புதன், 27 அக்டோபர், 2010

வரம்பு மீறியது அருந்ததி ராய் பேச்சு: பரூக் அப்துல்லா கருத்து


புதுதில்லி, அக்.26: ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி அல்ல. ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதும் அதை ஆக்கிரமித்துக்கொண்டது என்பதாக சமீபத்தில் கருத்தரங்கு ஒன்றில் அருந்ததிராய் பேசியது பற்றி மத்திய அமைச்சரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் பேச்சுரிமை உள்ளது. அதை அளவுக்கு மீறி பயன்படுத்தி வாயில் வந்தபடி சிலர் பேசி நாட்டுக்குக் கேடு விளைவித்துவிடுகிறார்கள். அதுபோன்றதுதான் அருந்ததி ராயின் வரம்பு மீறிய பேச்சு என அவர் இங்கு நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறினார்.இது போல பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நாட்டுக்கு நல்லதா அல்லது கெட்டதா என ஒரு முறைக்கு பல முறை ஆத்மபரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம்.சட்டம் நமக்கு அளித்துள்ள பேச்சுரிமையை தவறான முறையில் பயன்படுத்திவிட்டோம் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகாமல் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என புரிந்து பேசுவது அருந்ததிராய் போன்றவர்களுக்கு நல்லது  என்றார் அவர்.
கருத்துக்கள்

அருந்ததிராய் கூறியது உண்மை.என்றாலும் அதை இன்றைய சூழலுக்கேற்ப பொருத்திப் பார்க்க வேண்டும். ஏற்கப்பட்ட பொதுக் கொள்கைக்கு மாறாக  இசுலாமியர் பெரும்பான்மையராக இருந்தும் மன்னரின் விருப்பத்திற்கிணங்கக் காசுமீர் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது உண்மைதான். ஆனால், ஏன் சேர்க்கப்பட்டது. தனி நாடாக இருக்க விரும்பிய காசுமீர் மீது பாக். போர் தொடுத்ததால்தான் இந்தியாவுடன் சேரும் விருப்பத்திற்குத் தள்ளப்பட்டார் அப்போதைய மன்னர். தனிநாடாகவே இருக்கிறோம் என்று உதவி கோரவில்லை. இன்றைக்கு மீண்டும் அது தனிநாடாக மாறினால் சீனாவோ பாக். ஓ மீண்டும் போர் தொடுத்துத் தம் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். எனவே, இன்றைய தேவை தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியா வலிவாகவும் பொலிவாகவும் திகழும் அரசமைப்பே தவிர, பிரிவினை அல்ல. தமிழ்த் தேசிய ஐக்கிய நாடுகள் என்ற அமைப்பாக இந்தியா மாறட்டும்! அதற்கு ஊழல் வெறியும் பதவி வெறியும் உள்ள காங். கூண்டோடு கலைக்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
10/27/2010 3:11:00 AM
உன்னம என்ரும் கசக்கும்
By kmr
10/27/2010 1:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக