கொழும்பு, அக்.24- ருத்திரகுமாரன் தலைமையில் செயல்பட்டுவரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை பலவீனப்படுத்த இலங்கை அரசு முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஆகியவற்றை பலவீனப்படுத்த அமெரி்க்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. உதவியை பெற இலங்கை அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக "லக்பிம" சிங்களப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலை மேற்கொள் காட்டி இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.புலிகளின் சர்வதேச செயல்பாடுகள் குறித்து அமெரி்க்காவுக்கு தெளிவுபடுத்த வேண்டியது தூதரகத்தின் கடமை என்று இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரிய கூறியுள்ளதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், பிரதமராக ருத்திரகுமாரன் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/25/2010 3:22:00 AM
10/25/2010 3:22:00 AM


By Aishath Adam
10/24/2010 7:34:00 PM
10/24/2010 7:34:00 PM


By rajan
10/24/2010 6:58:00 PM
10/24/2010 6:58:00 PM


By Kittusamy
10/24/2010 6:33:00 PM
10/24/2010 6:33:00 PM


By SAKTHI VELAN
10/24/2010 6:24:00 PM
10/24/2010 6:24:00 PM


By SAKTHI VELAN
10/24/2010 6:21:00 PM
10/24/2010 6:21:00 PM


By mohan
10/24/2010 4:57:00 PM
10/24/2010 4:57:00 PM


By Vel
10/24/2010 4:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 10/24/2010 4:52:00 PM