கொழும்பு, அக். 29: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபட்ச வெற்றி பெற்றதை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இலங்கையில் கடந்த ஜனவரி 26-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜபட்ச அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், வாக்குப் பதிவில் முறைகேடுகள் செய்து அவர் வெற்றி பெற்று விட்டதாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்து மனுவை தள்ளுபடி செய்தது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேகா சிறையில் உள்ளார். அவரது ராணுவ அந்தஸ்து, பதக்கங்கள் ஆகியவையும் பறிக்கப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 2:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English10/30/2010 2:56:00 AM