சனி, 30 அக்டோபர், 2010

தாய்லாந்தில் இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது


பாங்காக், அக்.30- தாய்லாந்து நாட்டில் இலங்கைத் தமிழர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசா காலம் முடிந்த பின்னர் தங்கியிருந்தது, உரிய ஆவணங்கள் இல்லாதது, சட்டவிரோதமாக தங்கியிருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி்க்கின்றன.போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சாங்லா மாகாணத்தில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்கள் 114 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 53 பேர் முறைப்படி அனுமதி பெற்று வந்ததற்கான ஆவணங்களை காட்டியதால் விடுவிக்கப்பட்டனர்.
கருத்துக்கள்

இதனை விதிகளின் அடிப்படையில் கையாளாமல் மனித நேய அடிப்படையில் கையாள வேண்டும். எரியுண்டும் புதையுண்டும் போவதில் இருந்து தப்பி வந்தவர்கள் அல்லது மீள அங்குச் சென்று வதைமுகாம்களில் உயிர் விடும் நிலையில் இருந்து தப்பிப்பதற்காக இருப்பவர்கள் ஆகியோருக்கு ஏதும் சிறப்பு நுழைவுரிமை கொடுத்து உரிமையுள்ள குடிமக்களாக நடத்த வேண்டும். எல்லா நாட்டினரும் இவ்வாறு கையாள வேண்டும். நம் நலம் நாடு அரரசு இருந்தால் தூரதரகங்கள் மூலம் இதற்கான நடவடிக்கை எடுக்கும். அடிமைகளாக நடத்தப்படுபவர்களுக்கு அந்நல்வாய்ப்பு இல்லாததால் தனிப்பரிவு காட்ட மனிக உரிமை ஆர்வலர்களும் மனித நேய ஆர்வலர்களும் முயன்று வெற்றி காண வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/30/2010 7:07:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக