குட்டிமணி,ஜெகன்,தங்கத்துரை கொலைகள் சென்னையில் நினைவு.
1983 ஆம் ஆண்டு 25 ஆம் நாள் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளை, சிங்கள காடையர்கள், சிங்கள கைதிகள், சிங்கள ராணுவத்தினர் இணைந்து சிறைக்குள் அவர்களது அறைகளுக்குள் புகுந்து தாக்கினார்கள். வெட்டினார்கள். கண்களைப் பறித்தார்கள். படுகொலை செய்தார்கள். அதில் டெலோ இயக்கத்தின் தலைவர்களாக இருந்த “குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன்” ஆகியோர் குறிப்பாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.குட்டிமணி தனது மரணதண்டனையை எதிர்பார்த்து இருக்கும்போதே, தனது கண்களை தானம் செய்ய விரும்புவதாகவும், தன் கண்கள் மாறப்போகும் “தமிழ் ஈழத்தை” காணவேண்டும் என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவர்களது “கண்களை சிங்களக் காடையர்கள்” பறித்து எடுத்து அவர்களை கொலை செய்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக