p=30972
Share/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக